சற்று முன்
சினிமா செய்திகள்
அல்லு சிரிஷினை பாராட்டிய அண்ணன் அல்லு அர்ஜூன்
Updated on : 16 April 2021
அல்லு சிரிஷின் முதல் இந்திப் பாடல் 'விலாத்தி ஷராப்' (Vilayati Sharaab) யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ள நிலையில் அல்லு அர்ஜூன் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜூனின் இளைய சகோதரர் அல்லு சிரிஷ். இவர் அண்மையில் முதன்முறையாக இந்தி மொழியில் சிங்கிள் ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்ட்டார். 'விலாத்தி ஷராப்' (Vilayati Sharaab) என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் பாடல், குறுகிய காலத்தில் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும், அல்லு சிரிஷின் இந்தப் பாடலை வைத்து இளைஞர்கள் பலரும் நடனமாடி டேன்ஸ் கவர் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், தனது சகோதரர் சிரிஷை சமூக வலைதளத்தில் வெகுவாகப் பாராட்டியுள்ளார் நடிகர் அல்லு அர்ஜூன்.
அதில் அவர், யூடிபில் 100 மில்லியன் பார்வைகளைத் தொட்டதற்கு மிகப்பெரிய வாழ்த்துகள். உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். ஒட்டுமொத்த குழுவுக்கும் எனது வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இசை ரசிகர்கள் அனைவருக்குமே நன்றி. இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் தங்களின் அன்பை ' விலாத்தி ஷராப்' பாடலில் பொழிந்து அதனை மாபெரும் வெற்றியாக்கியுள்ளீர்கள். 100 மில்லியன் பார்வைகளைக் கடக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. தர்ஷன் ராவல், நீதி மோகன், ஹெலி தருவாலா மற்றும் ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துகள், எனக் கூறியுள்ளார்.
ஏபிசிடி, ஸ்ரீரஸ்து சுபமஸ்து, ஒக்கஷனம் ஆகிய படங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் நடனக் காட்சிகளைக் கொடுத்த அல்லு சிரிஷ், தமிழில் கவுரவம், மலையாளத்தில் 1971: பியாண்ட் பார்டர்ஸ் ஆகிய படங்களில் தனது பிம்பத்தை நிலைநாட்டினார். இப்போது இண்டி மியூசிக் லேபிளின் தயாரிப்பில் 'விலாத்தி ஷராப்' (Vilayati Sharaab) என்ற குத்தாட்டப் பாடலைக் கொடுத்து அதை இமாலய வெற்றியாக்கி பெரும் ரசிகர் பட்டாளத்தை ஈர்த்துள்ளார். இந்தப் பாடல்தான் இப்போது பாலிவுட் டேன்ஸ் பாடல்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகள்
சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!
தமிழ் திரையுலகில் தொடர்ந்து ஹிட் பாடல்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிவாஸ் கே. பிரசன்னா, தனது தனித்துவமான இசை மூலம் இசையுலகில் தனி முத்திரை பதித்து வருகிறார். அவரது இசை, படங்களுக்கு கூடுதல் வலிமையைக் கொடுப்பதுடன், ரசிகர்களை திரையரங்குகளுக்கு இழுக்கும் முக்கிய அம்சமாகவும் இருந்து வருகிறது.
சமீபத்தில் வெளியான ‘தாய் கிழவி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, தற்போது பல புதிய படங்களில் இசையமைத்து வரும் நிவாஸ் கே. பிரசன்னா, தற்போது சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ‘புரொடக்ஷன் நம்பர் 4’ படத்தில் இசையமைப்பாளராக இணைந்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையில் உருவாகும் இந்தப் படத்தை, இயக்குநர் ஹரிஹர சுதன் அழகிரி இயக்குகிறார். ஜென் Z தலைமுறையின் கவனத்தை பெற்ற நடிகர் பாரத் கதாநாயகனாகவும், ‘குடும்பஸ்தன்’ படத்தின் மூலம் அறிமுகமான சான்வே மேக்னா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திட்டமிட்ட காலக்கட்டத்திற்குள் படப்பிடிப்பு நிறைவடையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் குழுவில், ஒளிப்பதிவை தேனி ஈஸ்வர் மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை சி. எஸ். பாலச்சந்தர் கவனிக்க, ஆடை அலங்கார வடிவமைப்பை கிருத்திகா சேகர் மேற்கொள்கிறார்.
முன்னதாக ‘மாவீரன்’, ‘3BHK’ போன்ற வெற்றிப் படங்கள் மூலம் பான்-இந்திய அளவில் கவனம் பெற்ற சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தனது வெற்றிப் பயணத்தை ‘புரொடக்ஷன் நம்பர் 4’ மூலம் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்
தமிழக அரசியலில் முக்கியமான மாற்றமாக, மக்கள் நீதி மய்யம் கட்சி தனது 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்த நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கட்சியின் அடையாளமான பேட்டரி டார்ச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடந்தபோதிலும், இந்தத் தேர்தலில் நேரடியாக போட்டியிடாது என ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் அறிவிப்பின் படி, வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-இல் மக்கள் நீதி மய்யம் தன்னிச்சையாகப் போட்டியிடாமல், திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும். இந்த முடிவு தமிழக மக்களின் வளர்ச்சியையும், மதவாத அரசியல் சூழ்ச்சிகளுக்கு எதிரான விழிப்புணர்வையும் முன்னிறுத்துவதாகக் கட்சி தெரிவித்துள்ளது.
மேலும், “அரசியலில் தேர்தல் என்பது ஒரு கட்டமே தவிர, இறுதி இலக்கு அல்ல; அது முற்றுப்புள்ளியும் கிடையாது” என்று கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்த முடிவு தியாகமாக அல்ல, கடமையாகவும்; சுயநலமாக அல்ல, பொறுமையாகவும் பார்க்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஒற்றுமைக்கும் அர்ப்பணிப்புக்கும் நன்றி தெரிவித்துள்ள தலைமையினர், “உங்கள் நம்பிக்கைக்கும் உணர்வுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளனர்.
இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் கூட்டணிகளில் புதிய சமநிலையை உருவாக்கும் என்பதால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்திய சினிமாவின் பல மொழிகளில் வெற்றிப் படங்களை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தனது மூன்றாவது தமிழ் படைப்பான #மைத்ரிதமிழ்03-ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஆர். ரவிகுமார் இயக்க, தயாரிப்பாளர்களாக நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இணைந்துள்ளனர்.
படத்தின் அறிவிப்பு போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை உடனே ஈர்த்துள்ளது. வெள்ளத்தில் இடுப்பு அளவு நீரில் நின்று கொண்டிருக்கும் நாயகனின் பின்புற காட்சி, அதனுடன் நீரில் பிரதிபலிக்கும் உருவம் – இவை அனைத்தும் மர்ம உணர்வை அதிகரிக்கின்றன. கதாநாயகன் கையில் பிடித்திருக்கும் ஆயுதம், உயிர் பிழைப்புக்கான போராட்டத்தையும் ஆபத்தையும் வெளிப்படுத்துகிறது.
அவரைச் சுற்றி சிதைந்த பொருட்கள், உடைந்த பாத்திரங்கள் மற்றும் கவிழ்ந்த கேஸ் சிலிண்டர் போன்றவை பேரழிவை சுட்டிக்காட்டுகின்றன. கதவின் வழியாக புகும் மங்கலான சிவப்பு வெளிச்சம், காட்சிக்கு கூடுதல் பதட்டத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், “BLOOD FOLLOWED THE FLOOD” என்ற டேக்லைன், இயற்கை பேரழிவோடு இணைந்த வன்முறையை சுட்டிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது. மொத்தத்தில், இந்த போஸ்டர் இருள், மர்மம் மற்றும் அதிரடி கலந்த கதையை முன்வைக்கிறது.
‘கொட்டுக்காளி’, ‘விடுதலை’, ‘மாமன்’ போன்ற படங்களின் வெற்றிக்கு பிறகு, சூரி தற்போது முன்னணி ஹீரோக்களின் பட்டியலில் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். அதேபோல் ‘இன்று நேற்று நாளை’ மற்றும் ‘அயலான்’ போன்ற படங்களால் பெயர் பெற்ற இயக்குநர் ரவிகுமார், இந்த படத்திலும் புதுமையான கதை சொல்லும் பாணியை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக தமிழில் குட் பேட் அக்லி மற்றும் டியூட் போன்ற படங்களை தயாரித்துள்ள மைத்ரி நிறுவனம், இந்தப் படத்திலும் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இந்த வலுவான கூட்டணியும், சுவாரஸ்யமான போஸ்டரும் இணைந்து #சூரி07 / #மைத்ரிதமிழ்03 திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் பலமடங்கு உயர்த்தியுள்ளது. மேலும் தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளன.
‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!
டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில், டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி, புதிய திரை அனுபவத்திற்கான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
வெளியான டீசர் முழுவதும் அதிரடியான சண்டைக் காட்சிகளால் நிரம்பி, ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. இப்படம் மலையாள திரையுலகை மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் முக்கியமான சாதனையை பதிவு செய்யும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. குடும்பம் முழுவதும் ரசிக்கக்கூடிய அம்சங்களும் இதில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள ஜேக்ஸ் பிஜாய், தனது இசையால் மேலும் கவனம் ஈர்த்துள்ளார். அவரது இசையில் வெளியான ‘காட்டு செம்பகம்’ பாடலை அகில் ஜே. சந்த் மற்றும் அவனி மல்ஹார் இணைந்து பாடியுள்ளனர். மோகன் ராஜா எழுதிய இந்தப் பாடல் ஏற்கனவே ட்ரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்து வருகிறது.
இந்த படத்தில் விஜயராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கயாடு லோஹர் கதாநாயகியாக தோன்றுகிறார். டீசருடன் சேர்த்து ஒரு உணர்ச்சிப்பூர்வமான குடும்பப் பாடலும் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம், டிஜோ ஜோஸ் ஆண்டனி – ஜேக்ஸ் பிஜாய் கூட்டணியில் உருவாகும் நான்காவது படம் என்பது சிறப்பம்சமாகும். இவர்களின் முந்தைய படங்களான குயின், ஜன கண மன மற்றும் மலையாளி ஃபிரம் இந்தியா ஆகியவை பெரும் வரவேற்பைப் பெற்றன.
மேலும், இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநரான எஸ். எஸ். ராஜமவுலி, ‘ஜன கண மன’ திரைப்படத்தை பாராட்டியது இந்தக் கூட்டணிக்கு கூடுதல் கவனத்தை பெற்றுத்தந்தது.
எஸ். சுரேஷ் பாபு எழுதிய கதைக்கு டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்துள்ளார். வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் சி கியூப் பிரதர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இந்த படம், வரும் ஏப்ரல் 10ஆம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.
இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!
‘பாணா காத்தாடி’ போன்ற வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குநர் பத்ரி வெங்கடேஷ், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் பிரமாண்ட ‘ரோர் 26’ விழாவை திறம்பட இயக்கி ரசிகர்களை கவர்ந்தார்.
இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் உற்சாகத்தை உச்சிக்குக் கொண்டு சென்றது. எம். எஸ். தோனி, ருதுராஜ் கெய்க்வாட், மைக் ஹஸ்சி மற்றும் சுரேஷ் ரெய்னா போன்ற கிரிக்கெட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டு ரசிகர்களுடன் மகிழ்ந்தனர். மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்று சிஎஸ்கே அணிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
நிகழ்ச்சியை ஆர்.ஜே. பாலாஜி, அனிருதா ஸ்ரீகாந்த், அர்ஜுன் தாஸ் மற்றும் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் உற்சாகமாக தொகுத்து வழங்கினர்.
முன்னதாக SIIMA மற்றும் Mirchi Music Awards போன்ற முக்கிய விருது விழாக்களை இயக்கிய அனுபவம் கொண்ட பத்ரி வெங்கடேஷ், இந்த ‘ரோர் 26’ நிகழ்ச்சியையும் ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கும் வகையில் வடிவமைத்தார்.
ஏற்கனவே மூன்று தமிழ்ப் படங்களை இயக்கியுள்ள அவர், தற்போது தனது அடுத்த திரைப்படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!
முன்னணி நடிகர் Sharwanand, Rajasekhar, Malavika Nair, Atul Kulkarni உள்ளிட்டோர் நடித்துள்ள “பைக்கர்” திரைப்படம், இந்திய சினிமாவில் முதன்முறையாக மோட்டார் பைக் ரேசிங்கை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் பிரம்மாண்டமான படைப்பாக பேசப்படுகிறது. இயக்குநர் Abhilash Reddy இயக்கியுள்ள இந்த படம், UV Creations தயாரிப்பில் உருவாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாகவுள்ள இந்த படம், வரும் ஏப்ரல் 3, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இதனை முன்னிட்டு, படக்குழுவினர் சென்னை நகரில் தமிழ் ஊடகங்களை சந்தித்து படத்தின் சிறப்புகளை பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்வினில்
மோட்டார் சைக்கிள் டிரெய்னர் ரோஷிணி பேசியதாவது..,
இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தாலும், மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன்.நான் பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் பயிற்சி அளித்து வருவதால், இந்தப் படத்தின் உலகத்தை எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது. ‘பைக்கர்’ உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதால், அது இன்னும் சிறப்பு பெற்றதாக தெரிந்தது. இந்தப் படம் இளைஞர்களுக்கும் பைக் ரேசிங் ஆர்வலர்களுக்கும் ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்திய சினிமாவில் மோட்டார் பைக் ரேசிங்கை மையமாகக் கொண்ட இப்படம் மிகவும் முக்கியமான முயற்சியாக தெரிகிறது. இந்த விளையாட்டை அதிகமான மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இயக்குநரின் உண்மையான நோக்கம் என்பதை உணர முடிந்தது. டாக்டர் ராஜசேகர் அவர்களின் நடிப்பு ஒரு கடுமையான ஆனால் பாசமுள்ள தந்தையை நினைவுபடுத்தியது. நாயகன் ஷர்வானந்த் தனது கதாபாத்திரத்திற்கு முழுமையாக அர்ப்பணித்து, உண்மையான ரேஸராகவே மாறியிருக்கிறார்.
புரடக்ஷன் டிசைனர் ராஜீவன் பேசியதாவது..,
இந்தப் படத்தில் கலை இயக்கம் பெரிதாக வெளியில் தெரியாமல் இருந்தாலும், அதற்குப் பின்னால் மிகுந்த உழைப்பும் நுணுக்கமும் இருந்தது.பொதுவாக ரேசிங் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்படும் நிலையில், இந்தப் படத்தில் ரேஸ்களை உருவாக்குவது பெரிய சவாலாக இருந்தது. கதை இரண்டு காலக்கட்டங்களில் நகர்வதால், அதற்கேற்ற பைக்குகள் மற்றும் பொருட்களைத் தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. ஒவ்வொரு காலத்திற்கும் பொருந்தும் விவரங்கள் நம்பகத்தன்மையுடன் அமைய வேண்டும் என்பதில் அக்கறையுடன் பணியாற்றினோம். பழைய டிராக்குகளை மாற்றி, புதிய ரேஸ் காட்சிகளுக்கேற்ற சூழலை உருவாக்கினோம். அதற்கான அமைப்புகளை உருவாக்குவதுதான் தயாரிப்பு வடிவமைப்பின் முக்கியப் பணியாக இருந்தது. தேவையான பல அம்சங்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டன. குறிப்பாக இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலிருந்து பல பொருட்கள் பெறப்பட்டன. ரேஸ் டிராக் இயல்பாகவும் உண்மையாகவும் தோன்ற வேண்டும் என்பதற்காக தீவிரமாக உழைத்தோம். பார்வையாளர்கள் திரையில் ஒரு உண்மையான ரேசிங் உலகத்தை உணர வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக இருந்தது. ஒரு செட்டை அமைப்பதைக் கடந்தும், முழு ரேசிங் அனுபவத்தை உருவாக்கும் முயற்சி நடைபெற்றது. இந்தப் படத்தின் பின்னணியில் தயாரிப்பு வடிவமைப்பில் மிகுந்த உழைப்பும் நுணுக்கமும் இருப்பதை ரசிகர்கள் திரையில் உணர்வார்கள். நன்றி.
ஒளிப்பதிவாளர் மதி பேசியதாவது..,
இந்தப் படக்குழுவுடன் இணைந்து பணியாற்றியது குடும்பத்தோடு சேர்ந்து வேலை செய்த அனுபவம் போல இருந்தது. ரேவதி, பிரபு உள்ளிட்ட பலருடன் முன்பே பணியாற்றியிருந்தாலும், இந்தப் படம் தனித்துவமான அனுபவத்தை அளித்தது. குறிப்பாக ரேஸ் காட்சிகளைப் படம் பிடிப்பது மிகவும் சவாலாக இருந்தாலும், அதை சிறப்பாக பதிவு செய்ய முழு முயற்சியும் எடுத்தோம். அபிஜித் உள்ளிட்ட குழுவினரின் ஒத்துழைப்புக்கு நன்றி. தொடர்ந்து ஒரு மாத காலம் நடைபெற்ற ரேஸ் படப்பிடிப்பு மிகப்பெரிய அனுபவமாக அமைந்தது. இது எனது திரைப்பயணத்தில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். இந்தப் படத்தில் குழுவின் முழு அர்ப்பணிப்புதான் இப்படத்தை சிறப்பாக்கியது. படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது..,
இந்தப் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்ததற்கு வம்சி சாருக்கு முதலில் நன்றி. அபிலாஷை தமக்கு அறிமுகப்படுத்தியது அவர்தான். அபிலாஷுடன் முதல் சந்திப்பிலேயே நல்ல உணர்வு ஏற்பட்டது. கதையைக் கேட்டவுடனேயே மிகவும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. இப்படிப்பட்ட வேகமும் ஆழமும் கொண்ட கதைகள் எப்போதும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஷர்வானந்துடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளித்தது. கதை 1990களில் இருந்து 2000கள் வரை தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு நகர்வதால், அதன் சூழல் எனக்கு நெருக்கமாக இருந்தது. படக்குழுவில் பலரும் தமிழில் பேசும் சூழல் இருந்தது பணியில் மேலும் உதவியாக அமைந்தது. பைக் ரேசிங் உலகின் ஒலி வேறுபாடுகளை உணர்த்துவதில் சவுண்ட் டிசைன் மிக முக்கிய பங்காற்றியது. இந்தப் படம் இந்திய அளவைக் கடந்து சர்வதேச அளவிலும் ரசிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. படத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை முதல் நாளிலேயே பார்த்து ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
இயக்குநர் அபிலாஷ் ரெட்டி பேசியதாவது..,
இந்த மேடையில் மூத்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் முன் பேசுவது எனக்கு பெருமையாகவும் பதட்டமாகவும் இருக்கிறது. ‘பைக்கர்’ படம் வெறும் ரேஸ் பற்றிய கதை மட்டும் அல்ல, அதில் ஆழமான மனித உணர்வுகளும் இடம்பெற்றுள்ளன.
அதனால்தான் இந்தப் படத்தை தமிழிலும் வெளியிடுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு தமிழ் சரியாகப் பேச வராவிட்டாலும், இந்தப் படம் தமிழ் ரசிகர்களின் மனதை நிச்சயம் தொடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ராஜீவன் சார், மதி சார், யுவராஜ் சார், ஜிப்ரான் சார் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரின் பங்களிப்பும் இந்தப் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் தமிழ் கற்க வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கிறது.
அடுத்த முறை வரும்போது இன்னும் நன்றாக தமிழில் பேச வேண்டும் என்பதையும் விரும்புகிறேன். எதிர்காலத்தில் ஒரு தமிழ் படம் இயக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. ஷர்வானந்த் சார், ராஜசேகர் சார், மாளவிகா மேடம் உள்ளிட்ட நடிகர்கள் இல்லாமல் இந்தப் படம் சாத்தியமாகியிருக்காது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக உயிர்ப்பித்துள்ளனர். இந்தப் படம் அனைவரின் கூட்டு உழைப்பால் உருவான ஒன்று. ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் இந்தப் படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும் என்பதே என் அன்பான வேண்டுகோள். நன்றி.
நடிகர் நிரூப் பேசியதாவது..,
இந்தப் படத்தில் நடிக்க என்னை அணுகியபோது, நான் இரண்டு படங்கள் மட்டுமே நடித்திருந்தேன். அந்த நேரத்தில் இவ்வளவு பெரிய கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. ஆடிஷன் மூலம் இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி. என் கதாபாத்திரம் பற்றி இப்போது அதிகமாக சொல்ல விரும்பவில்லை, ஏனெனில் அது ரசிகர்களுக்கான சஸ்பென்ஸாக இருக்க வேண்டும். ஆனால் இந்தப் படம் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பை மட்டும் அல்ல, நிறைய நல்ல நண்பர்களையும் கொடுத்தது. ஷர்வா அண்ணாவுடன் பணியாற்றியது மிக அழகான அனுபவமாக இருந்தது. ராஜசேகர் சார் மனிதராகவே மிகவும் அருமையானவர்; அவரிடமிருந்து இன்னும் பல விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். மாளவிகா மேடமும் தனது கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். யுவராஜ் சார் இந்தப் படத்திற்கு கண்களால் ரசிக்க வேண்டிய அளவுக்கு அழகான காட்சிகளை கொடுத்திருக்கிறார். இந்தப் படம் திரையரங்கில் பார்த்தால்தான் அதன் முழு அனுபவமும் உணர முடியும். அபிலாஷ் சார் ஒரு அழகான உலகத்தை உருவாக்கியிருக்கிறார்; அதில் ஆச்சரியங்கள், அதிவேக ரேஸ்கள், உணர்வுகள் என அனைத்தும் இருக்கின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழி ரசிகர்களும் ரசிக்கும் படமாக இது இருக்கும். நன்றி.
நடிகை மாளவிகா பேசியதாவது..,
சென்னைக்கு மீண்டும் வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கே கிடைக்கும் அன்பும் வரவேற்பும் எப்போதும் நினைவில் நிற்கும். இன்னும் பல தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதேபோல், ஷர்வாவின் மற்ற படங்களுக்கு நீங்கள் கொடுத்த அன்பைப் போலவே ‘பைக்கர்’ படத்திற்கும் ஆதரவு தர வேண்டும் என்று விரும்புகிறேன். ஷர்வா பற்றி நான் அதிகமாகச் சொல்லத் தேவையில்லை, ஏனெனில் அவரை அனைவரும் ஏற்கனவே நன்றாக அறிவீர்கள். எங்கள் படத்தை திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே என் அன்பான வேண்டுகோள். நன்றி.
டாக்டர் ராஜசேகர் பேசியதாவது,
நடக்கும்போதே கொஞ்சம் சிரமமாக இருக்கிறது; ஹீரோ ஷர்வானந்த் கையைத் தந்து என்னை மேடைக்கு அழைத்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு எனக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இப்போதுதான் அது குணமாகி வருகிறது. இதற்கு முன்பும் சினிமா ஸ்டண்ட் செய்யும் போது இரு கால்களும் முறிந்த அனுபவம் எனக்கு உள்ளது. அதில் இடது கால் முதலில் முறிந்தது, அதுவும் ஒரு படப்பிடிப்பின் நடுவிலேயே நடந்தது. அந்த விபத்து மிகவும் பெரியதாக இருந்ததால் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். அப்போது டாக்டர்கள் ஓய்வெடுக்கச் சொன்னாலும், ‘இதுதாண்டா போலீஸ்’ படத்தின் வெளியீடு நெருங்கியதால் மருத்துவமனையில் அமைதியாக இருக்க முடியவில்லை. டிசம்பர் 8ஆம் தேதி வெளியான அந்தப் படத்தைப் பார்க்க நேராக சத்யம் திரையரங்கிற்கே வந்தேன். அந்தப் படம் வெளியாகும் முன்பே தெலுங்கில் பெரிய வெற்றி பெற்றிருந்தது. அப்போது இந்த முறிவு நல்ல அறிகுறி, படம் பெரிய ஹிட் ஆகும் என்று பலர் சொன்னது நினைவுக்கு வந்தது.
அதேபோல் இப்போதும் மீண்டும் முறிவுடன் சத்யம் திரையரங்கிற்கு வந்திருக்கிறேன் என்பதால், இந்தப் படமும் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏப்ரல் 3ஆம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கில் வந்து ஆதரிக்க வேண்டும். இந்தப் படம் ரசிகர்களின் அன்பில் பெரிய வெற்றியை அடையும் என்று மனமார நம்புகிறேன்.
நடிகர் ஷர்வானந்த் பேசியதாவது..,
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சென்னை வருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘எங்கேயும் எப்போதும்’ முதல் ‘கணம்’ வரை தமிழ் ரசிகர்களுடன் எனக்கு எப்போதும் ஒரு நெருக்கம் இருந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் மீதும் தமிழ் மக்களின் மீதும் எனக்கு எப்போதும் தனி அன்பும் மரியாதையும் உண்டு. அதனால்தான் தமிழில் படம் வெளியிடும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கதைகளையே தேர்வு செய்து வருகிறேன். என் படப் பயணத்தைப் பார்த்தால், ஒவ்வொரு படமும் ஒவ்வொரு புதிய ஜானரில் அமைந்திருப்பதை காணலாம். அதேபோல், ‘பைக்கர்’ படமும் என் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. என் முழு திரை வாழ்க்கையிலேயே இதுதான் எனது சிறந்த படம் என்று பெருமையுடன் சொல்ல முடிகிறது. ஏனெனில், இது இந்திய சினிமாவில் உருவான முதல் மொட்டோகிராஸ் படம்.
இந்தப் படம் தொழில்நுட்ப ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், மிகப் பெரிய முயற்சியாக உருவாகியுள்ளது. இந்தக் கதாபாத்திரத்திற்காக 22 கிலோ எடையை குறைத்து, 18 வயது இளைஞனாகவும் 30 வயது மனிதராகவும் இரு பரிமாணங்களில் என்னை மாற்றிக் கொண்டேன். இந்தப் படம் என்னை நடிகராக மட்டும் அல்ல, மனிதராகவும் மாற்றிய ஒரு திருப்புமுனைப் படமாக அமைந்துள்ளது. ராஜீவன், மதி, யுவராஜ், ஜிப்ரான், ராஜசேகர், மாளவிகா, வம்சி ரெட்டி உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பும் இந்தப் படத்தை சிறப்பாக மாற்றியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக நீண்ட அர்ப்பணிப்புடன் உருவான இந்தப் படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகிறது; தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக திரையரங்கில் வந்து ஆதரிக்க வேண்டும். அனைவருக்கும் நன்றி.
இப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
“கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!
அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே திரையுலகில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக, உலகளாவிய ஓடிடி தளமான Netflix இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளது. திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இப்படம் பெற்ற இந்த ஒப்பந்தம், அதன் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
புதுமையான கதை அமைப்பில் உருவாகியுள்ள இந்த படம், ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நகர்கிறது. கடன்சுமையில் சிக்கித் தவிக்கும் அந்த குடும்பத்திற்கு திடீரென கிடைக்கும் பணம் அச்சிடும் இயந்திரம், அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறது என்பதையே கதை சுவாரஸ்யமாகச் சொல்லுகிறது. “பட்டனை அழுத்தினால் பணம் கொட்டும்” என்ற வித்தியாசமான கற்பனைக்கு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகியவை இணைந்திருப்பது படத்தின் சிறப்பாகும்.
இப்படத்தில் நாயகனாக அர்ஜூன் தாஸ் நடித்துள்ள நிலையில், மலையாள நடிகை அன்னா பென் கதாநாயகியாக இணைந்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, வடிவுக்கரசி, குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். புதிய கூட்டணியும், தனித்துவமான கதாபாத்திரங்களும் இப்படத்திற்கு கூடுதல் ஈர்ப்பாக அமைந்துள்ளன.
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை, அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ளார். மங்களூர், சென்னை, மும்பை போன்ற நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. நகர வாழ்க்கையின் சிக்கல்களையும் அதில் இருக்கும் நகைச்சுவை, உணர்வுகளையும் இணைத்து சொல்லும் முயற்சியாக படம் உருவாகியுள்ளது.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் டீசர் ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இசை, காட்சியமைப்பு மற்றும் கதையின் மையக் கருத்து ஆகியவை கவனத்தை ஈர்த்துள்ளன.
மொத்தத்தில், திரையரங்கு வெளியீட்டுக்கு முன்பே Netflix ஒப்பந்தம் கிடைத்திருப்பது, “கான் சிட்டி” படத்தின் வணிக மதிப்பையும், ரசிகர்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்பையும் மேலும் உயர்த்தியுள்ளது. குடும்பம், நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸி கலந்த இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளது.
‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் ‘அன்பே டயானா’ திரைப்படம் தற்போது இசை உலகில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பெரம்பூர் கானா’ சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
சத்யா கரிகாலன் மற்றும் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ள இந்தப் படத்தில், ‘ஜமா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன் கதாநாயகனாக மட்டுமல்லாமல், கதை, திரைக்கதை, இயக்கம் ஆகிய மூன்றையும் கவனித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார்.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம், ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற தனித்துவமான கதைகளைக் கொண்ட வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, தனது 7-வது தயாரிப்பாக ‘அன்பே டயானா’யை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் பரத் சங்கர் அமைத்துள்ள உற்சாகமான இசையில், ஜாஸி கிஃப்ட் பாடியுள்ள ‘பெரம்பூர் கானா’ பாடல், பெயருக்கேற்றபடி சென்னை பெரம்பூர் பகுதியின் தனித்துவமான வாழ்க்கை முறை, கலகலப்பான சூழல் மற்றும் மக்களின் இயல்பான உணர்வுகளை உயிரோட்டமாக திரையில் கொண்டு வந்துள்ளது.
இந்தப் பாடலில் பாரி இளவழகன் தனது நடனத்தால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். ரம்யா ரங்கநாதனும் உற்சாகமாக இணைந்து ஆடி பாடலை மேலும் ஜாலியான அனுபவமாக மாற்றுகிறார். அதோடு, மேக்கிங் வீடியோவில் ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை ரோஜாவின் க்யூட் ரியாக்ஷன்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
‘பெரம்பூர் கானா’ பாடல், லோக்கல் பீட்ஸ், வண்ணமயமான காட்சிகள் மற்றும் இளமை கொண்டாட்டம் ஆகியவற்றின் கலவையாக அமைந்து, மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் உருவாகியுள்ளது. இது ஒரு சாதாரண பாடலாக இல்லாமல், ஒரு குறிப்பிட்ட பகுதியின் கலாச்சார அடையாளத்தையும் வெளிப்படுத்துகிறது.
இந்தப் படத்தில் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை ஷெல்லி கேலிஸ்ட் கவனித்துள்ள நிலையில், படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டுள்ளார். கலை இயக்கத்தை மகேந்திரன் செய்துள்ளார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர்.
‘அன்பே டயானா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. கோடை கால வெளியீடாக தயாராகி வரும் இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்
ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் என். யோகேஸ்வரன் மற்றும் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் இணைந்து தயாரிக்க, ‘காளிதாஸ்’ வெற்றிப்படத்தைத் தந்த ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “காளிதாஸ் 2”.
இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது
இந்நிகழ்வினில்..,
தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் செந்தில் பேசியதாவது..,
இங்கு வருகை தந்துள்ள அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், தென்னக மாவட்டங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கும், பத்திரிகை, ஒளிக்காட்சி மற்றும் இணையதள ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்கள் நிறுவனத்தின் முதல் திரைப்படம். இந்தப் படத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. நீங்கள் தரும் ஆதரவும், வெளிச்சமும் இந்தப் படத்தை இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இங்கு வந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. வணக்கம்.
யோகேஷ்வரன் பேசியதாவது..,
என்னோட பெயர் யோகேஷ். இந்தப் படத்தில் நான் பெரிய பங்கு எடுத்துக் கொள்ளவில்லை. இந்தப் படத்துக்காக உண்மையாகக் கஷ்டப்பட்டவர்கள் செந்தில் சார் மற்றும் நாராயணசாமி சார். அவர் என்னோட அப்பா. மேடைக்கு வரச் சொன்னாலும் வரமாட்டார்; என்னைத் தான் அனுப்பிவைத்தார். முதலில், இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த ஆடியோ லாஞ்ச் விழாவை பெரிய அளவில் சிறப்பாக மாற்றியதற்கு எல்லாருக்கும் ரொம்ப நன்றி. பல நாளாக ஒரு நல்ல அறிமுகத்திற்காக காத்திருக்கிறோம். அது கண்டிப்பாக நல்ல தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். பரத் சார் இந்தப் படத்துக்கு ஒரு பெரிய பலமாக இருக்கிறார். இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல வரவாக இருக்கும். இயக்குநர் சார் இந்தப் படத்தை மிகவும் அழகாக எடுத்திருக்கிறார். தயாரிப்பாளரும் மிகவும் நம்பிக்கையுடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்துக்கு கண்டிப்பாக பெரிய வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன். நன்றி.
பா ரஞ்சித் பேசியதாவது..,
செந்தில் சாருக்கும், நாராயணசாமி அண்ணாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். சமீபமாக அவர்கள் என் நண்பர்கள் வட்டத்தில் இன்னும் நெருக்கமாக இணைந்து, என்கூட நிறைய விஷயங்களைப் பகிர்ந்து, சினிமா குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அவர்களுடன் சேர்ந்து இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இருக்கிறது. நண்பர்களாக மட்டும் இல்லாமல், சினிமாவைப் பற்றி தீவிரமாக சிந்திக்கும் மனிதர்களாக அவர்கள் என்னோடு இணைந்திருப்பது மிகவும் சந்தோஷம் தருகிறது.
நான் இந்தப் படத்தை பார்த்துவிட்டேன். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், இது மிகவும் interesting-ஆன ஒரு film. இந்தப் படத்தில் நடித்திருந்த அனைவரும் மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். குறிப்பாக மூன்று பெண் கதாபாத்திரங்களும் — சங்கீதா மேம், பவானி, அபர்ணா — மூவரும் மிகவும் அருமையாக நடித்திருந்தார்கள். பரத் சாரும் ரொம்ப நன்றாக நடித்திருந்தார்.
இது ஒரு ரொம்ப நல்ல க்ரைம் திரில்லர். கதை சொல்லப்பட்ட விதம், மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு சிறிய உள்ளடக்கத்தைக் கொண்டு, இயக்குநர், தயாரிப்பாளர்கள், மற்றும் தொழில்நுட்பக் குழு எல்லோரும் சேர்ந்து அதை மிகவும் தெளிவாகவும் வலுவாகவும் மக்களிடம் கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்கள். அந்த முயற்சி இந்தப் படத்திலும் நிச்சயமாக பலிக்கும் என்று நான் நம்புகிறேன். அஜய் கார்த்திக், உங்களுடைய நடிப்பு, லுக், எல்லாமே நன்றாக இருந்தது. கண்டிப்பாக உங்களுக்கு ஒரு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
சாம் சி.எஸ். அவர்களின் பின்னணி இசை இந்தப் படத்துக்கு ஒரு பெரிய தூணாக இருந்தது. படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை, அவர் பயன்படுத்திய சவுண்ட் டிசைன் மற்றும் இசை நம்மை கதைக்குள் பிடித்துக் கொண்டு போகிறது. ஒரு க்ரைம் திரில்லருக்கு இது மிகப் பெரிய பலம். இந்தப் படம் அந்த வகையில் நல்ல ஒரு வெற்றிப்படமாக அமையும் என்று நான் நம்புகிறேன்.
சமீபத்தில் சில சிறிய படங்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று, தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கின்றன. முன்னாடி இப்படி நடக்கும் என்று எல்லோருக்கும் எப்போதும் நம்பிக்கை இருக்காது. ஒரு படம் நல்ல படம் என்று நம்புவோம்; ஆனால் அதற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்க மாட்டோம். இப்போது அந்த நிலை மாறிக் கொண்டு வருகிறது. அது உண்மையிலேயே மகிழ்ச்சி தருகிறது. அந்த நம்பிக்கை ‘காளிதாஸ் 2’-க்கும் தொடர வேண்டும். இந்தப் படம் நிச்சயமாக பெரிய வெற்றி அடையும் என்று நான் மனதார நம்புகிறேன். எல்லாருக்கும் என் வாழ்த்துகள். மகிழ்ச்சி. நன்றி.”
இயமைசைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது…
“முதலில் இந்த வாய்ப்புக்காக என் மனமார்ந்த நன்றி. இன்று இந்த மேடையிலேயே ஒரு நல்ல பாஸிடிவ் உணர்வு இருக்கிறது. எல்லோரும் மனதார வாழ்த்துவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ‘காளிதாஸ்’ முதல் பாகத்திலிருந்தே இயக்குநர் இந்தக் கதையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். ஒரு விசாரணைத் திரில்லரை புதிதாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லுவது எளிதல்ல. ஆனால் இந்தப் படத்தில் கதை, திரைக்கதை, திருப்பங்கள் எல்லாமே நன்றாக அமைந்திருக்கிறது. நான் சின்ன படம், பெரிய படம் என்று பார்க்க மாட்டேன். நல்ல படம் என்றால் போதும். இந்தப் படமும் அப்படிப்பட்ட ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இதில் நடித்திருக்கும் அனைவரும் ரொம்ப நன்றாக நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் வேலை செய்தது எனக்கு மகிழ்ச்சி. எனக்கு துணையாக இருந்த என் இசைக் குழுவினருக்கும், பாடகர்களுக்கும், பாடலாசிரியருக்கும், ஒலி கலவை செய்த குழுவினருக்கும் என் நன்றி. பரத் சார் இந்தப் படத்தில் மிகுந்த உழைப்பு கொடுத்திருக்கிறார். அது திரையில் தெளிவாகத் தெரியும். அவருடன் பணியாற்றியது சந்தோஷம். சங்கீதா மேம் உட்பட இதில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இப்போது மக்கள் பெரிய ஹீரோ இருக்கிறாரா என்று மட்டும் பார்க்காமல், படம் நல்லா இருக்கா என்று பார்க்கிறார்கள். அந்த வகையில் இந்தப் படம் கண்டிப்பாக மக்களிடம் சேரும். எல்லோரும் திரையரங்கில் வந்து இந்தப் படத்தைப் பாருங்கள். இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும். நன்றி. வணக்கம்.”
நடிகை அபர்ணதி பேசியதாவது..,
முதலில் பழனி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படம் உங்கள் வழியாகத் தான் ஆரம்பமானது. இயக்குநர் செந்தில் சாருக்கும், ஃபைவ் ஸ்டார் செந்தில் புரொடக்ஷனுக்கும் என் நன்றிகள். அஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நேரில் பார்க்கிற அஜய்யும், திரையில் பார்க்கிற அஜய்யும் முற்றிலும் வேறு. அந்த மாற்றம் ரொம்ப நன்றாக இருந்தது. பரத் சார், உங்களுக்கு வாழ்த்துகள். சங்கீதா மேம், மீண்டும் தமிழில் ‘காளிதாஸ் 2’ மூலம் வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. உங்களுடன் வேலை செய்தது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
‘காளிதாஸ் 2’, முதல் பாகத்தை விட இன்னும் அதிகமாக மக்களோடு இணையும் என்று நான் நம்புகிறேன். இது முழுக்க முழுக்க த்ரில்லும் சஸ்பென்ஸும் நிறைந்த படம். என்ன நடக்கப் போகிறது என்று யூகிக்க முடியாத அளவுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். அதனால், இந்தப் படத்தை எல்லாரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படம் அனைவருக்கும் நிச்சயமாகப் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.
நடிகை பவானி பேசியதாவது..,
முதலில் செந்தில் சாருக்கு நன்றி. இந்தக் கதாபாத்திரத்துக்கு என்னை நம்பி அழைத்ததோடு மட்டும் இல்லாமல், அதை நம்பிக்கையோடு செய்யும் தைரியத்தையும் எனக்கு கொடுத்தார். அதற்காக ரொம்ப நன்றி சார். பரத் சார் மிக அனுபவம் வாய்ந்த நடிகர். அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிந்தது. சங்கீதா மேமுடன் வேலை செய்த அனுபவமும் ரொம்ப இனிமையானது. அஜயும் நானும் ஒரே நடிப்பு வகுப்பில் படித்தவர்கள். அவர் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார் என்பது எனக்கு ரொம்ப சந்தோஷம். அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.
சாம் சி.எஸ். சார் இந்தப் படத்திற்கு பின்னணி இசையால் பெரிய பலம் சேர்த்திருக்கிறார். ஒளிப்பதிவாளரும் இந்தப் படத்தை மிக அழகாகக் காட்டியிருக்கிறார். பிரகாஷ் ராஜ் சார், கிஷோர் சார் போன்ற மூத்த நடிகர்களுடன் வேலை செய்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்று நீங்கள் தரும் ஆதரவைப் பார்த்து எங்களுக்கு ரொம்ப நம்பிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த ஆதரவு படம் வெளியான பிறகும் தொடரும் என்று நம்புகிறோம். மிக்க நன்றி.
நடிகை சங்கீதா பேசியதாவது..,
இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு, எனக்கு மிகவும் பிடித்த தமிழில் ஒரு படத்தில் நடித்து, அதன் வெளியீட்டு விழாவில் இருப்பது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. இதை இன்னும் நம்பிக்கையோடு உணர்ந்து கொண்டிருக்கிறேன். முதலில் இயக்குநர் செந்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என்னை நம்பி இந்தக் கதையைச் சொல்லி, எனக்கு மிகவும் பிடித்த இந்தத் துறைக்குள் மீண்டும் அழைத்ததற்கு ரொம்ப நன்றி. அதேபோல், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான செந்தில் சாருக்கும் என் வாழ்த்துகள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இதன் பிறகும் இன்னும் பல நல்ல படங்களை உருவாக்க வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன்.
‘காளிதாஸ் 2’ படக்குழுவில் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இரவு நேரப் படப்பிடிப்புகள் அதிகமாக இருந்தாலும், முழுக் குழுவும் மிகுந்த உற்சாகத்தோடும் அர்ப்பணிப்போடும் வேலை செய்தார்கள். அந்த ஆற்றல் எங்களுக்கும் உற்சாகம் கொடுத்தது. பரத் உடன் வேலை செய்த அனுபவம் ரொம்ப இனிமையானது. மிகவும் எளிமையான, அன்பான, மரியாதையான மனிதர். அவருடன் வேலை செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி இருந்தது.
அஜய் மிகவும் மென்மையான மனிதர். ஆனால் திரையில் அப்படியே மாறி நிற்கிறார். மிக நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பவானி மிகவும் நெகிழ்ச்சியான நடிகை. கேமரா முன் வந்தவுடன் முழு கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். அபர்ணதியும் மிகவும் இனிய குணம் கொண்டவர். அவர்களுடன் வேலை செய்த அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது. சாம் அவர்களின் இசையுடன் இந்தப் படத்தில் இணைந்தது எனக்கு ஒரு கூடுதல் மகிழ்ச்சி.
இந்தப் படம் நிச்சயமாக திரையரங்கில் பார்க்க வேண்டிய ஒரு அனுபவம் தரும் படம் என்று நான் முழு நம்பிக்கையோடு சொல்கிறேன். அதனால், அனைவரும் திரையரங்கில் சென்று இந்தப் படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
நடிகர் அஜய் கார்த்திக் பேசியதாவது…,
“இந்த சிறப்பான விழாவை இவ்வளவு அழகாக மாற்றிய பத்திரிக்கை, ஊடக நண்பர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த மேடையில் நான் ஒரு நடிகராக மட்டும் இல்லாமல், சினிமாவை காதலிக்கும் ஒருவராக நிற்கிறேன். இந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்க காரணமான எங்கள் தயாரிப்பாளர் பழனி அண்ணாவுக்கும், என்னை நம்பி இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் செந்தில் சாருக்கும் என் மனமார்ந்த நன்றி.
செந்தில் சார் மிகவும் திட்டமிட்டு, தெளிவான கண்ணோட்டத்துடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். அந்த உழைப்பின் பலன்தான் இன்று இந்த மேடை. இந்தப் படத்தில் என்னை ஒரு பகுதியாக இணைத்ததற்கு ரொம்ப நன்றி சார். தயாரிப்பாளர்களான செந்தில் சார், டாக்டர் யோகேஷ்வரன், நாராயணசாமி அங்கிள் — உங்களுடைய முழு ஆதரவால்தான் இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக உருவாக முடிந்தது. அதற்காக ரொம்ப நன்றி.
எங்கள் ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., பாடலாசிரியர் மற்றும் எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. குறிப்பாக சாம் சி.எஸ். சார் இசையால் இந்தப் படம் இன்னும் சிறப்பாக உயர்ந்திருக்கிறது.
பரத் அண்ணா, உங்களுடன் வேலை செய்தது எனக்கு ஒரு பெரிய அனுபவம். நீங்கள் கொடுத்த ஆதரவும் ஊக்கமும் எனக்கு மிகவும் முக்கியமானது. பவானி, சங்கீதா மேம், அபர்ணதி, துரை அண்ணா, ஆனந்த், குழந்தை நட்சத்திரங்கள் — அனைவருடனும் வேலை செய்த அனுபவம் எனக்கு ரொம்ப இனிமையானது. என் அப்பாவுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஒரு பெரிய நன்றி. இந்த இரண்டு ஆண்டுகளில் நான் கொடுத்த தொந்தரவுகளையும் பதட்டங்களையும் பொறுமையுடன் தாங்கியதற்கு மனமார்ந்த நன்றி.
இந்தப் படத்துக்கு நீங்கள் தரும் அன்பும் ஆதரவும் தொடர வேண்டும். ‘காளிதாஸ் 2’ படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரவு தாருங்கள். மிக்க நன்றி.
இயக்குநர் ஸ்ரீசெந்தில் பேசியதாவது..,
முதலில் இந்த மேடையை இவ்வளவு அழகாக அமைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. ஆரம்பத்தில் நான் சும்மா நன்றி சொல்லிட்டு போயிடலாம் என்று நினைத்தேன். ஆனால் இந்த ‘காளிதாஸ் 2’ பயணம் ஒரு சாதாரண பயணம் இல்லை. அது ஒரு நீண்ட, உணர்ச்சியான, நம்பிக்கையோடும் போராட்டத்தோடும் வந்த பயணம்.
‘காளிதாஸ்’ முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு, பெரிய வாய்ப்புகளும் பெரிய நடிகர்களோடு வேலை செய்யும் சந்தர்ப்பங்களும் வந்தன. அப்படிச் செல்லும் நேரத்தில் பல சூழல்கள் மாறின. அப்போது எனக்கு ஒரு முக்கியமான விஷயம் புரிந்தது — பெரிய படம் பண்ணணுமா என்பதற்கும் மேலாக, நல்ல படம் பண்ணணும் என்பதுதான் முக்கியம். அந்த எண்ணத்தில்தான் ‘காளிதாஸ் 2’ தொடங்கியது.
இந்தப் பயணத்தை ஆரம்பிக்க வைத்த பழனி அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி. அதன்பிறகு இந்தப் படத்துக்கு மிகப் பெரிய நம்பிக்கையையும் வலிமையையும் கொடுத்தவர்கள் செந்தில் சார், நாராயணசாமி சார். நான் ஒரு நல்ல படமாக நினைத்ததை, அவர்கள் பெரிய அளவிலான படமாக மாற்றி நிறுத்தியிருக்கிறார்கள். படம் திரைக்கு வரும் போது அதன் அளவும் உழைப்பும் எல்லோருக்கும் தெரியும். அஜயை இந்தப் படத்தில் கொண்டு வந்த தருணமும் இந்த
பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!
நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா, “முதல் முதலாய்” என்ற இன்டி மியூசிக் வீடியோ ஆல்பம் மூலம் தனது கலை பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த ஆல்பத்தில் அவர் நடனமும் நடிப்பும் செய்து கவனம் பெற்றுள்ளார்.
இந்த பாடலை ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் எழுதி இசையமைத்துள்ளார். பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் பாடியுள்ளார். ரிஷி தேவாவுடன் நடிகை கைரா இணைந்து நடித்தும், நடனமாடியும் உள்ளார். மெலோடி மற்றும் ராப் கலந்த இந்த பாடலில், ராப் பகுதியை ஆதித்யா பாடியுள்ளார்.
இந்த பாடலில் காதல், இனிமையான நினைவுகள் மற்றும் இளமை உணர்வுகள் அழகாக சொல்லப்பட்டுள்ளதால், ரசிகர்கள் இதை விரும்பி வருகிறார்கள்.
இந்த பாடலை ட்ரஸ்டினா ஐசக் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவை ஆர்.பி. குருதேவ் செய்துள்ளார். நடனத்தை சுரேன் அமைத்துள்ளார். ரிஷி தேவா மற்றும் கைராவின் ஸ்டைல், நடனம் ஆகியவை இளமை உணர்வுடன் இருப்பதால், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ரிஷி தேவா – ஜி.வி. பிரகாஷ் குமார் – ரவிச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியில் உருவான “முதல் முதலாய்” ஆல்பம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், பிரபுதேவா நடனமாடி பிரபலமான “சிக்கு புக்கு ரயிலே” பாடலை சிறுவயதில் ஜி.வி. பிரகாஷ் குமார் பாடியிருந்தார். அதேபோல், இப்போது பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் இந்த ஆல்பத்தையும் அவர் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
“முதல் முதலாய்” பாடலை சரிகமா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
- உலக செய்திகள்
- |
- சினிமா













