சற்று முன்

சிறை ஒரு நிறைவான அனுபவம்! - தயாரிப்பாளர் SS லலித் குமார்   |    உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கிறிஸ்துமஸ் வெளியீடாக ‘மிஷன் சாண்டா’   |    குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய திரைப்படம்   |    வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணியின் பிரம்மாண்ட அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது!   |    ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பம்   |    'வித் லவ்' படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் ரொமான்ஸ் மெலடி பாடல்!   |    மோகன்லாலின் ‘விருஷபா’ பட பாடலை, கர்நாடக துணை முதல்வர் வெளியிட்டார்!   |    யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உபேந்திராவிற்கு நான் வாய்ப்பு தரவில்லை, அவர்தான் எனக்கு பிரேக் தந்தார் - நடிகர் சிவராஜ்குமார்   |    டிசம்பர் 24 முதல் ZEE5-ல் 'மிடில் கிளாஸ்'!   |    'தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்' என்பது ஒரு விழா மட்டும் அல்ல — இது கதைகள் வாழ்க்கையாக மாறும் இடம்   |    ஆகவே எனக்கு படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும் - விக்ரம் பிரபு   |    கிரிக்கெட் பின்னணியில் அமைக்கப்பட்ட ‘LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ அறிமுக புரோமோ வெளியானது!   |    சிறந்த திரைப்பட விருதை வென்ற ராமின் ‘பறந்து போ’   |    'கொம்பு சீவி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது   |    ‘ஐ அம் கேம்’ படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு நேரில் வந்த பார்வையிட்ட மெகாஸ்டார் மம்மூட்டி!   |    யுவன் சங்கர் ராஜாவின் குரலால் மனதை வருடும் 'சிறை' படத்தின் இரண்டாவது சிங்கிள்!   |    1960 காலகட்டத்தில் மீண்டும் வாழ்ந்து விட்டு வந்தது போல் இருக்கிறது - இயக்குநர் சுதா கொங்கரா   |    ரிவெஞ்ச் திரில்லராக உருவாகி வரும் 'ரேஜ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது!   |    ரொமான்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் 'டியர் ரதி'!   |   

சினிமா செய்திகள்

இளம் நடிகைக்கு மாலில் நேர்ந்த கொடுமை!
Updated on : 18 December 2020

மலையாளத்தில் சூப்பர் ஹிட் படம் ’ஹெலன்’. இந்த படம் தமிழிலும் விரைவில் ரீமேக் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடித்ததன் மூலம் மலையாளத் திரையுலகில் புகழ் பெற்றவர் அன்னா பென். இவர் சமீபத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,



 



கேரளாவில் உள்ள மால் ஒன்றுக்கு சென்று இருந்தபோது மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த நேரத்தில் இரண்டு பேர் என்னை கடந்து சென்றபோது அதில் ஒருவர் என் பின் பக்கத்தில் கை வைத்து விட்டு சென்றார். அதற்கு நான் உடனே எதிர்வினையாற்ற முயன்றேன். ஒருவேளை தெரியாமல் பட்டிருக்குமோ என்று விட்டு விட்டேன். ஆனால் யோசித்துப் பார்த்தபோது அது திட்டமிட்டு செய்ததாகவே தெரிகிறது.



 



அது மட்டுமின்றி அந்த இரண்டு இளைஞர்கள் மாலில் நான் செல்லும் இடங்களில் எல்லாம் பின் தொடர்ந்து வந்தனர். என் அம்மா என்னை நோக்கி வந்ததை பார்த்ததும் தான் அவர்கள் விலகிவிட்டார்கள். இந்த நேரத்தில் அவர்களை பற்றி சொல்வதற்கு ஆயிரம் வார்த்தைகள் இருக்கிறது. எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இவ்வாறு அவர்கள் செய்வது பார்க்கும்போது ஆத்திரமாக வருகிறது.



 



ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளியே செல்லும் போது பெண்கள் அனைவரும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டி உள்ளது வெளியே செல்லும் என்னுடைய அம்மா தங்கை தோழிகள் குறித்து நான் கவலைப்படுகிறேன். தவறான எண்ணம் கொண்ட ஆண்கள், பெண்களின் பாதுகாப்பை பறித்துக் கொள்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை என்றால் இதேபோல் மீண்டும் மீண்டும் நடக்கும் என்பதால் சொல்கிறேன்.



 



இவ்வாறு தவறு செய்தவரின் கன்னத்தில் ஓங்கி அறைய எனக்கு தைரியம் இல்லை என்றாலும் தைரியமுள்ள பெண்கள் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார். இந்த பதிவிற்கு ஏராளமான ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா