சற்று முன்

இன்றைய கால இளைஞர்களின் காதலையும் ஊடலையும் கூறும் 'ஹாஃப் பாட்டில்'   |    பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை படைத்த ‘பில்லா’ மே 1, 2024 அன்று மீண்டும் வெளியாகிறது!   |    அருண் விஜய் செய்வதை என்னால் செய்ய முடியாது - தயாரிப்பாளர் பாபி பாலசந்திரன்   |    பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |   

சினிமா செய்திகள்

ஆர் கே செல்வமணியை எச்சரித்த தயாரிப்பாளர்கள் சங்கம்
Updated on : 10 January 2022

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் ( பெப்சி ) சம்பள பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சு வார்த்தை இன்னும் முடிவுறாத நிலையில் திடீரென பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் நடைபெற்ற சம்பள பேச்சுவார்த்தையில் 40 முதல் 50 சதவீதம் சம்பள உயர்வு கிடைத்திருப்பதாகவும் முதல்வர் முன்னிலையில் கையெழுத்திட இருப்பதாகவும் பதட்டத்துடன் அறிவித்தார் பெப்சி யின் தலைவராக இருக்கும் ஆர் கே செல்வமணி. 



 



இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் சம்பள பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.இன்னும் சில சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.



 



இந்நிலையில் சம்பள பேச்சுவார்த்தை முடிவுறாத நிலையில் முடிவுற்றதாக செல்வமணி கூறியிருப்பது அனைத்து தயாரிப்பாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவ்வளவு அவசரமாக செல்வமணி அறிவிக்க வேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. சம்பள பேச்சுவார்த்தை முடிவுற்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிக்கும் வரை பழைய சம்பளத்தையே வழங்க வேண்டும் என அனைத்து தயாரிப்பாளர்களும் கூறிவருகிறார்கள். செல்வமணி கூறியது போல் தற்போதுள்ள கொரோனா சூழ்நிலையில் சம்பளம் வழங்க இயலாது என்றும் தயாரிப்பாளர்கள் கூறிவருகிறார்கள்.



 



அதனால் நாங்கள் அறிவிக்கும் வரை பெப்சி தொழிலாளர்களுக்கு பழைய சம்பளமே நடைமுறையில் இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.



 



இது சம்பந்தமாக தயாரிப்பாளர்கள் கூறுகையில்.. செல்வமணியை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகமும் தற்போதுள்ள அரசாங்கமும் பெரிதாக கண்டுகொள்வதில்லை.அதனால் நான் இருக்கிறேன், நான் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காக முடிவுறாத சம்பள பேச்சுவார்த்தையை முடிவுற்றதாக அறிவித்து நானும் இருக்கிறேன் என்று அவரை யாரும் மறந்துவிடக்கூடாது என்று நினைவுபடுத்தும் விதமாக பத்திரிகையாளர்களை அழைத்து பேட்டியளித்துள்ளார். வருடத்தின் முதல் பேட்டியே பொய்யான தகவல்கள் என்பது அனைவரும் உணர்ந்துள்ளனர். அதனால் செல்வமணியின் தில்லாலங்கடி வேலையெல்லாம் இனி எடுபடாது என்று தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா