சற்று முன்

டீசர் வெளியீட்டில் கவனம் ஈர்த்த ‘காதல் ரீசெட் ரிபீட்’ – மார்ச் 6 உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    ‘நாக பந்தம்’ டீசர் வெளியீடு: மகா சிவராத்திரியில் தொடங்கிய காவியப் பயணம்   |    இன்றைய தலைமுறைக்கான பாடல் எழுதுவது எனக்கு பெருமை - இயக்குநர் சரண்   |    10 ஆண்டுகளாக சமூகத்தின் குரலாக ஒலிக்கும் ‘விசாரணை’   |    ராஜூமுருகன் – சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’க்கு 2டி என்டர்டெயின்மென்ட் ஆதரவு!   |    என்கவுண்டர் போலீஸின் உள்ளக போராட்டம் – இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’!   |    985ஆம் ஆண்டு பின்னணியில் பிரம்மாண்டமாக உருவான ‘சுயம்பு’!   |    16 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அர்த்தம் புரிந்தது! – மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்   |    டீசர் வரும்முன்னே ₹225 கோடி ஒப்பந்தம் – உலக வெளியீட்டுக்கு தயாராகும் யாஷின் ‘டாக்ஸிக்’!   |    உலகையே ஆட்டம் போட வைத்த ‘Yethu’ – பிரபுதேவா & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!   |    மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |   

சினிமா செய்திகள்

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த 'செந்தூரப்பூவே' தர்ஷாகுப்தா - ஆனந்த கண்ணீர் விட்ட ரசிகர்கள்!
Updated on : 25 February 2021

"குக்வித்கோமாளி" நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பாமர மக்கள் வரை சென்று சேர்ந்தவர் தர்ஷாகுப்தா. மெகாஹிட் திரைப்படமான "திரொளபதி" படத்தின் இயக்குனர் மோகன் ஜியின் அடுத்த படமான "ருத்ர தாண்டவம்" படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் தர்ஷாகுப்தா. இப்போதே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு கோடம்பாக்கத்தில் கூடியிருக்கிறது.



 



ஸ்லிம் நயன்தாரா தர்ஷாகுப்தா இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோயர்ஸ் வந்ததை தொடர்ந்து, தனது ரசிகர்களை சந்திக்க நினைத்தார். 



 



சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் தனது ரசிர்களோடு இந்த மகிழ்ச்சியை கொண்டாட விரும்பினார். மதுரை, கன்யாகுமாரி, திருச்சி, கோயமுத்தூர் என பல ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் சென்னை வந்தனர்.  300 க்கும் மேற்பட்ட ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் உரையாடி விருந்தும் சாப்பிட்டார். இந்தியாவில் ஒரு நடிகை தனது ஷோஷியல் மீடியா ரசிகர்களை சந்திப்பது, இதுவே முதல் முறையென்று நினைக்கிறோம். 



 



 



       



ரசிர்கள் கொடுத்த கிப்ட், பூங்கொத்துகளை பெற்றுக்கொண்ட தர்ஷாகுப்தா, ரசிகர்கள் கேட்ட பல்வேறு வகையான கிடுக்குப்பிடி கேள்விகளுக்கும் ரசித்துக்கொண்டே சாதுர்யமாக பதில் கூறினார்.



 



தர்ஷா குப்தா பேசும் போது எனக்கு 1 மில்லியன் பாலோயர்ஸ் வர நீங்கள் மட்டும் தான் காரணம். எனக்கு குடும்பம் என்பதே நீங்கள் தான். அதனால் தான் இந்த நிகழ்வை உங்களோடு கொண்டாட விரும்பினேன் என்று கூறினார். 



 



ரசிகர்களின் குடும்பத்தாரோடு வீடியோ காலில் பேசிய போது, உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள் நெகிழ்ந்து போனார்கள். சிலரால் ஆனந்த கண்ணீரை அடக்க முடியவில்லை. 



 





 



தற்போது ஸ்லிம் நயன்தாரா தர்ஷாகுப்தா மிகப்பெரிய பேனர் ஒன்றில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா