Sports News

3 நாடுகள் போட்டி - இந்தியா-வங்காளதேசம் நாளை பலப்பரீட்சை
Updated on : 13 March 2018

நிதாஹாஸ் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்துடன் நாளை மோதுகிறது.

3 நாடுகள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 5-வது ‘லீக்’ ஆட்டம் நாளை நடக்கிறது. இதில் இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

இந்திய அணிக்கு இது கடைசி ‘லீக்’ ஆட்டமாகும். 3 போட்டியில் விளையாடி இரண்டில் வென்றது. ஒன்றில் தோற்றது. ஏற்கனவே வங்காளதேசத்தை இந்திய அணி வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் உள்ளது.

அதேநேரத்தில் வங்காள தேசம் அணி இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்து இருந்தது. அந்த அணி ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் இருக்கிறது.


Latest News