சற்று முன்

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மூன்று விருதுகளை வென்றுள்ள ‘பார்க்கிங்'!   |    இலங்கையில் ஜொலிக்கும் வரலட்சுமி சரத்குமார்!   |    'மீஷா' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!   |    'தலைவன் தலைவி' படத்தின் மூலம் வெற்றி பயணத்தை தொய்வின்றி தொடரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்   |    ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த 'மகாஅவதார் நரசிம்மா' !   |    சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!   |    'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!   |    ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது!   |    இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ள 'அந்த 7 நாட்கள்' பட சிங்கிள்   |    நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா   |    அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ள படம் YouTube-இல்!   |    சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் 'போகி'   |    சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல்!   |    ‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |    வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் என்னை சிந்திக்க தூண்டியது! - நடிகர் சத்யராஜ்   |    பிரமாண்டமாக அரங்கேறும் 'ராக் ஸ்டார் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி!   |    தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் வெளிவரும் ‘சட்டமும் நீதியும்’!   |   

சினிமா செய்திகள்

ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த 'மகாஅவதார் நரசிம்மா' !
Updated on : 01 August 2025

இதயங்களை தூண்டும் வகையிலும், கலாச்சாரத்தை எழுப்பும் வகையிலும் வெளியான 'மகாஅவதார் நரசிம்மா'  முதல் வாரத்தில் இந்தியாவில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. 



 



க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அஸ்வின் குமார் இயக்கத்தில் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் வழங்கிய 'மகாஅவதார் நரசிம்மா' இந்தியாவில் வெளியான ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது. இது வணிக ரீதியிலான வெற்றியை மட்டுமல்ல.. நாடு முழுவதும் ஆழமாக எதிரொலிக்கும் பிரத்யேக கலாச்சார அலையையும் குறிப்பிடுகிறது. 



 



இந்தப் படத்தை வித்தியாசப்படுத்துவது அதன் மன்னிப்பு கேட்காத சனாதனி எனும் மையமாகும். இந்து தத்துவம் - இந்து தர்மம் மற்றும் பண்டைய மதிப்பீடுகள் மீது ஒளியை போல் பிரகாசிக்கும் ஒரு கதை.. காட்சி ரீதியாக சக்தி வாய்ந்த கதை மூலம் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இது தலைமுறைகள் முழுவதும் உரையாடல்களையும் ,விவாதங்களையும் தூண்டும் ஒரு ஆழமான கலாச்சார அனுபவம். மேலும் இது ஒரு திரைப்படத்தை விட அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 



 



பார்வையாளர்களும், விமர்சகர்களும் இந்த மகாஅவதார் நரசிம்மாவை ' குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என இருவரும் பார்க்க வேண்டிய படம் ' என்று குறிப்பிடுகிறார்கள். இது பாரம்பரியத்தில் வேரூன்றி இருக்கும் அதே தருணத்தில் கல்வி கற்பிக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் வகையில் குடும்பங்கள் திரையரங்குகளுக்கு திரண்டு வருகின்றன. மகாஅவதார் நரசிம்மா பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல், நம் மதிப்புகள், வரலாறு மற்றும் ஆன்மீக பாடங்களை அடுத்த தலைமுறைக்கும் கடத்துவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது.



 



இந்திய சினிமாவை அடித்தளமாகவும்,  பிரமாண்டமாகவும் கதை சொல்லல் மூலம் மறு வரையறை செய்வதில் புகழ்பெற்ற ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பயணத்தில் மகாஅவதார் நரசிம்மா மற்றொரு மைல்கல். 'காந்தாரா', 'கே ஜி எஃப் 'மற்றும் ' சலார் 'ஆகிய படைப்புகளின் மகத்தான வெற்றியை தொடர்ந்து.. இந்த நிறுவனத்தின் அண்மைய வெளியீடான 'மகாஅவதார் நரசிம்மா' எனும் படைப்பும் இந்திய அடையாளத்தில் வேரூன்றிய மற்றும் சினிமா பார்வையில் பலமான கதைகளை வடிவமைக்கும் அவர்களின் பாரம்பரியத்தை தொடர்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா