சற்று முன்

பழிவாங்குதலின் பரிமாணங்களைப் புதிய திரை அனுபவமாக உணரும் வகையில் 'கங்கணம்'   |    நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது   |    திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற 'பைக் டாக்சி' பூஜை!   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள RKFI   |    இயற்கையின் ஆசியில் திகட்டாத காதல் காவியமாக உருவாகும் 'ஆலன்'   |    ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இல் இடம்பெற்ற முதுகுத்தண்டை சில்லிடச்செய்யும் இசை தொகுப்பு வெளியானது   |    திகில் நிறைந்த க்ரைம் டிராமா “இன்ஸ்பெக்டர் ரிஷி” அமேசான் பிரைமில் வெளியாகிறது   |    ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு முதலிடம்!   |    யுடியுபரக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்ட ‘96’ பட இயக்குநர் பிரேம் குமார்   |    'எனக்கொரு wife வேணுமடா' குறும்படத்தை பார்த்து பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்   |    மாரி செல்வராஜ், பா. ரஞ்சித் கூட்டணியில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம்   |    ரஜினிக்கு பில்லா மாதிரி ஜீவிக்கு இந்த படம் - இயக்குநர், நடிகர் சுப்பிரமணிய சிவா   |    கார்த்தியுடன் இணையும் இயக்குநர் நலன் குமாரசாமி!   |    ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கும் #RC16   |    கல்யாணமாகி வந்தா சினிமாவுல சக்ஸஸ் பண்ண முடியாது - பா. இரஞ்சித்   |    ஆர்யாவுடன் பிரபலங்கள் கலந்துகொண்ட ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ திறப்பு விழா!   |    இந்த மாதிரி கதைக்கு ஆர்.கே.சுரேஷ் மாதிரியான ஹீரோதான் வேண்டும் - இயக்குனர் பேரரசு   |    வடமாவட்ட மக்களின் வாழ்வியலை சொல்லும் படம் 'காடுவெட்டி'   |    சீயான் விக்ரமுடன் இணையும் தேசிய விருது பெற்ற மலையாள நடிகர்!   |    சந்தானம் புதிய படத்தின் முதல் பார்வையை கமல்ஹாசன் வெளியிட்டார்   |   

சினிமா செய்திகள்

ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆண்ட்ரியா
Updated on : 11 May 2020

கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஆண்ட்ரியா. கண்ட நாள் முதல் என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் லீடிங்க ரோலில் நடித்தார். தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் ஆண்ட்ரியா.



 



பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியா, சினிமாவில் மட்டுமின்றி மேடை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அண்மையில் புரோக்கன் விங்ஸ் என்ற தலைப்பில் கவிதை வெளியிட்டார் ஆண்ட்ரியா. மேலும் திருமணமான நபர் ஒருவருடன் கொண்ட தொடர்பால் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெரும் பாதிப்புக்கு ஆளானதாகவும் கூறினார்.



 



இதனால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யார் அந்த நபர் என்ற சர்ச்சையும் எழுந்தது. கிட்டதட்ட ஓராண்டாக படங்களில் நடிக்காமல் சிகிச்சை பெற்று வந்த ஆண்ட்ரியா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.



 



விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. கடந்த மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய இந்தப் படம் லாக்டவுனால் இன்னும் ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளது. இந்நிலையில் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது தயாருடன் இருக்கும் போட்டோ ஒன்றை ஷேர் செய்தார்.



 





 



அதில் நேற்று என் அம்மா இந்த போட்டோவை எனக்கு அனுப்பி அன்னையர் தினத்தில் இந்த போட்டோவை நீ போஸ்ட் செய்யலாம், நாம் இருவருமே நல்லா இருக்கோம் என்றார். அதனால் இந்த போட்டோவை நான் இங்கு ஷேர் செய்கிறேன்.



 



சென்டிமென்ட்ஸ்கெல்லாம் நான் ஆளில்லை, ஆனால் எல்லா அம்மாக்களும் ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் அடிக்கடி கொண்டாடப்பட வேண்டியவர்கள். ஆகையால் அன்னையர் தின வாழ்த்துகள் இன்றும் மற்றும் எல்லா நாட்களும் என குறிப்பிட்டுள்ளார்.



 



அனைவரையும் போலவே தனது லாக்டவுன் நாட்களை வீட்டில் கழித்து வருகிறார் ஆண்ட்ரியா. இருப்பினும், அவர் மியூஸிக் மற்றும் குறும்படங்களில் பிஸியாக இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு, அவர் புதிய சிங்கிள் ஒன்றை ரிலீஸ் செய்தார். முன்னதாக லாக் டவுனின் போது, ஆதவ் கண்ணதாசன் இயக்கிய ‘லாக் டவுன்' என்ற குறும்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா