சற்று முன்

தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண்   |    #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் வெளியானது!   |    கவிஞர் சினேகனின் கனவும், உருக்கமான சொற்பொழிவும்!   |    காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்தின் வெளியீடு!   |    மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பு 'நிர்வாகம் பொறுப்பல்ல'   |    ஃபைனலி பாரத் மற்றும் ஷான்வி மேக்னா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட 'வித் லவ்' ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர்!   |    'அமரன்' படத்தை தேர்வு செய்த IFFI 2025-இன் இந்தியன் பனோரமா!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகும் ‘ஸ்டீபன்’ திரைப்படம்   |    நவம்பர் மாதம் திரைக்கு வரும் 'சாவு வீடு'   |    ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார்!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார்!   |    பல அவமானங்களை, நிராகரிப்புகளை இந்த பறை இசையால் சந்தித்துள்ளோம் - கலைமாமணி முனுசாமி   |    ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!   |    அதிர்ச்சிகரமான திரில்லர் சீரிஸ் ‘ரேகை' ZEE5ல்   |    நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்தார்   |    தற்போதுள்ள வாழ்க்கை நெறிமுறையை யதார்த்தமான காட்டும் திரைப்படம் 'ராட்ட'   |    தமன் அமைத்த அதிரடி தாளங்களுடன் 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது!   |    பத்திரிகையாளர்களை சந்தித்த ஆக்சன் கிங்' அர்ஜுன்!   |    ஏ.ஆர். ரஹ்மான், பிரபுதேவா மீண்டும் இணையும் ‘மூன்வாக்’ பட இசை உரிமையை கைபற்றிய லஹரி மியூசிக்   |   

சினிமா செய்திகள்

குழந்தைகளுக்கு குழந்தைகள் நடத்தும் ஆன்லைன் கராத்தே பயிற்சி
Updated on : 25 April 2020

கொரோனா ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் குழந்தைகள் எப்போதும் தங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் வகையில், காரைக்காலை சேர்ந்த 10 வயது இரட்டையர்கள் சுலபமான வகையில் கராத்தே கற்றுக்கொள்ளும் வீடியோவை வெளியிட்டு அசத்தியுள்ளனர்.



 



குழந்தைகளால் குழந்தைகளுக்காக.. வீட்டிலேயே கராத்தே பயிற்சி - வீடியோ

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு எப்போது கட்டுக்குள் வரும் என யாராலும் கணிக்க முடியாதபடி நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதிக்கு பிறகும் நீட்டிக்கப்படும் என்ற பேச்சும் ஒருபக்கம் இருக்கிறது.



 



ஒருவேளை மே 3ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டாலும் பள்ளிகள் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த வருடம் ஜூலை மாதம் தான் வகுப்புகள் தொடங்கும் என்ற தகவலும் உலா வருகிறது.



 



பெற்றோரின் கவலை



 



இதில் பெற்றோர்களுக்கு இருக்கும் பெரிய கவலை குழந்தைகளை எப்படி பார்த்துக்கொள்வது, அவர்களை எப்படி பிஸியாக வைத்துக்கொள்வது என்பது தான். இப்போதுள்ள குழந்தைகள் டிவி, செல்போன்களில் தான் மூழ்கி கிடக்கிறார். பக்கத்துக்கு வீட்டு பிள்ளைகளுடன்கூட அவர்களை விளையாட அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்களின் உடல் உழைப்பு வெகுவாக குறைந்துவிட்டது.



 



கவலைக்கு தீர்வு



 



பெற்றோர்களின் இந்த கவலைக்கு அருமையான தீர்வு கொண்டு வந்திருக்கிறார்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்காலைக் சேர்ந்த இரட்டையர்கள் ஸ்ரீவிசாகன், ஸ்ரீஹரிணி. கராத்தே சாம்பியன்களான அக்குழந்தைகள் ஒன்பது வயதுக்குள் இரண்டு பிளாக் பெல்ட் வாங்கி உலக சாதனை படைத்தவர்கள். அது மட்டுமல்லாமல் கராத்தேவில் 200க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி உள்ளனர். சிறு வயதில் உலக சாதனை படைத்த முதல் இரட்டையரும் கூட



 



கராத்தே பயிற்சி



 



மற்ற குழந்தைகளை போலவே ஊரடங்கால் வீட்டுக்குள் இருக்கும் ஸ்ரீவிசாகனும், ஸ்ரீஹரிணியும் தங்களுக்கு தெரிந்த கராத்தே கலையை மற்ற குழந்தைகளுக்கும் கற்றுத்தரும் வகையில், கராத்தே பயிற்சி வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். சுலபமாக கராத்தே, சிலம்பம், நுங்சாக் உள்ளிட்ட பல தற்காப்பு கலைகளை செய்து காட்டி வீடியோ வெளியிட்டுள்ளனர்.வீட்டுக்குள் உடலுழைப்புஅவர்கள் செய்வதை பார்த்து, நம் பிள்ளைகளுக்கும் நாமே எளிதாக கராத்தே கற்று தரலாம். கராத்தே பழவது நம் பிள்ளைகளுக்கு உடல் வலிமையை ஏற்படுத்தும் என்பது ஒருபுறம் என்றால், செல்போன் மற்றும் டிவியில் இருந்து அவர்களை விடுவிக்கவும் முடியும். மேலும் வீட்டுக்குள்ளேயே அவர்களுக்கு உடல் உழைப்பையும் தர முடியும்.



 





 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா