சற்று முன்

பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 47'   |    மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர்!   |    முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்!   |    20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள 'நாகபந்தம்' கிளைமேக்ஸ்   |    ’அகண்டா 2’ நம் இனத்திற்கும் கலாச்சாரத்திற்குமான வெற்றி - நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா   |    சென்னையில் கிறிஸ்தவர்கள் நடத்தும் மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க உச்சி மாநாடு!   |    மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை JioStar Leadership குழுவினர் சந்தித்தனர்!   |    மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர் சி வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார்.   |    எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன்!   |    அம்மா மீது வைக்கப்படும் ப்ராமிஸ் மிக மதிப்புள்ளது! - இயக்குநர் அருண்குமார் சேகரன்   |    'சிறை' பட சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது!   |    ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் உருவாகிவரும் ‘பெத்தி’ பட ஆக்சன் காட்சிகள்!   |    துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான 'ஐ அம் கேம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட படப்பிடிப்பு நிறைவு பெற்றது!   |    சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் தடகள போட்டி இன்று துவங்கியது!   |    56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) வில் தேர்வு செய்யப்பட்ட 'லால் சலாம்'   |    நெட்ஃபிலிக்ஸ்-ல் வெளியான 'ஸ்டீபன்' படத்தின் புதிய டிரெய்லர்!   |    அர்ஜூன் தாஸின் 'சூப்பர் ஹீரோ' மற்றும் ஃபைனலி பாரத்தின் 'நிஞ்சா' படங்கள் டைட்டில் அறிமுகம்!   |    'திரௌபதி 2' படத்தில் திரௌபதி தேவியாக நடிக்கும் ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 பிரமாண்டமாக தொடங்கியது!   |   

சினிமா செய்திகள்

அஜித், விஜய் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த நடிகை
Updated on : 28 March 2020

கொரோனா வைரஸ் பரவுவது குறித்த விழிப்புணர்வை கோலிவுட் திரையுலகில் உள்ள பல பிரபலங்கள் ஏற்படுத்தி வரும் நிலையில் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் சற்றுமுன் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:



 



 



கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் நடிகை நடிகர்கள் பலர் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாம் எல்லோரையும் பாதுகாப்பதற்காக இந்த ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். ஆனால் சில இளைஞர்கள் எந்தவித பயமும் இல்லாமல் குருட்டு தைரியத்தில் நமக்கு ஒன்றும் ஆகாது என்று நினைத்து வெளியில் செல்கிறார்கள். அவர்களுக்கு வைரஸின் சீரியஸ் குறித்து தெரியவில்லை. அவர்களுக்கு வைரஸ் ஒருவேளை தாக்கினால் அவர்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பரவும் அபாயம் உள்ளது.



 



 



மேலும் வெளிநாட்டில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு நிறைய பேர் வந்து உள்ளார்கள். அவர்களை தற்போது அரசு தனிமைப்படுத்தி வைத்துள்ளது. அவர்களுடைய வீட்டிலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. எனவே அவர்களை தனிமையில் இருக்க விடுங்கள். அவர்களுடன் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்.



 



 



மேலும் மார்க்கெட் சென்றாலும் காய்கறி வாங்க சென்றாலும் ஒரு மீட்டர் தள்ளி நின்று ஒருவரை ஒருவர் தொடாமல் பார்த்துக் கொள்ளவும். இது ஒரு பாதுகாப்பான நடவடிக்கையாகும். முதலில் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் அடுத்தவரையும் பாதுகாக்க முடியும்.



 



 



அதுபோல் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் உள்பட அனைத்து நடிகர்களின் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். அவரவர்களுக்கு பிடித்த நடிகர்கள் கூறிய வழிமுறைகளை ஒரு ரசிகராக கடைபிடியுங்கள். மருத்துவர்கள் மற்றும் அரசுகளும் நமக்காக நல்லது செய்து வருகின்றார்கள். நாம் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் அது தப்பான முடிந்துவிடும். இந்த வாரமும் அடுத்த வாரமும் நாம் கடந்து விட்டோம் என்றால் அதன் பின்னர் பெரிய பாதிப்பு இருக்காது. எனவே அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்’ என்று காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா