சற்று முன்

அம்மா மீது வைக்கப்படும் ப்ராமிஸ் மிக மதிப்புள்ளது! - இயக்குநர் அருண்குமார் சேகரன்   |    'சிறை' பட சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது!   |    ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் உருவாகிவரும் ‘பெத்தி’ பட ஆக்சன் காட்சிகள்!   |    துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான 'ஐ அம் கேம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட படப்பிடிப்பு நிறைவு பெற்றது!   |    சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் தடகள போட்டி இன்று துவங்கியது!   |    56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) வில் தேர்வு செய்யப்பட்ட 'லால் சலாம்'   |    நெட்ஃபிலிக்ஸ்-ல் வெளியான 'ஸ்டீபன்' படத்தின் புதிய டிரெய்லர்!   |    அர்ஜூன் தாஸின் 'சூப்பர் ஹீரோ' மற்றும் ஃபைனலி பாரத்தின் 'நிஞ்சா' படங்கள் டைட்டில் அறிமுகம்!   |    'திரௌபதி 2' படத்தில் திரௌபதி தேவியாக நடிக்கும் ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 பிரமாண்டமாக தொடங்கியது!   |    அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!   |    'ரிவால்வர் ரீட்டா' திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில்!   |    கோவா திரைப்பட விழாவில் பாராட்டுப்பெற்ற ஆநிரை குறும்படம்!   |    'டெக்ஸாஸ் டைகர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!   |    எனக்குத் தெரிந்த சென்னையை, அதன் வாழ்க்கையை இதில் கொண்டு வந்துள்ளோம் - வினீத் வரபிரசாத்   |    தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண்   |    #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் வெளியானது!   |    கவிஞர் சினேகனின் கனவும், உருக்கமான சொற்பொழிவும்!   |    காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்தின் வெளியீடு!   |   

சினிமா செய்திகள்

இளம் நடிகைக்கு மாலில் நேர்ந்த கொடுமை!
Updated on : 18 December 2020

மலையாளத்தில் சூப்பர் ஹிட் படம் ’ஹெலன்’. இந்த படம் தமிழிலும் விரைவில் ரீமேக் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடித்ததன் மூலம் மலையாளத் திரையுலகில் புகழ் பெற்றவர் அன்னா பென். இவர் சமீபத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,



 



கேரளாவில் உள்ள மால் ஒன்றுக்கு சென்று இருந்தபோது மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த நேரத்தில் இரண்டு பேர் என்னை கடந்து சென்றபோது அதில் ஒருவர் என் பின் பக்கத்தில் கை வைத்து விட்டு சென்றார். அதற்கு நான் உடனே எதிர்வினையாற்ற முயன்றேன். ஒருவேளை தெரியாமல் பட்டிருக்குமோ என்று விட்டு விட்டேன். ஆனால் யோசித்துப் பார்த்தபோது அது திட்டமிட்டு செய்ததாகவே தெரிகிறது.



 



அது மட்டுமின்றி அந்த இரண்டு இளைஞர்கள் மாலில் நான் செல்லும் இடங்களில் எல்லாம் பின் தொடர்ந்து வந்தனர். என் அம்மா என்னை நோக்கி வந்ததை பார்த்ததும் தான் அவர்கள் விலகிவிட்டார்கள். இந்த நேரத்தில் அவர்களை பற்றி சொல்வதற்கு ஆயிரம் வார்த்தைகள் இருக்கிறது. எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இவ்வாறு அவர்கள் செய்வது பார்க்கும்போது ஆத்திரமாக வருகிறது.



 



ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளியே செல்லும் போது பெண்கள் அனைவரும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டி உள்ளது வெளியே செல்லும் என்னுடைய அம்மா தங்கை தோழிகள் குறித்து நான் கவலைப்படுகிறேன். தவறான எண்ணம் கொண்ட ஆண்கள், பெண்களின் பாதுகாப்பை பறித்துக் கொள்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை என்றால் இதேபோல் மீண்டும் மீண்டும் நடக்கும் என்பதால் சொல்கிறேன்.



 



இவ்வாறு தவறு செய்தவரின் கன்னத்தில் ஓங்கி அறைய எனக்கு தைரியம் இல்லை என்றாலும் தைரியமுள்ள பெண்கள் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார். இந்த பதிவிற்கு ஏராளமான ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா