சற்று முன்

மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |    தூய்மை பணியாளர் பத்மாவுக்கு பார்த்திபன் வழங்கிய மரியாதை!   |    அரசியல் அல்ல, முழு எண்டர்டெய்னர் - ‘லீடர்’ குறித்து லெஜெண்ட் சரவணன் விளக்கம்   |    Fire Fox Film House தயாரிப்பில் புதிய போலீஸ் லவ் கமர்ஷியல் படம், படப்பிடிப்பு தொடக்கம்!   |    ராம் சரண்–புச்சி பாபு சானா கூட்டணியில் ‘பெத்தி’, ஏப்ரல் 30 உலகளாவிய திரையரங்கு வெளியீடு!   |    'பராசக்தி' ZEE5-ல், பிப்ரவரி 7 முதல் உலகளாவிய டிஜிட்டல் வெளியீடு!   |    கனவே வில்லனாகும் காதல் பயணம் – ‘ட்ரீம் கேர்ள்’ குறித்து இயக்குநர் எம்.ஆர். பாரதி   |    லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ நிழல் உலகமும் காவல் துறையும் மோதும் மாஸ் ஆக்ஷன் திரில்லர்!   |    “சாத்தியமற்றதை மேடையில் சாத்தியமாக்கிய முரளிதரன்” - இயக்குநர் K. பாக்யராஜ்   |    எல்லைகளை கடந்த மாஸ் - ஜப்பானில் ‘புஷ்பா 2’ 14 நாளில் ரூ.6.1 கோடி வசூல்!   |    Hotstar Specials-ஆக ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'லக்கி' திரைப்படம் JioHotstar-ல்   |    விஜய் அரசியல் குறித்த அனு மோகன் கருத்துகள் தனிப்பட்டவை - ‘ரெட் லேபிள்’ தயாரிப்பாளர் விளக்கம்!   |    மீண்டும் திரையரங்குகளில் STR-ன் ‘சிலம்பாட்டம்’!   |    ‘பள்ளிச்சட்டம்பி’யில் விண்டேஜ் லுக்கில் கயாடு லோஹர் கேரக்டர் போஸ்டர் வெளியீடு!   |    சென்னைக் கடற்கரையில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ‘வித் லவ்’ படக்குழுவினர்!   |   

சினிமா செய்திகள்

அஜித், சூர்யா, விஜய், ரஜினியிடம் ஆதரவு கோரி அழைப்பு விடுத்த கமல்
Updated on : 22 March 2020

தற்போது மனித இனத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் ஆரம்பித்து தற்போது பல உலக நாடுகளில் அதிகம் பரவி உள்ளது. சீனாவை காட்டிலும் இத்தாலியில் அதிகம் மக்கள் இறந்துள்ளனர்.







இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பொது இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்கும் படி அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள்.



 





நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அனைவரும் ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார் அவர்.



 





இதற்கு நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ஆதரவை நேற்று தெரிவித்திருந்தார். இந்த அசாதாரணமான சூழலில் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் தேவை என கூறியிருந்தார் அவர். மேலும் ரஜினி, விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இதற்கு ஆதரவு தரவேண்டும் என்று கமல் அழைப்பு விடுத்தார்.







இந்நிலையில் சற்றுமுன் கமல் கொரோனா விழிப்புணர்வுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது..



 







"கொரோனா வைரஸ் பாதிப்பு நான்காவது ஐந்தாவது வாரத்தில் பல மடங்கு அதிகம் ஆகிறது என்பது மற்ற பல நாடுகளில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வைரஸ் பாதித்த சிலர் தொற்று அறிகுறி எதுவும் தெரியாத சமயத்தில் வெளியிடங்களுக்கு சென்று கொண்டிருப்பார்கள். ஐந்து பேரிடம் இருந்து 25 பேருக்கு பரவும், அது பின்னர் 100 பேருக்கு பரவும். அதை தடுக்க ஒரே வழி தான் இருக்கிறது.. சோசியல் டிஸ்டன்சிங்.. விலகி இருத்தல்."



 





"நான்காவது வாரத்தில் தமிழ்நாடு இப்போது இருக்கிறது. கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிருங்கள். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியில் வாருங்கள். இந்த அறிக்கையை உங்களுக்கு சொல்வதற்காகத்தான் நான் வெளியே வந்திருக்கிறேன். வெளியில் வராமல் இருந்தால் இதன் மூலமாக வைரஸ் பரவுவதை தடுக்கலாம்" என கமல் கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா