சற்று முன்

ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |    'டியூட்' ல் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டதும் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் - சரத்குமார்   |   

சினிமா செய்திகள்

ஒரு கிடாயின் கருணை மனு: வதந்தியை நம்பாதீர்கள் என்கிறார் இயக்குநர்
Updated on : 09 June 2016

"ஒரு கிடாயின் கருணை மனு" திரைப்படத்தில் ஆட்டை துன்புறுத்துவதாகவும், சினிமா என்ற பெயரில் அதை சித்திரவதை செய்வதாகவும் கூறப்பட்ட நிலையில் அதனை படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையா மறுத்துள்ளார்.



 



ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் திரைப்படம் 'ஒரு கிடாயின் கருணை மனு'. ஒரு ஆட்டுக்கிடாவின் வாழ்க்கையை கதையாக சொல்லும் இந்த திரைப்படத்தை சுரேஷ் சங்கையா இயக்க  விதார்த் மற்றும் புதுமுகம்  ரவீனா ரவி ஆகியோர்  முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.



 



இந்த திரைப்படத்தில் ஆட்டை துன்புறுத்துவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் அதுகுறித்து விளக்கமளித்துள்ள படத்தின் இயக்குநர் சுரேஷ் சங்கையா, . "ஒருவேளை படத்தின் பெயர் சிலருக்கு, படம் இப்படி தான் இருக்கும் என்ற எண்ணத்தை உருவாக்கி அவர்களை புகார் கொடுக்க தூண்டி இருக்கலாம். ஆனால் இந்நாள் வரை  எந்த புகாரும் வரவில்லை என்பது தான் உண்மை.



 



இந்த படம் முழுக்க முழுக்க தமிழ்நாட்டின்  கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. அதுமட்டுமின்றி  முற்றிலும் காமெடியை மையமாக கொண்டு நாங்கள் எடுத்திருக்கும் இந்த படத்தில் எந்த ஆடும், மிருகங்களும் துன்புறுத்தப்படவில்லை" என்று கூறியுள்ளார்.



 



அறிமுக இசையமைப்பாளர் ரகுராம் இசை அமைக்கும் இந்த திரைப்படத்திற்கு RV சரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா