சற்று முன்

17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!   |    ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மோகன் ஜி!   |    ஜி.வி. பிரகாஷ் இசையில் சிவனின் மகிமையை போற்றும் முதல் திருவாசக பாடல் வெளியீடு   |    பாலிவுட்டை நோக்கி இசையமைப்பாளர் 'ஹேஷம் அப்துல் வஹாப்'!   |    தமிழில் அடியெடுக்கும் கன்னட ஹீரோ சதீஷ் நினாசத்தின் ‘ரைஸ் ஆஃப் அசோகா’   |    ‘திரௌபதி 2’க்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலம்   |    நிஜ வாழ்வுக் கதைகளின் சக்தியை கொண்டாடும் Docu Fest Chennai   |    ‘சிறை’ வெற்றிக்குப் பிறகு L.K. அக்ஷய் குமார் நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பம்!   |    டோவினோ தாமஸின் பிறந்தநாளுக்கு ஐந்து மொழிகளில் வெளியான “பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்!   |    ‘மாயபிம்பம்’ வெளியாகும் முன்பே அடுத்த படத்திற்கு ஒப்பந்தமான கே.ஜெ. சுரேந்தர்!   |    தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணி… பூஜையுடன் தொடங்கிய #D55   |    “மங்காத்தா நாள்… அஜித் குடும்பத்தில் எழும் மோதல்?”   |    சுந்தர் சி – விஷால் கூட்டணியில் மீண்டும் ஒரு அதிரடி விருந்து   |    சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வாவின் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகளும் அவர்களது அனுபவங்களும்!   |    ZEE5 தமிழில் சமுத்திரகனியின் அடுத்த அதிரடி திரில்லர் “தடயம்” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    வரலாற்றுக் காவியத்தில் வீரத் தோற்றம் - ‘திரௌபதி 2’ மூலம் புதிய உயரம் தொடும் ரிச்சர்ட் ரிஷி   |    கோயம்புத்தூரில் பொங்கல் விழாவுடன் முடிவடைந்த ‘அறுவடை’ படப்பிடிப்பு   |    300 கோடி வசூல் சாதனை… ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி கூறிய ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி   |    சசிகுமார் நடிப்பில் அரசியல் & உணர்வு காட்சிகள் நிறைந்த “மை லார்ட்” டிரெய்லர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

அஜித், சூர்யா, விஜய், ரஜினியிடம் ஆதரவு கோரி அழைப்பு விடுத்த கமல்
Updated on : 22 March 2020

தற்போது மனித இனத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் ஆரம்பித்து தற்போது பல உலக நாடுகளில் அதிகம் பரவி உள்ளது. சீனாவை காட்டிலும் இத்தாலியில் அதிகம் மக்கள் இறந்துள்ளனர்.







இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பொது இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்கும் படி அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள்.



 





நாளை ஞாயிற்றுக்கிழமை மக்கள் அனைவரும் ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார் அவர்.



 





இதற்கு நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ஆதரவை நேற்று தெரிவித்திருந்தார். இந்த அசாதாரணமான சூழலில் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் தேவை என கூறியிருந்தார் அவர். மேலும் ரஜினி, விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இதற்கு ஆதரவு தரவேண்டும் என்று கமல் அழைப்பு விடுத்தார்.







இந்நிலையில் சற்றுமுன் கமல் கொரோனா விழிப்புணர்வுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது..



 







"கொரோனா வைரஸ் பாதிப்பு நான்காவது ஐந்தாவது வாரத்தில் பல மடங்கு அதிகம் ஆகிறது என்பது மற்ற பல நாடுகளில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வைரஸ் பாதித்த சிலர் தொற்று அறிகுறி எதுவும் தெரியாத சமயத்தில் வெளியிடங்களுக்கு சென்று கொண்டிருப்பார்கள். ஐந்து பேரிடம் இருந்து 25 பேருக்கு பரவும், அது பின்னர் 100 பேருக்கு பரவும். அதை தடுக்க ஒரே வழி தான் இருக்கிறது.. சோசியல் டிஸ்டன்சிங்.. விலகி இருத்தல்."



 





"நான்காவது வாரத்தில் தமிழ்நாடு இப்போது இருக்கிறது. கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிருங்கள். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியில் வாருங்கள். இந்த அறிக்கையை உங்களுக்கு சொல்வதற்காகத்தான் நான் வெளியே வந்திருக்கிறேன். வெளியில் வராமல் இருந்தால் இதன் மூலமாக வைரஸ் பரவுவதை தடுக்கலாம்" என கமல் கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா