சற்று முன்

'ராஜபீமா' விமர்சனம்
Directed by : Naresh Sampath
Casting : Arav, Ashima Narwal, Nassar, K.S. RaviKumar, Yashika Anand, Yogi Babu, Oviya, Babhubali Prabhakar, Sayaji, Raghavan,
Music :Simon K King
Produced by : Surabi Films - Mohan
PRO : DOne
Review :
"ராஜபீமா" நரேஷ் சம்பத்,அஷிமா நர்வால், இயக்கத்தில் சுரபி பிலிம்ஸ் - மோகன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை சைமன் கே கிங் . இந்த படத்தில் ஆரவ், ஓவியா, கே எஸ் ரவிக்குமார், யோகிபாபு, யாஷிகா ஆனந்த், நாசர், அருவி மதன், சயாஜி ஷின்டே, ஜெயக்குமார், கராத்தே வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அம்மாவை இழந்து மனவேதனையில் இருக்கும் சிறுவன் ராஜா ஊருக்குள் வரும் ஒரு யானையை வளர்க்க ஆசைப்படுகிறான். ராஜாவுடைய அப்பா அதற்கான முறையான அனுமதியும் பெற்று யானைக்கு பீமா என பெயர் வைத்து வளர்க்கிறார்கள். ராஜா பெரியவனாகிறான். யானைகளைக் கொன்று தந்தம் கடத்தும் தயாளனை காட்டிலாக்கா அதிகாரியிடம் பிடித்துக் கொடுக்கிறான். இதனால் பீமா கடத்தப்படுகிறான். பீமா காணாமல் போனதற்கு யார் காரணம்? ராஜா பீமாவை கைப்பற்றினான்? இல்லையா? என்பதுதான் "ராஜபீமா" படத்தின் கதை.
ராஜாவாக ஆரவ், உடலாலும் பலத்தாலும் விலங்குகளில் பிக்பாஸாக இருக்கிற யானையோடு இணைந்து நடித்துள்ள படம். மாஸ் ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களோடும் இருக்கிற அவர் யானை மீது பாசம் காட்டும்போது நெகிழ வைத்து, வில்லன்களுடன் மோதுகிற ஆக்சன் காட்சிகளில் உடல்பலம் காட்டி, காதல் காட்சிகளில் பொருத்தமாக நடித்து கவனம் பெறுகிறார்.
இளமையின் செழுமையை பந்தி வைப்பதற்காக மட்டுமல்லாது கதையின் முக்கியமான தருணங்களிலும் பங்களித்திருக்கிறார் யாஷிகா ஆனந்த்.
கே எஸ் ரவிக்குமார் அமைச்சர் பதவியில் இருந்துகொண்டு முதலமைச்சர் பதவிக்கு ஸ்கெட்ச் போடுபவராக தன் பாத்திரத்துக்கு தேவையான வில்லத்தனத்தை கனகச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆஷிகா நெர்வாலுக்கு சினிமா வழக்கப்படி ஹீரோவை காதலிக்கிற பழகிப்போன வேலைதான் என்றாலும் அதை உணர்வுபூர்வமாக செய்திருப்பதை பார்க்க முடிகிறது.
ஓவியா, ஆரவுக்கு ஜோடியாக வருவார் என்று பார்த்தால் கதையோடு பின்னிப்பிணைந்த ஒரு பாடலுக்கு கலர்ஃபுல் உடைகளில் கவர்ச்சி ததும்ப ரசிக்கும்படி ஆடிவிட்டுப் போகிறார்.
அமைச்சரின் வளர்ப்பு மகனாக வருகிற யோகிபாபு ‘பொள்ளாச்சியின் பிரதமர்’ என அல்லக்கைகளால் கொண்டாடப்படுகிற அளவுக்கு காட்டுகிற பந்தா கலகலப்புக்கு உதவுகிறது.
நாயகனின் தந்தையாக நாசர், மாமாவாக அருவி மதன், அரசியல்வாதியாக சயாஜி ஷின்டே ஆகியோருடன் ஜெயக்குமார், கராத்தே வெங்கடேஷ் என இன்னபிற நடிகர்களுக்கும் கதையில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
பீமாவாக வருகிற யானையின் ஒவ்வொரு அசைவும் கண்களை உற்சாகமாக்கி மனதில் இடம்பிடிக்கிறது.
யானையைப் போற்றுகிற ‘தந்தத்துக் கொம்பனே கந்தனின் அண்ணனே’ பாடல் பிரபல நாட்டுப்புறப் பாடலின் நகலாக அமைந்து உற்சாகமூட்ட, ‘மஞ்சனத்தி வாசத்துல’ பாடலை இதமூட்டும் மெட்டில் தவழ விட்டிருக்கிறார் சைமன் கே கிங். பின்னணி இசையிலிருக்கும் உழைப்பு கதையோட்டத்திற்கு பரபரப்பு கூட்டுகிறது.
"ராஜபீமா" படத்திற்கு மதிப்பீடு 3.5/5
Verdict : விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான பாசப்பிணைப்பை மையப்படுத்திய கதைக்களம்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA