சற்று முன்

'டெக்ஸாஸ் டைகர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!   |    எனக்குத் தெரிந்த சென்னையை, அதன் வாழ்க்கையை இதில் கொண்டு வந்துள்ளோம் - வினீத் வரபிரசாத்   |    தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண்   |    #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் வெளியானது!   |    கவிஞர் சினேகனின் கனவும், உருக்கமான சொற்பொழிவும்!   |    காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்தின் வெளியீடு!   |    மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பு 'நிர்வாகம் பொறுப்பல்ல'   |    ஃபைனலி பாரத் மற்றும் ஷான்வி மேக்னா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட 'வித் லவ்' ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர்!   |    'அமரன்' படத்தை தேர்வு செய்த IFFI 2025-இன் இந்தியன் பனோரமா!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகும் ‘ஸ்டீபன்’ திரைப்படம்   |    நவம்பர் மாதம் திரைக்கு வரும் 'சாவு வீடு'   |    ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார்!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார்!   |    பல அவமானங்களை, நிராகரிப்புகளை இந்த பறை இசையால் சந்தித்துள்ளோம் - கலைமாமணி முனுசாமி   |    ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!   |    அதிர்ச்சிகரமான திரில்லர் சீரிஸ் ‘ரேகை' ZEE5ல்   |    நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்தார்   |    தற்போதுள்ள வாழ்க்கை நெறிமுறையை யதார்த்தமான காட்டும் திரைப்படம் 'ராட்ட'   |    தமன் அமைத்த அதிரடி தாளங்களுடன் 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது!   |   

சினிமா செய்திகள்

பிரபு இராமானுஜம் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் 'சினிமா கனவுகள்'
Updated on : 26 February 2021

பகவதி பாலா, மீரா, ஸ்ரீஜா சரவணன், கிங்காங், வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், போண்டாமணி. பவர் ஸ்டார் சீனிவாசன், அம்பானி சங்கர். சாவித்திரி, கண்ணன், ஸ்ரீலட்சுமி, ரஞ்சன், கலைவாணி இன்னும் பலர் நடித்துள்ளனர்.



 



 



இந்தப் படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி தயாரித்து இயக்கி உள்ள பிரபு இராமானுஜம் கதையைப் பற்றி கூறும் பொழுது, "  சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற கனவில் பல வருடங்களாக முயற்சித்துக் கொண்டிருக்கும் நாயகன் சரவணனனுக்கு தயாரிப்பாளர் ஒருவர் கிடைத்தார். அவரிடம் தன் கிராமத்தில் நடந்த உண்மை நிகழ்வை கதையாக சரவணன் கூற தயாரிப்பாளருக்கு கதை பிடித்து போகிறது. உடனடியாக படப்பிடிப்பும் துவங்கியது. படமும் திரைக்கு வர ரெடியானது. இந்த நிலையில் தயாரிப்பாளரின் மகள் மீரா இயக்குனர் சரவணனிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறாள். அந்த காதலை ஏற்க சரவணன் மறுக்கிறான். அதன் பிறகு அவள் செய்த காரியத்தை பார்த்து சரவணன் அதிர்ச்சி அடைகிறான்.



 



 



அதன் பிறகு என்ன நடந்தது? அவன் இயக்கிய படம் வெளிவந்ததா? சரவணன் என்ன ஆனான்? இப்படி பல முடிச்சுகளுக்கு சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து படத்தை இயக்கி உள்ளேன்" என்று முடித்தார். இவர் ஏற்கனவே " காதல் பதிவு" மற்றும் "நந்திவரம்" ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.



 



 



ஆகாஷ் ஸ்ரீதர் இசையையும், திவாகர் எடிட்டிங்கையும் , பவர் சிவா நடனத்தையும், ஏ.எஸ்.உதயசங்கர் ஒளிப்பதிவையும், கமுதி நாகலிங்கம், லாயம் ஷாகுல், தங்கமணி ராகவா மூவரும் பாடல்களையும் ., கலைவாணி இணைத்தயாரிப்பையும் கவனித்துள்ளனர்.கதை திரைக்கதை வசனம் இயக்கம் பிரபு இராமானுஜம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா