சற்று முன்

'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |   

சினிமா செய்திகள்

நான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம் - பிரபல நடிகையின் சோக கதை
Updated on : 11 May 2020

நடிகர்கள், நடிகைகள் சிலருக்கு திருமணம் காலதாமதமாகவே நடக்கிறது. ஆனால், தற்போதைய சூழலில் நடிகைகள் சில பிஸியாக இருக்கும் போதே திருமணம் செய்துக் கொண்டு தொடர்ந்து கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். ஆனால், சில நடிகைகள் மட்டும் சுமார் 40 வயதுக்கு மேலாகியும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.



 



அந்த வகையில், பிரபல தமிழ் நடிகையான சித்தாரா 47 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். கே.பாலச்சந்தரின் ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சித்தாரா, தொடர்ந்து ‘புரியாத புதிர்’, ‘புது வசந்தம்’, ‘காவல் கீதம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பதோடு, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.



 



தற்போது அம்மா, அக்கா உள்ளிட்ட வேடங்களில் நடித்து வருவதோடு, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வரும் சித்தாரா, 47 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 



இது குறித்து சமீபத்திய பேட்டியில் ஒன்றில் பேசிய சித்தாரா, ”என் வாழ்க்கையில் நான் முக்கிய நபரை இழந்துவிட்டேன். அதனால் தான் திருமணம் வேண்டாம், என்று முடிவு செய்தேன். அதன்படி, இப்போது வரை திருமணம் பற்றி நான் யோசிக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.



 



மேலும், இப்போது திருமணம் செய்துக் கொள்ள வாய்ப்பு வந்தால் திருமணம் செய்துக் கொள்வீர்களா? என்று சித்தாராவிடம் கேட்டதற்கு, “அப்படி ஒரு எண்ணமே எனக்கு இல்லை” என்று பதில் அளித்தவர், வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது, என்றும் தெரிவித்துள்ளார்.



 



சித்தாரா, தனது வாழ்க்கையில் முக்கிய நபரை இழந்துவிட்டதாக கூறியது, அவரது தந்தையை தானாம். அவரது தந்தை இறந்த பிறகு அவர் திருமணம் குறித்து யோசிக்காமல் தனது குடும்பத்தை பற்றி மட்டுமே யோசித்தாராம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா