சற்று முன்

மகேஷ் பாபு–SS ராஜமௌலி கூட்டணியின் அடுத்த மாபெரும் திரில்லர் “வாரணாசி”   |    ஜென்-ஜி காதல் கதை “வித் லவ்” – அட்லீவின் வாழ்த்துடன் ட்ரெய்லர் வெளியீடு!   |    பார்ட் 1-ஐ மிஞ்சிய பார்ட் 2 - ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ வெற்றியின் கொண்டாட்டம்!   |    'ஆகாசம்லோ ஒக தாரா'-வில் ஸ்ருதி ஹாசன் என்ட்ரி… துல்கர் சல்மான் படத்திற்கு புதிய பரிமாணம்!   |    ZEE5-ல் ‘சிறை’ மெகா சாதனை - 156 மில்லியன் பார்வை நிமிடங்கள்!   |    சத்தமில்லா சினிமா - ஆனால் தாக்கம் அதிகம்! ‘காந்தி டாக்ஸ்’ டிரெய்லர் வெளியீடு   |    என் அடுத்த படம் ‘கைதி 2’ தான் – சம்பள சர்ச்சை, LCU, ரஜினி–கமல் படம் குறித்து லோகேஷ் விளக்கம்   |    சித்தார்தின் ‘ரெளடி & கோ’ வித்தியாசமான போஸ்டர் கான்செப்ட்   |    காதலின் ஐந்து உயிரெழுத்துகள்… ‘VOWELS – An Atlas of Love’ டைட்டில் லுக் வெளியீடு!   |    ராக் ஸ்டார் அனிருத் வெளியிட்ட ‘ராவடி’ ஃபர்ஸ்ட் லுக்! – ரசிகர்கள் உற்சாகம்   |    17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் மம்மூட்டி, மோகன்லால்!   |    17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!   |    ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மோகன் ஜி!   |    ஜி.வி. பிரகாஷ் இசையில் சிவனின் மகிமையை போற்றும் முதல் திருவாசக பாடல் வெளியீடு   |    பாலிவுட்டை நோக்கி இசையமைப்பாளர் 'ஹேஷம் அப்துல் வஹாப்'!   |    தமிழில் அடியெடுக்கும் கன்னட ஹீரோ சதீஷ் நினாசத்தின் ‘ரைஸ் ஆஃப் அசோகா’   |    ‘திரௌபதி 2’க்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலம்   |    நிஜ வாழ்வுக் கதைகளின் சக்தியை கொண்டாடும் Docu Fest Chennai   |    ‘சிறை’ வெற்றிக்குப் பிறகு L.K. அக்ஷய் குமார் நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பம்!   |    டோவினோ தாமஸின் பிறந்தநாளுக்கு ஐந்து மொழிகளில் வெளியான “பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்!   |   

சினிமா செய்திகள்

கார்த்தி நடித்த படத்தின் நிஜ ஹீரோ செய்தது என்ன...
Updated on : 18 September 2019

அனைத்திந்திய மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட் அமைப்பின் அங்கிகாரம் பெற்ற தமிழ்நாடு மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ் சங்கத்தின் துவக்க விழா மற்றும் பொறுப்பாளர் நியமன நிகழ்ச்சி, சென்னை கீழ்ப்பாக்கதில் உள்ள ஓய்.எம் சி.ஏ. அரங்கில் நடைப்பெற்றது.



 



நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராக தமிழக முன்னாள் டி.ஜி.பி. திரு.எஸ்.ஆர். ஜாங்கிட்.ஐ.பி.எஸ். அவர்கள்  கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி சங்கத்தின் இணையதள பக்கத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.



 



தி.ரு.எஸ்.ஆர். ஜாங்கிட் அவர்கள், ஒன்பது வருடங்களுக்கு மேலாக, தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பயங்கர கொலை கொள்ளை குற்றங்களை செய்து வந்த பவாரியா கொள்ளை கும்பலை கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் கார்த்தி நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படம்.

நிகழ்ச்சியில் சர்வதேச வீரரும் தமிழ்நாடு எம்.எம்.ஏ. தலைமை பயிற்சியாளறுமான திரு.சதிஷ் அவர்கள் பொதுச்  செயலாளராக பொறுப்பேற்று  முன்னிலை வகித்தார்.



 



மேலும் இந்த நிகழ்வில் உலகின் மாபெரும் போட்டியான யு.ப்.சி.(அல்டிமேட் பைட்டிங் சாம்பியன்சிப்) போட்டியில் கலந்து கொண்ட இந்தியாவின்  முதல் வீரரான திரு.பரத் கந்தாரே முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தின் துணை செயலாளர் பொறுப்பை ஏற்று கொண்டார்.



 



தலைவராக தேடல் தொண்டு அமைப்பின் நிறுவனர் திரு. ஜோஸ்வா கிளிமன்ட்ஸ், துணைத்  தலைவர்களாக திரு.ராபின்சன் மற்றும் திரு.ஷரவண் அவர்களும் இணை செயலாளர்களாக திரு. விக்ரம் மற்றும் மெல்வின் தீபக் அவர்களும் பொருளாளராக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திரு. ஹரிஷ் அவர்களும் தலைமை ஆலோசகராக இந்தியாவின் ஜுடோ கிராண்ட் மாஸ்டர் திரு. சி.எஸ். ராஜகோபால் அவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.



 





நிகழ்ச்சியில் திரு.எஸ்.ஆர். ஜாங்கிட் அவர்கள் பேசும்போது,

தமிழ்நாட்டில் இருந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர்.

எம்.எம்.ஏ போன்ற வீர விளையாட்டு மூலம் இளைய சமுதாயத்திற்க்கு தன்னம்பிக்கையிம் மனபலமும் அதிகமாகும். மேலும் இது, மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாகவும் இருக்கும் என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா