சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

இலண்டனில் இருந்து வீடு திரும்பிய மணிரத்னம் மகன் தனி அறையில் தனிமை - காரணம் கொரோனா தாங்க
Updated on : 22 March 2020

வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் கொரோனா வைரஸ் தாக்கி இருந்தாலும் தாக்காவிட்டாலும் ஒரு சில நாட்கள் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் என்று அரசு அறிவுரை கூறிவரும் நிலையில் பிரபல இயக்குனர் மணிரத்தினத்தின் மகன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து இந்தியா திரும்பியுள்ளார்.



 



 



இதனை அடுத்து அவர் அரசின் வேண்டுகோளை ஏற்று தனிமையில் இருப்பதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்து மணிரத்னம் மனைவியும் நடிகையுமான சுஹாசினி அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது மகன் நந்தன் கடந்த 18ஆம் தேதி லண்டனில் இருந்து வந்ததாகவும் இதனையடுத்து அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை எனினும் அவர் 14 நாட்கள் தனிமையில் இருக்க முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.



 



 



அந்த வீடியோவில் மணிரத்தினம் மகன் நந்தன் கூறியபோது ’தனிமையில் இருப்பது கொஞ்சம் கஷ்டம்தான் என்றாலும் 14 நாட்கள் இருப்பது நமக்கும் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லது என்றும் இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா