சற்று முன்
சினிமா செய்திகள்
IK.Jayanthi lal appointed as Commissioner
Updated on : 11 January 2022
The India Pacific Islands Trade Council organized the India Papua New Guinea Summit which was attended by the Business community was held at the Star Hotel in AlwarpetChennai.
The event also was graced by Tamil Nadu Ministers Palanivel Thiagarajan and Gingee K.S. Masthan have appointed IK.Jayanthi lal as Papua New Guinea's Trade Commissioner for south India in the presence of Papua New Guinea High Commissioner to India HE Paulias Korni.
State Finance Minister Palanivel Thiagarajan, Minister of State for NRI Affairs and Minority Welfare Gingee K.S. Masthan, IK.Jayanthi lal, south India Trade Commissioner of Papua NewGuinea , HE Mr.Paulias Korni, Papua New Guinea High Commissioner to India, Dr.Venkatasalam Murugan, Secretary to the Ministry of External Affairs, Dr.Asif Iqbal, Sujoy Maitra, Dr. R.L. kannan were also present on the occasion.
Minister of State for NRI Affairs and Minority Welfare Gingee K.S. Masthan, said Tamils living abroad should come to Tamil Nadu to start a business.The Chief Minister of Tamil Nadu is taking special steps in this regard.He said the role of expatriate Tamils was essential for the economic development of Tamil Nadu.

Speaking on the occasion, State Finance Minister Palanivel Thiagarajan said that global trade relations are essential in the present times.At present it is gratifying to see the development of trade relations between India and Papua New Guinea.
Speaking to reporters , South India Trade Commissioner for Papua New Guinea, IK.Jayanthi lal thanked Papua New Guinea's Ambassador Paulias Korni for appointing him as Papua New Guinea's Trade Commissioner and said that he would take delegations to the island nation to strengthen mechanisms created for enabling these trade opportunities between both countries.

Further, I will do my best to improve Papua New Guinea's country Collaboration between South India & PNG by supporting for FDI in Government Projects & Public-Private Partnerships for developing projects in the field of Infrastructure, Energy, Mines & Minerals, Automobiles, Textiles, etc. Supporting for Technical knowhow in the field of Agriculture & MSME set up. Supporting for enrolling PNG students for higher Studies in Medical, Information Technology & Management. Support for a better trusted Import Export business in the field of Perishable & Non-Perishable goods specifically for Rice, Vehicles, Machineries & Equipment. TamilNadu can act as a Catalyst for being out sourced for machine parts, tools, rubber parts, etc. Special Economic Zones in TN can be used to develop better trade between PNG & other Asian countries, said IK.Jayanthi lal, the newly appointed South India Trade Commissioner for Papua New Guinea.
சமீபத்திய செய்திகள்
பான் இந்தியா படம் அல்ல… உண்மை சம்பவங்களின் கதை! 'மிஸ்டர் எக்ஸ்'
பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன்குமார், மேவரிக் மூவிஸ் வினீத் ஜெயினுடன் இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X). இந்த படம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கௌதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன், சஞ்சனா சிங், காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மனு ஆனந்த் இயக்கிய இந்த படம், அவர் முன்னதாக இயக்கிய FIR திரைப்படத்தின் வெற்றிக்கு பின் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அதன் டிரைலர் வெளியீட்டு விழா விஜயா ஃபோரம் மாலில் உள்ள பேலசோ திரையரங்கில் சிறப்பாக நடைபெற்றது
ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’, ஏப்ரல் 17ஆம் தேதி ரசிகர்களை திரையரங்குகளில் சந்திக்க தயாராகியுள்ளது.
இந்த நிகழ்வில்
தயாரிப்பாளர் S.லஷ்மன்குமார் பேசும்போது,
இந்தப் படத்திற்காக உழைத்த அத்தனை பேருக்கும் நன்றி. இதில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடத்திருக்கிறார்களா என்கிற பிரமிப்பு ஏற்பட்டது. அதேபோல முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களது பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். படத்தைப் பார்த்ததும் ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. முழுமையான திருப்தி ஏற்பட்டது. இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் இதை எங்களால் எடுக்க முடிந்ததற்காக எங்களுடன் கைகோர்த்த மேவரிக் மூவிஸ்க்கு நன்றி. ஜியோ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட எங்களது பார்ட்னர்களுக்கும் நன்றி” என்று கூறினார்.
ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் பேசும்போது,
“கொடுத்த காசுக்கு மேல் நடிக்கிறார்கள் என்று சொல்வது போல, இந்த படத்தில் பணியாற்றியவர்கள் கொடுத்த காசுக்கு மேல் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லலாம். பார்ப்பதற்கு ஹாலிவுட் படம் போல ஸ்டைலிஷாக இருந்தாலும் இங்கே எல்லோருமே ஒரு அடிமட்ட தொழிலாளி போலத்தான் உழைத்தோம். அஜர்பைஜான் உட்பட எங்களுடைய படப்பிடிப்பு நடைபெற்ற இடங்கள் முழுவதுமே பஞ்சபூதங்கள் ஆக்ரோசமாக வந்தன. நானும் இயக்குநர் மனுவும் ரூம் போட்டு எல்லாம் பெரிதாக விவாதிக்க மாட்டோம். எங்களுக்குள் ஒரே அலைவரிசை இருப்பதால் பணியாற்றுவது எளிதாக இருக்கும்.. சண்டைக் காட்சிகளை படமாக்கும்போது பல காட்சிகள் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்டது. மஞ்சு வாரியார் ரொம்பவே அசால்டாக சண்டைக் காட்சிகளில் நடித்தார்” என்று கூறினார்.
இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸ் பேசும்போது,
“ஒரு நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு ‘மிஸ்டர் எக்ஸ்’ படம் வெளியாக இருக்கிறது. இதற்கு பின்னணி இசை அமைப்பது ரொம்ப எளிதாக இருந்தது. என்னுடைய பயணத்தில் இந்தப் படத்திற்காக பின்னணி இசையில் அடுத்த கட்டமாக ஒன்றை முயற்சி செய்து இருக்கிறேன்” என்று கூறினார்.
படத்தொகுப்பாளர் பிரசன்னா பேசும்போது,
“இந்தியாவில் வெவ்வேறு காலகட்டத்தில் நடந்த உண்மையான சம்பவங்களை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் இந்தப்படத்தில் சொல்லி இருக்கிறோம்” என்று கூறினார்.
நடிகை ரைசா வில்சன் பேசும்போது,
“‘மிஸ்டர் எக்ஸ்’ படத்திற்காக என்னை தேர்வு செய்வதற்கு பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் மனு ஆனந்த் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் படம் பார்த்துவிட்டேன். ரொம்பவே நன்றாக வந்திருக்கிறது. அரசியல் ரீதியாக சரியான படம். சீரியசான டாப்பிக்காகவும் அறிவார்ந்ததாகவும் இந்தப் படம் இருக்கிறது. இது போன்ற படம் நமக்குத் தேவையான ஒன்று. இதுபோன்ற கதைகளை இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.
நடிகை அதுல்யா ரவி பேசும்போது,
“எப்போதுமே நாம் ஒரே மாதிரி படங்கள் பண்ணும்போது இவர்களுக்கு இதுதான் வரும் என்று முத்திரை குத்தி விடுவார்கள். அதை உடைக்க வேண்டும் என்றால் நம் மீது ஒரு இயக்குநர் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த வகையில் என்னை நம்பியதற்காக இயக்குநர் மனு ஆனந்திற்கு நன்றி. வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் கொடுத்ததுடன் இவ்வளவு பெரிய நட்சத்திரக் கூட்டத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பும் கொடுத்தார். இதில் நடித்த எல்லோருடனும் எனக்கு பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அனுபவங்களை கற்பதற்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தது. திபு இசையில் இந்தப் படத்தில் எனக்கு கிடைத்த பாடல் இப்போது வரை எனக்கு ஒரு பெரிய அங்கீகாரமாக இருக்கிறது. மிகப்பெரிய தியேட்டர் அனுபவம் கொடுக்கும் படமாக இது இருக்கும்” என்று கூறினார்.
நடிகை அனகா பேசும்போது,
“இந்தப் படத்திற்காக நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்து இருந்ததால் இந்த தருணம் எங்களுக்கு ரொம்பவே முக்கியமானது. இதில் மிகச்சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பணியாற்றியதில் எனக்கு உண்மையிலேயே மிகப்பெரிய அனுபவம் கிடைத்திருக்கிறது. மஞ்சு வாரியருடன் இணைந்து நடித்தது கனவு நனவான தருணமாக மாறியது” என்று கூறினார்.
நடிகர் சரத்குமார் பேசும்போது,
“‘மிஸ்டர் எக்ஸ்’ படம் இப்போது அவசியமான ஒன்று. உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதன் கதையை மனு ஆனந்த் என்னிடம் சொன்னபோது என்னை நடிக்க வைப்பதற்காக ஏதோ ரீல் விடுகிறார் என்று நினைத்தேன். ஆனால் அவர் இதற்கான ஆராய்ச்சி பேப்பர்களை பக்காவாக வைத்திருந்தார். அதில் இரண்டு மூன்று பக்கங்களை பார்த்ததுமே அவர் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்திருக்கிறார் என்று தெரிந்தது. உடனே இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். மிஸ்டர் எக்ஸ் என்னுடைய 172 வது படம். இத்தனை வருடங்களில் தாத்தா வேடம் உட்பட பல கதாபாத்திரங்களில் நடித்தாலும் இதில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். எனக்கு வெள்ளை முடி, வெள்ளைத் தாடியைக் கொடுத்து இயக்குநர் தன் ஆசையைத் தீர்த்துக் கொண்டார். 2023ல் இந்தப் படத்தைத் தொடங்கினாலும் இதை மிகுந்த சிரத்தையுடன் பொறுமையாக கொண்டு வந்ததற்கு மனு ஆனந்த்தைப் பாராட்ட வேண்டும். தங்களது கதாபாத்திரங்களுக்காக ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக் இருவருமே மிகுந்த அளவு மெனக்கெடலை தந்திருக்கிறார்கள். கௌதம் இந்த படத்தில் வித்தியாசமாகத் தெரிவார். படத்தில் எங்கள் அனைவரையும் இயக்கியிருப்பதால் மஞ்சு வாரியரை மேம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். போரில் பங்கேற்கும் வீரர்களுக்கு பரம்வீர் சக்ரா உள்ளிட்ட உரிய கௌரவங்கள் கிடைக்கின்றன. நமது நாட்டைப் பாதுகாப்பதற்காக வெளிநாடுகளில் தங்கியிருந்து உளவாளிகளாக வேலை செய்வது யாருக்கும் வெளியே தெரியாது. அதை வெளியே சொல்லவும் முடியாது. தன் மனைவிக்குக் கூட நான் யார் என்று உண்மையைச் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட முகம் வெளியில் தெரியாத ஹீரோக்களை நாம் பாராட்ட வேண்டும் என்றால் இது போன்ற படங்களை எடுத்து தான் பாராட்ட முடியும்.. பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்தப் படத்தை எடுப்பதற்கு இயக்குநர் மனு ஆனந்திற்கு உதவியாக இருந்த தயாரிப்பாளர்களுக்கு என்னுடைய பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். அதை பட்டை தீட்டுவதற்காக இந்த கால அவகாசம் தேவைப்பட்டது.. இந்த சமயத்தில் தான் துரந்தர் வெளியாகி சரித்திரம் படைத்தது. இதுபோன்ற படங்கள் வரவேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த படம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த படங்களை திரையரங்குகளில் பார்த்து ரசித்தால் நல்ல அனுபவம் கிடைக்கும். படம் பார்த்து எனக்கே ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது என்றால் சாதாரண ரசிகனுக்கு எந்த அளவிற்கு அனுபவமாக இருக்கும் எனச் சொல்லத் தேவை இல்லை. படம் வெளியாகி 50 நாட்களுக்குப் பிறகு ஓடிடி தளத்தில் வெளியானால் ரசிகர்கள் அதிகமாக திரையரங்குக்கு செல்வார்கள்” என்று கூறினார்.
நடிகை மஞ்சு வாரியர் பேசும்போது,
“இந்த ஒரு தருணத்திற்காக தான் மாதக்கணக்கில் நாங்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் படத்தின் கதையை ஓகே சொல்வதற்கு அதிக காலம் எடுத்துக் கொண்டது நான் மட்டும்தான் என பின்னாளில் ஆர்யா சொல்லி எனக்கு தெரிய வந்தது. மனு இந்தக் கதையை சொன்னதும் அதைப்பற்றி இன்னும் நிறைய புரிந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இருந்தது. நிறைய சந்தேகங்கள் இருந்தது. இது நம் தினசரி வாழ்க்கையில் பார்க்கும் ஒரு வாழ்க்கையே இல்லை. அதனால் அது குறித்து சில சந்தேகங்களையும் இயக்குநர் மனுவிடம் கேட்டிருக்கிறேன். அதற்கெல்லாம் பொறுமையாக எனக்கு பதில் சொன்னார். எனக்கே ஒரு நம்பிக்கை வந்ததால் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன். இதற்கு முன்பாக நிறைய ஸ்பை படங்கள் பார்த்திருப்போம். அதில் பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக பல கதாபாத்திரங்கள் இடம் பெற்று இருக்கும். அந்த வகையில் மிஸ்டர் எக்ஸ் படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் எனக்கு கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு பின் கதை, ஒவ்வொரு கதாபாத்திர வடிவமைப்பு என எல்லோருக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நான் செய்திராத அளவிற்கு இந்த படத்தில் கொஞ்சம் அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்திருக்கிறேன். அதனால் ஏற்பட்ட சின்ன சின்ன காயங்கள் இப்போதும் கூட இருக்கின்றன. ஆனால் அதை எல்லாம் எப்போதும் ஒரு ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்வேன்” என்று கூறினார்.
நடிகர் கௌதம் ராம் கார்த்திக் பேசும்போது,
“என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்காக பிரின்ஸ் பிக்சர்ஸுக்கு நன்றி சொல்கிறேன். இரண்டு ஹீரோ சப்ஜெக்டில் நடிக்கும் போது எப்போதுமே எல்லோருக்கும் ஒரு சின்ன தயக்கம் இருக்கும். ஆனால் ஆர்யா தன்னிடம் உள்ள தன்னம்பிக்கையால் ரொம்பவே தைரியமாக இருந்தார். அதனாலேயே அவருடன் நான் நடிக்கும் போது என்னை, நீ பண்ணு மச்சான் என்று உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். அது மற்றவர்கள் நிச்சயமாக கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம். ஆர்யா எனக்கு செய்தது போலவே நானும் இனி எனது படங்களில் உடன் நடிப்பவர்களுக்கு அதைச் செய்வேன். மஞ்சு வாரியருக்கும் எனக்கும் இந்த படத்தில் இணைந்து நடிப்பது போன்று காட்சிகள் இல்லை என்பது தான் எனக்கு மிகப்பெரிய வருத்தம். கிட்டத்தட்ட 70% இது ஆக்சன் படம் என்பதால் இதில் நடித்துள்ள கதாநாயகிகள் அனைவருமே ஆக்ஷனில் இறங்கி அடித்துள்ளார்கள். சரத்குமார் சார் எனக்கு ஒரு அப்பா போலத்தான். அவருடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவம். ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா என் உடல்வாகு எந்த அளவுக்கு ஒத்துழைக்கும் என்பதைக் கணித்து அதற்கேற்ற வகையில் மிகச் சிறப்பான சண்டைக் காட்சிகளை எனக்கு வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தின் மொத்த ஆன்மாவையும் இசையமைப்பாளர் திபு அழகாக செதுக்கி இருக்கிறார். என்னைப் போன்றவர்கள் இந்த கதாபாத்திரத்தை பண்ணுவார்களா என வேறு யாராவது இருந்தாலும் சந்தேகம் பட்டிருப்பார்கள். ஆனால் இயக்குநர மனு ஆனந்த் என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தை கொடுத்ததற்காக அவருக்கு நன்றி. எனக்கே என் மீது கொஞ்சம் சந்தேகம் இருந்தபோது கூட அவர் என் மீது முழு நம்பிக்கை வைத்து உற்சாகப்படுத்தினார்” என்று கூறினார்.
இயக்குநர் மனு ஆனந்த் பேசும்போது,
“‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தை பார்த்த பலரும் என்னிடம் நீங்கள் பான் இந்தியா படம் தான் எடுப்பீர்களா என்று கேட்டார்கள். ஆனால் இது பான் இந்தியா படம் அல்ல. தமிழ் படம். அந்த ஒரு நோக்கத்தோடு தான் இந்தப் படத்தை எடுத்தேன்.. போலீஸ் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் யார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் உளவாளிகளை யாருக்குமே தெரியாது. இந்தப் படம் உருவாவதற்கு காரணம் இரண்டு பேர். அவர்களைப் பற்றி எங்கேயும் சொன்னது இல்லை. இப்போது இங்கே கூட என்னால் சொல்ல முடியாது. அதுதான் உண்மை. அதில் ஒருவர் இப்போது உயிருடன் இல்லை. நன்றிக் கார்டில் கூட அவர்களின் பெயரை என்னால் இடம்பெறச் செய்ய முடியாது. அப்படிப்பட்ட சூழலில் உருவாக்கிய கதை தான் இது.
இந்தியாவில் வெவ்வேறு காலகட்டத்தில் நடைபெற்ற ஏழு உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி உள்ளது. ஆனால் சமீபத்திய பல பேட்டிகளில் இது துரந்தர் படத்தைப் போல இருக்கிறது என்று ஒரு பேச்சு உருவாகி உள்ளது. துரந்தரையும் இதையும் ஒப்பிட வேண்டாம். இது துரந்தர் அல்ல. இரண்டு படங்களிலுமே உண்மை சம்பவங்களை எடுத்து படமாக்கி இருக்கிறோம் என்பதைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை. ஆர்யாவிடம் இந்தக் கதையை சொல்லும்போது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் சொன்னேன். ஆனால் கதை கேட்டு அரை மணி நேரத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டார். இப்படி ஒரு படத்தை பண்ண உங்களால் முடியுமா என்று அவரிடம் கேட்டபோது, அது தயாரிப்பாளரின் கவலை என்று கூலாக சொன்னார். கௌதம் கார்த்திக் என் மீது நம்பிக்கை வைத்து அதில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான வெங்கடேஷ் ரொம்பவே ஆர்வமுடன் தனது பங்களிப்பைக் கொடுத்தார்.. இதில் பல நட்சத்திரங்களைத் தேர்வு செய்வதற்கு அவர்தான் உறுதுணையாக இருந்தார். அப்படி அவர் மூலமாக வந்தவர்தான் நடிகை அனகா. என்னிடம் கதை பற்றி அதிகமாக கேள்வி கேட்டு சாகடித்தவர் என்றால் அது அனகா தான். எல்லா காட்சிகளிலும் ஏதாவது ஒரு சந்தேகம் கேட்டுக் கொண்டே இருப்பார். அதுல்யா ரவியை இந்த படத்தில் நடிக்க வைக்கும் எண்ணம் எனக்கு இருந்தது இல்லை. ஆனால் தயாரிப்பாளர் வெங்கடேஷ் மூலமாக அவரிடம் கதை சொல்ல சென்றபோது அவர் அந்த அரை மணி நேரத்தில் இந்த கதை குறித்து காட்டிய ஆர்வம், என்னிடம் எழுப்பிய கேள்விகள் எல்லாமே அவர் இந்த கதாபாத்திரத்திற்கு சரியானவர் தான் என எனக்கு உணர்த்தியது. இந்தப் படத்திற்கு நாங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டு தேர்வு செய்தது என்றால் ரைசா வில்சனை தான். இதற்காக பல பேரை பார்த்திருந்தாலும் கடைசியாக ரைசா தான் உள்ளே வந்தார். அவருடன் ஏற்கனவே பணியாற்றிய அனுபவமும் எனக்கு இருந்தது, அவருக்கு கதையை சொல்வதற்காக நான் அழைத்தபோது அதெல்லாம் வேண்டாம் என்று என் மீது இருந்த நம்பிக்கையில் நடிக்க ஒப்புக்கொண்டார்,
இவர்கள் அனைவரையும் விட மஞ்சு வாரியரை இந்தப் படத்தில் கொண்டு வருவதற்குத் தான் எனக்கு கொஞ்சம் அதிக காலம் பிடித்தது. அவர் நடிப்பாரா என்கிற சந்தேகம் இருந்தாலும் ஒருமுறையாவது அவரைப் பார்த்து பேசி விட்டு வரலாம் என்று தான் சென்றேன். கதையைக் கேட்டதும் முழு ஸ்கிரிப்ட்டையும் கொடுங்கள் என்றார். அதற்கு மூன்று மாத காலம் ஆகும் என்று சொன்னேன். பரவாயில்லை என்று சொன்னார். மீண்டும் அவரிடம் சென்று முழு ஸ்கிரிப்ட்டையும் படித்துக் காட்டினேன், அதுவரை அமர்ந்திருந்தவர் பின்னர் நடந்து கொண்டே கதைய
இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணம் - வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு!
இந்திய இசையின் மாபெரும் கலைஞரான Ilaiyaraaja அவர்களின் 50 ஆண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில், Saregama Live மற்றும் Mercuri இணைந்து வட அமெரிக்காவில் பிரம்மாண்ட கச்சேரி சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளன.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நகரங்களில் இளையராஜா நேரடியாக இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார். குறிப்பாக, Dolby Theatre மற்றும் Oakland Arena போன்ற முக்கிய மேடைகளில் அவரது ஐகானிக் இசை ஒலிக்க உள்ளது.
“Music for Healing - Ilaiyaraaja Live in Performance” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இசை விழா, Catch the Rhythms உடன் இணைந்து, Saregama Live மற்றும் Mercuri நிறுவனங்களின் கூட்டாண்மையில் நடத்தப்படுகிறது. மேலும், இந்த சுற்றுப்பயணத்தில் இடம்பெறும் பிற நகரங்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வட அமெரிக்க சுற்றுப்பயணம், இளையராஜாவின் உலகளாவிய 50 ஆண்டு இசை கொண்டாட்டத்தின் முக்கிய பகுதியாகும். 9,000க்கும் மேற்பட்ட பாடல்கள் மற்றும் 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், இந்திய சினிமா இசை உலகில் அழியாத தடம் பதித்துள்ளார். இந்திய சங்கீதம், மேற்கத்திய இசை மற்றும் எலக்ட்ரானிக் ஒலிகளை இணைத்து தனித்துவமான இசை பாணியை உருவாக்கியவர் என்ற பெருமையும் அவருக்குண்டு.
முழுமையான ஆர்க்கெஸ்ட்ரா அனுபவமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கச்சேரிகளில், ரசிகர்கள் அவரது காலத்தால் அழியாத மெலடிகளை நேரடியாக அனுபவிக்கும் அரிய வாய்ப்பைப் பெறவுள்ளனர்.
மேலும், “Music for Healing” என்ற சமூக முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த கச்சேரி வருவாயின் ஒரு பகுதி இசையின் மூலம் மனநலம் மற்றும் நல வாழ்வை மேம்படுத்தும் பணிகளுக்காக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வை குறித்து MD & Group CEO of Mercuri ஸ்ரீராம் பக்திசரண் கூறியதாவது:
“இளையராஜாவின் இசை எல்லைகள் தலைமுறைகளையும் தாண்டி சென்றுள்ளது. இந்த வரலாற்றுச் சுற்றுப்பயணத்தை வட அமெரிக்காவிற்கு கொண்டு வருவது எங்களுக்கு பெருமையாகும்.”
அதேபோல், Executive Vice President – Films & Events at Saregama சித்தார்த் ஆனந்த் குமார் கூறியதாவது:
“இளையராஜாவின் இசை பல தசாப்தங்களாக இந்திய சினிமாவின் ஒலித்தளத்தை வடிவமைத்துள்ளது. இந்த உலக சுற்றுப்பயணத்தின் மூலம் வட அமெரிக்க கண்டத்தில் அவரது இசை இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.”
இந்த சுற்றுப்பயணத்தில் இடம்பெறும் முக்கிய நகரங்கள் : நியூ ஜெர்சி, வாஷிங்டன் D.C., சிகாகோ, அட்லாண்டா, டாலஸ் , ஹூஸ்டன், சீயாட்டில், சான் ஜோசே, டொரான்டோ மற்றும் மான்ட்ரியல் ஆகியவை ஆகும்.
இந்த இசை பயணம், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு
தமிழகத்தில் சட்டப்பேரவை பொது தேர்தல் காரணமாக அனைத்து மாநில அரசியல் கட்சிகளும், தேசிய அரசியல் கட்சிகளும் வாக்காளர்களை சந்தித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த தருணத்தில் தமிழக மக்களுக்கு அரசியல் ரீதியிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடிகர் ரவி மரியா கதையின் நாயகனாக நடிக்கும் 'மக்கள் தலைவா' திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மறைந்த பெருந்தலைவர் காமராஜரின் தீவிர விசுவாசியும், சீடருமான தமிழருவி மணியன் வெளியிட்டு , படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
'பழகிய நாட்கள்', ' மூன்றாம் மனிதன் ' என சமூக வலைதள உலகத்தில் மிகப்பெரும் அதிர்வை ஏற்படுத்தும் கன்டென்டுகளை உருவாக்கும் படைப்பாளியான ராம் தேவ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'மக்கள் தலைவா'. இதில் ரவி மரியா, அக்ஷரா விஜய், ராதா ரவி, பழ கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, பயில்வான் ரங்கநாதன், இயக்குனர் ரங்கநாதன், கவிதாலயா சரவணன்,அக்னி S வருண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் கே எஸ் நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் துளசி ராமன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை எஸ் எம் பிரதாப் கவனிக்க படத்தொகுப்பு பணிகளை துர்காஸ் மேற்கொண்டிருக்கிறார். கற்பனையான கதையுடன் நிகழ்கால அரசியலை காமெடியாக சொல்லும் இந்த திரைப்படத்தை ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கவிதாலயா சரவணன் மற்றும் ஆர். சந்திரசேகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஆட்சி அதிகாரத்திற்காக மக்கள் வாக்கு செலுத்துவதற்கு தயாராக இருக்கும் இந்த நிலையில் அவர்களை அரசியல் ரீதியாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த சர்ச்சைக்குரிய.. ஆனால் அர்த்தமுள்ள டைட்டில் போஸ்டரை வெளியிடுகிறோம். ராம்தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரான 'பழகிய நாட்கள்' மற்றும் 'மூன்றாம் மனிதன்' ஆகிய படைப்புகள் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி பேராதரவை பெற்றது. அந்த வகையில் 'மக்கள் தலைவா' திரைப்படமும் சமூக வலைதளங்களில் அதிர்வை ஏற்படுத்தும். மேலும் தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் நடிகராகவும் பிரபலமான நடிகர் ரவி மரியா இப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். கற்பனைக் கதையோடு சமகால அரசியலை நகைச்சுவையுடனும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் விரைவில் வெளியிடப்படும்'' என்றார்.
தமிழகம் முழுவதும் தேர்தல் ஜுரம் அனலாக தகித்துக் கொண்டிருக்கும் நிலையில்.. தமிழகத்தின் வரைபடமும், அதன் மீது 'மக்கள் தலைவா' என்ற டைட்டிலும், ஃபார் சேல் ( FOR SALE) என்ற டேக் லைனும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதுடன் இதுவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு
தமிழகத்தில் சட்டப்பேரவை பொது தேர்தல் காரணமாக அனைத்து மாநில அரசியல் கட்சிகளும், தேசிய அரசியல் கட்சிகளும் வாக்காளர்களை சந்தித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த தருணத்தில் தமிழக மக்களுக்கு அரசியல் ரீதியிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடிகர் ரவி மரியா கதையின் நாயகனாக நடிக்கும் 'மக்கள் தலைவா' திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மறைந்த பெருந்தலைவர் காமராஜரின் தீவிர விசுவாசியும், சீடருமான தமிழருவி மணியன் வெளியிட்டு , படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
'பழகிய நாட்கள்', ' மூன்றாம் மனிதன் ' என சமூக வலைதள உலகத்தில் மிகப்பெரும் அதிர்வை ஏற்படுத்தும் கன்டென்டுகளை உருவாக்கும் படைப்பாளியான ராம் தேவ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'மக்கள் தலைவா'. இதில் ரவி மரியா, அக்ஷரா விஜய், ராதா ரவி, பழ கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, பயில்வான் ரங்கநாதன், இயக்குனர் ரங்கநாதன், கவிதாலயா சரவணன்,அக்னி S வருண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் கே எஸ் நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் துளசி ராமன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை எஸ் எம் பிரதாப் கவனிக்க படத்தொகுப்பு பணிகளை துர்காஸ் மேற்கொண்டிருக்கிறார். கற்பனையான கதையுடன் நிகழ்கால அரசியலை காமெடியாக சொல்லும் இந்த திரைப்படத்தை ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கவிதாலயா சரவணன் மற்றும் ஆர். சந்திரசேகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஆட்சி அதிகாரத்திற்காக மக்கள் வாக்கு செலுத்துவதற்கு தயாராக இருக்கும் இந்த நிலையில் அவர்களை அரசியல் ரீதியாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த சர்ச்சைக்குரிய.. ஆனால் அர்த்தமுள்ள டைட்டில் போஸ்டரை வெளியிடுகிறோம். ராம்தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரான 'பழகிய நாட்கள்' மற்றும் 'மூன்றாம் மனிதன்' ஆகிய படைப்புகள் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி பேராதரவை பெற்றது. அந்த வகையில் 'மக்கள் தலைவா' திரைப்படமும் சமூக வலைதளங்களில் அதிர்வை ஏற்படுத்தும். மேலும் தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் நடிகராகவும் பிரபலமான நடிகர் ரவி மரியா இப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். கற்பனைக் கதையோடு சமகால அரசியலை நகைச்சுவையுடனும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் விரைவில் வெளியிடப்படும்'' என்றார்.
தமிழகம் முழுவதும் தேர்தல் ஜுரம் அனலாக தகித்துக் கொண்டிருக்கும் நிலையில்.. தமிழகத்தின் வரைபடமும், அதன் மீது 'மக்கள் தலைவா' என்ற டைட்டிலும், ஃபார் சேல் ( FOR SALE) என்ற டேக் லைனும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதுடன் இதுவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு
தமிழகத்தில் சட்டப்பேரவை பொது தேர்தல் காரணமாக அனைத்து மாநில அரசியல் கட்சிகளும், தேசிய அரசியல் கட்சிகளும் வாக்காளர்களை சந்தித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த தருணத்தில் தமிழக மக்களுக்கு அரசியல் ரீதியிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடிகர் ரவி மரியா கதையின் நாயகனாக நடிக்கும் 'மக்கள் தலைவா' திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மறைந்த பெருந்தலைவர் காமராஜரின் தீவிர விசுவாசியும், சீடருமான தமிழருவி மணியன் வெளியிட்டு , படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
'பழகிய நாட்கள்', ' மூன்றாம் மனிதன் ' என சமூக வலைதள உலகத்தில் மிகப்பெரும் அதிர்வை ஏற்படுத்தும் கன்டென்டுகளை உருவாக்கும் படைப்பாளியான ராம் தேவ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'மக்கள் தலைவா'. இதில் ரவி மரியா, அக்ஷரா விஜய், ராதா ரவி, பழ கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, பயில்வான் ரங்கநாதன், இயக்குனர் ரங்கநாதன், கவிதாலயா சரவணன்,அக்னி S வருண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் கே எஸ் நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் துளசி ராமன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை எஸ் எம் பிரதாப் கவனிக்க படத்தொகுப்பு பணிகளை துர்காஸ் மேற்கொண்டிருக்கிறார். கற்பனையான கதையுடன் நிகழ்கால அரசியலை காமெடியாக சொல்லும் இந்த திரைப்படத்தை ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கவிதாலயா சரவணன் மற்றும் ஆர். சந்திரசேகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஆட்சி அதிகாரத்திற்காக மக்கள் வாக்கு செலுத்துவதற்கு தயாராக இருக்கும் இந்த நிலையில் அவர்களை அரசியல் ரீதியாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த சர்ச்சைக்குரிய.. ஆனால் அர்த்தமுள்ள டைட்டில் போஸ்டரை வெளியிடுகிறோம். ராம்தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரான 'பழகிய நாட்கள்' மற்றும் 'மூன்றாம் மனிதன்' ஆகிய படைப்புகள் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி பேராதரவை பெற்றது. அந்த வகையில் 'மக்கள் தலைவா' திரைப்படமும் சமூக வலைதளங்களில் அதிர்வை ஏற்படுத்தும். மேலும் தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் நடிகராகவும் பிரபலமான நடிகர் ரவி மரியா இப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். கற்பனைக் கதையோடு சமகால அரசியலை நகைச்சுவையுடனும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் விரைவில் வெளியிடப்படும்'' என்றார்.
தமிழகம் முழுவதும் தேர்தல் ஜுரம் அனலாக தகித்துக் கொண்டிருக்கும் நிலையில்.. தமிழகத்தின் வரைபடமும், அதன் மீது 'மக்கள் தலைவா' என்ற டைட்டிலும், ஃபார் சேல் ( FOR SALE) என்ற டேக் லைனும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதுடன் இதுவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!
டாப் ஸ்டார் பிரஷாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான ரஞ்ஜன்" படத்தின் டைட்டில் லுக் டீசர், திரைபிரபலங்கள் முன்னிலையில் இன்று கோலாகலமாக வெளியிடப்பட்டது.
இப்படத்தின் முதன்மை நாயகனாக பிரஷாந்த் நடிக்கிறார். தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மகன் ஹரி இளம் நாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக நடிகை தேவயானி மகள் பிரியங்கா நடிக்கிறார் பிரஷாந்த் பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் இவர்களை அறிமுகப்படுத்தும் விழாவும் இணைந்து நடந்தது.
இன்றைய விழாவில் திரையுலக பிரபலங்கள் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு ஃபைவ் ஸ்டார் செந்தில் ஃபைவ் ஸ்டார் கல்யாண் கமல்போரா. SK சம்பத்குமார், மதியழகன், நடிகர்கள் விஷால், RK சுரேஷ் சத்யா ஆதேஷ்பாலா, மோகன்லால், சந்தோஷ்பிரபாகர், நடிகைகள் கிரண், ஆதிரா. செம்மலர் அன்னம், நடிகர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ். இயக்குநர்கள் ஆர்.கே செல்வமணி, கே எஸ் ரவிக்குமார், சரண் வெற்றிமாறன், துரை செந்தில்குமார் ஸ்ரீகணேஷ் கணேஷ் K பாபு வினோத் கார்த்திக், கலை இயக்குனர் செந்தில் ராகவன் உட்பட பலர் கலந்து கொண்டு பிரஷாந்திற்கும் புதுமுகங்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசுகையில், “பிரஷாந்திற்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள் பிரஷாந்திற்கு மிக மிக சிறப்பான எதிர்காலம் வருகிறது. மீண்டும் இந்தப்படம் மூலம் அவர் கலக்குவார் என வாழ்த்துகிறேன். இப்படத்தில் புதிதாக அறிமுகமாகும் நாயகன் நாயகிக்கும் என் வாழ்த்துக்கள்.” என்றார்.
இயக்குநர் சரண் பேசுகையில், “பிரஷாந்த் சார் பற்றி சொல்லணும்னா. நான் அவரை பார்த்தேன். ரசித்தேன். இன்றும் பார்த்து ரசித்து கொண்டே இருக்கிறேன். ஒரு விஷயத்தை நான் பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன் பிரஷாந்த் சார் நடித்த ஒரு படத்தின் டைட்டிலில் டாப் ஸ்டார் என்ற பட்டத்தை நான் தான் கொடுத்தேன். அந்த டாப் ஸ்டார் என்ற பெயர் இன்று வரை நிலைத்து நிற்பது எனக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சியை தருகிறது. இந்த படம் மிகவும் முக்கியமான ஒன்று ஏன்னா இது பிரஷாந்த் சாரை தாண்டி கதிரேசன் மகனும் தேவயானி மகளும் அறிமுகமாகும் ஒரு சிறப்பு படம் இந்த நிகழ்ச்சி நடக்கும் இந்த இடம் கூட மிகவும் விசேஷமானது இங்கிருந்து வெளியே போகும் இந்த இருவரும் மிகப்பெரிய உயரத்தை அடைவார்கள் இன்றைய இந்த நிகழ்வில் பிறந்தநாளை கொண்டாடும் நம்ம டாப் ஸ்டார் பிரஷாந்தக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.” என்றார்.
இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசுகையில், “பிரஷாந்த பண்பானவர் உறுதியானவர் குழந்தை மனம் கொண்டவர். அன்பும் காதலும் நிறைந்தவர். அவரோட அந்த எளிமை, அந்த இயல்பு இன்னைக்கும் மாறாமல் இருக்கிறது. நாம் எல்லாருக்கும் ஒரு தொடர்பாக ஒரு நெருக்கமாக உணர வைக்கும் மனிதர் அவர். எப்போதும் அப்பா பேச்சை தட்டாத பிள்ளை இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு பிறகுதான், இது ஒரு படத்தின் டைட்டில் வெளியீடும் சேர்ந்த நிகழ்ச்சி என்று தெரிந்தது. அந்த படத்தை இயக்கும் தியாகராஜன் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்த படத்தில் தேவயானி மகளும், கதிரேசன் மகனும் நடிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். இது ஒரு நல்ல தொடக்கம் இந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றி அடையும் இதில் நடிக்கும் அனைவருக்கும் பெரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் மிகப்பெரிய இடத்தை அடைய வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். மீண்டும் ஒரு முறை பிரஷாந்தக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.” என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “இன்று இந்த விழாவில் இருப்பது பெரும் மகிழ்ச்சி. கதிரேசன் மகனை அறிமுகப்படுத்துவது பற்றி ரொம்ப நாளாக பேசிக்கிட்டே இருந்தோம் ஏதாவது ஒரு நல்ல படம் ப்ராஜெக்ட் பண்ணலாம் என்று நினைத்தோம் அப்போது தான் தியாகராஜன் சார் இப்படி ஒரு படத்தை செய்கிறார் என கதிரேசன் சொன்னார் தேவயானி பொண்ணும் இதில் ஹீரோயினாக நடிக்கிறார். தேவயானி நமக்கு நிறைய நல்ல படங்கள் தந்தவர். புதுமுகங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் பிரஷாந்தக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.” என்றார்.
இயக்குநர் தியாகராஜன் பேசுகையில், “இப்படத்தின் டைட்டிலை பிரஷாந்த் பிறந்தநாள் விழாவில் அறிவிப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் இளம் ஜோடி கதாப்பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. நிறைய பேரை அந்த கதாப்பாத்திரத்திற்காக தேடினோம். கதிரேசன் மகன் ஹரியை ஒரு கல்யாணத்தில் பார்த்தேன் அவர் தோற்றம் பிடித்திருந்தது அவர் கராத்தே குதிரையேற்றம் முதல் பல பயிற்சிகள் எடுத்து வருவதாக தெரிந்தது உடனே ஒப்பந்தம் செய்து விட்டேன் அதேபோல பிரியங்கா நடிப்பதை பார்க்கும் போது மிகச்சிறந்த நடிகையாக வருவார் எனத் தோன்றியது. இருவருக்கும் என் வாழ்த்துகள்.” என்றார்.
நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசுகையில், “எனக்கு இசையமைப்பாளராக வாய்ப்புகள் தேடிய போது முதன் முதல் அட்வான்ஸ் தந்தது இயக்குனர் தியாகராஜன் சார் தான் ஆனால் அந்தப்படம் தள்ளிப்போய் நடக்கவில்லை. அவர் கொடுத்த அட்வான்ஸ் இன்னும் என்னிடம் தான் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அவருடன் இணைந்து வேலை பார்ப்பது மகிழ்ச்சி. பிரஷாந்த் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.” என்றார்.
நடிகர் விஷால் பேசுகையில், “நல்ல விஷயங்கள் ஒரே நேரத்தில் நடப்பது என்பது மிகப் பெரிய சந்தோஷம் இரண்டு நல்ல நிகழ்வுகளும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் நல்ல முறையில் நடைபெறுவது இன்னும் அதிக மகிழ்ச்சி தருகிறது முதலில், என் அன்புக்குரிய பிரஷாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் எப்போதும் இப்படி சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
நான் இளமைக் காலத்திலிருந்தே அவருடைய படங்களை பார்த்து வளர்ந்தவன் திருடா திருடா செம்பருத்தி போன்ற படங்களை திரையரங்கில் பார்த்து ரசித்திருக்கிறோம் சினிமாவில் வந்த நாளில் இருந்தே அவருக்கு பெரிய வரவேற்பும், ரசிகர் ஆதரவும் இருந்து வருகிறது. ஒரு நடிகர் உயர்ந்து நிற்க அவருக்குப் பின்னால் ஒரு வலிமையான ஆதரவு அவசியம். அந்த வகையில் அவரின் அப்பா இயக்குனர் தியாகராஜன் அவர்களின் பார்வையும், முயற்சியும் மிக முக்கியமானது அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் உங்கள் பார்வை தான் இன்றைக்கும் பிரஷாந்த் அவர்களை உயரமாக நிறுத்தி இருக்கிறது.
இந்த புதிய முயற்சிக்காக ஹரிக்கும் முழுக் குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் அடுத்து தேவயானி பற்றி சொல்ல வேண்டும் அவர்கள் சினிமாவைத் தாண்டி ஒவ்வொரு வீட்டிலும் சென்றடைந்தவர் அந்த மரபை முன்னெடுத்து செல்லும் அவர் மகள் பிரியங்காவுக்கு என் வாழ்த்துகள். நீங்கள் கண்டிப்பாக சிறப்பாக செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். இந்த படத்தில் பணியாற்றும் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.” என்றார்.
நடிகை தேவயானி பேசுகையில், “ரஞ்ஜன் படத்தின் டைட்டில் லுக் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கும். அதே நேரத்தில் பிரஷாந்த் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கும் வந்திருக்கும் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.
முதலில் தியாகராஜன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஒரு புதிய தலைமுறையை அறிமுகப்படுத்துவது என்பது மிகவும் பெரிய விஷயம் புதுமுகங்களை கொண்டு வந்து அவர்களின் எதிர்காலத்தை உருவாக்குவது என்பது ஒரு சிறப்பான செயல் அந்த வகையில் இந்த படத்தில் என் மகள் பிரியங்கா மற்றும் ஹரி ஆகிய இருவரையும் அறிமுகப்படுத்தும் தியாகராஜன் அவர்களுக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். ஒருவரை அறிமுகப்படுத்துவது என்பது அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கையை அளிப்பதற்குச் சமம் அந்த வாய்ப்பை நீங்கள் இவர்கள் இருவருக்கும் அளித்துள்ளீர்கள் கண்டிப்பாக இவர்கள் உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவார்கள். கடினமாக உழைத்து சிறப்பாக நடித்து சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து நிற்பார்கள்.
அடுத்து பிரஷாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எப்போதும் இப்படியே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்கள் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி அப்பு படத்தில் நடிக்கும் போது நான் யோசிக்கவே இல்லை பின்னாளில் என் மகள் உங்களுடன் இணைந்து உங்கள் தயாரிப்பில் நடிப்பார் என்று நான் நினைத்ததே இல்லை ஆனால் இன்று அது நிஜமாகி இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நினைத்தாலே இதயம் இனிக்கும் ஒரு தருணம் இது. அதேபோல், இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இவர்களும் இந்த படத்திற்கு பெரிய பலமாக உள்ளனர் இந்த படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.” என்றார்.
ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசுகையில், “எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. பல மேடைகளில் பேசியிருக்கிறேன்.. ஆனால் இன்று ஒரு மிகவும் சந்தோஷமான நாள் என்று சொல்லலாம் முதலில் ஒரு சிறந்த மனிதர் ஒரு சிறந்த நடிகர் அதைவிட ஒரு அன்பான தந்தையின் அரவணைப்பில் இந்தத் திரைப்பட உலகில் பல ஆண்டுகளாக பல பெரிய வெற்றிகளை அளித்து பல முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய பிரஷாந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். இங்கே நான் ஒரு விஷயம் சொல்லணும் தியாகராஜன் அவர்களைப் பற்றி தியாகராஜன் சார், ஒரு அப்பாவாக என்ன செய்ய வேண்டும் என்று நான் நினைத்தேனோ அதை இன்று என் மகன் ஹரிக்காக செய்து காட்டுகிறீர்கள் ஒரு பெரியவராக ஒரு தந்தையாக நீங்கள் என் குடும்பத்துக்கு கொடுத்த ஆதரவுக்கு நான் நன்றி என்று சொல்வது மட்டும் போதாது. உண்மையிலேயே அது சொல்ல முடியாத உணர்ச்சி. எனக்கு கண்கள் கலங்குகிறது இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் தருணம்.
பிரஷாந்த் அவர்களுக்கும் அவர்களுடன் இருக்கும் அனைவருக்கும் இனி வரும் நாட்களில் மேலும் பல வெற்றிகள் கிடைக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். இன்று டைட்டில் லாஞ்ச் நிகழ்ச்சியில் கண்கள் கலங்கியதுபோல. நாளை இந்த படம் வெளியாகி பெரிய வெற்றி பெறும் போது அந்த சந்தோஷத்தில் மீண்டும் கண்கள் கலங்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.
இந்த நிகழ்ச்சி உங்களால் தான் சாத்தியமானது. நீங்கள் இல்லாமல் இது அற்புதமான தந்தை நடந்திருக்காது தியாகராஜன் சார் நீங்கள் ஒரு உங்கள் மகலுக்கான இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகாக ஒருங்கிணைத்து நடத்தும் இந்த தருணம் மிகவும் பெருமையாக இருக்கிறது. உங்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும் என்றும் இருக்கும். நன்றி.” என்றார்.
நடிகர் பிரஷாந்த் பேசுகையில், “இங்கே வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். எப்போதும் போல நீங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து, சேர்ந்து இந்த நிகழ்வை கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு புதிய படத்தின் தலைப்பு வெளியீடும், அதே நேரத்தில் ஒரு புதிய தொடக்கமும் இங்கே நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை இவ்வளவு பிரம்மாண்டமாக நடத்த உதவிய அனைவருக்கும் என் நன்றிகள். இந்த தலைப்பை வெளியிட வருகை தந்த தயாரிப்பாளர்கள். இயக்குநர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
இன்று இந்த படத்தின் மூலம் ஹரி அறிமுகமாகிறார். ஒரு தந்தையாக, மேடையில் தனது மகன் நிற்பதைப் பார்ப்பது எவ்வளவு பெருமையான தருணமோ, அதே உணர்வு கதிரேசன் அவர்களுக்கும் இருக்கிறது. அது ஒரு சொல்ல முடியாத மகிழ்ச்சி அதேபோல், ஒரு மகள் மேடையில் நிற்கும் தருணம், உலகமே அவளை கவனிக்கும் தருணம் அது ஒரு பெற்றோருக்கு மிகப் பெரிய பெருமை அந்த உணர்வை நாமெல்லாரும் பகிர்ந்து கொள்கிறோம்.
எங்களுக்குப் இந்த சினிமா உலகமே ஒரு பெரிய குடும்பம். அந்த குடும்பத்தில் இப்படி ஒரு அழகான தருணத்தை பகிர்ந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.
இந்த படம் தற்போது படப்பிடிப்பில் உள்ளது. இதில் நடிக்கும் அனைத்து நடிகர்களும் எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களும் அன்பானவர்களும் இது ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டணி ஒரு படம் சிறியதாக இருந்தாலும் அதில் பெரிய கலைஞர்கள் சேர்ந்தால் அது மேலும் உயரம் அடையும் அதுபோல, இந்த படமும் ஒரு மிகப்பெரிய அளவில் உருவாகி வருகிறது. இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவும் மிக வலிமையானது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் மற்றும் கலை இயக்குனர் செந்தில் ராகவன் இவர்கள் அனைவரும் இந்த படத்திற்கு பெரிய பலமாக உள்ளனர். இந்த அணியைக் கொண்டுவந்த முக்கியமான நபர் என் அப்பா எங்கள் இயக்குநர் அவருக்கு என் மனமார்ந்த நன்றி ஒரு இயக்குநராகவும். நடிகராகவும், கலைஞர்களை எப்படி கையாள வேண்டும் என்பதையும் அவர் நன்றாக அறிவார். அவருடன் பணிபுரிவது எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி இந்த படம் மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகிறது கண்டிப்பாக இது ஒரு தரமான படமாக அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும் இறுதியாக, இந்த நிகழ்ச்சிக்கு வந்து ஆதரவு அளித்துள்ள பத்திரிகை க தொலைக்காட்சி, வலைதள நண்பர்கள் உட்பட உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் எப்போதும் எனக்கு வலிமையாக உள்ளது. உலகம் முழுதும் இருக்கும் என் ரசிகர்களின் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு என் அன்பும் நன்றியும் விரைவில் திரையரங்கில் சந்திப்போம்.” என்றார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு பெரும் பொருட்செலவில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு பரபரப்பாக நடந்து வருகிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
விஷ்ணு விஷால் – ராம்குமார் மீண்டும் இணைப்பு: “இரண்டு வானம்” கோடை ரிலீஸுக்கு தயாராகிறது!
விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்ட “முண்டாசுப்பட்டி”, “ராட்சசன்” ஆகிய பிளாக்பஸ்டர் படங்களின் வெற்றி கூட்டணியான விஷ்ணு விஷால் மற்றும் ராம்குமார் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படம் “இரண்டு வானம்”. இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது திரையுலகிலும் ரசிகர்கள் மத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை வழங்கிய சத்தியஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம், இந்தப் படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. உயர்தர தயாரிப்பு மதிப்பு, பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் முன்னேற்றமான தொழில்நுட்ப அம்சங்களுடன், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் வகையில் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். புதிய ஜோடியின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வலுவான கதைக்களம், பிரபல கூட்டணி மற்றும் பிரம்மாண்டமான தயாரிப்பு காரணங்களால் “இரண்டு வானம்” படம் வெளியாவதற்கு முன்பே திரையுலகில் பேசப்படும் முக்கிய படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
“இரண்டு வானங்கள், ஒரே பார்வை” என்ற மையக் கருத்துடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் கோடை காலத்தில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
“விக்னேஷ் சிவன் படம்… அனிருத் இசை… அதுவே என் ட்ரீம்!” – பிரதீப் ரங்கநாதன்
தமிழ் திரையுலகின் இளம் முன்னணி நட்சத்திரமான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்துள்ள “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” (LIK) திரைப்படம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி, வரும் ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் முன் வெளியீட்டு விழா, ஒரு தனியார் கல்லூரி அரங்கில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. படக்குழுவினரும், பிரபலங்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது..,
நான் காலேஜ் படிக்கும் போது என் எக்ஸ் உடன் பார்த்த படம் நானும் ரௌடிதான். அப்போதிலிருந்து விக்னேஷ் சிவன் சாருக்கு ரசிகன் நான். அவர் என்னை வைத்து படம் என்ற போது எனக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ். நான் எப்போதுமே ஒரு ஆசை வைத்திருந்தேன் — நான் இயக்குநராக இருக்கும்போது ஒரு ஃப்யூச்சரிஸ்டிக் படம் பண்ணணும் என்று. அதற்காக கதைகளையும் யோசித்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் “இது ஒரு ஃப்யூச்சர் படம்” என்று சொன்ன உடனே எனக்கு ரொம்ப எக்ஸைட்மென்ட். இந்தியாவில் அப்படி ஃப்யூச்சரை அடிப்படையாக கொண்டு படங்கள் ரொம்ப குறைவு. அதனாலே அந்த ஐடியா கேட்டவுடனே “சூப்பர்!”ன்னு உணர்வு வந்தது. அதுக்கப்புறம் கதை சொல்லும்போது, “இங்கே எனக்கனெ யாருமில்லையே பாடல் வரும்”ன்னு சொன்னார். மறுபடியும் எனக்கு அதே excitement. அந்த பாடல் ஒரு காதலிக்காக பாடப்படுவது. நம்ம singing skill காட்டி அவளை impress பண்ணுற மாதிரி ஒரு situation. நிஜமாக நான் பாடினா நீங்கள் impress ஆக மாட்டீங்க. ஆனா அந்த scene-ல நான்தான் ஹீரோன்னு நினைத்தவுடனே இந்த படம் கண்டிப்பா பண்ணணும் என்று முடிவு பண்ணிட்டேன். அவர் கதை முழுசாக சொல்லி முடித்தவுடன், இந்த படம் பண்ணுவது நிச்சயம் என்று பிக்ஸ் ஆகிட்டேன். அதுக்கப்புறம் “அனிருத் மியூசிக்”ன்னு சொன்னதும் இன்னொரு லெவல் சந்தோஷம். இந்தியாவிலேயே எல்லாருக்கும் அவரோட வேலை செய்யணும் ஆசை இருக்கும். நானும் இந்தியன்தானே, எனக்கும் அந்த ஆசை இருந்தது. அது இப்போது நிஜமாயிற்று. தேங்க்ஸ் ப்ரோ. உங்களோட வேலை பண்ணியது எனக்கு ரொம்ப சந்தோஷம். அவரோட டேலண்ட் எல்லாருக்கும் தெரியும். ஆனால் நான் பார்த்தது — அவர் ரொம்ப நல்ல மனிதர். நல்ல மனசு இருக்குறவங்க எல்லாரும் எனக்கு ரொம்ப க்யூட்டா தோன்றுவாங்க. அந்த வகையில் நீங்க ரொம்ப நல்லவரா தெரிகிறீங்க. உங்களோட இன்னும் நிறைய நேரம் செலவழிக்கணும், இன்னும் நிறைய படங்கள் பண்ணணும் என்ற ஆசை இருக்கிறது. அடுத்து பிரதீப் ராகவ் — என்னோட நம்பிக்கையான எடிட்டர். இந்த படத்தில் நிறைய புதிய முயற்சிகள் செய்திருக்கார். எடிட்டிங் மட்டும் இல்லாமல் ஸ்கிரீன்ப்ளேக்கும் நல்ல இன்புட் கொடுத்தார். நீங்க ஒரு சிறந்த திறமைசாலி. ரவி வர்மன் சார் — ஒரு ஜீனியஸ். இந்த மாதிரி ஒரு ஃப்யூச்சர் படத்தை உருவாக்க உங்களைப் போல ஒரு ஒளிப்பதிவாளர் இல்லாமல் முடியாது. உங்களோட வேலை பார்த்த பிறகு என்னோட எதிர்பார்ப்பு அளவே மாறிவிட்டது. முத்துராஜ் சார் — இந்த படத்தில் இவ்வளவு பெரிய கலைஞர்களோட வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது ஒரு பெரிய விஷயம். இந்த படம் பார்த்த பிறகு தான் உங்களோட வேலை முழுமையாக புரியும். எஸ்.ஜே. சூர்யா சார் பற்றி ஒரு விஷயம் சொல்லணும். நான் காலேஜ் முடிச்ச பிறகு அவரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக சேரணும் என்று ஆசைப்பட்டேன். அவரோட அலுவலகத்துக்கு போய் ரெஸ்யூம் கொடுத்தேன். “போங்க”ன்னு சொன்னாங்க. ஆனா நான் வெளியே போகாமல் எதிரே இருந்த படிக்கட்டில் உட்கார்ந்தேன். அவர் வெளியே வரும்போது பார்க்கலாம் என்று. அவர் பார்த்து “யார் அந்த பையன்?”ன்னு கேட்டார். என்னை உள்ளே அழைத்தார். நான் “உங்களிடம் உதவி இயக்குநராக சேரணும்”ன்னு சொன்னேன். அவர் மீண்டும் “ரெஸ்யூம் கொடுத்துட்டீங்களே, போங்க”ன்னு சொன்னார். ஆனா அந்த தருணம் எனக்கு மறக்க முடியாதது. நான் செய்த குறும்படம் பற்றி சொன்னேன் என்னிடம் நிறைய கேள்வி கேட்டார். நிறைய உலகப்படம் பார்க்கச் சொன்னார். அவர் அன்று கேட்ட கேள்விகள் தான் என் வாழ்க்கையை மாற்றியது. அந்த நாளிலிருந்து இன்றுவரைக்கும் நான் அவரை மிகவும் மதிக்கிறேன். என் முதல் கதையில் அவரைத் தான் நடிக்க வைக்க முயற்சித்தேன். அன்று அவர் நீங்கள் நன்றாக நடித்து கதை சொல்கிறீர்கள் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றார். அந்த வார்த்தைகள் எனக்கு மிகப்பெரிய ஊக்கம் தந்தது. என் வாழ்கையை மாற்றியதில் அவருக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. இன்று அவருடன் இந்த படத்தில் சேர்ந்து வேலை செய்வது எனக்கு ஒரு பெரிய சந்தோஷம். சீமான் சார் அவரிடம் நிறைய நல்ல குணங்கள் இருக்கின்றன. மற்றவர்களை மதித்து பேசுவது, அவர்களுக்கேற்ற விஷயங்களை மட்டுமே பேசுவது — அது ஒரு பெரிய குணம். அவருக்கு நிறைய அறிவு இருந்தாலும் அதை காட்டிக்கொள்ள மாட்டார். யாரிடம் என்ன பேசணுமோ அதையே பேசுவார். அந்த குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை நானும் கற்றுக்கொள்ளணும் என்று நினைக்கிறேன். இந்த படத்தில் நிறைய யூடியூபர்கள், இன்ஃப்ளூயன்சர்கள் கலந்து நடித்திருக்கிறார்கள். மிஷ்கின் சார் — லவ் யூ சார். கடந்த மூன்று ஆண்டுகளில் மார்க்கெட் மாற்றங்களையும் கடந்து, இந்த படத்தை கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்களோட முயற்சி இல்லாமல் இது சாத்தியமே இல்லை. அதற்காக மனமார்ந்த நன்றி.
நடிகை கிரித்தி ஷெட்டி பேசியதாவது..,
பிரதீப்புக்குப் பிறகு பேசுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அவர் பேசியதை மிஞ்சிப் பேச முடியுமா என்று கொஞ்சம் பிரஷர் ஃபீல் ஆகுது. ஆனாலும் நான் நன்றி சொல்ல வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், அதனால் அதைத் தொடர்ந்து சொல்லிக்கறேன். இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். என் கரியரில் இதுவரை செய்த படங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக இது இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வளவு ஆரம்பத்திலேயே இப்படிப்பட்ட ஒரு படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகுந்த நன்றியுணர்வு தருகிறது. விக்னேஷ் சார், என்னை “தீமா” ஆக்கி, இந்த படத்தில் ஒரு பகுதியாக சேர்த்ததற்கு ரொம்ப நன்றி. இந்த படம் மூலம் நான் மிகவும் பெரிய கலைஞர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது — முத்துராஜ் சார், பிரதீப், ரவி வர்மன் சார்… எல்லாரிடமும் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். எல்லாரும் சொல்வது என்னவென்றால், இது தான் எனது இதுவரையிலான சிறந்த லுக். அதற்கு முழுக் காரணம் ரவி வர்மன் சார் லைட்டிங். அவருடைய ஃப்ரேம்களில் இருக்கவே எல்லாரும் ஆசைப்படுவார்கள். அதில் நான் இருந்தது எனக்கு மிகப் பெரிய சந்தோஷம். விக்னேஷ் சார், இந்த படத்திற்காக உங்களுக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. என் கரியரில் மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். “தீமா”ன்னு எல்லாரும் இப்போ என்னை கூப்பிடுறாங்க. அதற்கான பெரும்பங்கு அனிருத் அவர்களுக்கும் தான். அந்த அழகான பாடல் காரணமாக தான் அது சாத்தியமானது. சில வருடங்களுக்கு முன்பே நான் அவருக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணியிருந்தேன். என் Spotifyலே அவர் எப்போதும் டாப் ஆர்டிஸ்ட். இப்போது அவரோடு வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த சந்தோஷம். படம் பார்த்த பிறகு பலர் சொன்னது என்னவென்றால், “தீமா” கேரக்டரில் என் நடிப்பு மிகவும் கன்சிஸ்டெண்ட் என்று. அதற்கான முழுக் க்ரெடிட் விக்னேஷ் சாருக்கே. அவர் ஒவ்வொரு கேரக்டருக்கும் செய்த ரிசர்ச், எடுத்த முயற்சி — அது தான் அந்த கேரக்டர்களை எல்லாம் தனித்துவமாக காட்டுகிறது. ஏப்ரல் 10 ரிலீஸ் என்று சொல்லும்போது, “உண்மையாவே வருமா?”ன்னு நிறைய பேர் கிண்டல் பண்ணாங்க. ஆனா இந்த டிலே ஆனதுக்கு காரணம் — நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு சிறந்த படத்தை கொடுக்கணும் என்பதுதான். நீங்கள் ஒரு கேரக்டருக்காக எவ்வளவு அர்ப்பணிப்புடன் உழைக்கிறீர்கள் என்பதை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு மிகப் பெரிய அனுபவம். இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. படத்தை கொண்டாடுங்கள் நன்றி.
இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது..,
இந்த மேடை எனக்கு மிகவும் முக்கியமானது. நான் இங்கே நிற்பது மட்டும் இல்ல, என் வாழ்க்கையில் இப்போது நான் இருக்கும் இந்த நிலையும் — இந்த இரண்டும் எளிதாக கிடைக்கவில்லை. நான் கஷ்டப்பட்டு தான் இங்கே வந்திருக்கேன். கடவுள் எல்லாருக்கும் நல்ல வாழ்க்கை கொடுப்பார். நான் கோயிலுக்கு போவது, “இன்னும் கொடுங்கள்” என்று கேட்க அல்ல. ஏற்கனவே கொடுத்திருக்கும் எல்லா நல்ல விஷயங்களுக்கும் நன்றி சொல்லத்தான் நான் போவேன். அதனால் தான் இருக்கலாம் — என் கஷ்டமான காலங்களிலும் கூட எனக்கு நல்ல உணவு, நல்ல வீடு, நல்ல குடும்பம், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், நல்ல நண்பர்கள், நல்ல குழு — இவை எல்லாம் கிடைத்தது. நான் ஒருவன் மட்டும் இந்த மேடையில் நிற்கிறேன் என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் நான் ஒருவன் மட்டும் இல்லை. என்னோடு நிறைய பேர் இருக்கிறார்கள். ஒரு பெரிய படம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அது நடக்காமல் போன போது, அது ஒரு கல்யாணம் நின்றது போல இருந்தது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். அந்த நேரத்தில் எல்லாரும் “சின்னதாக பண்ணுங்கள், சிம்பிளாக பண்ணுங்கள்” என்று சொல்வார்கள். அது ஒரு வகையில் நம்மை குறைவாக மதிப்பது போல தோன்றும். ஆனால் நான் ஒரே ஒரு விஷயத்தையே நம்பி இருக்கிறேன் — நான் சில நேரம் எக்ஸ்பெரிமென்டலாக போயிடுவேன். ஆனா அவர் எப்போதும் ஒரு சரியான பீட்டில் இருப்பார். அந்த பீட்டில் என்னையும் கொண்டு வர்றார். அடுத்து அனிருத்… நான் எப்போ எதாவது நல்லா பேசினாலும் அவர் அதை ஏற்க மாட்டார். ஆனா நான் சொல்ல வேண்டியது சொல்லிடுவேன். ஒரு நாள் நான் பணமில்லாமல் இருந்த போது, பாண்டிச்சேரி போய் கதை எழுதணும் என்று முடிவு பண்ணேன். என்னிடமிருந்தது பஸ் டிக்கெட்டுக்கு 200 ரூபாய்தான். நான் போயிட்டேன். அப்போ அவர் ஒரு மெசேஜ் அனுப்பினார் — “உன் பேக்குக்குள்ள 50,000 ரூபாய் வச்சிருக்கேன்”ன்னு. எனக்கு தெரியாம என் பேக்கில் பணம் வச்சிருந்தார். அந்த பஸ் பயணத்தில் நான் அழுதது இன்னைக்கும் மறக்க முடியாது. அவரோட இசை மட்டும் இல்ல, அவர் ஒரு மனிதராகவே எனக்கு ஒரு பெரிய கிஃப்ட். இவ்வளவு பெரிய கம்போசருடன் எப்போதும் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது என்பது எனக்கு ஒரு பெருமை. பின்னர் இந்த படத்தின் ப்ரொடக்ஷன் — மலேஷியா ஷூட்டிங். எல்லாம் ரெடி. ஆனா ஷேர் மார்க்கெட் டவுன். பட்ஜெட் பிரச்சனை. “சில விஷயங்களை குறைக்கணும்”ன்னு சொன்னாங்க. ஆனா நான் ஒரு முடிவு எடுத்தேன் — “ஒரு ஃப்ரேம்கூட நான் நினைத்த மாதிரி இல்லாமல் எடுக்க மாட்டேன்”ன்னு. அப்போ ஷூட்டிங் நடக்குமா இல்லையா தெரியல.ஆனா கடைசியில் நாங்கள் போய்ட்டோம். மலேஷியாவில் ஷூட் நடந்துச்சு. அப்போது தான் தெரியும் — அந்த பணம் எல்லாம் மூக்குத்தி அம்மன பட அட்வான்ஸ் என்று, எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த படம் நடக்குது என்று தெரிந்தது. அதில் ஒரு பெரிய காரணம் நயன்தாரா. ஒரு மனைவி, ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில் அவர் கொடுத்த சப்போர்ட் ரொம்ப பெரியது. சாதாரணமாக இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார். ஆனால் இந்த படத்திற்காக எல்லாவற்றையும் கவனித்து, இரண்டு நாள் முன்னாடியே வந்து எல்லாம் செட் பண்ணி வைத்தார். இப்போ எங்க இருக்காங்கன்னு கூட தெரியல… ஆனா இந்த படத்துக்காக அவர் செய்தது மிகப்பெரியது அவருக்கு நன்றி. கண்டிப்பாக இந்தப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் நன்றி.
அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி, தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது
இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய AA22 x A6 படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில், படத்திற்கு “ராக்கா” என பெயரிடப்பட்டுள்ளது.
டைட்டில் அறிவிப்புடன் வெளியிடப்பட்ட போஸ்டர், படத்தின் உலகை பற்றிய ஒரு தீவிரமான முன்னோட்டத்தை வழங்குகிறது. இருண்ட மற்றும் மர்மமான உயிரினம் மையமாக காட்சியளிக்கும் இந்த போஸ்டர், ஒரு புதிய கற்பனை உலகை அறிமுகப்படுத்துகிறது. இது வழக்கமான சினிமாவைத் தாண்டிய ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
“ராக்கா” ஒரு பிரம்மாண்டமான ஃபாண்டஸி-ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. உலகளாவிய ரசிகர்களை குறிவைத்து, மிகப்பெரிய அளவில் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. கதை, காட்சியமைப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அனைத்திலும் சர்வதேச தரத்தை நோக்கி இந்த முயற்சி முன்னேறுகிறது.
இந்த படத்தில் அல்லு அர்ஜூன், இதுவரை காணாத புதிய அவதாரத்தில் தோன்றவுள்ளார். சக்திவாய்ந்த மற்றும் மாற்றத்தைக் காட்டும் கதாபாத்திரமாக அவர் நடித்திருப்பார் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இயக்குநர் அட்லீ தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியால் பிரபலமானவர். “ராக்கா” மூலம் அவர் மீண்டும் ஒரு மாபெரும் சினிமா உலகத்தை உருவாக்க முயற்சி செய்கிறார். ஃபாண்டஸி, ஆக்ஷன் மற்றும் உணர்ச்சி ஆகியவற்றை இணைத்து, இந்திய அடையாளத்துடன் உலக ரசிகர்களை கவரும் வகையில் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் அட்லீ கூறியதாவது..,
“ராக்கா” சாதாரணமான ஒரு படம் இல்லை… இது நான் பல வருடங்களாக சுமந்து வந்த ஒரு கனவு. 18 ஆண்டுகளாக நான் யோசித்து வைத்திருந்த ஒரு கனவு இது. இந்தக்கதை என்னை சோதித்தது, வடிவமைத்தது, என் வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருந்தது. இது வெறும் ஆரம்பம் தான்.”
சன் பிக்சர்ஸ் Sun Pictures நிறுவனம் கூறியதாவது..,
“ராக்கா என்பது இந்திய சினிமாவின் உயர்ந்த ஆளுமைகளால் உருவான ஒரு கூட்டணி. அட்லீயின் தனித்துவமான கதை சொல்லலும், அல்லு அர்ஜுனின் ஐகானிக் திறமையும் இணையும் இந்த படம் உலக அளவிலான பிரம்மாண்ட முயற்சியாக இருக்கும். இது இந்திய சினிமாவின் புதிய அளவுகோலை நிர்ணயிக்கும்.”
இந்த படம் சன் பிக்சர்ஸ் Sun Pictures, அல்லு அர்ஜூன் மற்றும் அட்லீ ஆகிய மூன்று சக்திவாய்ந்த படைப்பாளர்களின் முக்கியமான கூட்டணியில் உருவான இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கும் படைப்பாக உருவாகிறது.
“ராக்கா” டைட்டில் போஸ்டர் ஒரு துணிச்சலான, வித்தியாசமான மற்றும் உலகளாவிய அளவில் புதிய பாதையை அமைக்கும் சினிமா அனுபவமாக இப்படம் உருவாகி வருவதை உறுதி செய்கிறது.

“சாதாரண வாழ்க்கையின் அழகை சொல்லும் ஸ்பெஷல் சீரிஸ்” – விஜய் சேதுபதி மனம்திறந்த பேச்சு
விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில், JioHotstar ஒரிஜினல்ஸ் படைப்பாக உருவான “முத்து என்கிற காட்டான்” வெப் சீரிஸ், வெளியான குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இயக்குநர் மணிகண்டன் தலைமையில், B. அஜித் குமார் மற்றும் M. மணிகண்டன் இணைந்து இயக்கியுள்ள இந்த சீரிஸ், 2026 மார்ச் 27 முதல் JioHotstar தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. வெளியான சில நாட்களிலேயே அதிக பார்வையாளர்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளது.
இந்நிகழ்வினில்..
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசியதாவது..,
இந்த புராஜக்ட் எனக்கு ரொம்ப சந்தோஷமான அனுபவம். நாங்க பண்ணுற வேலை எல்லாருக்கும் நிறைவாக இருக்கனும் என்று தான் நானும் மணிகண்டனும் திட்டமிட்டோம். இடையில் இது நின்று விட்டது என்ற நிலை வந்த போதும், அதுவாக மீண்டும் நடந்து இந்த இடத்தை வந்தடைந்திருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.
இந்தக் கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனி கதை இருக்கு. ஒவ்வொரு காட்சியும் ஒரு வாழ்க்கையைச் சொல்லும் மாதிரி இருக்கும். அதுதான் இந்த புராஜக்டை எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ஆக்குது. இந்தக் கதாபாத்திரம் ஒரு சாதாரண மனிதனோட வாழ்க்கையை பிரதிபலிக்குது. எந்த பெரிய விஷயங்களும் இல்லாமல், சிம்பிளான வாழ்க்கையிலேயே எவ்வளவு அழகு இருக்குன்னு காட்டுது.
இயக்குநர் மணிகண்டன் தான் அஜித்குமாரை அறிமுகப்படுத்தினார். இந்த படைப்பில் உழைத்த அத்தனை பேரும் முழு அர்ப்பணிப்போடு உழைத்தார்கள். கதை நம்ம வாழ்க்கையோட நெருக்கமாகவும் இருந்தது. அதனால அந்த கேரக்டருக்குள் போவது எனக்கு ரொம்ப ஈஸியாக இருந்தது.
முத்து மணிகண்டன் கூட்டி வந்தவர், பல வருட நட்பு நான் பொறாமைப்படும் அளவு நடிப்பை கொட்டியிருக்கிறார். வடிவேல் முருகன் என்னை ஆச்சரியப்படுத்தினார். அவர் பட விமர்சனம் செய்பவர் எப்படி நடிப்பார் என நினைத்தேன் ஆனால் அதைத்தாண்டி அசத்திவிட்டார். பார்வதியும் அவர் கதாப்பாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருந்தார்.
இந்த சீரிஸ் முழுதாக உருவாகி வந்ததற்கு Pradeep Milroy Peter (Creative Head, Hotstar Specials- Tamil ) , Senthil (Executive Producer, HotStar Specials) மிக முக்கியமான காரணம். எல்லோரையும் ஒன்றிணைத்து, அனைவருக்கும் தேவைப்பட்டதை செய்து இந்த இடத்திற்கு சீரிஸை எடுத்து வந்துள்ளார். அவருக்கு நன்றி. செட்டில் நாங்க எல்லாரும் ஒரு ஃபேமிலி மாதிரி தான் இருந்தோம். ஒவ்வொருத்தரும் ஒருத்தரை சப்போர்ட் பண்ணி தான் இந்த படைப்பை முடித்தோம். இந்த படைப்பில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம் பேசியதாவது…,
“என்னைப் பற்றி சொன்னா, இந்தப் ப்ராஜெக்ட் எனக்கு ஒரு தனியான உணர்வை கொடுத்தது. இந்தப் ப்ராஜெக்ட்டை உருவாக்கி கொண்டு வந்த விதம் எனக்கு ரொம்ப நெருக்கமான அனுபவமாக இருந்தது.
விஜய் சேதுபதி மணிகண்டன் உடன் நான் பல வருடங்களாக வேலை செய்து வருகிறேன். நாங்கள் சேர்ந்து செய்த பல படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன — 96, ஆண்டவன் கட்டளை போன்ற படங்கள் மக்களின் மனதில் இடம் பிடித்தவை.
அந்த பயணம் எனக்கு மிகவும் முக்கியமானது. முதன்முதலாக அவரை நேரில் சந்தித்த தருணம் இன்னும் நினைவில் இருக்கிறது. இந்த சீரிஸில் திருவிழா காட்சியில் அவர் நடித்த விதம் எனக்கு பெரும் வியப்பை தந்தது. நம்பிக்கையை அளித்தது. நாங்கள் நண்பர்களாக வளர்ந்தோம். அந்த நட்பு எங்கள் வேலைகளிலும் தெரியும். ஒவ்வொரு காட்சியிலும் அந்த புரிதல் வெளிப்படும்.
இந்தப் ப்ராஜெக்ட்டில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தை அழகாக உயிர்ப்பித்துள்ளனர்.இப்படிப்பட்ட ஒரு நல்ல குழுவுடன் வேலை செய்தது எனக்கு பெருமையாக உள்ளது. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் பேசியதாவது..,
இந்த படத்தின் படப்பிடிப்பு அனுபவத்தையும், அந்த நினைவுகளையும் மீண்டும் நினைத்துப் பார்க்கும்போது, அது ரொம்ப செழுமையானதும், மனதை கவர்ந்ததும், மிகவும் உஷ்ணமான உணர்வுகளையும் தருகிறது. ஒவ்வொரு நாளும் செட்டில் இருந்த அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பாக இருந்தது. வேலை மிகவும் நன்றாக இருந்தது. குழுவில் இருந்த அனைவரும் அருமையானவர்கள்.
நான் எப்போதும் வீட்டில் இருப்பது போல ஒரு உணர்வோடு தான் இருந்தேன். அது ஒரு குடும்பத்தோடு இருப்பது போல இருந்தது. இந்த அழகான வாய்ப்பை எனக்கு கொடுத்த தயாரிப்பு நிறுவனத்திற்கும், கலைஞர்கள் மற்றும் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்கும், மீண்டும் உங்களிடம் நிற்கும் இந்த தருணத்திற்கும் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.
பல்லவி பேசியதாவது..,
“இந்தப் ப்ராஜெக்ட்டில் நான் செய்தது ஒரு சிறிய பங்களிப்புதான். ஆனாலும், விஜய் சேதுபதி அவர்களின் கதாபாத்திரத்தை உருவாக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது — அது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம். ஒரு நாள் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. ‘சிரிக்கும் சேதுபதியை உருவாக்கணும்’ என்று சொன்னார்கள். நம்ம சினிமா துறையில் அது அதிகமாக செய்யப்படாத ஒரு விஷயம். அதனால் அது எனக்கு ஒரு புதிய சவாலாக இருந்தது. அந்த அனுபவம் உண்மையிலேயே அருமையானது. நான் செய்த இந்த வேலை இவ்வளவு நன்றாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த முழு தொடரும் பெரிய வெற்றியாக அமைந்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இன்று இங்கு என்னை அழைத்து கௌரவித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். மிக்க நன்றி!”
நடிகர் முத்துக்குமார் பேசியதாவது..,
விஜய் சேதுபதி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவருடனான நட்பு எனக்கு நல்ல கேரக்டரை பெற்றுத் தந்தது. இந்தக் கதையில் என் கேரக்டர் மிகவும் முக்கியமானது. அந்த கேரக்டர் திரையில் வெளிவந்த பிறகு, என்னை பார்க்கும் மக்களின் பார்வை எனக்கு ஒரு பெரிய சந்தோஷத்தை தருகிறது. அவர்கள் அதை ரசிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
இந்த குழுவில் பணியாற்றியது ஒரு அருமையான அனுபவம். இங்கே இருந்த ஒவ்வொருவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த நேரத்தில் அஜித் குமார் சாருக்கு நான் குறிப்பாக நன்றி சொல்லணும். சார், உங்களோட ஆதரவு எனக்கு ரொம்ப முக்கியம். நீங்கள் எப்போதும் ஊக்கப்படுத்துறது எனக்கு ஒரு பெரிய வலிமை.
அதேபோல் முத்து சார், சமி சார் — உங்களோட வேலை, உங்களோட வழிகாட்டுதல் எல்லாம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. இந்த டீம்ல எல்லாரும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்தது ஒரு பெரிய அனுபவம். இன்னும் நிறைய நல்ல கதாபாத்திரங்கள் செய்யணும், இன்னும் பல பரிமாணங்களில் நடிக்கணும் என்ற ஆசை அதிகமாக இருக்கிறது. இந்த ப்ராஜெக்ட் அதற்கு ஒரு பெரிய உந்துதலை கொடுத்திருக்கிறது. என்னை நீங்கள் இவ்வளவு அன்போடு ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி!.
நடிகர் வடிவேல் முருகன் பேசியதாவது..,
“நான் வெளிச்சத்துக்கு பழகியவன் இல்ல. இந்த மாதிரி ஒரு மேடையில் நிற்பது எனக்கு பெரிய விஷயம். ஆனா என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு மணிகண்டன் சார், விஜய் சேதுபதி சார், ஹாட்ஸ்டார் குழுமம் எல்லோருக்கும் நன்றி. இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது என் வாழ்க்கையில் ஒரு பெரிய முதல் படி மாதிரி. அதை நினைக்கும்போது கொஞ்சம் எமோஷனாகவே இருக்கிறது.
இந்த சீரிஸில் என்னுடன் நடித்த உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி. ஏற்றுக்கொண்ட மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி.
நடிகை பார்வதி பேசியதாவது..,
“எல்லாருக்கும் வணக்கம்.
நான் பேசுற இந்த தருணம், என்னோட முதல் வெற்றி விழா. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ஹாட்ஸ்டார் டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. முக்கியமாக, இந்த புராஜக்ட்டுக்கு வழிகாட்டியாக இருந்த பிரதீப் சார், கிருஷ்ணன் குட்டி சார், இயக்குநர் மணிகண்டன் அவர்களுக்கு நான் பெரிய நன்றி சொல்லணும். அவர்களோட சப்போர்ட் இல்லாம இது இவ்வளவு அழகா வந்திருக்காது. இந்தக் கதையில் ‘லலிதா’ என்ற கதாபாத்திரம் எனக்கு கிடைத்ததுக்குப் பிறகு, மக்கள் என்னைப் பார்க்கும் பார்வையே மாறி விட்டது. ‘அந்த ஊர்க்காரப் பொண்ணு மாதிரி ரொம்ப நிஜமா, அழகா செட்டாகிட்டீங்க’ன்னு சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷம். என்னுள்ளே இருந்த இன்னொரு முகத்தை வெளியே கொண்டு வர இந்த வாய்ப்பு உதவியது. அதற்காக நான் ரொம்ப நன்றி.
இந்த சீரிஸில் விஜய் சேதுபதி சாருடன் நடிக்க முடியாமல் போனது வருத்தம் அடுத்தடுத்த படைப்புகளில் நடக்கும் என நம்புகிறேன். நன்றி.
ஜியோ ஹாட் ஸ்டார் சார்பில் (Executive Producer, HotStar Specials) செந்தில் பேசியதாவது..,
இப்போ நிறைய சீரிஸ்களையும், வெப் சீரிஸ்களையும் நாம பார்க்கிறோம். ஆனால் இந்த ஷோ எல்லா ஷோக்களையும் விட ஒரு சிறப்பான சீரிஸாக வந்துள்ளது.இந்த ஷோ எட்டிச்சிருக்கும் உயரம் உண்மையிலேயே பெரிய விஷயம். இது சாதாரண சக்சஸ் இல்லை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த சக்சஸுக்கு முக்கிய காரணம் இந்த டீம் தான். டீம் என்று சொல்ல கூடாது… இது விஜய் சேதுபதி ‘ஆர்மி’. இங்க இருக்கிற ஒவ்வொருத்தரும் தங்களுக்கென்ன வேலை செய்யணும் என்று சரியாக தெரிந்தவர்கள். அதனால தான் இந்த புராஜக்ட் இவ்வளவு வெற்றியாகி இருக்கிறது. ஹாட்ஸ்டார் டீமுக்கு என் மனமார்ந்த நன்றி. உழைத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
இந்த சீரிஸில் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், சிங்கம்புலி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
JioHotstar சார்பில் பேசிய நிர்வாக தயாரிப்பாளர் செந்தில், “இது சாதாரண வெற்றி அல்ல — மிகப்பெரிய சாதனை. இந்த வெற்றிக்கு காரணம் இந்த குழுவின் ஒற்றுமை தான்” என்று பாராட்டினார்.
- உலக செய்திகள்
- |
- சினிமா













