சற்று முன்

சிறை ஒரு நிறைவான அனுபவம்! - தயாரிப்பாளர் SS லலித் குமார்   |    உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கிறிஸ்துமஸ் வெளியீடாக ‘மிஷன் சாண்டா’   |    குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ், ஆதி சாய்குமார் நடிக்கும் புதிய திரைப்படம்   |    வேல்ஸ் சென்னை கிங்ஸ் அணியின் பிரம்மாண்ட அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது!   |    ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பம்   |    'வித் லவ்' படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் ரொமான்ஸ் மெலடி பாடல்!   |    மோகன்லாலின் ‘விருஷபா’ பட பாடலை, கர்நாடக துணை முதல்வர் வெளியிட்டார்!   |    யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உபேந்திராவிற்கு நான் வாய்ப்பு தரவில்லை, அவர்தான் எனக்கு பிரேக் தந்தார் - நடிகர் சிவராஜ்குமார்   |    டிசம்பர் 24 முதல் ZEE5-ல் 'மிடில் கிளாஸ்'!   |    'தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட்' என்பது ஒரு விழா மட்டும் அல்ல — இது கதைகள் வாழ்க்கையாக மாறும் இடம்   |    ஆகவே எனக்கு படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும் - விக்ரம் பிரபு   |    கிரிக்கெட் பின்னணியில் அமைக்கப்பட்ட ‘LBW – லவ் பியாண்ட் விக்கெட்’ அறிமுக புரோமோ வெளியானது!   |    சிறந்த திரைப்பட விருதை வென்ற ராமின் ‘பறந்து போ’   |    'கொம்பு சீவி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது   |    ‘ஐ அம் கேம்’ படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு நேரில் வந்த பார்வையிட்ட மெகாஸ்டார் மம்மூட்டி!   |    யுவன் சங்கர் ராஜாவின் குரலால் மனதை வருடும் 'சிறை' படத்தின் இரண்டாவது சிங்கிள்!   |    1960 காலகட்டத்தில் மீண்டும் வாழ்ந்து விட்டு வந்தது போல் இருக்கிறது - இயக்குநர் சுதா கொங்கரா   |    ரிவெஞ்ச் திரில்லராக உருவாகி வரும் 'ரேஜ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது!   |    ரொமான்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் 'டியர் ரதி'!   |   

சினிமா செய்திகள்

நான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம் - பிரபல நடிகையின் சோக கதை
Updated on : 11 May 2020

நடிகர்கள், நடிகைகள் சிலருக்கு திருமணம் காலதாமதமாகவே நடக்கிறது. ஆனால், தற்போதைய சூழலில் நடிகைகள் சில பிஸியாக இருக்கும் போதே திருமணம் செய்துக் கொண்டு தொடர்ந்து கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். ஆனால், சில நடிகைகள் மட்டும் சுமார் 40 வயதுக்கு மேலாகியும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.



 



அந்த வகையில், பிரபல தமிழ் நடிகையான சித்தாரா 47 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். கே.பாலச்சந்தரின் ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சித்தாரா, தொடர்ந்து ‘புரியாத புதிர்’, ‘புது வசந்தம்’, ‘காவல் கீதம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பதோடு, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.



 



தற்போது அம்மா, அக்கா உள்ளிட்ட வேடங்களில் நடித்து வருவதோடு, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வரும் சித்தாரா, 47 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 



இது குறித்து சமீபத்திய பேட்டியில் ஒன்றில் பேசிய சித்தாரா, ”என் வாழ்க்கையில் நான் முக்கிய நபரை இழந்துவிட்டேன். அதனால் தான் திருமணம் வேண்டாம், என்று முடிவு செய்தேன். அதன்படி, இப்போது வரை திருமணம் பற்றி நான் யோசிக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.



 



மேலும், இப்போது திருமணம் செய்துக் கொள்ள வாய்ப்பு வந்தால் திருமணம் செய்துக் கொள்வீர்களா? என்று சித்தாராவிடம் கேட்டதற்கு, “அப்படி ஒரு எண்ணமே எனக்கு இல்லை” என்று பதில் அளித்தவர், வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது, என்றும் தெரிவித்துள்ளார்.



 



சித்தாரா, தனது வாழ்க்கையில் முக்கிய நபரை இழந்துவிட்டதாக கூறியது, அவரது தந்தையை தானாம். அவரது தந்தை இறந்த பிறகு அவர் திருமணம் குறித்து யோசிக்காமல் தனது குடும்பத்தை பற்றி மட்டுமே யோசித்தாராம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா