சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

இந்த படத்தில் அரசியல் இல்லாமல் வேறென்ன இருக்கும்? ராஜு முருகன் கேள்வி
Updated on : 25 August 2016

ராஜு முருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், காயத்திரி, பாவா செல்லதுரை, மு.ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் "ஜோக்கர்".



 



படம் வெளியானது முதல் பொதுவெளியில் பல்வேறு விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.



 



நேற்றும்கூட ஜோக்கர் படம் குறித்த உரையாடல் ஒன்று சென்னையில் நடைபெற்றது. படப்பெட்டி சினிமா இதழ் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த உரையாடல் நிகழ்வில் இயக்குனர் ராஜுமுருகன், ஜீ.ராமகிருஷ்ணன், பாடலாசிரியர் - யுகபாரதி, திரைக் கலைஞர் - மு. ராமசாமி, இயக்குனர் - நவீன், மருத்துவர் அரவிந்தன் சிவக்குமார், பத்திரிகையாளர் கவின்மலர், கலை இயக்குனர் சதீஷ் குமார் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.



 



இதில் பேசிய ராஜுமுருகன், "ஜோக்கர் படம் வெளியான இந்த இரண்டு வாரங்களில் தொடர்ந்து இதுகுறித்து நடைபெற்றுக்கொண்டிருக்கிற விவாதங்கள் தான் இந்த படத்திற்கான வெற்றி.



 



ஒரு படைப்பானது மக்களிடையே ஒரு பொது விவாதத்தை ஏற்படுத்தவேண்டும். அந்த வகையில், ஜோக்கர் திரைப்படம் சமூகத்தில் இவ்வளவு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.



 



இந்த படம் மக்களின் பிரச்சனையை பேசுகிறதே தவிர, எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் சட்டகத்திலும் இல்லை. இது என்னுடைய தன்னியல்புடன் உருவாக்கப்பட்டுள்ள படைப்பு. எந்த ஒரு வழக்கமான திரைப்பட பார்முலாவையும் நான் பின்பற்றவில்லை.



 



முழுக்க முழுக்க அரசியல் பேசுவதற்காகவே உருவாக்கப்பட்ட இந்த படத்தில், அரசியல் இல்லாமல் வேறென்ன இருக்கும்? என்று பேசினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா