சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

குழந்தைகளுக்கு குழந்தைகள் நடத்தும் ஆன்லைன் கராத்தே பயிற்சி
Updated on : 25 April 2020

கொரோனா ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் குழந்தைகள் எப்போதும் தங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் வகையில், காரைக்காலை சேர்ந்த 10 வயது இரட்டையர்கள் சுலபமான வகையில் கராத்தே கற்றுக்கொள்ளும் வீடியோவை வெளியிட்டு அசத்தியுள்ளனர்.



 



குழந்தைகளால் குழந்தைகளுக்காக.. வீட்டிலேயே கராத்தே பயிற்சி - வீடியோ

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு எப்போது கட்டுக்குள் வரும் என யாராலும் கணிக்க முடியாதபடி நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதிக்கு பிறகும் நீட்டிக்கப்படும் என்ற பேச்சும் ஒருபக்கம் இருக்கிறது.



 



ஒருவேளை மே 3ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டாலும் பள்ளிகள் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த வருடம் ஜூலை மாதம் தான் வகுப்புகள் தொடங்கும் என்ற தகவலும் உலா வருகிறது.



 



பெற்றோரின் கவலை



 



இதில் பெற்றோர்களுக்கு இருக்கும் பெரிய கவலை குழந்தைகளை எப்படி பார்த்துக்கொள்வது, அவர்களை எப்படி பிஸியாக வைத்துக்கொள்வது என்பது தான். இப்போதுள்ள குழந்தைகள் டிவி, செல்போன்களில் தான் மூழ்கி கிடக்கிறார். பக்கத்துக்கு வீட்டு பிள்ளைகளுடன்கூட அவர்களை விளையாட அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்களின் உடல் உழைப்பு வெகுவாக குறைந்துவிட்டது.



 



கவலைக்கு தீர்வு



 



பெற்றோர்களின் இந்த கவலைக்கு அருமையான தீர்வு கொண்டு வந்திருக்கிறார்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்காலைக் சேர்ந்த இரட்டையர்கள் ஸ்ரீவிசாகன், ஸ்ரீஹரிணி. கராத்தே சாம்பியன்களான அக்குழந்தைகள் ஒன்பது வயதுக்குள் இரண்டு பிளாக் பெல்ட் வாங்கி உலக சாதனை படைத்தவர்கள். அது மட்டுமல்லாமல் கராத்தேவில் 200க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி உள்ளனர். சிறு வயதில் உலக சாதனை படைத்த முதல் இரட்டையரும் கூட



 



கராத்தே பயிற்சி



 



மற்ற குழந்தைகளை போலவே ஊரடங்கால் வீட்டுக்குள் இருக்கும் ஸ்ரீவிசாகனும், ஸ்ரீஹரிணியும் தங்களுக்கு தெரிந்த கராத்தே கலையை மற்ற குழந்தைகளுக்கும் கற்றுத்தரும் வகையில், கராத்தே பயிற்சி வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். சுலபமாக கராத்தே, சிலம்பம், நுங்சாக் உள்ளிட்ட பல தற்காப்பு கலைகளை செய்து காட்டி வீடியோ வெளியிட்டுள்ளனர்.வீட்டுக்குள் உடலுழைப்புஅவர்கள் செய்வதை பார்த்து, நம் பிள்ளைகளுக்கும் நாமே எளிதாக கராத்தே கற்று தரலாம். கராத்தே பழவது நம் பிள்ளைகளுக்கு உடல் வலிமையை ஏற்படுத்தும் என்பது ஒருபுறம் என்றால், செல்போன் மற்றும் டிவியில் இருந்து அவர்களை விடுவிக்கவும் முடியும். மேலும் வீட்டுக்குள்ளேயே அவர்களுக்கு உடல் உழைப்பையும் தர முடியும்.



 





 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா