சற்று முன்

யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |    'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!   |    பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்   |    மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'   |    'படையாண்ட மாவீரா' மக்களிடத்தில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும்!   |    நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் 'An Ordinary Man' படத்தின் ப்ரோமோ வெளியீடு   |    மாபெரும் 3D அனிமேஷன் சினிமா 'வாயுபுத்ரா' புனிதமிக்க உலகின் பிரம்மாண்டம்!   |    அதிரடி காட்சிகளுடன் விரைவில் துவங்கவுள்ள பான்-இந்தியா திரைப்படம் 'சம்பராலா ஏடிகட்டு (SYG)'   |    நிவின் பாலியின் அதிரடி லுக்கில் உருவாகும் அழுத்தமான இன்வஸ்டிகேடிவ் திரில்லர் ‘பேபி கேர்ள்’   |    அன்போடு 'ஸ்வீட்டி' என்று அழைக்கப்படும் அனுஷ்கா ஷெட்டிக்கு பிரபாஸ் வாழ்த்து பதிவு!   |    100 கோடி வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘லோகா - அத்தியாயம் 1’!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அதிரடி திரில்லர் கூலி, செப்டம்பர் 11 முதல் பிரைம் வீடியோவில்!   |    கீர்த்தி சுரேஷ் & மிஷ்கின் நடிப்பில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் விமரிசையாக துவங்கியது!   |    ரொமான்ஸ் காமெடி ஜானரில் இளைஞர்களை கவரும் வகையில் உருவாகியுள்ள 'பூக்கி' பூஜையுடன் துவங்கியது!   |   

சினிமா செய்திகள்

கார்த்தி நடித்த படத்தின் நிஜ ஹீரோ செய்தது என்ன...
Updated on : 18 September 2019

அனைத்திந்திய மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட் அமைப்பின் அங்கிகாரம் பெற்ற தமிழ்நாடு மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ் சங்கத்தின் துவக்க விழா மற்றும் பொறுப்பாளர் நியமன நிகழ்ச்சி, சென்னை கீழ்ப்பாக்கதில் உள்ள ஓய்.எம் சி.ஏ. அரங்கில் நடைப்பெற்றது.



 



நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராக தமிழக முன்னாள் டி.ஜி.பி. திரு.எஸ்.ஆர். ஜாங்கிட்.ஐ.பி.எஸ். அவர்கள்  கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி சங்கத்தின் இணையதள பக்கத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.



 



தி.ரு.எஸ்.ஆர். ஜாங்கிட் அவர்கள், ஒன்பது வருடங்களுக்கு மேலாக, தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பயங்கர கொலை கொள்ளை குற்றங்களை செய்து வந்த பவாரியா கொள்ளை கும்பலை கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் கார்த்தி நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படம்.

நிகழ்ச்சியில் சர்வதேச வீரரும் தமிழ்நாடு எம்.எம்.ஏ. தலைமை பயிற்சியாளறுமான திரு.சதிஷ் அவர்கள் பொதுச்  செயலாளராக பொறுப்பேற்று  முன்னிலை வகித்தார்.



 



மேலும் இந்த நிகழ்வில் உலகின் மாபெரும் போட்டியான யு.ப்.சி.(அல்டிமேட் பைட்டிங் சாம்பியன்சிப்) போட்டியில் கலந்து கொண்ட இந்தியாவின்  முதல் வீரரான திரு.பரத் கந்தாரே முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தின் துணை செயலாளர் பொறுப்பை ஏற்று கொண்டார்.



 



தலைவராக தேடல் தொண்டு அமைப்பின் நிறுவனர் திரு. ஜோஸ்வா கிளிமன்ட்ஸ், துணைத்  தலைவர்களாக திரு.ராபின்சன் மற்றும் திரு.ஷரவண் அவர்களும் இணை செயலாளர்களாக திரு. விக்ரம் மற்றும் மெல்வின் தீபக் அவர்களும் பொருளாளராக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திரு. ஹரிஷ் அவர்களும் தலைமை ஆலோசகராக இந்தியாவின் ஜுடோ கிராண்ட் மாஸ்டர் திரு. சி.எஸ். ராஜகோபால் அவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.



 





நிகழ்ச்சியில் திரு.எஸ்.ஆர். ஜாங்கிட் அவர்கள் பேசும்போது,

தமிழ்நாட்டில் இருந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர்.

எம்.எம்.ஏ போன்ற வீர விளையாட்டு மூலம் இளைய சமுதாயத்திற்க்கு தன்னம்பிக்கையிம் மனபலமும் அதிகமாகும். மேலும் இது, மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாகவும் இருக்கும் என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா