சற்று முன்

'டெக்ஸாஸ் டைகர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!   |    எனக்குத் தெரிந்த சென்னையை, அதன் வாழ்க்கையை இதில் கொண்டு வந்துள்ளோம் - வினீத் வரபிரசாத்   |    தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண்   |    #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் வெளியானது!   |    கவிஞர் சினேகனின் கனவும், உருக்கமான சொற்பொழிவும்!   |    காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்தின் வெளியீடு!   |    மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பு 'நிர்வாகம் பொறுப்பல்ல'   |    ஃபைனலி பாரத் மற்றும் ஷான்வி மேக்னா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட 'வித் லவ்' ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர்!   |    'அமரன்' படத்தை தேர்வு செய்த IFFI 2025-இன் இந்தியன் பனோரமா!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகும் ‘ஸ்டீபன்’ திரைப்படம்   |    நவம்பர் மாதம் திரைக்கு வரும் 'சாவு வீடு'   |    ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார்!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார்!   |    பல அவமானங்களை, நிராகரிப்புகளை இந்த பறை இசையால் சந்தித்துள்ளோம் - கலைமாமணி முனுசாமி   |    ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்!   |    அதிர்ச்சிகரமான திரில்லர் சீரிஸ் ‘ரேகை' ZEE5ல்   |    நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்தார்   |    தற்போதுள்ள வாழ்க்கை நெறிமுறையை யதார்த்தமான காட்டும் திரைப்படம் 'ராட்ட'   |    தமன் அமைத்த அதிரடி தாளங்களுடன் 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது!   |   

சினிமா செய்திகள்

அஜித், சூர்யா, விஜய், ரஜினியிடம் ஆதரவு கோரி அழைப்பு விடுத்த கமல்
Updated on : 22 March 2020

தற்போது மனித இனத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் ஆரம்பித்து தற்போது பல உலக நாடுகளில் அதிகம் பரவி உள்ளது. சீனாவை காட்டிலும் இத்தாலியில் அதிகம் மக்கள் இறந்துள்ளனர்.







இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பொது இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்கும் படி அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள்.



 





நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அனைவரும் ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார் அவர்.



 





இதற்கு நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ஆதரவை நேற்று தெரிவித்திருந்தார். இந்த அசாதாரணமான சூழலில் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் தேவை என கூறியிருந்தார் அவர். மேலும் ரஜினி, விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இதற்கு ஆதரவு தரவேண்டும் என்று கமல் அழைப்பு விடுத்தார்.







இந்நிலையில் சற்றுமுன் கமல் கொரோனா விழிப்புணர்வுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது..



 







"கொரோனா வைரஸ் பாதிப்பு நான்காவது ஐந்தாவது வாரத்தில் பல மடங்கு அதிகம் ஆகிறது என்பது மற்ற பல நாடுகளில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வைரஸ் பாதித்த சிலர் தொற்று அறிகுறி எதுவும் தெரியாத சமயத்தில் வெளியிடங்களுக்கு சென்று கொண்டிருப்பார்கள். ஐந்து பேரிடம் இருந்து 25 பேருக்கு பரவும், அது பின்னர் 100 பேருக்கு பரவும். அதை தடுக்க ஒரே வழி தான் இருக்கிறது.. சோசியல் டிஸ்டன்சிங்.. விலகி இருத்தல்."



 





"நான்காவது வாரத்தில் தமிழ்நாடு இப்போது இருக்கிறது. கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிருங்கள். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியில் வாருங்கள். இந்த அறிக்கையை உங்களுக்கு சொல்வதற்காகத்தான் நான் வெளியே வந்திருக்கிறேன். வெளியில் வராமல் இருந்தால் இதன் மூலமாக வைரஸ் பரவுவதை தடுக்கலாம்" என கமல் கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா