சற்று முன்

150+ திரைகளில் ‘முஸ்தபா முஸ்தபா’ இன்று ரிலீஸ் – சிறப்பு திரையிடலுக்கு அமோக வரவேற்பு!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் ‘மேட் இன் கொரியா’ – மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில் ப்ரீமியர்!   |    ரசிகர்களை கவர்ந்த ஆக்‌ஷன் காட்சிகளோடு லெஜெண்ட் சரவணன் ‘லீடர்’ டீசர் வெளியீடு!   |    நட்பு, கனவு, நகைச்சுவை கலந்த ‘லோக்கல் டைம்ஸ்’ – மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில்!   |    பண மிஷின் ரகசியம்… ‘கான் சிட்டி’ டைட்டில் டீசர் வெளியீடு!   |    ஸ்ருதிஹாசன் குரலில் ‘பவழ மல்லி’ – சாய் அபயங்கர் இசையில் புதிய பாடல்!   |    'ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடும், அந்த நிறைவை ‘தடயம்’ கொடுத்தது' – சமுத்திரகனி பெருமிதம்   |    மார்ச் 13 முதல் ZEE5-ல் ‘பூக்கி’ காதலும் நகைச்சுவையும் கலந்த ரொமான்டிக் காமெடி ஸ்ட்ரீமிங்!   |    நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |    திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை தொடங்கியுள்ளேன் - தனுஷ்   |    ‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |   

சினிமா செய்திகள்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா
Updated on : 01 October 2024

தென்னிந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற நோயறிதல் மையங்களில் ஒன்றான ஹைடெக் நோயாறிதல் மையங்கள் (Hiteck Labs) நிறுவனர் மற்றும் முன்னாள் மருத்துவ இயக்குநரான டாக்டர்.எஸ்.பிகணேசன், 2021 ஆம் ஆண்டு தனது ஹைடெக் நிறுவனத்தை வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறியவர் தற்போது மருத்துவ துறையில் மீண்டும் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.



 



இரத்த குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள் மற்றும் இரத்த புற்றுநோய்களை கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளிப்பதற்கான பிரத்யேக அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட மருத்துவமனையை டாக்டர்.எஸ்.பி.கணேசன் சென்னையில் ஆரம்பித்துள்ளார். 



 



‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ என்ற பெயரில் சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் (பச்சையப்பன் கல்லூரி அருகே} தொடங்கப்பட்டிருக்கும் இந்த மருத்துவமனையின் திறப்பு விழா செப்டம்பர் 30 ஆம் தேதி விமர்சையாக நடைபெற்றது.



 



‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழாவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எச்.விஹண்டே மற்றும் பத்மஸ்ரீ டாக்டர்.மேமன் சாண்டி சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள்.



 



மருத்துவமனையின் நிறுவனர்கள் டாக்டர்.செந்தில் கணேசன், வரவேற்புரை ஆற்றினார். டாக்டர்.எஸ்.பி.கணேசன் நன்றியுரை ஆற்றினார்.



 



டாக்டர் எம்.என்.சதாசிவம் ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’-யின் நோக்கம் மற்றும் அதிநவீன மருத்துவம் பற்றி விளக்கமளித்தார். 



 



‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ பற்றி பேசிய டாக்டர்.எஸ்.பி.கணேசன், “ஹைடெக் லேப்ஸ் நிறுவனத்தை வேறு ஒரு நிறுவத்திடம் ஒப்படைத்த பிறகு மருத்துவ துறையில் புதிதாக செய்ய வேண்டும் என்று சிந்தித்தேன். அதன்படி, இரத்த கோளாறுகள் மற்றும் குறிப்பாக இரத்த புற்றுநோயால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிப்பதோடு, நோய் ஆரம்பத்திலேயே கண்டறியும் அதிநவீன தொழில்நுட்பங்கள் கூடிய மருத்துவமனையை தொடங்க முடிவு செய்து ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’-யை நிறுவியுள்ளோம்.



 



எங்கள் மருத்துவமனையில் திறமையான மூத்த மருத்துவர்கள் மட்டும் இன்றி, திறமையான செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை நியமித்துள்ளோம். இரத்தம் தொடர்பாக மக்களுக்கு ஏற்படும் அனைத்துவிதமான குறைபாடுகளையும் குறிப்பாக இரத்த புற்றுநோய்களை துள்ளியமாக கண்டறிந்து சிறந்த முறையில், குறைந்த கண்டனத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம், நன்றி.” என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா