சற்று முன்

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மூன்று விருதுகளை வென்றுள்ள ‘பார்க்கிங்'!   |    இலங்கையில் ஜொலிக்கும் வரலட்சுமி சரத்குமார்!   |    'மீஷா' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!   |    'தலைவன் தலைவி' படத்தின் மூலம் வெற்றி பயணத்தை தொய்வின்றி தொடரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்   |    ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த 'மகாஅவதார் நரசிம்மா' !   |    சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!   |    'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!   |    ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது!   |    இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ள 'அந்த 7 நாட்கள்' பட சிங்கிள்   |    நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா   |    அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ள படம் YouTube-இல்!   |    சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் 'போகி'   |    சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல்!   |    ‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |    வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் என்னை சிந்திக்க தூண்டியது! - நடிகர் சத்யராஜ்   |    பிரமாண்டமாக அரங்கேறும் 'ராக் ஸ்டார் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி!   |    தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் வெளிவரும் ‘சட்டமும் நீதியும்’!   |   

சினிமா செய்திகள்

தெறி படத்தை திரையிடாத திரையரங்குகளுக்கு கபாலி இல்லை
Updated on : 21 April 2016

விஜய் நடித்த தெறி திரைப்படம், செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள பல்வேறு  திரையரங்குகளில் வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளர் சங்கம் மற்றும்  திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திற்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.



 



இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில், தெறி திரைப்படத்தினைத் திரையிட்ட திரையரங்குகளைத் தவிர மற்ற எந்தத் திரையரங்குகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



 



இதுகுறித்து, திரையரங்க உரிமையாளர் சங்க பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம், தெறி படத்தை திரையிடாத திரையரங்குகளுக்கு கபாலி படத்தை தரமாட்டோம் என தாணு கூறுகிறார். செங்கல்பட்டு ஏரியாவுக்கு கபாலி படத்தை தரவில்லை என்றால், தமிழகம் முழுவதும் அப்படத்தை திரையிட மாட்டோம். மேலும், இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த் தலையிடவேண்டும். மினிமம் கியாரண்டி அடிப்படையில் படத்தை திரையிட மாட்டோம். சதவீத அடிப்படையில் படத்தை திரையிட வழிவகை செய்ய வேண்டும் என கூறினார்.



 



திரையரங்க உரிமையாளர் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இடையிலான பிரச்சனை தொடர்ந்துக்கொண்டிருப்பதால், இருவருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா