சற்று முன்

'டெக்ஸாஸ் டைகர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!   |    எனக்குத் தெரிந்த சென்னையை, அதன் வாழ்க்கையை இதில் கொண்டு வந்துள்ளோம் - வினீத் வரபிரசாத்   |    தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண்   |    #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் வெளியானது!   |    கவிஞர் சினேகனின் கனவும், உருக்கமான சொற்பொழிவும்!   |    காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்தின் வெளியீடு!   |    மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பு 'நிர்வாகம் பொறுப்பல்ல'   |    ஃபைனலி பாரத் மற்றும் ஷான்வி மேக்னா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட 'வித் லவ்' ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர்!   |    'அமரன்' படத்தை தேர்வு செய்த IFFI 2025-இன் இந்தியன் பனோரமா!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகும் ‘ஸ்டீபன்’ திரைப்படம்   |    நவம்பர் மாதம் திரைக்கு வரும் 'சாவு வீடு'   |    ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார்!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார்!   |    பல அவமானங்களை, நிராகரிப்புகளை இந்த பறை இசையால் சந்தித்துள்ளோம் - கலைமாமணி முனுசாமி   |    ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!   |    அதிர்ச்சிகரமான திரில்லர் சீரிஸ் ‘ரேகை' ZEE5ல்   |    நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்தார்   |    தற்போதுள்ள வாழ்க்கை நெறிமுறையை யதார்த்தமான காட்டும் திரைப்படம் 'ராட்ட'   |    தமன் அமைத்த அதிரடி தாளங்களுடன் 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது!   |   

சினிமா செய்திகள்

சித்ரா தற்கொலைக்கு காரணம் பிரபல தொகுப்பாளரா?
Updated on : 18 December 2020

தொலைக்காட்சி தொகுப்பாளினியும் நடிகையுமான சித்ரா கடந்த 9 ஆம் தேதி அதிகாலை தான் தங்கியிருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரது தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், சித்ராவின் கணவர் கொடுத்த டார்ச்சரால் தான் அவர் தற்கொலை செய்துக் கொண்டதாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, சித்ராவின் கணவர் ஹேம்நாத்தையும் கைது செய்துள்ளது.



 



தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹேம்நாத்திடம் ஸ்ரீபெரும்பத்தூர் ஆர்.டி.ஓ 8 மணி நேரம் விசாரணையும் நடத்தியுள்ளார்.



 



இந்த நிலையில், சித்ரா தற்கொலை வழக்கில் பிரபல தொகுப்பாளரின் பெயரும் அடிபடுகிறது. சித்ராவுடன் டேட்டிங் சென்ற தொகுப்பாளர், அவரை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்ததாக தகவல் ஒன்று பரவி வருகிறது. ஆனால், அதை மறுத்திருக்கும் அந்த தொகுப்பாளர், தான் கஷ்ட்டப்பட்டு உழைத்து தான் பணம் சம்பாதித்து வருகிறேன், என்று விளக்கம் அளித்திருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.



 



அதே சமயம், சித்ராவின் கணவர் ஹேம்நாத்தின் பெற்றோர், சித்ரா சமீபத்தில் ஆடம்பர வீடு ஒன்றை கட்டினார். கூடவே சொகுசு கார் ஒன்றையும் வாங்கினார். இதனால் ஏற்பட்ட கடனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்துக் கொண்டிருப்பார். அத்தகைய கோணத்திலும் போலீசார் விசாரிக்க வேண்டும். ஆனால், வேறு யாரையோ காப்பாற்றுவதற்காக தங்களது மகனை அவசர அவசரமாக கைது செய்துள்ளனர், என்று கூறியுள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா