சற்று முன்

கனவே வில்லனாகும் காதல் பயணம் – ‘ட்ரீம் கேர்ள்’ குறித்து இயக்குநர் எம்.ஆர். பாரதி   |    லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ நிழல் உலகமும் காவல் துறையும் மோதும் மாஸ் ஆக்ஷன் திரில்லர்!   |    “சாத்தியமற்றதை மேடையில் சாத்தியமாக்கிய முரளிதரன்” - இயக்குநர் K. பாக்யராஜ்   |    எல்லைகளை கடந்த மாஸ் - ஜப்பானில் ‘புஷ்பா 2’ 14 நாளில் ரூ.6.1 கோடி வசூல்!   |    Hotstar Specials-ஆக ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'லக்கி' திரைப்படம் JioHotstar-ல்   |    விஜய் அரசியல் குறித்த அனு மோகன் கருத்துகள் தனிப்பட்டவை - ‘ரெட் லேபிள்’ தயாரிப்பாளர் விளக்கம்!   |    மீண்டும் திரையரங்குகளில் STR-ன் ‘சிலம்பாட்டம்’!   |    ‘பள்ளிச்சட்டம்பி’யில் விண்டேஜ் லுக்கில் கயாடு லோஹர் கேரக்டர் போஸ்டர் வெளியீடு!   |    சென்னைக் கடற்கரையில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ‘வித் லவ்’ படக்குழுவினர்!   |    சசிகுமாரின் ‘மை லார்ட்’ அதிகாரம், அன்பு, அரசியல் நையாண்டி கலந்து பிப்ரவரி 13 முதல் திரையில்!   |    அக்கு சிகிச்சையின் மகத்துவத்தைப் பேசும் சீனு ராமசாமி   |    'ஜீவாவின் கம்பேக் வெற்றி' - வெற்றி விழாவில் நடிகர் மகிழ்ச்சி!   |    படப்பிடிப்புக்கு முன்பே நடிகர் ஏகன் படத்திற்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்!   |    அரசியல் சூழலுக்கு ஏற்ற வகையில் 4K டால்பி ஒலியுடன் மீண்டும் வெளியாகும் ‘அமைதிப்படை’   |    ‘நீ நடி கண்ணா’ என்ற ஒரு வார்த்தை என் பயங்களை உடைத்தது – நடிகர் அபிஷந்த் ஜீவிந்த்   |    மெகா ஸ்டார் குடும்பத்தில் இரட்டிப்பு சந்தோஷம், ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சி அலை!   |    25 ஆண்டுகளுக்குப் பின் மூவர் கூட்டணி, ‘பேங் பேங்’ டைட்டில் டீசர் வெளியீடு!   |    ‘புரியாத புதிர்’க்கு மாநில அங்கீகாரம், சாம் CS-க்கு தமிழக அரசு சிறந்த இசையமைப்பாளர் விருது!   |    மகேஷ் பாபு–SS ராஜமௌலி கூட்டணியின் அடுத்த மாபெரும் திரில்லர் “வாரணாசி”   |    ஜென்-ஜி காதல் கதை “வித் லவ்” – அட்லீவின் வாழ்த்துடன் ட்ரெய்லர் வெளியீடு!   |   

சினிமா செய்திகள்

சித்ரா தற்கொலைக்கு காரணம் பிரபல தொகுப்பாளரா?
Updated on : 18 December 2020

தொலைக்காட்சி தொகுப்பாளினியும் நடிகையுமான சித்ரா கடந்த 9 ஆம் தேதி அதிகாலை தான் தங்கியிருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரது தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், சித்ராவின் கணவர் கொடுத்த டார்ச்சரால் தான் அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, சித்ராவின் கணவர் ஹேம்நாத்தையும் கைது செய்துள்ளது.



 



தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹேம்நாத்திடம் ஸ்ரீபெரும்பத்தூர் ஆர்.டி.ஓ 8 மணி நேரம் விசாரணையும் நடத்தியுள்ளார்.



 



இந்த நிலையில், சித்ரா தற்கொலை வழக்கில் பிரபல தொகுப்பாளரின் பெயரும் அடிபடுகிறது. சித்ராவுடன் டேட்டிங் சென்ற தொகுப்பாளர், அவரை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்ததாக தகவல் ஒன்று பரவி வருகிறது. ஆனால், அதை மறுத்திருக்கும் அந்த தொகுப்பாளர், தான் கஷ்ட்டப்பட்டு உழைத்து தான் பணம் சம்பாதித்து வருகிறேன், என்று விளக்கம் அளித்திருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.



 



அதே சமயம், சித்ராவின் கணவர் ஹேம்நாத்தின் பெற்றோர், சித்ரா சமீபத்தில் ஆடம்பர வீடு ஒன்றை கட்டினார். கூடவே சொகுசு கார் ஒன்றையும் வாங்கினார். இதனால் ஏற்பட்ட கடனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்துக் கொண்டிருப்பார். அத்தகைய கோணத்திலும் போலீசார் விசாரிக்க வேண்டும். ஆனால், வேறு யாரையோ காப்பாற்றுவதற்காக தங்களது மகனை அவசர அவசரமாக கைது செய்துள்ளனர், என்று கூறியுள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா