சற்று முன்

சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |   

சினிமா செய்திகள்

சித்ரா தற்கொலைக்கு காரணம் பிரபல தொகுப்பாளரா?
Updated on : 18 December 2020

தொலைக்காட்சி தொகுப்பாளினியும் நடிகையுமான சித்ரா கடந்த 9 ஆம் தேதி அதிகாலை தான் தங்கியிருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரது தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், சித்ராவின் கணவர் கொடுத்த டார்ச்சரால் தான் அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, சித்ராவின் கணவர் ஹேம்நாத்தையும் கைது செய்துள்ளது.



 



தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹேம்நாத்திடம் ஸ்ரீபெரும்பத்தூர் ஆர்.டி.ஓ 8 மணி நேரம் விசாரணையும் நடத்தியுள்ளார்.



 



இந்த நிலையில், சித்ரா தற்கொலை வழக்கில் பிரபல தொகுப்பாளரின் பெயரும் அடிபடுகிறது. சித்ராவுடன் டேட்டிங் சென்ற தொகுப்பாளர், அவரை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்ததாக தகவல் ஒன்று பரவி வருகிறது. ஆனால், அதை மறுத்திருக்கும் அந்த தொகுப்பாளர், தான் கஷ்ட்டப்பட்டு உழைத்து தான் பணம் சம்பாதித்து வருகிறேன், என்று விளக்கம் அளித்திருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.



 



அதே சமயம், சித்ராவின் கணவர் ஹேம்நாத்தின் பெற்றோர், சித்ரா சமீபத்தில் ஆடம்பர வீடு ஒன்றை கட்டினார். கூடவே சொகுசு கார் ஒன்றையும் வாங்கினார். இதனால் ஏற்பட்ட கடனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்துக் கொண்டிருப்பார். அத்தகைய கோணத்திலும் போலீசார் விசாரிக்க வேண்டும். ஆனால், வேறு யாரையோ காப்பாற்றுவதற்காக தங்களது மகனை அவசர அவசரமாக கைது செய்துள்ளனர், என்று கூறியுள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா