சற்று முன்

ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |    ஏப்ரல் 3 வெளியாகி ரசிகர்களை கவர போகும் புதிய காதல் சயின்ஸ் பிக்ஷன் படம்!   |    “சம்பாலா” வெற்றிக்குப் பிறகு சந்தீப் கிஷனுடன் பிரம்மாண்ட பான்-இந்தியா படம் அறிவிப்பு   |    சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் ‘கேம் பிளே’ – கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!   |    சவால்களை கடந்து உருவான 'நீ Forever' – தயாரிப்பாளர் புகழின் உணர்ச்சிப்பூர்வமான உரை   |    ‘டிமாண்டி காலனி 3’ அப்டேட், ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!   |    ‘மேட் இன் கொரியா’ உலகம் முழுவதும் ஹிட்; நெட்ஃப்லிக்ஸில் முதலிடம்   |   

சினிமா செய்திகள்

தனுஷ் சொல்வதை கேளுங்கள்
Updated on : 21 March 2020

ஒரு மூன்று மாதத்துக்கு முன்னால் கொரோனா வைரஸ் நாம் எல்லோரையும் இப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். இந்த வைரஸ் தொடர்ந்து பரவாமல் தடுப்பது நம் கையில்தான் உள்ளது. பிரதமர் கேட்டுக்கொண்டபடி நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாம் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது. அப்படி நாம் இருப்பதால் நமது மருத்துவர்களுக்கு இந்த வைரஸை எதிர்த்து போராடுவதற்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.



 



டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்துப் போராடி வருகின்றனர். அவர்கள் குடும்பத்தில் இருப்பவர்கள், அவர்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகள் உயிரையும் பணயம் வைத்து போராடி வருகின்றார்கள். இவர்களுக்காக நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். வீட்டிலேயே இருப்பது ஒன்றுதான் நாம் செய்ய வேண்டும்.



 



நாளை ஒரு நாள் மட்டுமின்றி இன்னும் சில நாட்களுக்கு மிக அவசியம் என்றால் மட்டும் தேவையான பாதுகாப்புடன் வெளியே செல்ல வேண்டும். அவசிய தேவை இல்லையெனில் யாரும் வெளியேசெல்லாமல் வீட்டிலேயே இருக்கவும். ஒரு சில இளைஞர்கள் அசட்டு தைரியத்தால் வெளியே செல்கின்றனர். அவர்கள் தங்களுக்கு மட்டுமின்றி அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கும் ஆபத்தை தேடி கொள்கின்றனர். மற்றபடி அரசு மற்றும் டாக்டர்கள் கூறியவற்றை பின்பற்றி பாதுகாப்பாக இருப்போம். நாளை மாலை ஐந்து மணிக்கு நமக்காக போராடி வரும் டாக்டர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கைதட்டி ஆரவாரம் செய்வோம். இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா