சற்று முன்

இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |    'டியூட்' ல் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டதும் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் - சரத்குமார்   |    புதிய சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தும், 'அசுர ஆகமனா' (Asura Aagamana) சிறு முன்னோட்டம்!   |    சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ” நேரடியாக OTT யில்   |    ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்த 'உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்'!   |    தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |   

சினிமா செய்திகள்

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த 'செந்தூரப்பூவே' தர்ஷாகுப்தா - ஆனந்த கண்ணீர் விட்ட ரசிகர்கள்!
Updated on : 25 February 2021

"குக்வித்கோமாளி" நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பாமர மக்கள் வரை சென்று சேர்ந்தவர் தர்ஷாகுப்தா. மெகாஹிட் திரைப்படமான "திரொளபதி" படத்தின் இயக்குனர் மோகன் ஜியின் அடுத்த படமான "ருத்ர தாண்டவம்" படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் தர்ஷாகுப்தா. இப்போதே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு கோடம்பாக்கத்தில் கூடியிருக்கிறது.



 



ஸ்லிம் நயன்தாரா தர்ஷாகுப்தா இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோயர்ஸ் வந்ததை தொடர்ந்து, தனது ரசிகர்களை சந்திக்க நினைத்தார். 



 



சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் தனது ரசிர்களோடு இந்த மகிழ்ச்சியை கொண்டாட விரும்பினார். மதுரை, கன்யாகுமாரி, திருச்சி, கோயமுத்தூர் என பல ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் சென்னை வந்தனர்.  300 க்கும் மேற்பட்ட ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் உரையாடி விருந்தும் சாப்பிட்டார். இந்தியாவில் ஒரு நடிகை தனது ஷோஷியல் மீடியா ரசிகர்களை சந்திப்பது, இதுவே முதல் முறையென்று நினைக்கிறோம். 



 



 



       



ரசிர்கள் கொடுத்த கிப்ட், பூங்கொத்துகளை பெற்றுக்கொண்ட தர்ஷாகுப்தா, ரசிகர்கள் கேட்ட பல்வேறு வகையான கிடுக்குப்பிடி கேள்விகளுக்கும் ரசித்துக்கொண்டே சாதுர்யமாக பதில் கூறினார்.



 



தர்ஷா குப்தா பேசும் போது எனக்கு 1 மில்லியன் பாலோயர்ஸ் வர நீங்கள் மட்டும் தான் காரணம். எனக்கு குடும்பம் என்பதே நீங்கள் தான். அதனால் தான் இந்த நிகழ்வை உங்களோடு கொண்டாட விரும்பினேன் என்று கூறினார். 



 



ரசிகர்களின் குடும்பத்தாரோடு வீடியோ காலில் பேசிய போது, உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள் நெகிழ்ந்து போனார்கள். சிலரால் ஆனந்த கண்ணீரை அடக்க முடியவில்லை. 



 





 



தற்போது ஸ்லிம் நயன்தாரா தர்ஷாகுப்தா மிகப்பெரிய பேனர் ஒன்றில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வரும்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா