சற்று முன்

10 ஆண்டுகளாக சமூகத்தின் குரலாக ஒலிக்கும் ‘விசாரணை’   |    ராஜூமுருகன் – சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’க்கு 2டி என்டர்டெயின்மென்ட் ஆதரவு!   |    என்கவுண்டர் போலீஸின் உள்ளக போராட்டம் – இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’!   |    985ஆம் ஆண்டு பின்னணியில் பிரம்மாண்டமாக உருவான ‘சுயம்பு’!   |    16 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அர்த்தம் புரிந்தது! – மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்   |    டீசர் வரும்முன்னே ₹225 கோடி ஒப்பந்தம் – உலக வெளியீட்டுக்கு தயாராகும் யாஷின் ‘டாக்ஸிக்’!   |    உலகையே ஆட்டம் போட வைத்த ‘Yethu’ – பிரபுதேவா & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!   |    மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |   

சினிமா செய்திகள்

வைரமுத்துவின் பேச்சுக்கு சீறிப்பாய்ந்த சின்மயி
Updated on : 22 January 2020

பிரபல திரைப்பட பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே சமயம், இந்த விஷயத்தில் ஒரு தரப்பினர் சின்மயிக்கு ஆதரவாகவும், ஒரு தரப்பினர் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வந்ததோடு, சின்மயியை பின்பற்றி மேலும் சிலரும் வைரமுத்து மீது புகார் அளித்தார்கள்.



 



சுமார் ஒரு வருடமாக நீடித்த இந்த சர்ச்சை, தற்போது அடங்கிவிட்டாலும், பாடகி சின்மயி மட்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், வைரமுத்துவுக்கு எதிராக காட்டமாக கருத்து வெளியிட்டு வருகிறார்.



 



அந்த வகையில், சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய வைரமுத்து, “பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட சமூக தீமைகளுக்கு காரணமான மதுவை ஒழிக்க வேண்டும்” என்று கூறினார்.



 



வைரமுத்துவின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் சின்மயி, “அப்போ 20-30 வருஷம் முன்னாடி ஒழிச்சிருந்தா நாங்க தப்பிச்சிருப்போம்ல” என்று தெரிவித்துள்ளார்.



 



வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார் தெரிவித்ததால், அவர் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட, சில வருடங்கள் டப்பிங் பேசாமல் இருந்தார். தற்போது மீண்டும் டப்பிங் பேச தொடங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா