சற்று முன்

பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 47'   |    மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர்!   |    முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்!   |    20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள 'நாகபந்தம்' கிளைமேக்ஸ்   |    ’அகண்டா 2’ நம் இனத்திற்கும் கலாச்சாரத்திற்குமான வெற்றி - நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா   |    சென்னையில் கிறிஸ்தவர்கள் நடத்தும் மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க உச்சி மாநாடு!   |    மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை JioStar Leadership குழுவினர் சந்தித்தனர்!   |    மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர் சி வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார்.   |    எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன்!   |    அம்மா மீது வைக்கப்படும் ப்ராமிஸ் மிக மதிப்புள்ளது! - இயக்குநர் அருண்குமார் சேகரன்   |    'சிறை' பட சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது!   |    ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் உருவாகிவரும் ‘பெத்தி’ பட ஆக்சன் காட்சிகள்!   |    துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான 'ஐ அம் கேம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட படப்பிடிப்பு நிறைவு பெற்றது!   |    சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் தடகள போட்டி இன்று துவங்கியது!   |    56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) வில் தேர்வு செய்யப்பட்ட 'லால் சலாம்'   |    நெட்ஃபிலிக்ஸ்-ல் வெளியான 'ஸ்டீபன்' படத்தின் புதிய டிரெய்லர்!   |    அர்ஜூன் தாஸின் 'சூப்பர் ஹீரோ' மற்றும் ஃபைனலி பாரத்தின் 'நிஞ்சா' படங்கள் டைட்டில் அறிமுகம்!   |    'திரௌபதி 2' படத்தில் திரௌபதி தேவியாக நடிக்கும் ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 பிரமாண்டமாக தொடங்கியது!   |   

சினிமா செய்திகள்

சித்ரா தற்கொலைக்கு காரணம் பிரபல தொகுப்பாளரா?
Updated on : 18 December 2020

தொலைக்காட்சி தொகுப்பாளினியும் நடிகையுமான சித்ரா கடந்த 9 ஆம் தேதி அதிகாலை தான் தங்கியிருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரது தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், சித்ராவின் கணவர் கொடுத்த டார்ச்சரால் தான் அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, சித்ராவின் கணவர் ஹேம்நாத்தையும் கைது செய்துள்ளது.



 



தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹேம்நாத்திடம் ஸ்ரீபெரும்பத்தூர் ஆர்.டி.ஓ 8 மணி நேரம் விசாரணையும் நடத்தியுள்ளார்.



 



இந்த நிலையில், சித்ரா தற்கொலை வழக்கில் பிரபல தொகுப்பாளரின் பெயரும் அடிபடுகிறது. சித்ராவுடன் டேட்டிங் சென்ற தொகுப்பாளர், அவரை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்ததாக தகவல் ஒன்று பரவி வருகிறது. ஆனால், அதை மறுத்திருக்கும் அந்த தொகுப்பாளர், தான் கஷ்ட்டப்பட்டு உழைத்து தான் பணம் சம்பாதித்து வருகிறேன், என்று விளக்கம் அளித்திருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.



 



அதே சமயம், சித்ராவின் கணவர் ஹேம்நாத்தின் பெற்றோர், சித்ரா சமீபத்தில் ஆடம்பர வீடு ஒன்றை கட்டினார். கூடவே சொகுசு கார் ஒன்றையும் வாங்கினார். இதனால் ஏற்பட்ட கடனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்துக் கொண்டிருப்பார். அத்தகைய கோணத்திலும் போலீசார் விசாரிக்க வேண்டும். ஆனால், வேறு யாரையோ காப்பாற்றுவதற்காக தங்களது மகனை அவசர அவசரமாக கைது செய்துள்ளனர், என்று கூறியுள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா