சற்று முன்

பழிவாங்குதலின் பரிமாணங்களைப் புதிய திரை அனுபவமாக உணரும் வகையில் 'கங்கணம்'   |    நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது   |    திரையுலக பிரபலங்களின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற 'பைக் டாக்சி' பூஜை!   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள RKFI   |    இயற்கையின் ஆசியில் திகட்டாத காதல் காவியமாக உருவாகும் 'ஆலன்'   |    ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இல் இடம்பெற்ற முதுகுத்தண்டை சில்லிடச்செய்யும் இசை தொகுப்பு வெளியானது   |    திகில் நிறைந்த க்ரைம் டிராமா “இன்ஸ்பெக்டர் ரிஷி” அமேசான் பிரைமில் வெளியாகிறது   |    ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு முதலிடம்!   |    யுடியுபரக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட்ட ‘96’ பட இயக்குநர் பிரேம் குமார்   |    'எனக்கொரு wife வேணுமடா' குறும்படத்தை பார்த்து பாராட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்   |    மாரி செல்வராஜ், பா. ரஞ்சித் கூட்டணியில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம்   |    ரஜினிக்கு பில்லா மாதிரி ஜீவிக்கு இந்த படம் - இயக்குநர், நடிகர் சுப்பிரமணிய சிவா   |    கார்த்தியுடன் இணையும் இயக்குநர் நலன் குமாரசாமி!   |    ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கும் #RC16   |    கல்யாணமாகி வந்தா சினிமாவுல சக்ஸஸ் பண்ண முடியாது - பா. இரஞ்சித்   |    ஆர்யாவுடன் பிரபலங்கள் கலந்துகொண்ட ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ திறப்பு விழா!   |    இந்த மாதிரி கதைக்கு ஆர்.கே.சுரேஷ் மாதிரியான ஹீரோதான் வேண்டும் - இயக்குனர் பேரரசு   |    வடமாவட்ட மக்களின் வாழ்வியலை சொல்லும் படம் 'காடுவெட்டி'   |    சீயான் விக்ரமுடன் இணையும் தேசிய விருது பெற்ற மலையாள நடிகர்!   |    சந்தானம் புதிய படத்தின் முதல் பார்வையை கமல்ஹாசன் வெளியிட்டார்   |   

சினிமா செய்திகள்

கலெக்டருக்கு நன்றி கூறிய சிவகார்த்திகேயன்
Updated on : 02 April 2020

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸில் இருந்து பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள சமூக விலகலை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.



 



இந்த நிலையில் சமூக விலகலை மிக தெளிவாக இரண்டே வரிகளில் விளக்கும் சிவகார்த்திகேயன் பேசிய வசனம் ஒன்றை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த வசனம் இதுதான்:



 



நீ யாரா வேணும்னா இரு 



எவனா வேணும்னா இரு ; ஆனா



என்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு



 



இந்த ட்வீட்டை பார்த்த சிவகார்த்திகேயன், இந்த வசனத்தை ஞாபகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி என்றும் இதற்குரிய பெருமை ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம் அவர்களுக்குத்தான் போய் சேரும் என்றும் இரண்டே வரிகளில் அவர்தான் சமூக விலகலை மிக அழகாக விளக்கி இருப்பார் என்றும் கூறியுள்ளார்.



 



சிவகார்த்திகேயன் நடித்த படத்தின் வசனத்தை சரியான நேரத்தில் தனது சமூக வலைத்தளத்தில் ஞாபகப்படுத்திய திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா