சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

இயக்குநர் சேரனின் மகளுக்கு தருமபுரி நீதிமன்றம் பிடியாணை
Updated on : 20 August 2016

இயக்குநர் சேரனின் மகள் நிவேதா பிரியதர்ஷிணிக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணையை தருமபுரி நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.



 



திரைப்படத்தை டிவிடி மூலம் மக்களின் இல்லங்களுக்கே கொண்டு செல்லும் "சிடூஎச்' திட்டத்தை இயக்குநர் சேரன் தொடங்கினார். ஆனால் இந்த முறையானது எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.



 



இந்நிலையில், தருமபுரி மாவட்ட சிடூஎச் விநியோகஸ்தராக இருந்த பிரசன்னா வாசுதேவன், தான் செலுத்திய வைப்பு நிதியை திரும்ப கேட்க, அவருக்கு 4.53 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.



 



காசோலைக்கான பணம் வங்கியில் இல்லாததால், தருமபுரி மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் பிரசன்னா வாசுதேவன்  வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான விசாரணைக்காக இரண்டுமுறை அழைக்கப்பட்ட சிடூஎச் நிறுவனத்தின் நிர்வாகியான சேரனின் மகள் நிவேதா பிரியதர்ஷிணி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.



 



இதனால் தற்போது நிவேதா பிரியதர்ஷிணிக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா