சற்று முன்

'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |    'திரு.மாணிக்கம்' படத்தில் தன் நவீன இசையால் அனைவரையும் கவரவிருக்கும் விஷால் சந்திரசேகர்!   |    'லவ் டுடே' வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை ஒட்டி வெளியான 'புஷ்பா 2' டீசர்   |    உதவி கமிஷனர் ஒருவரின் வாழ்க்கையை படமாக எடுக்கும் புது இயக்குனர்   |    ஒன்பது வருடங்களுக்கு பிறகு 'இன்று நேற்று நாளை' 2ம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியது!   |    நட்சத்திர நடிகர் பிரபாஸ் டப்பிங் செய்துள்ள 'கல்கி 2898 AD' அனிமேஷன் அறிமுக வீடியோ!   |    ஜீவிக்கு 4 குளோன் இருக்கு - நடிகர் அப்துல் லீ   |   

croppedImg_1752272383.jpeg

’கபடதாரி’ விமர்சனம்

Directed by : பிரதீப் கிருஷ்ணமூர்த்தி

Casting : சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ், நாசர்

Music :சைமன் கே.கிங்கின்

Produced by : லலிதா தனஞ்செயன்

PRO : ரேகா, தர்மா

Review :

சென்னையின் ஒரு பகுதியில், மேம்பாலம் கட்டும் பணியின் போது சிதைந்த நிலையில் மூன்று நபர்களுடைய எலும்பு கூடுகள் கிடைக்கிறது. ஆனால், அந்த எலும்புக்கூடுகள் 40 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தவர்களுடையது என்பதால், அதை காவல்துறை பெரிதுப்படுத்தாமல் விட்டுவிடுகிறது. அதே சமயம், அப்பகுதியில் பணியில் இருக்கும் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரான சிபிராஜ், அந்த எலும்பு கூடுகளின் பின்னணி பற்றி ஆராயும் போது, 40 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொலை மற்றும் ஒரு குடும்பம் மாயமான வழக்கு குறித்து தெரிய வருகிறது. காவல்துறையால் முடிக்காமல் விடப்பட்ட அந்த வழக்கை மீண்டும் கையில் எடுக்கும் சிபிராஜ், அந்த வழக்கின் உண்மையான குற்றவாளி மற்றும் காணாமல் போன குடும்பத்திற்கு என்ன நடந்தது, ஆகியவற்றை எப்படி கண்டுபிடிக்கிறார், என்பதை பரபரப்பான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார்கள்.

 

சிபிராஜ் போலீஸ் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துவது போல, போலீஸ் யூனிபார்மும் அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது. போக்குவரத்து காவலராக பணியாற்றினாலும் காவல்துறை விஷயங்களிலும் மூக்கை நுழைக்கலாம் என்று கதையில் கூறியிருப்பது படு காமெடியாக உள்ளது. முந்தைய படத்தை விட இந்த படத்தில் சிபிராஜின் நடிப்பு சுமாராக தான் உள்ளது. சண்டைக்காட்சிகள் சரியாக வரவில்லை. 

 

ஹீரோயினாக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதாவுக்கு மிக மிக குறைவான வேலை தான். 

 

பத்திரிகையாளராக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், தனஞ்செயன் ஜெயப்பிரகாஷை திட்டுவது போல் எந்த பத்திரிகையாளரை சாடியுள்ளார் என்பது தெரியவில்லை. 

 

பணி ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நாசர் அவருடைய கதாபாத்திரத்தை கனகட்சிதமாக செய்திருக்கிறார். சிறிய கதாப்பாத்திரம் என்றாலும் தயாரிப்பாளர்  ஜே.சதீஷ்குமார் நடிகராக கவனிக்க வைக்கிறார்.

 

வில்லனாக நடித்திருக்கும் கன்னட நடிகர் சம்பத் மைத்ரேயா கண்களினாலேயே நடிக்கிறார். படத்தின் முக்கியமான கதாப்பாத்திரமாக அறிமுகப்படுத்தப்படும் சுமன் ரங்கநாதன், மின்னல் போல் வந்து போகிறார்.

 

சைமன் கே.கிங்கின் பின்னணி இசை திரையரங்கை விட்டு வெளியே வந்த பிறகும் நம் காதில் வண்டுகள் ரீங்காரமிட்டதுபோல் உள்ளது.

 

ராசாமதியின் ஒளிப்பதிவு ஓகே 

 

கன்னட படத்தின் ரீமேக்காக இருந்தாலும், அப்படத்தில் இருந்த சில தொய்வான காட்சிகளுக்கு கத்திரி போட்டிருக்கும் படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல், படத்தை முடிந்த அளவுக்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.

 

சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படம் என்று சொன்னாலும், அதற்கான அம்சங்களை குறைத்துவிட்டு, மசாலாத்தனத்தை தூக்கலாக வைத்திருப்பார்கள். ஆனால், இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, டைடில் கார்டு போடுவது முதல் க்ளைமாக்ஸ் எண்ட் கார்டு போடுவது வரை, முழுக்க முழுக்க அனைத்துக் காட்சிகளையும் சஸ்பென்ஷாகவும், த்ரில்லராகவும் நகர்த்தி செல்வது நினைத்து மக்களை ஏமாற்றியுள்ளார். இயக்குனர் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். பாவம் இதற்க்கு யார் காரணம் என்று தெரியவில்லை. 

 

கதையில் காட்சிகளுக்கு இடையிலான தொடர்பு நேர்த்தியாக இல்லாதது பெரு குறையாக உள்ளது. 

 

படம் எடுக்க தெரிந்தவர்களே இப்படி ஒரு படத்தை எடுத்தால் என்ன அர்த்தம்.

 

"கபடதாரி" படத்திற்கு மதிப்பீடு 2/5

 

 

 

Verdict : மொத்தத்தில், ரெண்டேகால் மணி நேரம் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக காட்டுவதாக நினைத்து படம் பார்க்க

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA