சற்று முன்

’மெல்லிசை’ நான் நடிப்பை ஏன் இவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நினைவூட்டியது - நடிகர் கிஷோர்!   |    பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!   |    ‘திரௌபதி 2’ படத்தின் அடுத்த அப்டேட் - மூன்று வில்லன்கள் அறிமுகம்!   |    பல சவால்களை தாண்டி 'பராசக்தி' படத்தை படமாக்கினேன் - இயக்குநர் சுதா கொங்கரா!   |    அதர்வாவின் அர்ப்பணிப்பு இன்னும் அவரை பெரிய உயரத்திற்கு அழைத்து செல்லும் - நடிகை ஸ்ரீலீலா!   |    பல தருணங்களில் சிவகார்த்திகேயனை பார்த்து வியந்திருக்கிறேன் - நடிகர் ரவி மோகன்!   |    யாஷ் பிறந்தநாளில் 'டாக்ஸிக்' திரைப்படத்தில் யாஷ் கதாபாத்திரத்திர அறிமுக முன்னோட்டம்!   |    “ரவி மோகன் என்னுடைய நீண்ட நாள் இன்ஸ்பிரேஷன் - நடிகர் அதர்வா முரளி!   |    அம்மு அபிராமி முதன்மை வேடங்களில் நடித்துள்ள 'ஜாக்கி' திரைப்படத்தின் டீசர் வெளியீடு   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் ரசிகர்களின் வரலாற்றுச் சாதனை!   |    ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ படத்தில் ருக்மணி வசந்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    “மூன்வாக்” படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களால் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படும் ரசிகர்கள்!   |    இந்த தீ ஆபத்தான தீயில்லை கடவுள் முன்பு ஏற்றப்படுகின்ற அகல்விளக்கு - நடிகர் ரவி மோகன்   |    அப்பாவின் பெருமையையும் அழுத்தமாக பேசும் அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள “ஃபாதர்”!   |    விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி நடிப்பில் “காந்தி டாக்ஸ்” - 30 ஜனவரி 2026 அன்று வெளியாகிறது!   |    பால் தினகரன் தலைமையில் கேக் வெட்டி கிறிஸ்தவ ஒருங்கிணைப்பு புது வருட பிரார்த்தனை   |    கபிலன் வைரமுத்து எழுதியுள்ள ‘நித்திலன் வாக்குமூலம்’ நாவல் இன்று வெளியானது!   |    ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் மிஷ்கின் நடிக்கும் 'சுப்ரமணி'   |    'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    துபாயில் புதிய பாந்தர் கிளப் திறந்து வைத்த கிங் கான் ஷாருக்கான்!   |   

சினிமா செய்திகள்

வைரமுத்துவின் பேச்சுக்கு சீறிப்பாய்ந்த சின்மயி
Updated on : 22 January 2020

பிரபல திரைப்பட பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே சமயம், இந்த விஷயத்தில் ஒரு தரப்பினர் சின்மயிக்கு ஆதரவாகவும், ஒரு தரப்பினர் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வந்ததோடு, சின்மயியை பின்பற்றி மேலும் சிலரும் வைரமுத்து மீது புகார் அளித்தார்கள்.



 



சுமார் ஒரு வருடமாக நீடித்த இந்த சர்ச்சை, தற்போது அடங்கிவிட்டாலும், பாடகி சின்மயி மட்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், வைரமுத்துவுக்கு எதிராக காட்டமாக கருத்து வெளியிட்டு வருகிறார்.



 



அந்த வகையில், சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய வைரமுத்து, “பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட சமூக தீமைகளுக்கு காரணமான மதுவை ஒழிக்க வேண்டும்” என்று கூறினார்.



 



வைரமுத்துவின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் சின்மயி, “அப்போ 20-30 வருஷம் முன்னாடி ஒழிச்சிருந்தா நாங்க தப்பிச்சிருப்போம்ல” என்று தெரிவித்துள்ளார்.



 



வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார் தெரிவித்ததால், அவர் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட, சில வருடங்கள் டப்பிங் பேசாமல் இருந்தார். தற்போது மீண்டும் டப்பிங் பேச தொடங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா