சற்று முன்

நடிகர் விது நடித்திருக்கும் புதிய பட டைட்டில் லுக் & ப்ரோமோ வீடியோ வெளியீடு!   |    ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது!   |    “45: த மூவி” டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகிறது!   |    தமிழ்நாடு அரசுடன் JioHotstar ஒப்பந்தம் - 4,000 கோடி ரூபாய் முதலீடு!   |    மீண்டும் இணையும் '96' பட புகழ் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன்   |    45 நாட்களில் நிறைவடைந்த 'கிராண்ட் பாதர்' ஃபேண்டஸி எண்டர்டெயினர்!   |    இந்திய திரைத்துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் புதிய தளம் அறிமுகம்!   |    அர்ஜுன் தாஸ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், இனிதே துவங்கியது!   |    இந்தப்படத்திற்குள் போன பிறகு தான், எம் ஜி ஆரின் விஸ்வரூபம் புரிந்தது - நடிகர் கார்த்தி   |    அசத்தலான 'மொய் விருந்து' பட டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    ZEE5 வழங்கும் விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமா!   |    பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 47'   |    மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர்!   |    முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்!   |    20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள 'நாகபந்தம்' கிளைமேக்ஸ்   |    ’அகண்டா 2’ நம் இனத்திற்கும் கலாச்சாரத்திற்குமான வெற்றி - நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா   |    சென்னையில் கிறிஸ்தவர்கள் நடத்தும் மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க உச்சி மாநாடு!   |    மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை JioStar Leadership குழுவினர் சந்தித்தனர்!   |    மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர் சி வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார்.   |    எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன்!   |   

சினிமா செய்திகள்

முதல் கோலிவுட் நடிகர் என்ற பெருமை சிவகார்திகேயனையே சேரும்
Updated on : 31 March 2020

நாடு முழுவதும் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், கூலித்தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில் செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மக்களுக்கு நிவாரண நிதி அளிப்பது மற்றும் கொரோனா மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நிதிக்காக பிரதமர் மோடி, மக்களிடமும், பிரபலங்களிடமும் நிதி கேட்டுள்ளார். அதேபோல், தமிழக அரசும் கொரோனா முதலமைச்சர் நிவாரணநிதிக்கு நிதியளிக்கலாம், என்று அறிவித்துள்ளது.



 



அதன்படி, அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள், தொழிலதிபர்கள் தமிழக அரசின் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு, நிதி அளித்து வரும் நிலையில், சினிமா பிரபலங்கள் யாரும் நிதியளிக்காமல் மவுனமாக இருந்த நிலையில், முதல் நபராக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். இதன் மூலம், முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு நிதியளித்த முதல் கோலிவுட் நடிகர் என்ற பெருமை சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருக்கிறது.



 



ஏற்கனவே, பெப்ஸி தொழிலாளர்களுக்காக ரூ.10 லட்சம் நிதியளித்திருக்கும் சிவகார்த்திகேயன், சினிமா பத்திரிகையாளர்களுக்காக, சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா