சற்று முன்

பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |    'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!   |    பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

நான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம் - பிரபல நடிகையின் சோக கதை
Updated on : 11 May 2020

நடிகர்கள், நடிகைகள் சிலருக்கு திருமணம் காலதாமதமாகவே நடக்கிறது. ஆனால், தற்போதைய சூழலில் நடிகைகள் சில பிஸியாக இருக்கும் போதே திருமணம் செய்துக் கொண்டு தொடர்ந்து கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். ஆனால், சில நடிகைகள் மட்டும் சுமார் 40 வயதுக்கு மேலாகியும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.



 



அந்த வகையில், பிரபல தமிழ் நடிகையான சித்தாரா 47 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். கே.பாலச்சந்தரின் ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சித்தாரா, தொடர்ந்து ‘புரியாத புதிர்’, ‘புது வசந்தம்’, ‘காவல் கீதம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பதோடு, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.



 



தற்போது அம்மா, அக்கா உள்ளிட்ட வேடங்களில் நடித்து வருவதோடு, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வரும் சித்தாரா, 47 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 



இது குறித்து சமீபத்திய பேட்டியில் ஒன்றில் பேசிய சித்தாரா, ”என் வாழ்க்கையில் நான் முக்கிய நபரை இழந்துவிட்டேன். அதனால் தான் திருமணம் வேண்டாம், என்று முடிவு செய்தேன். அதன்படி, இப்போது வரை திருமணம் பற்றி நான் யோசிக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.



 



மேலும், இப்போது திருமணம் செய்துக் கொள்ள வாய்ப்பு வந்தால் திருமணம் செய்துக் கொள்வீர்களா? என்று சித்தாராவிடம் கேட்டதற்கு, “அப்படி ஒரு எண்ணமே எனக்கு இல்லை” என்று பதில் அளித்தவர், வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது, என்றும் தெரிவித்துள்ளார்.



 



சித்தாரா, தனது வாழ்க்கையில் முக்கிய நபரை இழந்துவிட்டதாக கூறியது, அவரது தந்தையை தானாம். அவரது தந்தை இறந்த பிறகு அவர் திருமணம் குறித்து யோசிக்காமல் தனது குடும்பத்தை பற்றி மட்டுமே யோசித்தாராம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா