சற்று முன்

ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்த 'உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்'!   |    தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |    'அகண்டன்' தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.   |    நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'விருஷபா'   |    விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் இணைந்துள்ளார்!   |    நயன்தாராவுடன் கவின் இணைந்து நடிக்கும் 'ஹாய்' (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!   |    இணையத்தில் வைரலாக பரவி வரும் 'வா வாத்தியார்' பட போஸ்டர்!   |    ஐசரி  K கணேஷ், பிறந்தநாளில் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ள வேல்ஸ் நிறுவனம்!   |    ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் 'ரஜினி கேங்' ஃபர்ஸ்ட் லுக்!   |    விஷ்ணு விஷாலுக்கு அமீர்கான் வில்லனா!   |    100 குறும்பட இயக்குநர்களுக்கு விருதுகள் கொடுத்து சாதனை   |    TVAGA உடன் இணைந்து பொழுதுபோக்குத் துறையின் வளர்ச்சிக்கு புரொடியூசர் பஜார் வித்திடுகிறது   |    எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கலந்துகொண்ட 'டஸ்வா' பிராண்ட் ஆடை திருவிழா!   |    தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகும் 'ராம்போ'!   |    மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' பட வெளியீட்டை அறிவித்தனர் படக்குழு!   |    'மூக்குத்தி அம்மன் 2', படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !   |   

சினிமா செய்திகள்

இயக்குநர் சேரனின் மகளுக்கு தருமபுரி நீதிமன்றம் பிடியாணை
Updated on : 20 August 2016

இயக்குநர் சேரனின் மகள் நிவேதா பிரியதர்ஷிணிக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணையை தருமபுரி நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.



 



திரைப்படத்தை டிவிடி மூலம் மக்களின் இல்லங்களுக்கே கொண்டு செல்லும் "சிடூஎச்' திட்டத்தை இயக்குநர் சேரன் தொடங்கினார். ஆனால் இந்த முறையானது எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.



 



இந்நிலையில், தருமபுரி மாவட்ட சிடூஎச் விநியோகஸ்தராக இருந்த பிரசன்னா வாசுதேவன், தான் செலுத்திய வைப்பு நிதியை திரும்ப கேட்க, அவருக்கு 4.53 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.



 



காசோலைக்கான பணம் வங்கியில் இல்லாததால், தருமபுரி மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் பிரசன்னா வாசுதேவன்  வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான விசாரணைக்காக இரண்டுமுறை அழைக்கப்பட்ட சிடூஎச் நிறுவனத்தின் நிர்வாகியான சேரனின் மகள் நிவேதா பிரியதர்ஷிணி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.



 



இதனால் தற்போது நிவேதா பிரியதர்ஷிணிக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா