சற்று முன்

‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!   |    தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!   |    'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு   |    ‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!   |    ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!   |    தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா   |    பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |    “It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு   |    ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீட்டு தேதி போஸ்டருடன்  அறிவிப்பு   |    சசிகுமார் மக்கள்மீது வைத்த நம்பிக்கை தான் ‘மை லார்ட்’ வெற்றியின் காரணம்!   |    வெற்றி நடிக்கும் ஆக்சன் திரில்லர் ‘பிளாக் கோல்டு’ படப்பிடிப்பு நிறைவு!   |    வெற்றிமாறன் வெளியிட்ட ‘அண்டர் 18’ டைட்டில் லுக் – சமூக யதார்த்தத்தை பேசும் புதிய முயற்சி!   |    ‘ஹாட்ஸ்பாட் 2’ வெற்றி கொண்டாட்டம், இயக்குநருக்கு சொகுசு கார்!   |    “நேர்மையான செய்திகளில்தான் நம்பிக்கை” – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு   |    ‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு துவக்கம், சிவராத்திரி நாளில் பிரம்மாண்ட பூஜை!   |    ‘ஜாக்கி’ நான்கு வார வெற்றி!, மதுரையின் மண் மணத்தை கொண்டாடும் டாக்டர் பிரகபல் படைப்பு   |    ‘வித் லவ்’ வெற்றி கொண்டாட்டம், முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற படக்குழு!   |    விஜய் சேதுபதியுடன் தியாகராஜன் குமாரராஜா மீண்டும் இணைவு! ‘பாக்கெட் நாவல்’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்   |   

சினிமா செய்திகள்

தனுஷ் பாரட்டியது எனக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது போல் இருக்கிறது!
Updated on : 30 March 2021

தமிழ் திரையுலகில் நம்பிக்கை தரும் நகைச்சுவை நடிகராக முன்னேறி வருபவர் திருச்சி சரவணக்குமார் என்கிற டிஎஸ்கே.. சின்னத்திரையில் வளர்ந்து வந்த நேரத்தில், தமன்னா நடித்த காமெடி ஹாரர் படமான பெட்ரோமாக்ஸ் படம் மூலம் லைம்லைட்டுக்குள் வந்தார் டி.எஸ்.கே.  தற்போது ஜி.வி.பிரகாஷ்-சரத்குமார் காம்பினேஷனில் அடங்காதே, சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவாவுடன் ஒரு படம், ராட்சசன் படத்தை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் ராஜசரவணன் என்பவர் இயக்கும் படம் என அரை டஜன் படங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார்.



 



இந்தநிலையில் எதிர்பாராத சர்ப்ரைஸாக நடிகர் தனுஷிடம் இருந்து டிஎஸ்கேவுக்கு அழைப்பு வந்தது. இன்னும் அதுகுறித்த பிரமிப்பு மாறாத நிலையில் இதுபற்றி டி.எஸ்.கே. கூறும்போது, “சூப்பர்குட் பிலிம்ஸ் படத்தில் ஜீவாவுடன் நடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென ஒருநாள் அண்ணன் ரோபோ சங்கரிடம் இருந்து போன் வந்தது. அப்போது அருகில் தனுஷ் இருப்பதாகவும் அவர் உன்னுடன் பேச விரும்புகிறார் என்றும் கூறினார் ரோபோ சங்கர். என்னால் நம்பவே முடியவில்லை. அடுத்து பேசிய தனுஷ், என்னுடைய நிகழ்ச்சிகள், நடிப்பு என அனைத்தையும் தொடர்ந்து கவனித்து வருவதாகவும் ரொம்பவே பாசிடிவாக இருப்பதாகவும் தனக்கு பிடித்திருப்பதாகவும் கூறி ஊக்கப்படுத்தினார். மேலும் எனது குடும்பத்தில் உள்ளவர்கள் பற்றியும் அன்புடன் விசாரித்தார். அதுமட்டுமல்ல விரைவில் நாம் நேரில் சந்திப்போம் என்றும் கூறினார். 



 





 



தேசிய விருது பெற்ற நடிகரான அவர் என்னை அழைத்து பேசியதே, எனக்கு ஆஸ்கர் விருது கிடைத்து போல இருக்கிறது. இப்படி எளிமையான மனிதராக இருப்பதால் தான் அவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கிறார் தனுஷ். இந்த உரையாடல் அவர் தனது ஹாலிவுட் படத்திற்காக வெளிநாடு செல்வதற்கு சில தினங்களுக்கு முன் நடந்தது. இந்தநிலையில் அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்த இன்னொரு செய்தியும் எனது சந்தோஷத்தை இரட்டிப்பாக்கி உள்ளது. அவர் வெளிநாட்டில் இருந்து திரும்பிவந்ததும் அவரை நேரில் சந்தித்து பேச இருக்கிறேன்” என கூறுகிறார் டி.எஸ்.கே அநேகமாக கூடிய விரைவில் தனுஷ் படத்தில் டி.எஸ்.கே. நடிக்கிறார் என அறிவிப்பு வந்தாலும் அதுகுறித்து ஆச்சர்யப்பட தேவையில்லை.



 



இந்த மகிழ்ச்சியுடன் தற்போது இன்னொரு கவுரவமும் டி.எஸ்.கேவை தேடி வந்துள்ளது. ஆம்.. சர்வதேச தமிழ் பல்கலை கழகம் டி.எஸ்.கேவுக்கும் அவரது நண்பரான நடிகர் அசாருக்கும் சிறந்த சமூக செயல்பாட்டாளர் என்கிற பிரிவில் டாக்டரேட் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. 



 





 



ஒரு நடிகர் என்பதை தாண்டி சமூக செயல்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருபவர் தான் டி.எஸ்.கே.. குறிப்பாக சென்னை வெள்ளம், வர்தா மற்றும் கஜா புயல் தாக்குதல் போன்ற பேரிடர் காலகட்டங்களில் தனது நண்பர்கள் வட்டாரத்தை ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகளை செய்துள்ளார் டி.எஸ்.கே.. 



 



தற்போது டாக்டரேட் பட்டம் பெற்றது குறித்து அவர் கூறும்போது, “எனது சமூக சேவைக்கான ஒரு அங்கீகாரமாகத்தான் இதை கருதுகிறேன். முன்பை விட இன்னும் சமூகத்தின் மீதான பொறுப்பு அதிகரித்துள்ளது” என  பெருமிதத்துடன் கூறுகிறார் டி.எஸ்.கே.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா