சற்று முன்

மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “யெல்லோ”   |    மாறுபட்ட களத்தில் ஒரு அசத்தலான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “யெல்லோ”   |    குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் குழந்தைகள் படம்!   |    'IPL (இந்தியன் பீனல் லா)' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    சீக்யா என்டர்டெயின்மென்ட், முதன்முறையாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடன் இணைகிறது!   |    ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படம் ‘சிக்மா’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது!   |    அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!   |    வெற்றிமாறனிடம் ராமர் மாட்டவில்லை, ராமரிடம் வெற்றிமாறன் மாட்டியிருக்கிறார் - விஜய் சேதுபதி   |    'ப்ரீ வெட்டிங் ஷோ' பிளாக்பஸ்டரை தொடர்ந்து தனது அடுத்த படத்தை அறிவித்த நடிகர் திரு வீர்!   |    'நாகபந்தம்' திரைப்படத்தின் ஆன்மீக பாடல் ‘ஓம் வீர நாகா’   |    2024 ஆண்டிற்கான சிறந்த கிறிஸ்தவ திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படம்!   |    சிவாஜி கணேசன் பேரனுக்கு சூப்பர் ஸ்டார் வாழ்த்து!   |    டிசம்பர் 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் “ரெட்ட தல”   |    உலக திரைப்பட விழாக்களில் தமிழ்த் திரைக்கு பெருமை சேர்த்துக் கொண்டாடப்படும் திரைப்படம்!   |    21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |   

சினிமா செய்திகள்

அஜித், சூர்யா, விஜய், ரஜினியிடம் ஆதரவு கோரி அழைப்பு விடுத்த கமல்
Updated on : 22 March 2020

தற்போது மனித இனத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் ஆரம்பித்து தற்போது பல உலக நாடுகளில் அதிகம் பரவி உள்ளது. சீனாவை காட்டிலும் இத்தாலியில் அதிகம் மக்கள் இறந்துள்ளனர்.







இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பொது இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்கும் படி அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள்.



 





நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அனைவரும் ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார் அவர்.



 





இதற்கு நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ஆதரவை நேற்று தெரிவித்திருந்தார். இந்த அசாதாரணமான சூழலில் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் தேவை என கூறியிருந்தார் அவர். மேலும் ரஜினி, விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இதற்கு ஆதரவு தரவேண்டும் என்று கமல் அழைப்பு விடுத்தார்.







இந்நிலையில் சற்றுமுன் கமல் கொரோனா விழிப்புணர்வுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது..



 







"கொரோனா வைரஸ் பாதிப்பு நான்காவது ஐந்தாவது வாரத்தில் பல மடங்கு அதிகம் ஆகிறது என்பது மற்ற பல நாடுகளில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வைரஸ் பாதித்த சிலர் தொற்று அறிகுறி எதுவும் தெரியாத சமயத்தில் வெளியிடங்களுக்கு சென்று கொண்டிருப்பார்கள். ஐந்து பேரிடம் இருந்து 25 பேருக்கு பரவும், அது பின்னர் 100 பேருக்கு பரவும். அதை தடுக்க ஒரே வழி தான் இருக்கிறது.. சோசியல் டிஸ்டன்சிங்.. விலகி இருத்தல்."



 





"நான்காவது வாரத்தில் தமிழ்நாடு இப்போது இருக்கிறது. கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிருங்கள். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியில் வாருங்கள். இந்த அறிக்கையை உங்களுக்கு சொல்வதற்காகத்தான் நான் வெளியே வந்திருக்கிறேன். வெளியில் வராமல் இருந்தால் இதன் மூலமாக வைரஸ் பரவுவதை தடுக்கலாம்" என கமல் கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா