சற்று முன்

‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |    ஏப்ரல் 3 வெளியாகி ரசிகர்களை கவர போகும் புதிய காதல் சயின்ஸ் பிக்ஷன் படம்!   |    “சம்பாலா” வெற்றிக்குப் பிறகு சந்தீப் கிஷனுடன் பிரம்மாண்ட பான்-இந்தியா படம் அறிவிப்பு   |    சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் ‘கேம் பிளே’ – கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்!   |    சவால்களை கடந்து உருவான 'நீ Forever' – தயாரிப்பாளர் புகழின் உணர்ச்சிப்பூர்வமான உரை   |    ‘டிமாண்டி காலனி 3’ அப்டேட், ‘தி லைப்ரரியன்’ கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!   |    ‘மேட் இன் கொரியா’ உலகம் முழுவதும் ஹிட்; நெட்ஃப்லிக்ஸில் முதலிடம்   |    சுந்தர் சி – துரை V.Z. வெற்றி கூட்டணியில் திகில் படம்   |    பின்தங்கிய குடும்பங்களுக்கு 50 வீடுகள்! - ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளையின் சமூக சேவை   |    பெண்கள் பாதுகாப்பை பேசும் ‘எஸ் கே எஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு   |    சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் டீசர் வெளியீடு   |    ‘கே டி : தி டெவில்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு… ரசிகர்களிடையே உற்சாகம்   |    ‘சிறை’ திரைப்பட வெற்றிவிழா – படக்குழுவிற்கு கேடயம் வழங்கி கௌரவிப்பு   |    18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் ‘தாம் தூம்’   |    'சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு' நடிகர் குமரனின் சினிமா பயணம்   |    “முத்து என்கிற காட்டான்” டிரெய்லர் வெளியீடு , மர்மத்தை அதிகரிக்கும் புதிய காட்சிகள்   |    “நீ Forever” – Gen Z காதலை பேசும் புதிய லவ் டிராமா மார்ச் 27 முதல் திரையரங்குகளில்!   |   

சினிமா செய்திகள்

திடுக் சம்பவங்களும் அமானுஷ்யங்களும் உள்ளடக்கிய 'பிரம்மபுரி'
Updated on : 24 July 2019

பல நூற்றாண்டுகளாக "பிரம்மபுரி" என்ற காணாமல் போன நகரை தேடி வந்த தகவல் இந்த நூற்றாண்டில் ஒரு குழுவிற்கு தெரிய வருகிறது. அந்த நகரில் தான் மிகப் பெரிய வைரப்புதையல் இருப்பதாகவும் கேள்விப்பட்ட அந்த குழுவினர் அந்த நகரையும்  புதையலையும் தேடி புறப்படுகின்றனர். அந்த குழுவினர் சந்திக்கும் திடுக்கிடும் சம்பவங்களும், பல அமானுஷ்யமான நிகழ்வுகளும் அவர்களுக்கு மிகப் பெரிய ஆபத்தை உண்டாக்குகிறது. இதிலிருந்து அவர்கள் மீண்டார்களா?மாண்டார்களா? என்பதை திரில்லாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லி இருக்கிறேன். அமெரிக்காவில் பெரும் பகுதி படம் படமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு - கேரளா-கர்நாடக வனப் பகுதிகளிலும் படம் வளர்ந்துள்ளது." என்றார். " இயக்குனர்.



 







கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகும் கிரண் மோகன் இயக்குனர் பார்த்திபனிடம் பல படங்களில் உதவியாளராக பணியாற்றியவர்

என்பது குறிப்பிடத்தக்கது.



 







இதில், வர்கீஸ், ஜெர்மனியை சேர்ந்த மாடல் அழகி மார்ஷா, மிதுனா, ராம்சுபீன் ஜோஸ், பவானி அம்மா, கௌதம், 'மலேசியாவை சேர்ந்த 'அஜித் ஆகியோருடன் மேலும் பலரும் நடித்துள்ளனர்.



 





ராகேஷ் வாலி ஒளிப்பதிவையும், மிக்கு காவில் இசையையும், பிரதீப்சங்கர் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.



 







எபின் கொட்ட நாடன் மிகுந்த பொருட் செலவில் 369 பிலிம்ஸ் சார்பில்

"பிரம்மபுரி " படத்தை தயாரித்துள்ளார். அடுத்த மாதம் திரைக்கு வருகிறது

" பிரம்மபுரி "



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா