சற்று முன்

வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |   

சினிமா செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் 'நேசிப்பாயா'
Updated on : 09 January 2025

இயக்குநர் விஷ்ணுவர்தனின் திரைப்படங்கள் எப்போதும் ஸ்டைலிஷான விஷூவல் மற்றும் சுவாரஸ்யமான கதைசொல்லலுக்கு பெயர் பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியாக இருக்கும் 'நேசிப்பாயா' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மீண்டும் படம் இயக்கி உள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.



 



படம் குறித்து இயக்குநர் விஷ்ணுவர்தன் பகிர்ந்து கொண்டதாவது, “உங்கள் சொந்த வீட்டிற்கு திரும்பி வருவது எப்போதும் மகிழ்ச்சியான விஷயம். அந்த ஒரு அனுபவத்தைத் தான் ‘நேசிப்பாயா’ படத்தில் பணிபுரிந்தபோது உணர்ந்தேன். எனது பாலிவுட் திட்டமான 'ஷெர்ஷா' படத்தை முடித்த பிறகு, என்னை உற்சாகப்படுத்திய ஒரு கதையை இயக்க விரும்பினேன். அந்த நேரத்தில் தான் ஆகாஷ் முரளியை சந்தித்தேன். கதையைப் பற்றி பேசியபோது இருவரும் இணைந்து பணிபுரிய முடிவு செய்தோம். படத்தை இறுதியாக பார்த்தபோது எங்களுக்கும் எங்கள் அணியினருக்கும் முழு திருப்தி இருந்தது. புதுமுக நடிகர் போல அல்லாமல் தேர்ந்த நடிகரைப் போல நடித்து எங்களை ஆச்சரியப்படுத்தினார். 



 



இயற்கையாகவே அவருக்கு அற்புதமாக நடிக்கும் திறன் இருக்கிறது. அதிதி ஷங்கர் பணிபுரிவதற்கு மிகவும் இலகுவானவர். நடிகர்கள் சரத்குமார், பிரபு, குஷ்பு சுந்தர், ராஜா, கல்கி கோச்லின், சிவ பண்டிட் மற்றும் பல சிறந்த நடிகர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு இதுதான் முதல் முறை. 90 சதவீத படப்பிடிப்பு ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற வெளிநாடுகளில் நடந்துள்ளதால் இப்படம் திரையரங்குகளில் சினிமா ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்று நம்புகிறேன். எனது நெருங்கிய நண்பர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை எப்போதும் எனது படங்களுக்கு பெரும் பலம். இந்த படத்தில் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. எனது பார்வையை அழகான காட்சிகளாக மொழிபெயர்த்த ஒளிப்பதிவாளர் கேமரூன் எரிக் பிரிசன் மற்றும் சண்டை பயிற்சி குழுவினருக்கு எனது சிறப்பு நன்றி. எனது தயாரிப்பாளர்கள் சேவியர் பிரிட்டோ மற்றும் சினேகா பிரிட்டோ ஆகியோருக்கு நன்றி. ’நேசிப்பயா’ படம் காதல், ஆக் ஷன் மற்றும் எல்லையற்ற பொழுதுபோக்கு கொண்ட விஷுவல் ட்ரீட்டாக இருக்கும்” என்றார். 



 



இந்தப் படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ், சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்க சினேகா பிரிட்டோ இணைந்து தயாரித்துள்ளார். 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா