சற்று முன்

இரண்டு மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ள 'கரிகாடன்' டீசர்!   |    மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “யெல்லோ”   |    மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “யெல்லோ”   |    குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் குழந்தைகள் படம்!   |    'IPL (இந்தியன் பீனல் லா)' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது!   |    ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படம் ‘சிக்மா’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது!   |    அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!   |    வெற்றிமாறனிடம் ராமர் மாட்டவில்லை, ராமரிடம் வெற்றிமாறன் மாட்டியிருக்கிறார் - விஜய் சேதுபதி   |    'ப்ரீ வெட்டிங் ஷோ' பிளாக்பஸ்டரை தொடர்ந்து தனது அடுத்த படத்தை அறிவித்த நடிகர் திரு வீர்!   |    'நாகபந்தம்' திரைப்படத்தின் ஆன்மீக பாடல் ‘ஓம் வீர நாகா’   |    2024 ஆண்டிற்கான சிறந்த கிறிஸ்தவ திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படம்!   |    சிவாஜி கணேசன் பேரனுக்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து!   |    டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் “ரெட்ட தல”   |    உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்!   |    21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |   

சினிமா செய்திகள்

'இடும்பன்காரி' படத்துக்காக இணையும் பிடிகே பிலிம்ஸ் மற்றும் திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்
Updated on : 10 September 2021

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், கதையம்சம் உள்ள படங்களை தயாரிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். தற்போது, இடும்பன்காரி எனும் புதிய திரைப்படத்திற்காக அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர் பி டி அரசகுமாரின் பிடிகே பிலிம்ஸுடன் திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் கைகோர்த்துள்ளது.



 



துப்பறியும் திரில்லர் வகையை சேர்ந்த இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டன. புதுமுக இயக்குநர் அருல் அஜித் இயக்கும் இடும்பன்காரியில் ஷிவாதா நாயர் மற்றும் ரம்யா பாண்டியன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.



 



மேலும், அனுபமா குமார், ‘நீயா நானா’ புகழ் கோபிநாத், இயக்குநர் வேலுபிரபாகரன், அருண் மற்றும் ஜோதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.



 



இப்படத்தின் ஒளிப்பதிவை அமீன் செய்ய, ‘தடம்’ புகழ் அருண்ராஜ் இசையமைக்கிறார். இக்னேஷியஸ் அஸ்வின் படத் தொகுப்பை கையாள்கிறார்.



 



படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இது நிறைவடைந்தவுடன், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று, இடும்பன்காரி விரைவில் திரைக்கு வரவுள்ளது.



 





 



பார்வையாளர்களை அவர்களது இருக்கையின் நுனிக்கு வர வைக்கும் பிரத்யேக அனுபவத்தை தரும் பரபரப்பு மிக்க துப்பறியும் திரில்லராக இடும்பன்காரி இருக்கும் என்று படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா