சற்று முன்

'இனிமேல்' ஆல்பம் ரிலீஸில் கைதி 2 அப்டேட் தெரிவித்த லோகேஷ் கனகராஜ்   |    இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகி வருகிறது 'ஆபிரகாம் ஓஸ்லர்'!   |    அறிமுக இயக்குநர் செல்வ குமார் திருமாறன் இயக்கும் அற்புதமான ஃபீல் குட் எண்டர்டெயினர் படம்!   |    தனது அடுத்த முயற்சியாக திரைப்பட தயாரிப்பில் களமிறங்கும் Behindwoods   |    டிரெய்லர் வெளியானபோதே திரையுலகிலிருந்து, பலர் போன் செய்து திட்டினார்கள் - நடிகர் கலையரசன்   |    பாலாஜி தேர்ந்த அரசியல்வாதி அளவு, மிக தேர்ச்சிபெற்ற பேச்சாளர் - நடிகர் ஜெகன்   |    பெரும் மகிழ்ச்சியில் இயக்குநர் ராஜேஷ்.M !!   |    பன்முகத் திறமையின் உருவகம், ஈடு இணையற்ற மனிதர் ஃபஹத் ஃபாசில் - எஸ்.எஸ்.கார்த்திகேயா   |    திகில் நாடகத் தொடரான இன்ஸ்பெக்டர் ரிஷியின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டது   |    மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட 'திருட்டு பாடம்' டீஸர்   |    காடு எனக்குக் கடவுளை விட மிகவும் பிடிக்கும் - நடிகை ஆண்ட்ரியா   |    பழிவாங்குதலின் பரிமாணங்களைப் புதிய திரை அனுபவமாக உணரும் வகையில் 'கங்கணம்'   |    நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது   |    திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற 'பைக் டாக்சி' பூஜை!   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள RKFI   |    இயற்கையின் ஆசியில் திகட்டாத காதல் காவியமாக உருவாகும் 'ஆலன்'   |    ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இல் இடம்பெற்ற முதுகுத்தண்டை சில்லிடச்செய்யும் இசை தொகுப்பு வெளியானது   |    திகில் நிறைந்த க்ரைம் டிராமா “இன்ஸ்பெக்டர் ரிஷி” அமேசான் பிரைமில் வெளியாகிறது   |    ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு முதலிடம்!   |    யுடியுபரக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்ட ‘96’ பட இயக்குநர் பிரேம் குமார்   |   

சினிமா செய்திகள்

இன்று அதிரடி நாயகனாக அனைத்து மக்களாலும் விரும்பப்படும் இவர் யார் என்று தெரிகிறதா?
Updated on : 07 March 2021

அசாத்தியங்களை சாத்தியங்களாக்கும் மனிதன்...விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு முக்கியமான சான்றாக இருப்பவர்களில் இவரும் ஒருவர். இந்த படம் எடுக்கும் போது வயது 15,ஒன்பதாம் வகுப்பு மாணவன். பாரத சாரண சாரணியர் இயக்கத்தில் முனைப்போடு செயல்பட்டு அணித்தலைவராக கோலோச்சிய காலகட்டமது.



 



எப்போதுமே இருக்குமிடத்தில் தான் முன் வரிசையில் நிற்க வேண்டும்.தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் இருந்திருக்கிறது. அதன் காரணமாகவே பள்ளியில் படிப்பிலும் சரி விளையாட்டு போட்டிகளிலும், பேச்சிலும் சரி அனைத்திலுமே முதல் மாணவனாக திகழ்ந்து வந்திருக்கிறார் இந்த சிறுவன். 



 





சென்னை ராயபுரத்தில் டான்பாஸ்கோ ஆரம்பப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பை முடித்துவிட்டு, ராயபுரம் கே.சி.சங்கரலிங்கம் நாடார் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை படித்து வந்த காலகட்டம் மிக முக்கியமானதாக இவருக்கு அமைந்திருக்கிறது.



 



 ஆம்! தலைமைப் பண்பும் ஆளுமைப் பண்பும், அசாத்திய திறமையும் கொண்ட இந்த மாணவன் ஆசிரியர்களின் செல்லப் பிள்ளையாய் வலம் வந்திருக்கிறார். ஒரு காலகட்டத்தில் இவரது செயல்பாடுகளை உற்று கவனித்த தலைமை ஆசிரியர்,மற்ற ஆசிரியர்கள் முன்னிலையில் இந்த மாணவனை அழைத்து நீ படித்து முடித்து என்னவாக மாறுவதற்கு ஆசைப்படுகிறாய் என்று கேட்டிருக்கிறார். அப்போது சிறுவன் சொன்ன பதில்தான் அனைவரையும் ஆச்சர்யத்தில் உறைய வைத்தது.



 



" நான் அரசியல்வாதியாக மாறப் போகிறேன், மக்களுக்காக  சேவை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்" என்று பளிச்சென இந்த மாணவன் சொன்ன பதில் ஆசிரியர்களை ஆச்சரியப்பட வைத்தது. இந்த  பதில் வித்தியாசமான கோணத்தில் இருந்தாலும் கூட அன்று யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை,அந்த நம்பிக்கையும் யாருக்கும் வரவில்லை. (சிறுவன் இந்த பதில் சொல்வதற்கு இன்னொரு காரணம் இருந்திருக்கிறது. அண்ணாதுரை ஆட்சிக் காலத்தில் இவரது அப்பா துரைராஜ் மாநகராட்சி கவுன்சிலராக இருந்துள்ளார். அப்பாவின் மக்கள் சேவையே பார்த்து அரசியல் எண்ணம் இவரது மனதில் விழுந்ததால் இந்த பதிலை பளிச்சென சொல்லி இருக்கலாம்).



 



ஆனால் கல்லூரி முடித்து கொஞ்சம் கொஞ்சமாக அரசியலுக்குள் நுழைய ஆரம்பித்து இன்றைக்கு அதிரடி நாயகனாக அனைத்து மக்களாலும் விரும்பப்படும் மிகச் சிறந்த ஆளுமையாக உருவெடுத்து நிற்கிறார் இந்த படத்தில் நீங்கள் பார்க்கும் சிறுவன்...



 



அவர் தாம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற மாபெரும் இயக்கத்தில் எம்ஜிஆர் காலம், ஜெயலலிதா காலம், இன்றைய எடப்பாடி பழனிச்சாமி காலம் வரையிலும் அனைவராலும் அடையாளப்படுத்தப்பட்ட ஆகச் சிறந்த ஆளுமையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். காரணம் என்னவென்றால் எல்லோரிடமும் எளிமையாகப் பழகும் பண்பும்,உதவும் மனமும் தான் அவரை இந்த இடத்தில் வந்து அமர வைத்திருக்கிறது.



 



 இத்தனை ஆண்டுகள் மிகப்பெரிய இடத்தில் அரசியல் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது என்பது எளிதான விஷயமல்ல. அத்தனைக்கும் காரணம் இந்த படத்தில் இருக்கும் சிறுவன் அன்று தன் ஆசிரியரிடம் சொன்ன மக்களுக்கு சேவை செய்ய ஆசைப்படுகிறேன் வார்த்தைகளை வாழ்க்கையாக மாற்றியதால் இந்த இடத்தில் இன்னமும் வெற்றிக் கொடி நாட்டி வருகிறார்....



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா