சற்று முன்

தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |    'டியூட்' ல் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டதும் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் - சரத்குமார்   |    புதிய சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தும், 'அசுர ஆகமனா' (Asura Aagamana) சிறு முன்னோட்டம்!   |    சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ” நேரடியாக OTT யில்   |    ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்த 'உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்'!   |    தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |    'அகண்டன்' தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.   |    நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'விருஷபா'   |   

croppedImg_1695180164.jpeg

’திரெளபதி’ திரை விமர்சனம்

Directed by : மோகன் G

Casting : ரிச்சர்ட், ஷீலா ராஜ்குமார், கருணாஸ், நிஷாந்த்

Music :ஜூபின்

Produced by : G.M பிலிம் கார்ப்பரேஷன்

PRO : ரியாஸ் கே அஹமத்

Review :

போலி பதிவு திருமணங்கள் மூலம் பெண்களை மிரட்டி பணம் பறிக்கும் ஒரு கும்பலுக்கு எதிராக ஹீரோ ரிச்சர்ட்டும், அவரது மனைவி ஷீலா ராஜ்குமாரும் குரல் கொடுக்கிறார்கள். இதனால், ஷீலா ராஜ்குமாரையும், அவரது தங்கையையும் அந்த கும்பல் கொலை செய்துவிட்டு, அந்த கொலை பழியை ரிச்சர்ட் மீது போடுகிறார்கள். இதனால் சிறைக்கு செல்லும் ரிச்சர்ட், ஜாமீனில் வெளியே வந்து போலி பதிவு திருமண கும்பலை பழிவாங்குவதோடு, தனது மனைவி திரெளபதியின் சபதத்தை நிறைவேற்றும் பணியிலும் ஈடுபட, அதற்குள் அவரை போலீஸ் சிறை பிடித்துவிடுகிறது. அவரது மனைவி திரெளபதியின் சபதம் நிறைவேறியதா இல்லையா, அது என்ன சபதம், என்பது தான் படத்தின் கதை.

 

திரெளபதியின் சபதத்தை நிறைவேற்ற துடிக்கும் அன்பு கணவராகவும், வீரமுள்ள சிலம்பம் ஆசானாகவும் ரிச்சர்ட் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார். இருந்தாலும், பல இடங்களில் அவரைவிட, அவரது மனைவியான திரெளபதி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஷீலா ராஜ்குமார் அப்ளாஸ் வாங்குகிறார். அவர் பேசும் வீர வசனமும், எந்த பிரச்சினையாக இருந்தாலும் எதிர்த்து நிற்கும் குணமும், அதை அவர் கையாண்ட விதமும் கைதட்டல் பெருகிறது.

 

போலி வழக்கறிஞராக நடித்தவர்களும் தங்களது வில்லத்தனத்தை அளவாக காட்டி கதாப்பாத்திரத்திற்கு கனம் சேர்த்திருக்கிறார்கள். கிராமத்து பெரியவராக நடித்தவரும், ரிச்சர்ட்டின் நண்பராக நடித்தவர், நிஜமான வழக்கறிஞராக நடித்த கருணாஸ், என அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

 

ஜூபினின் இசையும், மனோஜ் நாராயணனின் ஒளிப்பதிவும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. தொழில்நுட்பத்தை விட, படத்தின் வசனங்களும் காட்சிகளும் முக்கியம், என்பதை உணர்ந்து பணியாற்றியிருக்கிறார்கள். இவர்கள் உணர்ந்தது போல, படத்தொகுப்பாளர் தேவராஜும் சற்று உணர்ந்து பணியாற்றியிருக்கலாம்.

 

வட சென்னையை மையமாக வைத்து ‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற படத்தை இயக்கிய மோகன்.ஜி, தனது இரண்டாவது படமான இப்படத்தில், வட மாவட்ட மக்களை பற்றியும், அவர்களது வீரம், கோபம் பற்றியும் பேசியிருக்கிறார்.

 

பதிவு திருமண முறையில் மாற்றம் வேண்டும், என்பதை வலியுறுத்தியிருக்கும் இயக்குநர் மோகன்.ஜி, ஒரு குறிப்பிட்ட பதிவுத்துறை அலுவலகத்தில் சுமார் 3 ஆயிரம் போலி பதிவு திருமணம் நடைபெற்றிருப்பதாக படத்தில் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. போலியான பதிவு திருமணங்கள் ஒரு சில நடக்கலாம், ஆனால், பதிவு திருமணங்களே போலியானது, என்பது போல இயக்குநர் சொல்லியிருக்கிறார்.

 

மோசடி எங்கு நடந்தாலும் அது தவறு தான். அதை விவரித்து இதுபோன்ற தவறு நடக்க கூடாது, அதற்கு மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்று சொல்லியிருக்கும் இயக்குநர் மோகனை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். ஆனால், அதற்காக பெண் மற்றும் ஆண் இருவரது தனிப்பட்ட விருப்பமான, திருமண உரிமையையே அவர்களிடம் இருந்து பறிக்கவேண்டும், என்று அவர் வலியுறுத்துகிறார். நல்லவேலையாக, அப்படியெல்லாம் செய்ய முடியாது, திருமணம் என்பது அவர் அவர் தனிப்பட்ட உரிமை, என்று நீதிபதி சொல்வது போன்ற காட்சியை வைத்து, ஆறுதல் படுத்திவிடுகிறார்.

 

அதேபோல், வட மாவட்ட மக்கள் மீது இருக்கும், ”மரம் வெட்டி” என்ற இமேஜை உடைக்கும் விதமாக, மரக்கன்றுகள் நடும் சேலேஜ், என்ற காட்சியை இயக்குநர் வைத்திருப்பது பாராட்டக்குரியது. 

 

திரைப்படமாகவும், மேக்கிங் முறையிலும், லாஜிக்காகவும் படத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும், சில போலியான வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களது குழுவினர் செய்யும் சில போலியான பதிவு திருமணங்களைப் பற்றி பேசியிருக்கும் இந்த ‘திரெளபதி’ யை வரவேற்கலாம்.

 

"திரெளபதி" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

 

Verdict : சமூக அக்கறை கொண்ட கதை

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA