சற்று முன்

தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |    'டியூட்' ல் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டதும் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் - சரத்குமார்   |    புதிய சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தும், 'அசுர ஆகமனா' (Asura Aagamana) சிறு முன்னோட்டம்!   |    சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ” நேரடியாக OTT யில்   |    ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்த 'உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்'!   |    தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |    'அகண்டன்' தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.   |    நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'விருஷபா'   |   

croppedImg_101659100.jpeg

’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ விமர்சனம்

Directed by : Venkata Krishna Roghanth

Casting : Vijay Sethupathi, Megha Akash, Magizh Thirumeni, Vivek, Ragu Aditya, Mathura, Kaniha, Riythvika, Mohan Raja, Karu Palaniappan, Chinni Jayanth, Vidya Pradeep, Imman Annachi, Rajesh

Music :Nivas K. Prasanna

Produced by : S.Essaki Durai

PRO : Nikil murukan

Review :

 

 

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" வெங்கட கிருஷ்ண ரோகாந்த்  இயக்கத்தில் S.இசக்கி துரை தயாரித்திருக்கும். இந்த படத்திற்கு இசை நிவாஸ் கே.பிரசன்னா. இந்த படத்தில் விஜய் சேதுபதி, மகிழ் திருமேனி,விவேக், சின்னி ஜெயந்த், கனிகா, கரு.பழனியப்பன், மோகன்ராஜா, தபியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

சிங்கள ராணுவ தாக்குதலில் தப்பி அகதியாக கேரளாவுக்கு வருகிறார். அங்கிருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால், அவரிடம் அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லாததால், மற்றொரு ஈழத்தமிழர் மூலம் போலியான அடையாளமும் அதற்கான ஆவணமும் உருவாக்கப்பட, அந்த அடையாளம் விஜய் சேதுபதிக்கு பல சிக்கல்களை உருவாக்குகிறது. அவை என்ன சிக்கல்கள்? அவற்றால் விஜய் சேதுபதி எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்? என்பதை ஈழத்தமிழர்களின் வலி நிறைந்த பதிவாக சொல்வது தான் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.

 

ஈழத்தமிழ் அகதியாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி, அகதி என்ற வார்த்தைக்கு பின்னால் ஒளிந்திருக்கும் வலி நிறைந்த வாழ்க்கையை படம் பார்ப்பவர்கள் உணரக்கூடிய விதத்தில் நடித்திருக்கிறார். சத்தங்களை கேட்டு பயப்படுவது, தனக்கான அடையாளத்தை தேடி அலைதல், திறன் இருந்தும் அகதி என்பதற்காக நிராகரிக்கப்படுதல் என்று பல இடங்களில் படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் விதத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, ஈழத்தமிழர்களின் வாழ்க்கை இன்னமும் கேள்விக்குறியாக இருப்பதை தன் நடிப்பு மூலம் உலகிற்கு உரக்க சொல்லியிருக்கிறார்.

 

விஜய் சேதுபதியை காதலிக்கும் மேகா ஆகாஷ், காதலில் உருகும் காட்சிகளில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியின் அடையாளத்தால் தவிக்கும் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார்.

 

போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் மகிழ் திருமேனி, கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். அவரது குரலில் உள்ள கம்பீரமும், வன்மமும் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

மறைந்த நடிகர் விவேக் குணச்சித்திர நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். சிறிது நேரம் வந்தாலும் சின்னி ஜெயந்தின் வேடமும், நடிப்பும் கவனிக்க வைக்கிறது.

 

கனிகா, கரு.பழனியப்பன், மோகன்ராஜா, தபியா உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களுக்கும் கதையோடு பயணிக்கும் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.

 

வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவில் ஈழத்துக்கொடுமைகள் கண் கலங்க வைக்கும் விதத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கடல், காடு, நகரம், யுத்த களம் என்று பல தளங்களில் சுழன்றிருக்கும் கேமரா படத்திற்கு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

 

நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படி இருப்பதோடு, பின்னணி இசைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

கலை இயக்குநர் வீரசமர், படத்தொகுப்பாளர் ஜான் ஆபிரகாம் என தொழில்நுட்ப கலைஞர்களின் பணி படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

 

ஈழத்தமிழர்களின் வாழ்க்கை குறித்து பேச தயங்கும் பல விசயங்களை தைரியமாக பேசியிருக்கும் இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்தை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கலாம்.

 

முதல் பாதி திரைக்கதை சற்று மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் வேகம் எடுத்து படம் விறுவிறுப்பாக நகர்கிறது. 

 

குறைகள் சில இருந்தாலும், ஈழத்தமிழரை ஹீரோவாக்கி, அவர்களின் வலியை அழுத்தமாகவும், கமர்ஷியல் கதைக்களத்திலும் சொல்லிய விதத்தில் படம் ரசிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைக்கிறது.

 

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" படத்திற்கு மதிப்பீடு 3/5

 

Verdict : அனைவரும் பார்க்க வேண்டிய படம்

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA