சற்று முன்

'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |   

சினிமா செய்திகள்

கொரோனாவால் பிரபல நடிகை மரணம்
Updated on : 07 December 2020

இந்தியாவின் புதிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல், மாநிலம் அளவிலும் கொரோனாவில் தாக்கம் குறைந்து வருகிறது. சென்னையிலும் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருவதால், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.



 



இதற்கிடையே, தமிழகத்தில் முக்கிய பிரமுகர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரபல சீரியல் நடிகையான கெளசல்யா செந்தாமரை, ‘அன்பே வா’ சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், தமிழக காங்கிரஸ் தலைவரும் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.



 



இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இந்தி சீரியல் இளம் நடிகை ஒருவர், இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 



’யா ரிஷ்தா கியா கேக்லதா ஹய்’, ‘தேரா யார் ஹூன் மெயின்’ உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் திவ்யா பட்நாகர். 34 வயதாகும் இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.



 



Divya Bhatnagar



 



இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திவ்யா பட்நாகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரது உடல் நிலை கவலைக்கிடமானது. அதனால், அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார்.



 



இளம் நடிகை ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் இந்தி சீரியல் மற்றும் திரையுலகில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா