சற்று முன்

குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |    தூய்மை பணியாளர் பத்மாவுக்கு பார்த்திபன் வழங்கிய மரியாதை!   |    அரசியல் அல்ல, முழு எண்டர்டெய்னர் - ‘லீடர்’ குறித்து லெஜெண்ட் சரவணன் விளக்கம்   |    Fire Fox Film House தயாரிப்பில் புதிய போலீஸ் லவ் கமர்ஷியல் படம், படப்பிடிப்பு தொடக்கம்!   |    ராம் சரண்–புச்சி பாபு சானா கூட்டணியில் ‘பெத்தி’, ஏப்ரல் 30 உலகளாவிய திரையரங்கு வெளியீடு!   |    'பராசக்தி' ZEE5-ல், பிப்ரவரி 7 முதல் உலகளாவிய டிஜிட்டல் வெளியீடு!   |    கனவே வில்லனாகும் காதல் பயணம் – ‘ட்ரீம் கேர்ள்’ குறித்து இயக்குநர் எம்.ஆர். பாரதி   |    லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ நிழல் உலகமும் காவல் துறையும் மோதும் மாஸ் ஆக்ஷன் திரில்லர்!   |    “சாத்தியமற்றதை மேடையில் சாத்தியமாக்கிய முரளிதரன்” - இயக்குநர் K. பாக்யராஜ்   |    எல்லைகளை கடந்த மாஸ் - ஜப்பானில் ‘புஷ்பா 2’ 14 நாளில் ரூ.6.1 கோடி வசூல்!   |    Hotstar Specials-ஆக ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'லக்கி' திரைப்படம் JioHotstar-ல்   |    விஜய் அரசியல் குறித்த அனு மோகன் கருத்துகள் தனிப்பட்டவை - ‘ரெட் லேபிள்’ தயாரிப்பாளர் விளக்கம்!   |    மீண்டும் திரையரங்குகளில் STR-ன் ‘சிலம்பாட்டம்’!   |    ‘பள்ளிச்சட்டம்பி’யில் விண்டேஜ் லுக்கில் கயாடு லோஹர் கேரக்டர் போஸ்டர் வெளியீடு!   |    சென்னைக் கடற்கரையில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ‘வித் லவ்’ படக்குழுவினர்!   |    சசிகுமாரின் ‘மை லார்ட்’ அதிகாரம், அன்பு, அரசியல் நையாண்டி கலந்து பிப்ரவரி 13 முதல் திரையில்!   |    அக்கு சிகிச்சையின் மகத்துவத்தைப் பேசும் சீனு ராமசாமி   |    'ஜீவாவின் கம்பேக் வெற்றி' - வெற்றி விழாவில் நடிகர் மகிழ்ச்சி!   |    படப்பிடிப்புக்கு முன்பே நடிகர் ஏகன் படத்திற்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்!   |   

சினிமா செய்திகள்

விஜய்யை நக்கலடித்த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர்
Updated on : 11 May 2020

தளபதி விஜய் கொரோனா தடுப்பு நிதியாக ரூ 1.30 கோடி ரூபாய் நிதியுதவி செய்தார் என்பது தெரிந்ததே அதுமட்டுமின்றி ஊரடங்கு உத்தரவு காரணமாக வறுமையில் வாடும் தனது ரசிகர்களை கண்டறிந்து அவர்களுக்கு தலா 5,000 ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தார் என்பதும், இதன் மூலம் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பலன் அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



 



இந்த நிலையில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, விஜய்யின் நிதியுதவி காலதாமதமானது குறித்த ஒரு கேள்விக்கு பதிலளித்தபோது, ‘வருமான வரித்துறையினர் வாரி சுருட்டி கொண்டு போன பிறகும், அங்கும் இங்கும் சிதறி இருந்த பணத்தை சேர்த்து கொடுப்பதற்கு நேரம் தேவை இல்லையா? என்று பதிலளித்து இருந்தார்.



 



குருமூர்த்தியின் இந்த பதிலுக்கு பெரும்பான்மையோர் கண்டனம் தெரிவித்தனர். பெரிய கோடீஸ்வரர்கள் பலர் ஒரு ரூபாய் கூட கொடுக்காத நிலையில் தன்னுடைய மக்களுக்காக ரூ.1.30 கோடி கொடுத்த விஜய்யை கேலி செய்வதா? என்று விமர்சனங்கள் எழுந்தன.



 





 



இந்த நிலையில் சிம்பு நடித்து வரும் ‘மாநாடு’ படத்தை தயாரித்து வரும் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘அரசியல்வாதிகளை கைக்குள் போட்டு சம்பாதித்ததிலிருந்து இதுவரை கொரானா நிதிக்காக அஞ்சு பைசா கழட்டாத #குருமூர்த்தி .. தன் இக்கட்டையும் கடந்து தளபதி விஜய் நேயமுடன் உதவியதை நக்கலடித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். நிலை பிறழ்ந்த செயல் இது! என்று கூறியுள்ளார். சுரேஷ் காட்சியின் இந்த டுவீட்டுக்கு விஜய் ரசிகர்கள் உள்பட பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா