சற்று முன்

அம்மா மீது வைக்கப்படும் ப்ராமிஸ் மிக மதிப்புள்ளது! - இயக்குநர் அருண்குமார் சேகரன்   |    'சிறை' பட சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது!   |    ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் உருவாகிவரும் ‘பெத்தி’ பட ஆக்சன் காட்சிகள்!   |    துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான 'ஐ அம் கேம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட படப்பிடிப்பு நிறைவு பெற்றது!   |    சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் தடகள போட்டி இன்று துவங்கியது!   |    56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) வில் தேர்வு செய்யப்பட்ட 'லால் சலாம்'   |    நெட்ஃபிலிக்ஸ்-ல் வெளியான 'ஸ்டீபன்' படத்தின் புதிய டிரெய்லர்!   |    அர்ஜூன் தாஸின் 'சூப்பர் ஹீரோ' மற்றும் ஃபைனலி பாரத்தின் 'நிஞ்சா' படங்கள் டைட்டில் அறிமுகம்!   |    'திரௌபதி 2' படத்தில் திரௌபதி தேவியாக நடிக்கும் ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 பிரமாண்டமாக தொடங்கியது!   |    அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!   |    'ரிவால்வர் ரீட்டா' திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில்!   |    கோவா திரைப்பட விழாவில் பாராட்டுப்பெற்ற ஆநிரை குறும்படம்!   |    'டெக்ஸாஸ் டைகர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!   |    எனக்குத் தெரிந்த சென்னையை, அதன் வாழ்க்கையை இதில் கொண்டு வந்துள்ளோம் - வினீத் வரபிரசாத்   |    தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண்   |    #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் வெளியானது!   |    கவிஞர் சினேகனின் கனவும், உருக்கமான சொற்பொழிவும்!   |    காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்தின் வெளியீடு!   |   

சினிமா செய்திகள்

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் ஆரம்பித்து வைத்த 'துகில்' நிறுவனத்தின் புதிய கிளை!
Updated on : 01 May 2025

பாரம்பரிய மிக்க முறையில் கைத்தறி நெசவாளர்களால் உருவாக்கப்பட்ட பட்டு சேலைகளையும் , தூய பருத்தி சேலைகளையும்  விற்பனை செய்து ஆயிரக்கணக்கான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை உருவாக்கி வளர்ச்சி அடைந்து வரும்  'துகில்' எனும் நிறுவனத்தின் புதிய கிளை சென்னை- அடையாறில்  தொடங்கப்பட்டிருக்கிறது.  இதனை முன்னணி நட்சத்திர  நடிகை ஐஸ்வர்யா லட்சுமி  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி புதிய கிளையை திறந்து வைத்ததுடன்  முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார். 



 



'துகில்'- அருகி வரும் கைத்தறி ஆடைகளின் மரபை மீட்கும் முயற்சியில் தொழிலதிபர்கள் வர்ஷா மற்றும் ஜெயக்குமார் ஆகியோரின் சீரிய முயற்சியில் 2022 ஆம் ஆண்டில் இந்த விற்பனை நிலையம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகத்தின் அனைத்து தமிழர்களுக்கும் தங்களின் பாரம்பரிய உடையான காஞ்சி பட்டு சேலை, தூய பருத்திச் சேலை, கூறைநாடு சில்க் காட்டன் சேலை, பட்டு வேட்டி போன்ற கலாச்சார உடைகளை பிரத்யேக முறையில் கைத்தறி நெசவாளர்களால் உருவாக்கி, கைத்தறி ஆடைகளின் விற்பனையில் புதிய தடத்தை பதித்து வருகிறது. 



 



' துகில்' நிறுவனத்தின் சிறப்பு அம்சமாக வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் வண்ணம் - வடிவமைப்பு - ஆகியவற்றை தேர்வு செய்தாலும்.. அதனையும் அவர்கள் வியக்க வைக்கும் அளவில் நேர்த்தியாகவும் பாரம்பரியத்துடனும் பட்டு சேலைகள்- பருத்தி சேலைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.



 



இந்த நிறுவனத்தின் புதிய கிளை மங்கலம் பொருந்திய நன்னாளாம்  அட்சய திருதியை நாளான ஏப்ரல் 30 ஆம் தேதியன்று  சென்னை அடையாறில் உள்ள சாஸ்திரி நகரில் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



 



இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனையில் ஈடுபட்டிருக்கிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா