சற்று முன்

பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |    'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!   |    பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

விஜய்யை நக்கலடித்த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர்
Updated on : 11 May 2020

தளபதி விஜய் கொரோனா தடுப்பு நிதியாக ரூ 1.30 கோடி ரூபாய் நிதியுதவி செய்தார் என்பது தெரிந்ததே அதுமட்டுமின்றி ஊரடங்கு உத்தரவு காரணமாக வறுமையில் வாடும் தனது ரசிகர்களை கண்டறிந்து அவர்களுக்கு தலா 5,000 ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தார் என்பதும், இதன் மூலம் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பலன் அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



 



இந்த நிலையில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, விஜய்யின் நிதியுதவி காலதாமதமானது குறித்த ஒரு கேள்விக்கு பதிலளித்தபோது, ‘வருமான வரித்துறையினர் வாரி சுருட்டி கொண்டு போன பிறகும், அங்கும் இங்கும் சிதறி இருந்த பணத்தை சேர்த்து கொடுப்பதற்கு நேரம் தேவை இல்லையா? என்று பதிலளித்து இருந்தார்.



 



குருமூர்த்தியின் இந்த பதிலுக்கு பெரும்பான்மையோர் கண்டனம் தெரிவித்தனர். பெரிய கோடீஸ்வரர்கள் பலர் ஒரு ரூபாய் கூட கொடுக்காத நிலையில் தன்னுடைய மக்களுக்காக ரூ.1.30 கோடி கொடுத்த விஜய்யை கேலி செய்வதா? என்று விமர்சனங்கள் எழுந்தன.



 





 



இந்த நிலையில் சிம்பு நடித்து வரும் ‘மாநாடு’ படத்தை தயாரித்து வரும் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘அரசியல்வாதிகளை கைக்குள் போட்டு சம்பாதித்ததிலிருந்து இதுவரை கொரானா நிதிக்காக அஞ்சு பைசா கழட்டாத #குருமூர்த்தி .. தன் இக்கட்டையும் கடந்து தளபதி விஜய் நேயமுடன் உதவியதை நக்கலடித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். நிலை பிறழ்ந்த செயல் இது! என்று கூறியுள்ளார். சுரேஷ் காட்சியின் இந்த டுவீட்டுக்கு விஜய் ரசிகர்கள் உள்பட பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா