சற்று முன்

பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |    ஏப்ரல் 3 வெளியாகி ரசிகர்களை கவர போகும் புதிய காதல் சயின்ஸ் பிக்ஷன் படம்!   |    “சம்பாலா” வெற்றிக்குப் பிறகு சந்தீப் கிஷனுடன் பிரம்மாண்ட பான்-இந்தியா படம் அறிவிப்பு   |    சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் ‘கேம் பிளே’ – கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!   |    சவால்களை கடந்து உருவான 'நீ Forever' – தயாரிப்பாளர் புகழின் உணர்ச்சிப்பூர்வமான உரை   |    ‘டிமாண்டி காலனி 3’ அப்டேட், ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!   |    ‘மேட் இன் கொரியா’ உலகம் முழுவதும் ஹிட்; நெட்ஃப்லிக்ஸில் முதலிடம்   |    சுந்தர் சி – துரை V.Z. வெற்றி கூட்டணியில் திகில் படம்   |    பின்தங்கிய குடும்பங்களுக்கு 50 வீடுகள்! - ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளையின் சமூக சேவை   |    பெண்கள் பாதுகாப்பை பேசும் ‘எஸ் கே எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் டீசர் வெளியீடு   |    ‘கே டி : தி டெவில்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு… ரசிகர்களிடையே உற்சாகம்   |    ‘சிறை’ திரைப்பட வெற்றிவிழா – படக்குழுவிற்கு கேடயம் வழங்கி கௌரவிப்பு   |    18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் ‘தாம் தூம்’   |    'சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு' நடிகர் குமரனின் சினிமா பயணம்   |    “முத்து என்கிற காட்டான்” டிரெய்லர் வெளியீடு , மர்மத்தை அதிகரிக்கும் புதிய காட்சிகள்   |    “நீ Forever” – Gen Z காதலை பேசும் புதிய லவ் டிராமா மார்ச் 27 முதல் திரையரங்குகளில்!   |    முனீஸ்காந்த் நடிக்கும் புதிய ஃபேண்டஸி காமெடி படம் – பூஜையுடன் தொடங்கியது   |    ரூ.50 கோடி வசூல் – 480 திரைகளில் வெற்றிகரமாக ஓடும் ‘தாய் கிழவி’   |   

சினிமா செய்திகள்

பெண் சாதனையாளர்களுக்கு சுயம்பி விருது, 4-வது சங்கமத்தை நடத்திய இலங்கேஸ்வரி முருகன்
Updated on : 11 January 2022

தமிழ்நாடு மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்தவர் இலங்கேஸ்வரி முருகன். ஒப்பனைக் கலைஞராக இந்த துறையில் 21 வருட அனுபவம் கொண்டவர் இவர்..  



 



தற்போது சங்கமம் நான்காவது வருட நிகழ்ச்சியை நடத்தி அடித்தட்டு நிலையில் இருந்து தங்களது உழைப்பால் முன்னேறி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் பல்வேறு  துறைகளை சேர்ந்த பத்து பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு சுயம்பி என்கிற விருது வழங்கி கவுரவித்து உள்ளார் இலங்கேஸ்வரி முருகன்.



 



இந்த நிகழ்வின்போது சிறந்த ஒப்பனை கலைஞர் விருது பொன்னிக்கு வழங்கப்பட்டது.



 





 



மேலும் சுயம்பி விருது மதுரை போன்ற தமிழகததே சேர்ந்தவர்களுக்கும் ஓடிஸா போன்ற வெளி மாநில சாதனையாளர்களுக்கும் வழங்கப்பட்டது.



 



டயமண்ட் ஸ்டார் விருது கேரளா, பெங்களூரு போன்ற வெளி மாநிலங்களில் வசிக்கும் சாதனை பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டது.



 



சன் டிவி புகழ் நடிகை கண்மணிக்கு சிறந்த பிரபலம் (Popular Face) விருது வழங்கப்பட்டது.



 



திருநங்கை மிலாவுக்கு ஊக்க பெண்மணி (Inpiring Woman) விருது கவுரவிக்கப்பட்டது.



 



ஷாலினி ஷாலுவுக்கு சிறந்த போட்டோஜெனிக் விருது வழங்கப்பட்டது.



 



இந்த நிகழ்வில் சிறப்பு மணமகள் மேக்கப் போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுக்க சின்ன சின்ன கிராமங்களில் இருந்து  கூட பல அழகு கலை நிபுணர்கள் மற்றும் ஒப்பனை கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.



 



இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக குழந்தைகளுக்கான பேஷன் ஷோ ஒன்றை நடத்தி அதில் நம் சாதாரண வீட்டு பிள்ளைகளை நடந்துவர செய்தனர். உபாசனா இந்த பேஷன் ஷோவில் குழந்தைகளுக்காக ஷூ ஸ்டாப்பராக நடந்தார்.



 



இந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டிய ஒன்னேகால் லட்சம் ரூபாயை குழந்தைகள் நல மருத்துவமனைகளில் உள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி கொள்வதற்காக குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குனர் வசம் வழங்கப்பட்டது

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா