சற்று முன்

பிரஜன், இவானா வருண் நடிப்பில் காதலை மையமாகக் கொண்ட துப்பறியும் திரில்லர்!   |    தனது பிறந்த நாளன்று கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா!   |    புனித நகரில் அறிமுகப்படுத்தபட்ட 'கல்கி 2898 AD' அமிதாப்பச்சனின் பிரம்மாண்டமான கதாபாத்திரம்!   |    பிரைம் வீடியோவில் சாதனை படைத்த ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’   |    சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும் 'மிராய்' பட வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!   |    'புரடக்சன் நம்பர் 36' படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது!   |    'சூரன்' படத்தின் டைட்டில் மற்றும் சிறப்பு காணொளியையும் வெளியிட்ட படக்குழுவினர்   |    கனா படப்புகழ் தர்ஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் நடிப்பில் மனதை மயக்கும் ஆல்பம் பாடல்!   |    வேல்ஸ் கால்பந்து கிளப்பிற்கு ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் பயிற்சியாளராக நியமனம்   |    ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்!   |    சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு   |    இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு   |    வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் மே 3, 2024 முதல் உலகம் முழுவதும்   |    புகழ்பெற்ற பாலிவுட் நடிகரின் வரவால் பான் இந்தியா திரைப்படமாக மாறிய ‘கண்ணப்பா’   |    கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநர் பரம்!   |    சர்வதேச தரமிக்க தொழில்நுட்ப சிறப்பம்சங்களுடன் தயாராகிறது ராமாயண காவியம்!   |    நிவின்பாலியின் உயிர்ப்புள்ள நடிப்பில் உருவாகியுள்ள 'வர்ஷங்களுக்கு சேஷம்'   |    'பிரேமலு' ஏப்ரல் 12 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழில் வெளியாகவுள்ளது   |    'திரு.மாணிக்கம்' படத்தில் தன் நவீன இசையால் அனைவரையும் கவரவிருக்கும் விஷால் சந்திரசேகர்!   |    'லவ் டுடே' வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது!   |   

சினிமா செய்திகள்

பொங்கலன்று கார்த்தியும் அவர் மகளும் செய்த செயல்
Updated on : 22 January 2020

 



 காலிங்கராயன் கால்வாயில் பொங்கல் விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஆற்றில் விடும் விழாவிற்கு தன் குடும்பத்துடன் சென்றார் நடிகர் கார்த்தி. அந்த கால்வாயை மீட்டு மீண்டும் அனைவரும் உபயோகிக்கும் வகையில் மீட்டெடுக்க இளைஞர்களுக்கு கோரிக்கை வைத்துப் பேசியதாவது :-



 



738 ஆண்டுகளுக்கு முன்பு காளிங்கராயன் என்பவர் மக்களுக்காக இந்த கால்வாயை கட்டினார். அவர் பெயரே இந்த கால்வாய்க்கு சூட்டப்பட்டுள்ளது. தங்களுடைய சுய நலத்திற்காக தான் இதை கட்டினார்கள் என்று யாரும் கூறிவிட கூடாது என்பதற்காக அந்த கால்வாயிலிருந்து தண்ணீர் கூட அருந்தாமல் குடும்பத்துடன் ஊரை விட்டு சென்றார்கள். அன்று முதல் இன்று வரை நாம் தான் இந்த நீரை அனுபவித்து வருகிறோம். 



 



இத்தனை ஆண்டு காலமாக நீர் அனைவருக்கும் பயன்படும் விதமாக இருந்து வந்துள்ளது. ஆனால், கடந்த 40 ஆண்டு காலமாக இந்த நீரைப் பயன்படுத்த இயலாமல் இருக்கிறது. அதற்கு காரணம் இப்பகுதியை சுற்றியுள்ள தொழிற்சாலைகளால் தான். இனி சாலைகளில் இருந்து வரும் கழிவுநீர் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்கள் பயன்படுத்த முடியாத நினைக்க வேண்டியிருக்கிறது. இதனை இளைஞர்கள் தான் மாற்ற வேண்டும். ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் சென்று அவர்களுடைய பொருட்செலவில் கழிவு நீரை சுத்தப்படுத்தி பின்பு கால்வாயில் கலக்க செய்யுமாறு வலியுறுத்தி கடிதம் கொடுக்க வேண்டும்.



 



தனிமனிதனாக மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற காளிங்கராயனின் சிறந்த செயல் அழியாதவாறு பாதுகாக்க வேண்டும். நோய்நொடி இல்லாத ஆரோக்கியமான குழந்தைகள் பிறப்பதற்கு நாம் வழி முறை செய்ய வேண்டும். நோய் இல்லாமல் இருப்பதும் நோய் இல்லாமல் வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை .அதை உணர்ந்து இளைஞர்கள் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.



 



மேலும், நான் சிறுவயதில் ஊருக்கு செல்லும்போதும் எங்கள் ஊரில் இதுபோன்ற நீரை நான் கண்டதில்லை. திருமணம் முடிந்து முதல் முறையாக இந்த ஊருக்கு வந்தபோது தண்ணீரைப் பார்த்து நான் பொறாமை அடைந்தேன்.



என் வாழ்நாளில் இன்று தான் முதல் முறையாக முளைப்பாரியை ஆற்றில் விட்டிருக்கிறேன். என் மகளும் ஆற்றில் விட்டது அவளுடைய வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வாக இருக்கும். மக்களுக்காக இந்த கால்வாயை நிச்சயம் பாதுகாக்க வேண்டும்.



 



அடுத்த தலைமுறையினருக்கு தங்களுடைய சொந்த செலவில் பிறருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும்.



 



மேலும், விவசாயிகள் என்றாலே வயதானவர்கள் என்று தான் அனைவரும் எண்ணுகிறார்கள். இளைஞர்கள் விவசாயம் செய்வதற்கு முன்வர வேண்டும். நானும் சென்றுவர வசதியாக இருக்கும் வகையில் சென்னைக்கு அருகில் விவசாயம் செய்வதற்கான நிலத்தை பார்த்து வருகிறேன்.



 



இவ்வாறு கார்த்திக் கூறினார்.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா