சற்று முன்

மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |    தூய்மை பணியாளர் பத்மாவுக்கு பார்த்திபன் வழங்கிய மரியாதை!   |    அரசியல் அல்ல, முழு எண்டர்டெய்னர் - ‘லீடர்’ குறித்து லெஜெண்ட் சரவணன் விளக்கம்   |    Fire Fox Film House தயாரிப்பில் புதிய போலீஸ் லவ் கமர்ஷியல் படம், படப்பிடிப்பு தொடக்கம்!   |    ராம் சரண்–புச்சி பாபு சானா கூட்டணியில் ‘பெத்தி’, ஏப்ரல் 30 உலகளாவிய திரையரங்கு வெளியீடு!   |    'பராசக்தி' ZEE5-ல், பிப்ரவரி 7 முதல் உலகளாவிய டிஜிட்டல் வெளியீடு!   |    கனவே வில்லனாகும் காதல் பயணம் – ‘ட்ரீம் கேர்ள்’ குறித்து இயக்குநர் எம்.ஆர். பாரதி   |    லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ நிழல் உலகமும் காவல் துறையும் மோதும் மாஸ் ஆக்ஷன் திரில்லர்!   |   

சினிமா செய்திகள்

முதல் கோலிவுட் நடிகர் என்ற பெருமை சிவகார்திகேயனையே சேரும்
Updated on : 31 March 2020

நாடு முழுவதும் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், கூலித்தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில் செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மக்களுக்கு நிவாரண நிதி அளிப்பது மற்றும் கொரோனா மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நிதிக்காக பிரதமர் மோடி, மக்களிடமும், பிரபலங்களிடமும் நிதி கேட்டுள்ளார். அதேபோல், தமிழக அரசும் கொரோனா முதலமைச்சர் நிவாரணநிதிக்கு நிதியளிக்கலாம், என்று அறிவித்துள்ளது.



 



அதன்படி, அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள், தொழிலதிபர்கள் தமிழக அரசின் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு, நிதி அளித்து வரும் நிலையில், சினிமா பிரபலங்கள் யாரும் நிதியளிக்காமல் மவுனமாக இருந்த நிலையில், முதல் நபராக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். இதன் மூலம், முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு நிதியளித்த முதல் கோலிவுட் நடிகர் என்ற பெருமை சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருக்கிறது.



 



ஏற்கனவே, பெப்ஸி தொழிலாளர்களுக்காக ரூ.10 லட்சம் நிதியளித்திருக்கும் சிவகார்த்திகேயன், சினிமா பத்திரிகையாளர்களுக்காக, சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா