சற்று முன்

இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |    'டியூட்' ல் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டதும் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் - சரத்குமார்   |    புதிய சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தும், 'அசுர ஆகமனா' (Asura Aagamana) சிறு முன்னோட்டம்!   |    சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ” நேரடியாக OTT யில்   |    ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்த 'உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்'!   |    தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |    'அகண்டன்' தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.   |    நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'விருஷபா'   |    விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் இணைந்துள்ளார்!   |    நயன்தாராவுடன் கவின் இணைந்து நடிக்கும் 'ஹாய்' (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!   |    இணையத்தில் வைரலாக பரவி வரும் 'வா வாத்தியார்' பட போஸ்டர்!   |    ஐசரி  K கணேஷ், பிறந்தநாளில் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ள வேல்ஸ் நிறுவனம்!   |   

சினிமா செய்திகள்

ஜெயம் ரவி மற்றும் ஐசரி கணேஷுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர்
Updated on : 14 August 2019

இன்றைய இளைய தலைமுறையின் மிக பெரிய பலமே அவர்களின் பரந்து விரிந்த கற்பனை  திறன் தான்.  அந்த தரமான வரிசையில் அடுத்ததாக இணைய போகிறவர் அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். வருகின்ற 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பெரும் எதிர்பார்ப்போடு வெளி வர இருக்கும் "கோமாளி" படத்தின் மூலம் அறிமுகமாகும் பிரதீப் ரங்கநாதன் தமிழ்  திரை உலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்வார் என திரை உலகம் கணிக்கின்றது.



 





" இந்த புகழ் மற்றும் பாராட்டு அனைத்துமே எனக்கு உரியவை அல்ல. எங்கள் குழுவினர் அனைவருக்குமே உரியதானது.ஜெயம் ரவி முதல் காஜல் அகர்வால், ஹிப்ஹாப் ஆதி உள்ளிட்ட அனைவருக்கும் உரியது. இக்கட்டான , சவாலான நேரங்களில் இவர்கள் மூத்தவர்களாக எனக்கு கொடுத்த தைரியம் மற்றும் ஊக்கம் மறக்க முடியாதது.என்னை போன்ற அறிமுக இயக்குனரை துணிந்து அறிமுகம் செய்யும் தயாரிப்பாளர் ஐசரி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. என்னுடன் பணிபுரிந்த அனைவருக்கும் என் நன்றி உரியது. குறிப்பாக என் கலை இயக்குனர், மற்றும் அவரது குழுவினருக்கு உளமார்ந்த நன்றி. குறிப்பாக அந்த சென்னை வெள்ள காட்சிகளில் அவர்களது உழைப்பும், திட்டமிடுதலும் சொல்லில் அடங்காதவை. படத்தின்  வெள்ளோட்டம் (ட்ரைலர் )  ரசிகர்களுக்கு படம் எதை பற்றியது என்பதை தெளிவாக கூறி விட்டது.



 





 படத்தின் மைய கருத்து  90ஸ் கிட்ஸ் எனப்படும் 90 இல் பிறந்த இளைஞர்களின் சாதனையையும் , அவர்களின் தற்போதைய அனுசரிப்பை பற்றியும் பேசும்.  இந்த படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் நிச்சயம் கவரும் "  என்கிறார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளிவர உள்ள "கோமாளி" படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளி இடுகிறது. ஜெயம் ரவி , காஜல் அகர்வால் இணையாக நடிக்க சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்க , ஹிப் ஹாப் ஆதி இசை அமைப்பில் , வேல்ஸ் பிலிம் இன்டெர்னஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா