சற்று முன்

17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!   |    ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மோகன் ஜி!   |    ஜி.வி. பிரகாஷ் இசையில் சிவனின் மகிமையை போற்றும் முதல் திருவாசக பாடல் வெளியீடு   |    பாலிவுட்டை நோக்கி இசையமைப்பாளர் 'ஹேஷம் அப்துல் வஹாப்'!   |    தமிழில் அடியெடுக்கும் கன்னட ஹீரோ சதீஷ் நினாசத்தின் ‘ரைஸ் ஆஃப் அசோகா’   |    ‘திரௌபதி 2’க்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலம்   |    நிஜ வாழ்வுக் கதைகளின் சக்தியை கொண்டாடும் Docu Fest Chennai   |    ‘சிறை’ வெற்றிக்குப் பிறகு L.K. அக்ஷய் குமார் நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பம்!   |    டோவினோ தாமஸின் பிறந்தநாளுக்கு ஐந்து மொழிகளில் வெளியான “பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்!   |    ‘மாயபிம்பம்’ வெளியாகும் முன்பே அடுத்த படத்திற்கு ஒப்பந்தமான கே.ஜெ. சுரேந்தர்!   |    தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணி… பூஜையுடன் தொடங்கிய #D55   |    “மங்காத்தா நாள்… அஜித் குடும்பத்தில் எழும் மோதல்?”   |    சுந்தர் சி – விஷால் கூட்டணியில் மீண்டும் ஒரு அதிரடி விருந்து   |    சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வாவின் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகளும் அவர்களது அனுபவங்களும்!   |    ZEE5 தமிழில் சமுத்திரகனியின் அடுத்த அதிரடி திரில்லர் “தடயம்” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    வரலாற்றுக் காவியத்தில் வீரத் தோற்றம் - ‘திரௌபதி 2’ மூலம் புதிய உயரம் தொடும் ரிச்சர்ட் ரிஷி   |    கோயம்புத்தூரில் பொங்கல் விழாவுடன் முடிவடைந்த ‘அறுவடை’ படப்பிடிப்பு   |    300 கோடி வசூல் சாதனை… ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி கூறிய ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி   |    சசிகுமார் நடிப்பில் அரசியல் & உணர்வு காட்சிகள் நிறைந்த “மை லார்ட்” டிரெய்லர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

முதல் கோலிவுட் நடிகர் என்ற பெருமை சிவகார்திகேயனையே சேரும்
Updated on : 31 March 2020

நாடு முழுவதும் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், கூலித்தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில் செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மக்களுக்கு நிவாரண நிதி அளிப்பது மற்றும் கொரோனா மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நிதிக்காக பிரதமர் மோடி, மக்களிடமும், பிரபலங்களிடமும் நிதி கேட்டுள்ளார். அதேபோல், தமிழக அரசும் கொரோனா முதலமைச்சர் நிவாரணநிதிக்கு நிதியளிக்கலாம், என்று அறிவித்துள்ளது.



 



அதன்படி, அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள், தொழிலதிபர்கள் தமிழக அரசின் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு, நிதி அளித்து வரும் நிலையில், சினிமா பிரபலங்கள் யாரும் நிதியளிக்காமல் மவுனமாக இருந்த நிலையில், முதல் நபராக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். இதன் மூலம், முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு நிதியளித்த முதல் கோலிவுட் நடிகர் என்ற பெருமை சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருக்கிறது.



 



ஏற்கனவே, பெப்ஸி தொழிலாளர்களுக்காக ரூ.10 லட்சம் நிதியளித்திருக்கும் சிவகார்த்திகேயன், சினிமா பத்திரிகையாளர்களுக்காக, சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா