சற்று முன்

அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |   

சினிமா செய்திகள்

ஸ்ரீரெட்டி மீது நடிகை அளித்துள்ள அவதூறு வழக்கு! - கைதி செய்ய காத்திருக்கும் காவல்துறை
Updated on : 23 February 2020

தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி, தமிழ் சினிமாவில் உள்ள சில முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதும் பாலியல் புகார் கூறினார். தெலுங்கு சினிமாவில் பாலியல் புகார் கூறிய ஸ்ரீரெட்டியை, அங்கிருந்து விரட்டியடிக்க, அவர் தற்போது சென்னையில் தஞ்சம் அடைந்திருப்பதோடு, இங்கேயே செட்டிலாவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.



 



வீடு, சொகுசு கார் என்று ஆடம்பரமாக சென்னையில் வசிக்கும் ஸ்ரீரெட்டி, சில படங்களிலும் நடித்து வருகிறார். அதே சமயம், அவ்வபோது தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தொடர்ந்து இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் பற்றி பாலியல் புகார்கள் மற்றும் அவர்களது அந்தரங்க விஷயங்கள் பற்றி பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.



 



 



அந்த வகையில், தெலுங்கு குணச்சித்திர நடிகை கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குநர் ராகேஷ் இருவரும் பல பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கி வருவதாக, ஸ்ரீரெட்டி, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த தகவலால் தெலுங்கு சினிமாவில் பெரும் சர்ச்சை வெடித்திருக்கும் நிலையில், இதில் சம்மந்தப்பட்ட நடிகையும், நடன இயக்குநர் ஸ்ரீரெட்டி மீது கடும் போபத்தில் இருக்கிறார்கள்.



 



மேலும், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்திருக்கும் நடிகை கல்யாணியும், நடன இயக்குநர் ராகேஷும், எந்த ஆதாரமும் இல்லாமல், தங்கள் மீது சமூக வலைதளத்தில் ஸ்ரீரெட்டி அவதூறு பரப்பி வருகிறார், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்கள்.



 



இந்த புகாரின் பேரில் ஸ்ரீரெட்டி மீது வழக்கு பதிவு செய்திருக்கும் போலீஸார், அவரை கைது செய்யவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா