சற்று முன்
சினிமா செய்திகள்
IK.Jayanthi lal appointed as Commissioner
Updated on : 11 January 2022
The India Pacific Islands Trade Council organized the India Papua New Guinea Summit which was attended by the Business community was held at the Star Hotel in AlwarpetChennai.
The event also was graced by Tamil Nadu Ministers Palanivel Thiagarajan and Gingee K.S. Masthan have appointed IK.Jayanthi lal as Papua New Guinea's Trade Commissioner for south India in the presence of Papua New Guinea High Commissioner to India HE Paulias Korni.
State Finance Minister Palanivel Thiagarajan, Minister of State for NRI Affairs and Minority Welfare Gingee K.S. Masthan, IK.Jayanthi lal, south India Trade Commissioner of Papua NewGuinea , HE Mr.Paulias Korni, Papua New Guinea High Commissioner to India, Dr.Venkatasalam Murugan, Secretary to the Ministry of External Affairs, Dr.Asif Iqbal, Sujoy Maitra, Dr. R.L. kannan were also present on the occasion.
Minister of State for NRI Affairs and Minority Welfare Gingee K.S. Masthan, said Tamils living abroad should come to Tamil Nadu to start a business.The Chief Minister of Tamil Nadu is taking special steps in this regard.He said the role of expatriate Tamils was essential for the economic development of Tamil Nadu.

Speaking on the occasion, State Finance Minister Palanivel Thiagarajan said that global trade relations are essential in the present times.At present it is gratifying to see the development of trade relations between India and Papua New Guinea.
Speaking to reporters , South India Trade Commissioner for Papua New Guinea, IK.Jayanthi lal thanked Papua New Guinea's Ambassador Paulias Korni for appointing him as Papua New Guinea's Trade Commissioner and said that he would take delegations to the island nation to strengthen mechanisms created for enabling these trade opportunities between both countries.

Further, I will do my best to improve Papua New Guinea's country Collaboration between South India & PNG by supporting for FDI in Government Projects & Public-Private Partnerships for developing projects in the field of Infrastructure, Energy, Mines & Minerals, Automobiles, Textiles, etc. Supporting for Technical knowhow in the field of Agriculture & MSME set up. Supporting for enrolling PNG students for higher Studies in Medical, Information Technology & Management. Support for a better trusted Import Export business in the field of Perishable & Non-Perishable goods specifically for Rice, Vehicles, Machineries & Equipment. TamilNadu can act as a Catalyst for being out sourced for machine parts, tools, rubber parts, etc. Special Economic Zones in TN can be used to develop better trade between PNG & other Asian countries, said IK.Jayanthi lal, the newly appointed South India Trade Commissioner for Papua New Guinea.
சமீபத்திய செய்திகள்
‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!
ஸ்டாண்ட் அப் காமெடியன், பிக் பாஸ் பிரபலம் மற்றும் டிஜிட்டல் உலகில் ரசிகர்களின் ஆதரவை பெற்ற இளம் நட்சத்திரமான விக்கல்ஸ் விக்ரம், தற்போது ‘லைட் வெயிட் பேபி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னை நகரில் கோலாகலமாக நடைபெற்றது.
கே சி குரு இயக்கத்தில் உருவாகும் இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படத்தில், விக்கல்ஸ் விக்ரமுடன் இணைந்து ஃபிட்னஸ் மாடலிங் துறையை சேர்ந்த ஆர்த்தி கிருஷ்ணா கதாநாயகியாக நடிக்கிறார். பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சாகர் சந்தேஷ் மற்றும் ஜி. திம்மா ரெட்டி இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர்.
இந்நிகழ்வில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் பேசுகையில், '
' இங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. இந்த நிகழ்ச்சியை ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவை போல் தொடங்குகிறேன். இடையில் எங்காவது காமெடி வந்தால் சிரிக்க மறந்துவிடாதீர்கள். நான் முதன் முதலாக இந்த மேடையில் சற்று பதட்டத்துடன் இருக்கிறேன். மேலும் இந்த ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ- ஒரு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியாகவும் இருக்கும்.
2016ஆம் ஆண்டில் நான் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக இருந்தேன். அதன் பிறகு சோசியல் மீடியாவில் சில கன்டென்டுகள் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானேன். நான் ஒரு அமைதியான கலைஞன். என்னை போல என் ரசிகர்களும் அமைதியாக இருந்து ஆதரவு அளித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை என்னை அழைத்து வந்தார்கள். அதற்கு இந்த தருணத்தில் நான் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிக் பாஸ் என்னை எப்படி மாற்றி இருக்கிறது என்றால்.. முன்பெல்லாம் என்னை ஒரு கன்டென்ட் ஆக தான் பார்த்தார்கள். அந்தத் தருணத்தில் என்னை சந்திக்கும் ரசிகர்களுக்கு என் பெயர் தெரியாது. ஆனால் என் மீது அன்பு காட்டுவார்கள். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, என்னை அவர்களுடைய வீட்டில் ஒரு பிள்ளையாக மாற்றி இருக்கிறது. அத்தகைய ஒரு சக்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.
நான் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் என்னை பின் தொடர்ந்தார்கள். அவர்கள் என் மீது அன்பு செலுத்த தொடங்கினார்கள். நான் ஒவ்வொரு குடும்பத்திற்கும் செல்ல பிள்ளையாக மாறிவிட்டேன். செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னை நேரில் சந்திக்கும்போது உரிமையுடன் விசாரிக்கவும் செய்தார்கள். அது எனக்கு உண்மையில் சந்தோஷமாகவும் இருந்தது. அதிர்ச்சியாகவும் இருந்தது.
இப்போது ரசிகர்கள் விக்கல்ஸ் என்ற என்னுடைய சமூக வலைதள பக்கத்தை பார்க்கிறார்கள். பின் தொடர்கிறார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்..? என அக்கறையுடனும், உரிமையுடனும் கேட்கிறார்கள்.
எனக்கு ரசிகர்களின் தொந்தரவு பிடிக்கும். இது அல்பத்தனமானது என்றாலும்.. என்னை யாராவது டிஸ்டர்ப் செய்தால் எனக்கு பிடிக்கும்.
அப்பாவிற்கு இன்டர்நெட் பற்றி எதுவும் தெரியாது. தொடக்கத்தில் நான் என்னுடைய நண்பர்களுடன் படுக்கை அறையில் இருந்து தான் ரீல்ஸ்களை எடுத்து பதிவேற்றுவோம்.
ஒவ்வொரு நாளும் என்னுடைய தந்தையார் நானும் என் நண்பர்களும் காலையிலிருந்து இரவு வரை பெட்ரூமில் இருப்பதையும்... அதன் பிறகு என்னுடைய நண்பர்கள் வீட்டிலிருந்து வெளியே செல்வதையும்.. அதன் பிறகு நான் சோர்வாக இருப்பதையும் மட்டும்தான் என் தந்தை பார்ப்பார்.
'நிலவை கொண்டு வா' என்ற பாடலை நாங்கள் ரீல்ஸாக எடுத்து பதிவேற்றினோம். அது வைரலானது. அந்த ரீல்சை போஸ்ட் செய்த சில நிமிடங்களில் பத்தாயிரம் பேர் பார்த்திருந்தனர். கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் ஒரு லட்சத்தை எட்டி இருந்தது. அதன் பிறகு அது ஒரு மில்லியனை கடந்து எங்கோ சென்று கொண்டிருந்தது. அந்த தருணத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா - சிம்ரன் மேடம் ஆகியோர் இது தொடர்பாக தங்களது கருத்துக்களை போஸ்ட் செய்தார்கள். திடீரென்று தேவா அவர்கள் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். நீண்ட நாள்களுக்குப்பிறகு அந்தப் பாடலை பிரபலப்படுத்தியதற்கு நன்றி என்றார் அதைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வந்தது. அவரிடம் அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் நீங்கள் மிகப்பெரிய லெஜன்ட். நிலவை கொண்டு வா பாடல் யாருடைய வாழ்க்கையை மாற்றியதோ... தெரியாது ஆனால் எங்களுடைய வாழ்க்கையை மாற்றியது. நிறைய சேனல்களுக்கு இன்டர்வியூ கொடுத்தோம் எங்களை பற்றி நாங்களே பேசினோம். இதை என் அப்பா ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆனால் அவருக்கு நான் ஒரு நல்ல நடிகர் என்பது தெரியாது. நன்றாக சிந்திப்பவன் என்றும் தெரியாது. அவரை பொறுத்தவரை நான் கல்லூரி வகுப்புகளை 'பங்க்' செய்தவன்.. போன்ற விசயங்கள் தான் நினைவில் இருக்கும்.
பிக் பாஸ் வீட்டில் இருந்த போது தான் நான் நன்றாக நடிப்பேன் என்பதை என் தந்தை பார்த்து தெரிந்து கொண்டார்.
இன்று ஒரு படத்தில் நடிக்கிறேன். பத்து வருடத்திற்கு பிறகு நான் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறேன். அந்த படத்தின் பெயரை தான் நாங்கள் இப்போது ரிவீல் செய்யப் போகிறோம்.
நானும் சினிமாவில் ஆடியோ லாஞ்ச் உள்ளிட்ட சில விழாக்களுக்கு சென்று இருக்கிறேன். அந்த விழாவில் ஹீரோ டைரக்டரை புகழ்வார். டைரக்டர் ஹீரோவை புகழ்வார்.
எனக்கு இயக்குநரை சமீபத்தில் தான் தெரியும். அவர் ஒரு கதையை சொன்னார். அது எனக்கு பிடித்துப் போனது. அப்போது அவரிடம் நாம் ஒரு விழா வைத்தால் என்ன பேசலாம் என கேட்டபோது பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்றார்.
அதனால் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ போல் நடத்தி படத்தின் டைட்டிலை ரிவீல் செய்துவிடலாம் என திட்டமிட்டோம்.
இதற்கு முன் திரைப்படங்களில் எனக்கு கேரக்டர்களில் நடிப்பதற்கு தான் வாய்ப்பு வழங்குவார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் நீங்கள் என் படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஒரு மெஸேஜ் வந்தது , நான் கூட அப்போது ஏதேனும் ஷார்ட் பிலிம் - பைலட் பிலிம் ஆகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அதன் பிறகு தான் ஃபீச்சர் ஃபிலிம் என்று சொன்னார்கள், திகைத்து போனேன், அந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் கே சி குருவுக்கு நன்றி.
2016 ஆம் ஆண்டில் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதுவும் பின் மண்டையில் ஓரமாக இருந்தது. அதனை வெளியில் சொன்னாலும் வெட்கக்கேடு. வெளியில் சொல்வதற்கு வெட்க பட்ட ஒரு கனவை இன்று நிஜமாக நடந்து கொண்டிருக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
எங்கள் படத்திற்கான டைட்டில் 'லைட் வெயிட் பேபி.'
லைட் வெயிட் பேபி படத்தின் போஸ்டரில் ஒரு மைக் இருக்கிறது, ஒரு ஸ்டாண்ட் இருக்கிறது, அப்புறம் அதில் வெயிட் இருக்கிறது. இது ஒரு லவ் ஸ்டோரி. ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன் மற்றும் ஃபீமேல் பாடி பில்டர் ஆகிய இருவருக்கும் இடையேயான கதை. அதனால் தான் நான் இந்த படத்தில் ஹீரோவாகி இருக்கிறேன்.
இந்த படத்தின் டைட்டிலை விட மிகவும் சுவாரசியமான விசயம் என்னவென்றால் இப்படத்தின் ஹீரோயின் தான். அவர்கள் பெயர் ஆர்த்தி கிருஷ்ணா.
இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. படத்தை உருவாக்கி விட்டு உங்களிடம் வருகிறோம்'' என்றார்.
இயக்குநர் கே சி குரு பேசுகையில்,
'' நான் பெங்களூரூவிலிருந்து வருகை தந்திருக்கிறேன். எனக்கு தமிழ் மொழி பேசினால் புரியும். ஆனால் பேச வராது. அதனால் நான் ஆங்கிலத்திலேயே பேசி விடுகிறேன்.
லைட் வெயிட் பேபி என்பது இம்பேலன்ஸிங் லைஃப். இந்த போஸ்டரில் ஒரு பக்கம் எடை குறைவாகவும்... மறுபக்கம் எடை அதிகமாகவும்.... இருக்கும் இது ஏன் என்பதுதான் இப்படத்தின் பின்னணி.'' என்றார்.
நடிகை ஆர்த்தி கிருஷ்ணா பேசுகையில்,
'' இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநருக்கும் ,தயாரிப்பாளருக்கும் நன்றி. இது என் முதல் திரைப்படம். இந்த திரைப்படம் எப்படி உருவாகும் என்பது தெரியாது. அதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். நன்றாக வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்குவேன் '' என்றார்.

துல்கர் சல்மானின் ‘ஐ ஆம் கேம்’ படப்பிடிப்பு நிறைவு – 2026 ஆகஸ்டில் பான்-இந்தியா வெளியீடு
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடித்துள்ள ‘ஐ ஆம் கேம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. சுமார் 11 மாதங்கள் நீடித்த இந்த படப்பிடிப்பு, மொத்தம் 156 நாட்கள் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவின் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகும் இந்த மிகப்பெரிய பட்ஜெட் ஆக்ஷன் த்ரில்லர், 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
‘ஐ ஆம் கேம்’ திரைப்படம், துல்கர் சல்மானின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய படைப்பாக உருவாகி வருகிறது. கடந்த ஆண்டு வெற்றி பெற்ற ‘லோகா’ படத்திற்குப் பிறகு, அவரது Wayfarer Films நிறுவனத்தின் அடுத்த முக்கிய முயற்சியாகவும் இது அமைந்துள்ளது. இப்படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். ஷஹாபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து கதை எழுதியுள்ளனர்.
இந்த படம் மலையாள சினிமாவிலேயே மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாக உருவாகி வருவதுடன், மிகப்பெரிய வெளியீடாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் துல்கர் சல்மான் ஸ்டைலிஷான மாஸ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். ‘RDX’ வெற்றிக்கு பிறகு நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இந்த படம், துல்கரின் 40வது திரைப்படமாகும்.
மேலும், ஆண்டனி வர்கீஸ், தமிழ் நடிகரும் இயக்குனருமான மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் வடிவமைத்துள்ளனர்.
முன்னதாக வெளியான இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. ‘ஐ ஆம் கேம்’ திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக உள்ளது.
சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா கூட்டணியில் ‘பவர் பேட்டா’ டைட்டில் போஸ்டர் வெளியீடு!
நடிகர் சந்தீப் கிஷன் மற்றும் இயக்குநர் கிருஷ்ண சைதன்யா கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான ‘பவர் பேட்டா’ படத்தின் டைட்டில் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி தலைமையிலான 70 MM என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
அர்த்தமுள்ள மற்றும் தாக்கம் ஏற்படுத்தும் கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்ற இந்த தயாரிப்பு நிறுவனம், ‘பவர் பேட்டா’ மூலம் இன்னொரு வித்தியாசமான முயற்சிக்குத் தயாராகியுள்ளது. மேலும், சந்தீப் கிஷன் தனது திரை வாழ்க்கையில் 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்த முக்கிய தருணத்தில் இப்படம் அறிவிக்கப்பட்டிருப்பதும் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
‘பவர் பேட்டா’ என்ற தலைப்பே ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டி வருகிறது. வெளியிடப்பட்ட டைட்டில் போஸ்டர் இருண்ட, யதார்த்தமான காட்சியமைப்புடன் கவனம் ஈர்க்கிறது. ரத்தத்தில் தோய்ந்த சதுரங்க பலகை, உடைந்த காய்கள், மற்றும் நசுங்கிய ரோஜா மலர் ஆகிய காட்சிகள் வியூகம், அதிகாரம், தியாகம் மற்றும் காதல் ஆகிய உணர்வுகளை சுட்டிக்காட்டுகின்றன. இதன் மூலம் அரசியல், கௌரவம் மற்றும் உணர்ச்சி மோதல்கள் மையமாகக் கொண்ட தீவிரமான கதைக்களம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் கிருஷ்ண சைதன்யா தனது தனித்துவமான கதை சொல்லும் முறையில் பல்வேறு கூறுகளை இணைத்து விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் சந்தீப் கிஷனின் கேரியரில் மிக முக்கியமான மற்றும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
தொழில்நுட்ப ரீதியாகவும் ‘பவர் பேட்டா’ வலுவான அணியை கொண்டுள்ளது. இசையமைப்பாளராக மணி ஷர்மா, ஒளிப்பதிவாளராக மதி, படத்தொகுப்பாளராக தேசிய விருது பெற்ற ஸ்ரீகர் பிரசாத் பணியாற்றுகின்றனர். தயாரிப்பு வடிவமைப்பை ராமகிருஷ்ணா மற்றும் மோனிகா கவனிக்க, ஒலி வடிவமைப்பை சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் மேற்கொள்கிறார்கள்.
கவர்ச்சிகரமான தலைப்பு மற்றும் சுவாரஸ்யமான டைட்டில் போஸ்டருடன் ‘பவர் பேட்டா’ திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படத்தின் மேலும் பல தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

“டிமாண்டி காலனி 3” கோடையில் ரிலீஸ் – அருள்நிதி ஹாரர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் “டிமாண்டி காலனி” திரைப்படத்தின் மூன்றாவது பாகமான “டிமாண்டி காலனி 3 - தி எண்ட் இஸ் டூ ஃபார்” இந்த ஆண்டு கோடையில் வெளியாகவுள்ளது. அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம், மனிஷ் சிங்கால் மற்றும் துர்காராம் சௌத்ரி இணைந்து தயாரித்துள்ளனர்.
முந்தைய இரண்டு பாகங்களும் வணிகரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது பாகத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து இந்தப் படத்திற்கு வர்த்தக வட்டாரங்களிலும் ரசிகர்கள் மத்திலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்தப் படத்தை, தமிழகம் முழுவதும் ஃபைவ் ஸ்டார் கே. செந்தில் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.
திரையரங்கு விநியோகத்தில் தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வருபவராக அறியப்படும் ஃபைவ் ஸ்டார் கே. செந்தில், ‘DD Returns’, ‘Garudan’, ‘Maharaja’, ‘Bison Kaalamadan’ போன்ற பல ஹிட் படங்களை விநியோகம் செய்துள்ளார். தற்போது “டிமாண்டி காலனி 3” படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை கைப்பற்றியிருப்பது, இப்படத்தின் மீதான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் மேலும் உயர்த்தியுள்ளது.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் புரோமோஷன் பணிகள் தொடங்கப்படவுள்ளன. படத்திற்கான டீசர், டிரெய்லர் மற்றும் உலகளாவிய வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மொழி மற்றும் எல்லைகளை தாண்டி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் வரவேற்பை கருத்தில் கொண்டு, புதுமையான புரோமோஷன் முயற்சிகளையும் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்தப் படத்தில் அருள்நிதியுடன் பிரியா பவானி சங்கர், ஆன்ட்டி ஜாஸ்கெலைனன், குரு சோமசுந்தரம், ஜி.எம். குமார், முத்துக்குமார், ஸ்ரீகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், கதிர், ஆஷிக் ஹுசைன், சர்ஜனோ கலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் தயாரித்து வழங்கும் இந்தப் படம், ஆர்டிஎக்ஸ் மீடியா, ஞானமுத்து பட்டறை மற்றும் தங்கல் டிவி ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், ஹாரர் திரை உலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்த “டிமாண்டி காலனி” தொடரின் மூன்றாவது பாகம், இந்த கோடையில் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளகெவி கதையை உலகுக்கு கொண்டு செல்லும் ‘கெவி’ – ரிக்கி கேஜ் இசையில் ‘Set Me Free’ சிறப்புப் பாடல்
இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில், ஆர்ட்அப்டிரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் வெளியான ‘கெவி’ திரைப்படம் தற்போது உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. மூன்று முறை கிராமி விருது பெற்ற Ricky Kej இப்படத்துடன் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.
படத்தை சர்வதேச பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் ‘Set Me Free!’ என்ற சிறப்புப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. நிர்வாகத் தயாரிப்பாளர் சுமதி ராம் முன்னெடுத்த இந்த முயற்சி, உள்ளூர் கதைக்கும் உலகளாவிய பார்வைக்கும் இடையே பாலமாக அமைகிறது.
800 ஆண்டுகள் பழமையான வெள்ளகெவி கிராமத்தின் அடிப்படை வசதிகளுக்கான போராட்டத்தை மையமாகக் கொண்ட ‘கெவி’, விமர்சகர்களிடமிருந்து பாராட்டுகளை பெற்றுள்ளது. ஆஸ்கார் கேம்பைன் கட்டத்தை முடித்துள்ள இப்படம், தற்போது அடுத்த கட்டமாக இருமொழிப் பாடல்களை வெளியிடத் தயாராகியுள்ளது.
திரைப்படத்தின் கிளைமாக்ஸில் இயக்குநர் லெனின் பாரதி குறிப்பிட்டதாவது:
“தேர்தல்களின் போது மட்டுமே தங்களை வந்தடையும் வாக்குப்பெட்டிகளைத் தவிர, வாழ்வாதாரத்தின் மற்ற எல்லா வழிகளும் மறுக்கப்பட்ட உலகெங்கிலும் உள்ள மலை மற்றும் பள்ளத்தாக்குகளில் வாழும் குரலற்ற மக்களுக்கு இந்த திரைப்படம் அர்ப்பணிக்கப்படுகிறது.”
உலகளாவிய சிறப்புப் பாடலான ‘செட் மீ ஃப்ரீ’ பாடலை சுமதி ராம் எழுதியுள்ளார்; Ricky Kej இசையமைத்துள்ளார். இசை தயாரிப்பு மற்றும் ஒருங்கிணைப்பை வனில் வெய்காஸ் கவனித்துள்ளார். பாடலை தபிதா ரோஸ், சிவராஜ் நடராஜ் மற்றும் லாரா டிக்கின்சன் பாடியுள்ளனர்.
திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜெகன் ஜெயசூர்யா கூறியதாவது:
“இசை என்பது ஒரு இயக்கம். சுமதி ராமின் முயற்சியுடன், Ricky Kej மற்றும் படைப்பாற்றல் கொண்ட ஸ்டுடியோக்களுடன் இணைந்து, வெள்ளகெவி கதையை உலகளவில் கொண்டு செல்ல முயல்கிறோம். இந்த சிறப்புப் பாடல் மூலம், நூற்றாண்டுகளாக சாலைக்காகக் காத்திருக்கும் சமூகங்களுக்கு உலகளவில் கவனம் கிடைக்கும். ஆஸ்கார் பயணம் நிறைவடைந்த நிலையில், இருமொழிப் பாடல்களை வெளியிட தயாராகி வருகிறோம்.”
‘கெவி’ தற்போது Netflix தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது; விரைவில் Amazon Prime Video தளத்திலும் வெளியாக உள்ளது.
ஆர்ட்அப்டிரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி பற்றி:
சமூக அக்கறையுள்ள திரைப்படத் தயாரிப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சுயாதீன நிறுவனம். தயாரிப்பாளர்கள் பெருமாள் கோவிந்தசாமி, ஜெகன் ஜெயசூர்யா மற்றும் ஜெகா சிர்பியன் தலைமையில் செயல்படுகின்றனர். கணேஷ் பி மற்றும் வருண் குமார் இணைத் தயாரிப்பாளர்களாக உள்ளனர்.
நிர்வாகத் தயாரிப்பாளர் சுமதி ராம், திரைப்படத்தின் சர்வதேச உத்தி மற்றும் உலகளாவிய சிறப்புப் பாடல் முயற்சிகளை வழிநடத்துகிறார். ஸ்டார்ஸ் மியூசிக் ஸ்டுடியோ மற்றும் சன்மூன்ஸ்டார்ஸ் ஃபிலிம் ஸ்டுடியோ ஆகியவை கலை மற்றும் சமூகச் செயல்பாட்டை இணைக்கும் படைப்பாற்றல் நிறுவனங்களாகும்.
“லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” வெற்றி விழா – ஊடகங்களை சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு
தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திரமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
திரையரங்குகளில் பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து, தங்களின் நன்றியை தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில்
இயக்குநர் ஜெகன் பேசியதாவது..,
இப்படத்தில் நானும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் விக்னேஷ் சிவன் உழைப்பை நேரில் பார்த்தேன், பிரமிப்பாக இருந்தது. நம்ம எல்லோரும் இந்தப் படத்தை பார்த்திருக்கிறோம். தியேட்டரில் மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்க்கும்போதுதான் இந்தப் படத்தின் உண்மையான வெற்றி என்ன என்பதை உணர முடிகிறது. அது ஒரு உண்மையான அர்ப்பணிப்பின் பலன். அந்த அர்ப்பணிப்பின் அர்த்தம் தியேட்டரில்தான் முழுமையாக தெரிகிறது. அதற்காக எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
முக்கியமாக அன்புத் தம்பி பிரதீப் ரங்கநாதன் அவர்களுக்கு நான் ஒரு பெரிய வாழ்த்து சொல்ல வேண்டும். அவருக்கு மக்களிடம் இருக்கும் அன்பு மிகவும் பெரிது. அதேபோல் அவருக்கு ரசிகர்களிடம் அளவில்லாத அன்பு இருக்கிறது. ஒரு நடிகராக நான்காவது படத்திலேயே இவ்வளவு வரவேற்பு கிடைப்பது மிகப்பெரிய சாதனை. அவர் ஏற்கனவே எண்ணற்ற மனங்களை வென்றிருக்கிறார். உலகத்தில் பணம் சம்பாதிப்பது எளிது. ஆனால் ரசிகர்களின் அன்பை சம்பாதிப்பது மிகவும் கடினம். அந்த அரிய வரத்தை கடவுள் அவருக்கு அளித்திருக்கிறார். அதற்காக எனக்கு மிகுந்த சந்தோஷம். நான் இந்தப் படத்தை பல தியேட்டர்களில் பார்த்தேன். முதல் நாளிலிருந்து மீண்டும் மீண்டும் பார்த்தேன். எல்லா இடங்களிலும் மக்கள் அவரை தங்களுடைய வீட்டுக் குழந்தை போலவே பார்க்கிறார்கள்.
இந்தப் படத்தில் சீமான் அண்ணன் நடித்ததற்கு நான் ஒரு காரணமாக இருந்தேன். ஆரம்பத்தில் அவர் நடிப்பாரா? என எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. விக்னேஷ் சிவனும் ஒத்து வருமா? என்று கேட்டார். இருவரும் பழகிய பிறகு பிரிக்க முடியாத நண்பர்களாகி விட்டார்கள். படம் பார்த்த பிறகு, “இரண்டு பேரும் வெற்றி பெற்றுவிட்டார்கள்” என்று சொல்லும் அளவுக்கு படம் சிறப்பாக அமைந்துள்ளது.விக்னேஷ் சிவன் அவர்கள் மற்றும் சீமான் அண்ணன் இருவரும் மிகுந்த அன்பானவர்கள். அந்த இரண்டு நல்ல மனங்களை இணைக்க நான் ஒரு காரணமாக இருந்தது எனக்கு பெருமையாக உள்ளது.
இந்தப் படத்தில் நடித்த நடிகைகள் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். அவர்களின் நேர்மை, ஈடுபாடு, உழைப்பு ஆகியவை பாராட்டத்தக்கவை. இந்த வெற்றியில் அவர்களுக்கும் முக்கியமான பங்கு உள்ளது.நேற்று தியேட்டரில் பார்த்த அனுபவம் மிகவும் சிறப்பு. அனைத்து காட்சிகளும் நிரம்பியிருந்தன. மக்கள் அளித்த வரவேற்பு, அவர்கள் காட்டிய உற்சாகம்—இவை அனைத்தும் இந்தப் படத்தின் வெற்றியை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னாலும் ஒரு பெரிய ரகசியம் இருக்கும்; அது கடினமான உழைப்பு. அதை நான் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ஆகியோரிடம் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் வேலை செய்ய வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது..,
பத்திரிக்கை மற்றும் மீடியா நண்பர்களுக்கு வணக்கம். இந்தப் படத்தின் பயணம் சுமார் மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக நீண்ட ஒன்று. 2022 பிப்ரவரி மாதத்திலேயே இந்தக் கதையின் ஒன் லைன் என்னிடம் கூறப்பட்டது. அப்போது இந்தப் படம் உருவாகப் போகிறது என்று ரசிகர்களுக்கும் தெரிந்திருந்தது.
அதற்குப் பிறகு பல தாமதங்கள் ஏற்பட்டது. பல முறை வெளியீட்டு தேதிகள் மாற்றப்பட்டது — கோடை, டிசம்பர், பிப்ரவரி என்று தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்தோம்.
பொதுவாக இப்படியான தாமதங்கள் ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கும். நம்பிக்கையும் கொஞ்சம் குறையும். அது படக்குழுவினரையும் பாதிக்கும். எனக்கும் அதே சந்தேகம் இருந்தது — “இவ்வளவு தாமதமான படம் எப்படி வரவேற்பைப் பெறும்?” என்று. ஆனால் படம் வெளியான விதம் எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய ஆச்சரியம். மிகப்பெரிய அளவில் ஓபனிங் கிடைத்தது. மக்கள் கொடுத்த அன்பு நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. இந்த எல்லா தடைகளையும் தாண்டி, இப்படத்திற்கு கிடைத்த இந்த அன்புக்கு மக்களிடம் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். என் படக்குழுவினருக்கும், இயக்குநருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றிகள்.
முக்கியமாக, இந்த தருணத்தில் மூன்று முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் —ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சார், எடிட்டர் பிரதீப் ராகவன், இசையமைப்பாளர் அனிருத் சார். இந்த மூவர் இல்லாமல் இந்தப் படம் உருவாக முடியாது என்று நான் உண்மையாக நம்புகிறேன். அவர்கள் கொடுத்த காட்சியமைப்பு, இசை, எடிட்டிங் — இவை எல்லாமே இந்தப் படத்தை ஒரு தொழில்நுட்ப ரீதியாக வலுவான படமாக மாற்றியுள்ளது. படம் பார்த்த உடனே நான் இவர்களிடம் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தேன். பொதுவாக தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னணியில் இருப்பதால் அவர்களின் பங்களிப்பு வெளியில் அதிகமாக தெரியாமல் போகும். இந்த நேரத்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இறுதியாக, முதல் நாளிலிருந்து இன்று வரை எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் பத்திரிகை மற்றும் மீடியா நண்பர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி.
இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது..,
இந்தப் படம் ரிலீஸ் ஆனதே எனக்கு ஒரு ப்ளாக்பஸ்டர். அது வெளியானது தான் எனக்கு பெரிய வெற்றி. ஏன்னா, எப்போதுமே பெரிய கனவு காண்றது சுலபமில்லை. அதுக்காக கம்ஃபர்ட் ஜோன்ல இருந்து வெளியே வரணும். எனக்கு வாழ்க்கை கம்ஃபர்ட்டாக இருந்திருக்கலாம். ஆனா அந்த கம்ஃபர்ட் ஜோனை உடைத்து, என்னை நான் சாலஞ்ச் பண்ணிக்கிட்டதுதான் இந்தப் படம்.
இந்தப் படத்தில் ஒரு ஃப்ரேம் கூட ஈஸியா எடுக்க முடியாது. ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் — காஸ்ட்யூம், செட், VFX, மேக்கப், டயலாக் — எல்லாமே சரியாக இருக்கணும். அப்போதுதான் இது நம்பிக்கைக்குரியதாக இருக்கும். படம் வெளியான பிறகு நிறைய நல்ல விமர்சனங்களும் பாராட்டுகளும் கிடைத்திருக்கிறது. அதே சமயம் சிலர் “ஸ்லோவா இருக்கு”ன்னு சொன்னாங்க. ஆனா ஹை-கான்செப்ட் படம் என்றாலே, ஆரம்பத்தில் கொஞ்சம் விளக்கம் தேவைப்படும். அது போல தான் — விமானம் பறக்குமுன் சொல்லப்படும் விதிமுறைகள் மாதிரி. அதை நான் ஒரு constructive criticism-ஆ எடுத்துக்கிறேன். அது எனக்கும் சில விஷயங்களை புரிய வைத்தது.
இந்தப் படம் ஒரு காதல் கதைதான். ஆனா வழக்கமான மெலோட்ராமா இல்லாமல், ஒரு புதிய அனுபவம் கொடுக்கணும் என்ற முயற்சி தான் இது. அந்த முயற்சி தியேட்டரில் கைதட்டலாக மாறும்போது கிடைக்கும் சந்தோஷம் சொல்ல முடியாதது. ஒரு எழுத்தாளராக, இயக்குநராக நம்ம முயற்சி சிலருக்காவது வேலை செய்கிறது என்ற உணர்வு நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதற்காக ஆடியன்ஸ்க்கு மிகப்பெரிய நன்றி.
இந்தப் படம் நடக்க காரணம் பிரதீப் தான். ஆரம்பத்திலிருந்தே பட்ஜெட் சிக்கல்கள் இருந்தது. ஆனாலும் இந்தப் படம் உருவானது அவரால் தான். இன்றைக்கு நிறைய படங்கள் டிராப் ஆகுது லீக் ஆகுது, டைரக்டர்ஸ் நிலைமை ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த வலியை ஒரு டைரக்டர்தான் உணர முடியும். அந்த இடத்தில், சமீபத்தில் லீக் பிரச்சனையை சந்தித்த H வினோத் அவர்களுக்கும் என் மனமார்ந்த அனுதாபம். அது ஒரு டைரக்டருக்கு மிகப்பெரிய வலி.
இந்தப் படத்தையும் நான் என்னால் முடிந்தவரை எந்த compromise-ம் இல்லாமல் எடுத்தேன். ஒரு தடவை தான் எடுக்க முடியும் — அதனால் முழுமையாக எடுத்தேன். பிரதீப் — ஒரு ஹீரோவாக மட்டும் இல்ல, ஒரு அர்ப்பணிப்புள்ள கலைஞன். நேரம், ஒழுக்கம், அர்ப்பணிப்பு— எல்லாமே வேற லெவல். ஒரு swimming pool sequence-ல அவர் செய்த உழைப்பு மறக்க முடியாதது. மூச்சை பிடித்து நீண்ட நேரம் நடிப்பது ரொம்ப கஷ்டம். ஆனா அவர் முழு அர்ப்பணிப்புடன் செய்தார். அந்த மாதிரி பல நினைவுகள் இந்தப் படத்தில் எனக்கு கிடைத்திருக்கிறது. அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படத்துக்கு கிடைத்த ஓபனிங் — அது முழுக்க பிரதீப் மீது மக்கள் வைத்த நம்பிக்கை.
இந்தப் படம் நீண்ட காலம் ஓடும் என்று நான் நம்புகிறேன். சில கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், தியேட்டரில் போய் பார்த்தீங்கன்னா கண்டிப்பாக ரசிப்பீர்கள். என்னோட வார்த்தையை நம்பலாம். இந்தப் படம் சீக்கிரம் 100 கோடி கிளப்பில் சேரும் — நான் நம்பிக்கையோடு சொல்கிறேன்.
கிருத்தி — இன்னும் சின்ன குழந்தை மாதிரி தான். அவங்க அம்மாவும் அதே மாதிரி. செட்டில் பல நேரங்களில் அவர்களை ஒரு குழந்தையை கவனிப்பது போலவே நாங்கள் பார்த்துக்கொண்டோம். சில சமயங்களில் சிறிய தவறுகள் நடந்தாலும், வேலை செய்யும் போது அவருடைய அர்ப்பணிப்பு மிக உயர்ந்தது. சிறப்பாக அந்த ஸ்விம்மிங் பூல் காட்சியில், வேறு இடங்களில் படப்பிடிப்பு முடித்து வந்த பிறகும், இரவெல்லாம் உழைத்து ஒரு நாளும் சோர்வு காட்டாமல் நடித்தார். மிகவும் இனிமையானவர், அவருடன் வேலை செய்தது எனக்கு மிகவும் பிடித்த அனுபவம்.
ரவி வர்மன் அவருடைய ஒவ்வொரு ஃப்ரேமும் மிகவும் அழகாக இருக்கும். மலேசியாவில் சாதாரண சாலையில் எடுத்த காட்சிகளுக்கே ஒரு மாயம் சேர்த்தது ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சார் அவர்களின் திறமை. அவர் எளிமையாகவே அசாதாரண காட்சிகளை உருவாக்கும் தனித்திறமை கொண்டவர்.
இந்தப் படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் மிகுந்த உழைப்பை கொடுத்துள்ளனர். கௌரி — அவருடன் வேலை செய்வது மிகவும் சுவாரஸ்யமான அனுபவம். எதிர்காலத்தை கற்பனை செய்து, அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான உடை வடிவமைப்புகளை ஏற்றுக்கொண்டு, நடித்தார்.
இந்தப் படம் உருவாக முதன்மை காரணம் தயாரிப்பாளர் லலித் சார். அவர் முன் வந்து “இந்தப் படம் தொடங்கலாம்” என்று சொல்லவில்லை என்றால், இந்தப் படம் நடந்திருக்காது. அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நான் மிகவும் நன்றி கூற வேண்டும்.
எடிட்டர் பிரதீப் ராகவன் — இந்தப் படம் பல சிக்கல்களுடன் இருந்தது. எனக்கு பல சந்தேகங்கள் இருந்தன. அந்த நேரங்களில் அவர் உட்கார்ந்து ஒவ்வொரு காட்சியையும் ஆராய்ந்து, பல பதிப்புகளை உருவாக்கி, சரியான வடிவத்தை கண்டுபிடிக்க உதவினார். ஒரு படத்துக்கு அவர் பத்து படங்களுக்கு சமமான உழைப்பை கொடுத்தார். முத்துராஜ் சார் அவர்களின் தயாரிப்பு வடிவமைப்பு, உடை வடிவமைப்பு, கணினி காட்சி விளைவுகள் — இவை எல்லாமே இந்தப் படத்திற்கு பெரிய பலம். மாங்கோ போஸ்ட் நிறுவனம் இந்தப் படத்தில் கணினி காட்சி பணிகளில் மிகுந்த உதவி செய்தது. ஆரம்பத்தில் சிறிய வேலை என்று தொடங்கியதும், பிறகு முழு மனதுடன் இந்தப் படத்திற்குள் இறங்கி, எங்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார்கள். அதற்காக அவர்களுக்கு நான் என்றும் நன்றி கூறுவேன்.
எஸ்.ஜே.சூர்யா சார் — 2018 முதல் இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரையே நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் மிகவும் பிஸியானவர் என்றாலும், எங்களுக்கு தேவையான நேரத்தை ஒதுக்கி இந்தப் படத்திற்கு முழுமையாக ஆதரவு அளித்தார்.
சீமான் அண்ணன் — மிகவும் நல்ல மனம் கொண்டவர். அரசியலில் பெரியவர் என்றாலும், செட்டில் மிகவும் எளிமையாக, நட்பாக பழகினார். அவருடன் வேலை செய்த ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருந்தது.
இந்தப் படத்தில் உதவி இயக்குநர்கள், ஒளிப்பதிவு குழு, பலர் — எல்லாருடைய உழைப்பாலும் தான் இந்தப் படம் உருவானது. அந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவு மிகவும் முக்கியம். இன்னும் ஒரு முறை தியேட்டரில் சென்று பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப் படத்தின் மூலம் நான் கற்பனை செய்த ஒரு உலகத்தை திரையில் கொண்டு வர முடிந்தது. அந்தக் கற்பனையை ரசிகர்கள் ரசித்து கைதட்டும்போது, அதைவிட பெரிய சந்தோஷம் எனக்கு இல்லை. எவ்வளவு கஷ்டப்பட்டிருந்தாலும், இன்று மக்கள் இந்தப் படத்தை கொண்டாடுகிறார்கள் என்பதே எனக்கு மிகப்பெரிய வெற்றி. அதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
கேங்ஸ்டர் ஜானருக்கு புதிய வண்ணம் தரும் படம் - CinemaCon 2026-ல் “டாக்ஸிக்” பற்றி யாஷ்
CinemaCon 2026 விழா லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய சினிமா உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது. இந்த நிகழ்வில் நடிகர் யாஷ் தனது புதிய படம் “Toxic: A Fairy Tale for Grownups” குறித்து பகிர்ந்த கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகளாவிய மேடையான CinemaCon-ல் இப்படம் குறித்து வெளியான இந்த தகவல், சர்வதேச ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்திய சினிமா புதிய உயரங்களை எட்டிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில், “Toxic” திரைப்படம் அந்த பயணத்தில் முக்கிய இடம் பெறும் படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தைப் பற்றி யாஷ் கூறியதாவது,
“எங்கள் திரைத்துறையில் முதன்முறையாக இந்த படத்தை ஆங்கிலத்திலும் எடுத்துள்ளோம். இந்த படத்தின் கான்செப்ட் பல அடுக்குகள் கொண்டது. இது சாதாரண கேங்ஸ்டர் ஆக்ஷன் படம் அல்ல. வெளிப்படையாக பார்த்தால் இது ஒரு ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் படம் போல தோன்றும். ஆனால் இதில் ஆழமான சைக்கலாஜிகல் அம்சங்களும், மனித வாழ்க்கையின் சுவாரஸ்யமான கோணங்களும் உள்ளன. ஒரு டார்க் கதாபாத்திரத்தை மிகவும் தனித்துவமான முறையில் காட்டியுள்ளோம் என்று நான் நினைக்கிறேன்.”
இயக்குநர் கீது மோகன் தாஸ் மற்றும் தொழில்நுட்பக் குழுவுடன் பணியாற்றிய அனுபவத்தைப் பற்றி அவர் கூறுகையில் :
“அது மிகவும் உற்சாகமான அனுபவமாக இருந்தது. எங்கள் இயக்குநர் கீது மோகன் தாஸ் கேங்ஸ்டர் படங்களுக்கு ஒரு புதிய பார்வையை கொண்டு வந்துள்ளார். நான் இதை மிகவும் ரசித்தேன். இதன் காட்சி ரசிகர்களுக்கு ஒருவிருந்தாக இருப்பதோடு, பார்வையாளர்களின் மனதிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.”
இந்திய சினிமாவின் வளர்ச்சியைப் பற்றி பேசும்போது.., இந்தியா ஒரு தனி உலகம் போல உள்ளது — சில நூறு கிலோமீட்டர் சென்றாலே மொழியும் கலாச்சாரமும் மாறிவிடும் என்று அவர் கூறினார். டப்பிங் மற்றும் பான்-இந்தியா கதைகள் மூலம் இப்போது அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள பார்வையாளர்களை இணைக்கும் நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் டாக்ஸிக் Toxic இந்த மாற்றத்தின் பிரதிபலிப்பாகும் — இந்திய உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டாலும், உலகளாவிய பார்வையாளர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு படம். அனைவருக்கும் பிடிக்கும் வகையில், அதே சமயம் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும் படம் இது,” என்று அவர் முடித்தார்.
கீது மோகன் தாஸ் இயக்கத்தில், கே வி என் புரொடக்ஷன்ஸ் ( KVN Productions ) மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் (Monster Mind Creations) தயாரிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் -அப்ஸ்' ( Toxic: A Fairy Tale for Grownups ) படத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் உலகம் முழுவதும் 2026 ஜூன் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது
ஜி.வி.பிரகாஷ் - ‘ஜோ’ இயக்குநர் ஹரிஹரன் ராம் இணையும் புதிய படம், அதிகாரபூர்வ அறிவிப்பு!
லார்க் ஸ்டூடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார் நாயகனாக நடித்து, இசையமைப்பாளராகவும் இணைகிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, திரையுலகில் கவனம் பெற்றுள்ளது.
‘கருடன்’, ‘மாமன்’ போன்ற படங்களைத் தொடர்ந்து லார்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படம் தற்போது ஆரம்பகட்ட பணிகளில் வேகமாக முன்னேறி வருகிறது. ‘ஜோ’ திரைப்படத்தின் மூலம் வெற்றி கண்ட இயக்குநர் ஹரிஹரன் ராம் இப்படத்தை இயக்கவுள்ளார்.
ஹரிஹரன் ராம் கூறிய கதையை கேட்டவுடன், அதில் கவரப்பட்ட ஜி.வி. பிரகாஷ், நாயகனாக நடிப்பதுடன், இசையமைத்து தயாரிப்பாளராகவும் இணைவதாக முடிவு செய்துள்ளார். இதுவரை அவர் நடித்த படங்களிலிருந்து மாறுபட்ட முறையில், முழுக்க வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் தீவிரமான பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
‘ஜோ’ படத்தின் மூலம் கவனம் பெற்ற மாளவிகா மனோஜ் இப்படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், ‘கர்ணன்’, ‘வாழை’ போன்ற படங்களில் தனது ஒளிப்பதிவால் பாராட்டைப் பெற்ற தேனி ஈஸ்வர் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளார்.
இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் தேர்வு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், படப்பிடிப்பு நடைபெறும் இடங்களைத் தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவித்த 'டீகன்ஸ்ட்ரக்ட்' நிறுவனம்!
நவீன கால பிராண்ட் கூட்டணிகளின் மாறி வரும் தன்மையை பிரதிபலிக்கும் வகையில், Deconstruct நிறுவனம், இசை உலகின் பிரபல ராக் ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் உடன் தனது அதிகாரப்பூர்வ கூட்டணியை அறிவித்துள்ளது.
சாதாரணமாக நடைபெறும் விளம்பர அறிமுக நிகழ்வுகளைப் போல அல்லாமல், இந்த கூட்டணி இணையத்தின் வாயிலாக இயல்பாக உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் மற்றும் அவரது ஸ்டைலிஸ்ட் இடம்பெற்ற ஒரு இன்ஸ்டாகிராம் ரீல் மூலம் இந்த இணைப்பு தொடங்கியது. அந்த வீடியோவில் பின்னணியில் நுட்பமாக வைக்கப்பட்டிருந்த டீகன்ஸ்ட்ரக்ட் சன்ஸ்கிரீனை கூர்மையான பார்வை கொண்ட ரசிகர்கள் கவனித்தது இந்த கூட்டணியின் ஆரம்பமாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் இயல்பான விவாதங்கள் கிளம்பின. ரசிகர்கள் அந்த தயாரிப்பை அடையாளம் கண்டு பகிர்ந்ததன் மூலம், ஒரு சாதாரண தருணம் மிகப் பெரிய கலாச்சார பேசுபொருளாக மாறியது. திட்டமிடப்படாத இந்த நிகழ்வு, டிஜிட்டல் உலகில் இயல்பான ஈர்ப்பை உருவாக்கிய விதமாக பார்க்கப்படுகிறது.
இந்த உண்மையான மற்றும் இயல்பான தொடர்பின் தாக்கத்தை உணர்ந்த டீகன்ஸ்ட்ரக்ட் நிறுவனம், அந்த தருணத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு, தற்போது அதை ஒரு அதிகாரப்பூர்வ கூட்டணியாக மாற்றியுள்ளது. அன்றாட வாழ்க்கையில் தோன்றிய இந்த சம்பவம், திட்டமிடப்பட்ட விளம்பரங்களை விட நம்பகத்தன்மை மிக்க புதிய மார்க்கெட்டிங் அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.
மொத்தத்தில், அனிருத் – டீகன்ஸ்ட்ரக்ட் கூட்டணி, சமூக ஊடகங்களின் சக்தியையும், இயல்பான ரசிகர் ஈடுபாட்டையும் அடிப்படையாகக் கொண்டு உருவான புதிய தலைமுறை பிராண்ட் இணைப்பாக கவனம் ஈர்த்து வருகிறது.
இது தொடர்பாக டீகன்ஸ்ட்ரக்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மாலினி அடபு ரெட்டி பேசுகையில்,
''டீகான்ஸ்ட்ரக்ட்’ நிறுவனத்தில் உண்மையான தருணங்களே மிகவும் சக்தி வாய்ந்த கதைகளை உருவாக்குகின்றன என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். குறிப்பிட்ட அந்த தருணத்துடன் மக்கள் எவ்வளவு இயல்பாக ஒன்றி போனார்கள் என்பதை நாங்கள் கண்டபோது... அதை முன்னோக்கி எடுத்துச் செல்வது மிகவும் இயல்பானதாக தோன்றியது. அனிருத் - நம்பகத் தன்மை மற்றும் எளிதில் தொடர்புபாபடுத்தக்கூடிய விசயம் ஆகியவற்றின் உருவமாக திகழ்கிறார். இந்த மதிப்புகள் அறிவியல் ரீதியான தொழில் நுட்பத்திற்கு ஆதரவளித்து வரும் மற்றும் அதில் புகழ்பெற்ற எங்கள் பிராண்டுடன் கச்சிதமாக பொருந்துகின்றன,'' என்றார்.
தனது சாதனை படைத்த இசை மற்றும் இளைஞர்களுடன் பரந்த தொடர்புக்காக அறியப்படும் அனிருத் ரவிச்சந்தரின் இயல்பான செல்வாக்கும், அவருடைய தனிப்பட்ட பாணியும்... நாடு முழுதும் உள்ள பார்வையாளர்களிடம் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. எங்களின் இந்த கூட்டணி...பாரம்பரிய பிரபலங்களின் விளம்பர ஒப்பந்தங்களில் இருந்து கலாச்சாரத்திற்கு முதலிடம் கொடுக்கும் மற்றும் பார்வையாளர்களை மையமாகக் கொண்ட ஒரு அணுகுமுறைக்கு மாறுவதை குறிக்கிறது. இதில் நுகர்வோர் புதிய கண்டுபிடிப்புகளை முன்னெடுத்துச் செல்ல பிராண்டுகள் அதற்கு வழிகாட்டியாய் திகழ்ந்து, பதில் அளிக்கின்றன.
இந்த கூட்டணியின் மூலம் டீகன்ஸ்ட்ரக்ட் நிறுவனம் தனது சமூகத்தின் கருத்துக்களை கேட்டு.. அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு அவர்களுடன் இணைந்து வளரும் ஒரு பிராண்டாக தனது நிலையை தொடர்ந்து வலுப்படுத்துகிறது. மேலும் இன்றைய சூழலில் நம்பகத் தன்மை தான் மிக வலிமையான நாணயம் என்பதையும் இது நிரூபிக்கிறது.
திட்டக்குடியில் கண்ணன் ரவி, தீபக் ரவி கூட்டணியின் “TN 2026” வெற்றி கொண்டாட்டம்!
KRG Kannan Ravi Group தயாரிப்பில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி, தற்போது தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய தயாரிப்பாளர்களாக உயர்ந்து வருகின்றனர். தரமான கதைகள், வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் வணிக அம்சங்களைச் சிறப்பாக இணைக்கும் இவர்களின் தேர்வு, அவர்களை மற்ற தயாரிப்பாளர்களிடமிருந்து தனித்துவப்படுத்துகிறது.
அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் உமாபதி ராமையா இயக்கத்தில், நடிகர் நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள “TN 2026” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசியல் நகைச்சுவை கலந்த கமர்ஷியல் படமாக உருவான இப்படம், சமூக கருத்துகளையும் அரசியல் பகடியையும் சிரிப்பூட்டும் விதமாக இணைத்து மக்களிடம் எளிதாக சென்றடைந்துள்ளது.
படம் வெளியானதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் சொந்த ஊரான திட்டக்குடியில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெற்றது. இதில் இயக்குநர் உமாபதி ராமையா, நட்டி நட்ராஜ், ஸ்ரித்தா ராவ், தம்பி ராமையா, இளவரசு உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன் இணைந்து திரையரங்கில் படம் பார்த்து மகிழ்ந்தனர்.
அப்போது ரசிகர்கள் அளித்த வரவேற்பு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மேளதாளம், பேண்டு வாத்தியம், சரவெடி, ஊர்வலம் என உற்சாகமாக கொண்டாடப்பட்ட இந்த விழா, தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மக்கள் தொடர்பையும் அவருக்கு கிடைக்கும் ஆதரவையும் வெளிப்படுத்தியது.
“TN 2026” திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. வெளியீட்டிற்கு முன்பே அதன் போஸ்டர் மற்றும் விளம்பரங்கள் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அரசியல் நகைச்சுவை மற்றும் சமூக கருத்துக்களை இணைக்கும் இப்படம், தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை தொடர்ந்து பெற்று வருகிறது.
“தலைவர் தம்பி தலைமையில்” என்ற ப்ளாக்பஸ்டர் படத்தைத் தொடர்ந்து, “TN 2026” மூலம் கண்ணன் ரவி – தீபக் ரவி கூட்டணி மீண்டும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மேலும், அடுத்ததாக நடிகர் ஜெய் நடிப்பில், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் “டெக்ஸ்லா” திரைப்படத்தையும் அவர்கள் தயாரித்து வருகின்றனர்.
மொத்தத்தில், கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி ஆகியோர் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய தயாரிப்பாளர்களாக வலுவாக தங்கள் இடத்தைப் பதித்து வருகின்றனர்.
- உலக செய்திகள்
- |
- சினிமா













