சற்று முன்

மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |    தூய்மை பணியாளர் பத்மாவுக்கு பார்த்திபன் வழங்கிய மரியாதை!   |    அரசியல் அல்ல, முழு எண்டர்டெய்னர் - ‘லீடர்’ குறித்து லெஜெண்ட் சரவணன் விளக்கம்   |    Fire Fox Film House தயாரிப்பில் புதிய போலீஸ் லவ் கமர்ஷியல் படம், படப்பிடிப்பு தொடக்கம்!   |    ராம் சரண்–புச்சி பாபு சானா கூட்டணியில் ‘பெத்தி’, ஏப்ரல் 30 உலகளாவிய திரையரங்கு வெளியீடு!   |    'பராசக்தி' ZEE5-ல், பிப்ரவரி 7 முதல் உலகளாவிய டிஜிட்டல் வெளியீடு!   |    கனவே வில்லனாகும் காதல் பயணம் – ‘ட்ரீம் கேர்ள்’ குறித்து இயக்குநர் எம்.ஆர். பாரதி   |    லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ நிழல் உலகமும் காவல் துறையும் மோதும் மாஸ் ஆக்ஷன் திரில்லர்!   |    “சாத்தியமற்றதை மேடையில் சாத்தியமாக்கிய முரளிதரன்” - இயக்குநர் K. பாக்யராஜ்   |    எல்லைகளை கடந்த மாஸ் - ஜப்பானில் ‘புஷ்பா 2’ 14 நாளில் ரூ.6.1 கோடி வசூல்!   |    Hotstar Specials-ஆக ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'லக்கி' திரைப்படம் JioHotstar-ல்   |    விஜய் அரசியல் குறித்த அனு மோகன் கருத்துகள் தனிப்பட்டவை - ‘ரெட் லேபிள்’ தயாரிப்பாளர் விளக்கம்!   |    மீண்டும் திரையரங்குகளில் STR-ன் ‘சிலம்பாட்டம்’!   |    ‘பள்ளிச்சட்டம்பி’யில் விண்டேஜ் லுக்கில் கயாடு லோஹர் கேரக்டர் போஸ்டர் வெளியீடு!   |    சென்னைக் கடற்கரையில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ‘வித் லவ்’ படக்குழுவினர்!   |   

சினிமா செய்திகள்

ராணா டக்குபட்டி மற்றும் விஷ்ணு விஷால் நடிக்கும் 'காடன்' படத்தின் ட்ரைலர் இன்று வெளியீடு
Updated on : 03 March 2021

ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், பிரபு சாலமனின் இயக்கத்தில் ராணா டக்குபட்டி மற்றும் விஷ்ணு விஷால் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம். 



 



காட்டை மையமாகக் கொண்ட இப்படத்தின் டிரைலர், உலக வன உயிரனங்கள் தினமான இன்று (மார்ச் 3) வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் ‘ஆரண்யா’ என்ற பெயரிலும், இந்தியில் ‘ஹாத்தி மேரே சாத்தி’ எனும் பெயரிலும் உருவாகியிருக்கும்



 



இத்திரைப்படத்தில், ஷிரியா பில்கவுன்கர் மற்றும் ஜோயா ஹுசைன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.



 





மூன்று மொழிகளிலும் கதாநாயகனாக ராணா நடிக்க, தமிழ் மற்றும் தெலுங்கில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷாலும், இந்தியில் புல்கிட் சாம்ராட்டும் நடிக்கின்றனர். மேலும், உன்னி எனும் யானை சிறப்பு வேடத்தில் தோன்றுகிறது.



 



மேலும் இந்த படத்தில் அனந்த் மகாதேவன், ரகு பாபு, ரவி காலே,

ஸ்ரீநாத், ஆகாஷ், சம்பத் ராம், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். 



 



ஒளிப்பதிவு அசோக் குமார் ராஜி, படத்தொகுப்பு புவன், சண்டைக் காட்சிகள் ஸ்டன் சிவா, ஸ்டன்னர் சாம், இசை சாந்தனு மோயித்ரா.



 



 ‘காடன்’ திரைப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று சென்னையில் வெளியிட்டுள்ளது. டிரைலரை வெளியிட்ட கையோடு ஹைதராபாத்துக்கு பறந்த படக்குழுவினர், அங்கு தெலுங்கு டிரைலரை வெளியிட்டனர். இரு நிகழ்ச்சிகளும் கொவிட் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டன. இந்தி ரசிகர்களுக்காக காணொலி மூலம் பத்திரிகையாளர் சந்திப்பு நாளை (மார்ச் 4) நடைபெறவுள்ளது. இவ்வாறாக, 24 மணி நேரத்தில் மூன்று நிகழ்ச்சிகள் என படக்குழுவினர் பரபரப்புக் குழுவாக மாறியுள்ளனர்.



 



“காடன் காட்டைப் பற்றிய கதை என்பதால், அதன் டிரைலரை வெளியிடுவதற்கு உலக வன உயிரனங்கள் தினம் பொருத்தமாக இருக்கும் என்று கருதினோம். மும்மொழி ரசிகர்களையும் இப்படம் கவரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை,” என்று அவர்கள் தெரிவித்தனர்.



 





வன சூழலியலைக் காப்பாற்றுவதற்காக தனது வாழ்க்கையில் பெரும்பகுதியை காட்டிலேயே செலவழிக்கும் ஒருவரைப் பற்றிய கதை தான் காடன். ‘பாகுபலி’ மற்றும் ‘தி காஜி அட்டாக்’ஆகிய மும்மொழி திரைப்படங்களுக்கு பிறகு, ராணாவின் மூன்றாவது மும்மொழி படம் இதுவாகும். மார்ச் 26-ம் தேதி இப்படத்தை வெளியிட  திட்டமிடப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா