சற்று முன்
சினிமா செய்திகள்
மீண்டும் நம்மை மகிழ்விக்க வரும் ஒரிஜினல் கபடி
Updated on : 05 July 2019
2009ம் ஆண்டு கபடி போட்டியை பிரதான படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து எல்லாதரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றி பெற்ற படம் “வெண்ணிலா கபடி குழு”. இப்படத்தின் மூலம் நடிகர்கள் விஷ்ணு விஷால், புரோட்டா சூரி, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழ் சினிமா உலகில் அங்கீகாரம் கிடைத்தது.
மீண்டும் இயக்குனர் சுசீந்திரனின் முலக்கதையில் இயக்குனர் செல்வசேகரன் இயக்கத்தில் புதுப்பொலிவுடன் “வெண்ணிலா கபடி குழு 2” திரைப்படம் விரைவில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்க்கவுள்ளது.
அனைவரும் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் கபடி விளையாட்டை பிரமாதமாகவும் பிரம்மாண்டமாகவும் எடுக்கப்பட்டுள்ளது “வெண்ணிலா கபடி குழு 2”.
1987ம் ஆண்டில் கிரமங்களில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மிக விமர்சையாக திருவிழா போல் கபடி விளையாட்டு போட்டியை கொண்டாடும் நிகழ்வை அப்படியே நம் கண்முண்னே கொண்டு வந்துள்ளதாகவும், மேலும் முதல் பாகத்தில் நடித்த புரோட்டா சூரி, அப்புகுட்டி என பல நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் நடித்தது இப்படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது என்று கூறியுள்ளார் இயக்குனர் செல்வசேகரன்.
இப்படத்தின் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்துள்ளனர். மேலும் பசுபதி, புரோட்டா சூரி, கிஷோர், அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சாய் அற்புதம் சினிமாஸ் சார்பாக பூங்காவனம், ஆனந்த் தயாரித்துள்ள இப்படத்தை விஜய் சேதுபதி நடித்த கருப்பன், இரும்புத்திரை, தர்மதுரை, அண்ணாதுரை படங்களின் வினியோகஸ்தர் பிக்சர் பாக்ஸ் அலெக்ஸாண்டர் இந்த படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறார்.
படத்திற்கு இசை – செல்வகணேஷ்
ஒளிப்பதிவு – E. கிருஷ்ண்சாமி
சண்டைப்பயிற்சி – சூப்பர் சுப்பராயன்
மக்கள் தொடர்பு – P.T.செல்வகுமார்
நிஜ கபடி வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்ட மின்னொலி கபடி போட்டியை 8 நாட்கள் தொடர்ந்து தத்ருபமாக படமாக்கியுள்ளார்கள். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக "வெண்ணிலா கபடி குழு 2" படம் அமையும்.
சமீபத்திய செய்திகள்
டீசர் வெளியீட்டில் கவனம் ஈர்த்த ‘காதல் ரீசெட் ரிபீட்’ – மார்ச் 6 உலகம் முழுவதும் ரிலீஸ்!
Malali Manvi Movie Makers, D Studios மற்றும் Denvi Productions நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், இயக்குநர் விஜய் இயக்கியுள்ள இந்த படம், காதல் கதையை புதுமையான கோணத்தில் சொல்லும் முயற்சியாக உருவாகியுள்ளது.
முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முன்பே வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், டீசரும் அதே அளவிலான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ‘ரீசெட்’ – ‘ரிபீட்’ என்ற தலைப்புக்கேற்றபடி, காதல், நினைவுகள், எதிர்பாராத திருப்பங்கள் ஆகியவை கலந்த காட்சிகளுடன் டீசர் அமைந்துள்ளது. இது வழக்கமான காதல் கதை அல்ல என்பதைக் காட்டும் வகையில் சஸ்பென்ஸும் உணர்ச்சியும் இணைந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இப்படத்தில் மதும்கேஷ் மற்றும் ஜியா சங்கர் முதன்மை ஜோடியாக அறிமுகமாக, மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பல புதுமுகங்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி வரும் இயக்குநர் விஜய், இந்தப் படத்தின் மூலம் புதிய நட்சத்திர ஜோடியை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார்.
ஒளிப்பதிவை அரவிந்த் கிருஷ்ணா கவனித்திருக்க, படத்தொகுப்பை ஆண்டனி மேற்கொண்டுள்ளார். கலை இயக்கம் – சரவணன் வசந்த், சண்டை இயக்கம் – மனோகர் வர்மா, உடை வடிவமைப்பு – ருச்சி முனோத் ஆகியோர் தொழில்நுட்ப அணியில் இணைந்துள்ளனர். பாடல் வரிகளை வைரமுத்து, கார்கி, ஆர்கஸ் ஆர்யன் எழுதியுள்ளனர். இப்படத்தின் இசை உரிமையை T-Series நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
டீசர் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பார்வைகளைப் பெற்று, ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. தற்போது படக்குழு, மார்ச் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைப்படத்தை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழக வெளியீட்டை Romeo Pictures நிறுவனம் மேற்கொள்கிறது.
இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. காதலின் புதிய பரிமாணத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
‘நாக பந்தம்’ டீசர் வெளியீடு: மகா சிவராத்திரியில் தொடங்கிய காவியப் பயணம்
நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த புராண ஆக்ஷன் திரைப்படமான ‘நாக பந்தம்’ படத்தின் டீசர், மகா சிவராத்திரி புனித நாளில் வெளியிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரிப்பில், அபிஷேக் நாமா இயக்கத்தில், விராட் கர்ணா நடிப்பில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட படைப்பு, உலகத் தரத்தில் உருவாக்கப்பட்ட மாபெரும் முயற்சியாக அமைந்துள்ளது.
டீசரை ‘டோலிவுட் பிரின்ஸ்’ என அழைக்கப்படும் மகேஷ்பாபு வெளியிட்டது, படத்திற்கான எதிர்பார்ப்பை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. வெளியீட்டுக்குப் பிறகு நாடு முழுவதும் பெரும் வரவேற்பும், சமூக வலைதளங்களில் ஆர்வ அலையும் உருவாகியுள்ளது.
இமயமலையின் பனிமூட்டம் சூழ்ந்த மர்மப் பரப்பில் தொடங்கும் டீசர், காலத்தை விடப் பழமையான ரகசியம் புதைந்து கிடக்கும் உலகின் கதவுகளைத் திறக்கிறது. ஒரு மனிதனின் பேராசை பிரபஞ்ச ரகசியத்தை அச்சுறுத்தும் தருணத்தில், விதி தனது போர்வீரனைத் தேர்ந்தெடுக்கிறது என்பதைக் காட்சிமொழியால் வலிமையாக உணர்த்துகிறது.
வரலாற்றில் அப்தாலி தலைமையிலான ஆப்கானிய படையெடுப்பின் தாக்கத்தால் ஓரளவு ஈர்க்கப்பட்ட இந்தக் கதை, புராணம், வரலாறு மற்றும் ஆன்மீகப் போர் ஆகியவற்றை இணைக்கிறது. காவியத்தின் மையமாக ‘நாகபந்தம்’ கோயில் அமைந்துள்ளது. வான சக்திகளால் பாதுகாக்கப்படும் பண்டைய அண்ட சக்தியை தாங்கி நிற்கும் இந்தக் கோயில், தவறான கைகளில் விழுந்தால் பேரழிவை ஏற்படுத்தும் வல்லமை கொண்டதாகக் காட்சிப்படுத்தப்படுகிறது.
“பிரம்மாவின் படைப்பிலிருந்து பிறந்து, விஷ்ணுவின் தர்மத்தால் பாதுகாக்கப்பட்டு, மகாதேவின் கோபத்தால் இயக்கப்படுகிறது” என்ற வரிகள், படத்தின் ஆன்மாவை சுருக்கமாக வெளிப்படுத்துகின்றன. தெய்வீகம், விதி, அழிவு ஆகியவை மோதும் காவியப் போரின் முன்அறிவிப்பாக டீசர் அமைகிறது.
இயக்குநர் அபிஷேக் நாமா தனது தெளிவான பார்வையையும் துணிச்சலான இலட்சியத்தையும் டீசர் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். உரையாடல் இல்லாமல் காட்சிகளின் வலிமையால் மட்டுமே பரபரப்பை உருவாக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட டீசர், தொழில்நுட்ப ரீதியாகவும் உயர்ந்த தரத்தை நிரூபிக்கிறது.
ஒளிப்பதிவாளர் சௌந்தரராஜன் S இமயமலையின் இயற்கைக் காட்சிகளை பிரம்மாண்டமாக பதிவு செய்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பில் அசோக் குமார், பின்னணி இசையில் ஜுனைத்குமார், எடிட்டிங்கில் R. C. பிரணவ் ஆகியோர் இணைந்து டீசருக்கு சக்திவாய்ந்த திரை அனுபவத்தை வழங்கியுள்ளனர்.
விராட் கர்ணா கதாநாயகனாக மட்டுமல்லாமல் சிவனாக காட்சியளிக்கும் தருணங்கள் டீசரின் முக்கிய அம்சமாகத் திகழ்கின்றன. தீவிரம், உடல் மொழி, உணர்ச்சி ஆழம் ஆகியவற்றுடன் அவர் வழங்கும் நடிப்பு, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
மேலும் விராட் கர்ணா , நபா நடேஷ் , ஐஸ்வர்யா மேனன், ரிஷப் சாவ்னி, ஜெகபதி பாபு , கருடா ராம், மகேஷ் மஞ்சரேக்கர் , ஜெயப்பிரகாஷ் ,முரளி சர்மா, அனுசுயா பரத்வாஜ், பி. எஸ் .அவினாஷ் மற்றும் பலர்உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஹைதராபாத்திலுள்ள பிரசாத் PCX திரையரங்கில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் டீசர் சிறப்பு திரையிடல் நடைபெற்றது. பத்திரிகையாளர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டிய இந்த டீசர், ‘நாக பந்தம்’ படத்தை மிகுந்த எதிர்பார்ப்புள்ள பான் இந்திய படமாக நிலைநிறுத்தியுள்ளது.
இந்த கோடையில் தர்மம் உயர்ந்து, அழிவு நடுங்கும் காவியப் போரைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இன்றைய தலைமுறைக்கான பாடல் எழுதுவது எனக்கு பெருமை - இயக்குநர் சரண்
JB Films சார்பில் தயாரிப்பாளர் P. ரகு தயாரிப்பில், இயக்குநர் R. மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையமாகக் கொண்டு அழகான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்” படம், வரும் பிப்ரவரி 20ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனை முன்னிட்டு நடைபெற்ற இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினரும் பல திரைப் பிரபலங்களும் கலந்துகொண்ட நிலையில், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்...
இசையமைப்பாளர் அஷ்வமித்ரா பேசியதாவது..,
எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர், தயாரிப்பாளர் இருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாடலாசிரியர் சினேகன் அவர்கள் மிக அழகான பாடல் வரிகள் தந்தார். அருண் பாரதி அவர்களும் அற்புதமான பாடல் வரிகள் தந்தார். மிக நல்ல படம், அனைவரும் திரையரங்கில் வந்து படம் பாருங்கள். அனைவருக்கும் நன்றி.
ப்ரமோ பாடல் இசையமைப்பாளர் அகத் மகேந்திரன் பேசியதாவது..,
இந்த பாடலை தந்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இந்த பாடலுக்கு பல பேரை அணுகி, இறுதியில் இயக்குநர் சரண் சாரை அணுகினோம். அவர் படத்தில் எப்போதும் எல்லாப்பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆகிவிடும். அவர் அழகான பாடலை எழுதித்தந்தார். பாடல் உங்கள் எல்லோருக்கும் பிடிக்குமென நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் சரண் பேசியதாவது..,
இந்த படத்தில் எனக்கு ஒரு பாடலாசிரியராக (Lyric Writer) பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்கு முன், என் இயக்கத்தில் உருவான வட்டாரம் படத்தில் இடம்பெற்ற “யார் தருவார் இந்த அரியாசனம்” என்ற பாடலை நான் எழுதியிருந்தேன். அதன் பிறகு தொடர்ந்து பாடல்கள் எழுதும் வாய்ப்பு அமையவில்லை. காரணம், என் படங்களில் பெரும்பாலும் வைரமுத்து அவர்களே பாடல்களை எழுதுவார்.
இந்த படத்தின் இயக்குநரை நான் நீண்ட காலமாக அறிவேன். அவர் மிகுந்த சுறுசுறுப்பும், தெளிவான சிந்தனையும் கொண்ட இளம் படைப்பாளி. இசை மற்றும் சினிமா உலகின் பல முக்கிய ஆளுமைகளுடன் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது. அதனால் அவரிடம் ஒரு தெளிவான கலை நோக்கு (Vision) இருக்கிறது. ஒரு கட்டத்தில், அவர் என்னிடம் “இன்றைய காலத்திற்கேற்ற, ஒரு பாடல் வேண்டும்” என்று கேட்டார். அதனை நான் ஒரு சிறந்த வாய்ப்பாக எடுத்துக் கொண்டு இந்தப் பாடலை எழுதினேன்.
இந்த பாடல், இன்றைய சமூகச் சூழ்நிலையை பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் பின்னணியில் ஒரு வரலாற்றுச் சாயலையும் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக, 1900களில் சென்னை உருவாகிய காலகட்டத்தில், குறிப்பாக பிளாக் டவுன் பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட சொற்கள், அவற்றின் அர்த்தங்கள் மற்றும் அகராதி குறிப்புகளை ஆராய்ச்சி செய்தேன். அந்த காலத்துச் சொற்களைப் பாடலின் பின்னணியில் இணைத்தால் தனித்துவமான அழகு கிடைக்கும் என்பதால், அந்த ஆய்வின் அடிப்படையில் இந்த பாடலை உருவாக்கினேன்.
இந்த பாடல் ஒரு ப்ரமோஷனல் சாங்காக இருந்தாலும், அதை மனதார ஏற்றுக் கொண்டு இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, அகத் மகேந்திரன் மற்றும் முழு படக்குழுவினருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள். குறிப்பாக இந்த வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குநருக்கு என் சிறப்பு நன்றி.
புதிய நாயகி சிம்ரன் அத்வானி படத்தில் மிக அழகாக நடித்துள்ளார். அவரது கண்கள் நிறையப் பேசுகின்றன. அவர் இன்னும் பல சிறந்த படங்களில் நடிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். நாயகன் ஆதவ் கிருஷ்ணா அவர்களுக்கும் என் வாழ்த்துகள். அவரது முகத்தில் ஒரு இயல்பான குறும்பும், தனித்துவமும் தெரிகிறது. Next-door boy கதாபாத்திரங்களுக்கு அவர் மிகவும் பொருத்தமானவர். வருங்காலத்தில் அவர் மேலும் பல படங்களில் நடித்து உயர்ந்த இடத்தை அடைவார் என்ற நம்பிக்கை உள்ளது. அனைவருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் கதிரேசன் பேசியதாவது..,
எனக்கு நெருக்கமான நண்பரும், குடும்ப உறுப்பினருக்குச் சமமானவருமான பாலகோபி அவர்களின் மகனின் அறிமுக விழாவில் கலந்துகொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. பல தயாரிப்பாளர்களுக்குப் பக்கபலமாக இருந்து, பல வெற்றிப் படங்களுக்குப் பின்னால் உழைத்தவர் அவர். அந்த வெற்றிகளில் ஒரு சிறிய பங்கு இருந்தாலும், அவருடன் இணைந்து பயணித்த அனுபவம் எனக்குப் பெருமை. அந்த வெற்றிகளுக்காக அவருடைய மகனுக்கு நேரடியாக வாழ்த்துச் சொல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காத நிலையில், இன்று இந்த விழாவில் கலந்துகொண்டு என் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இங்கு குறிப்பாக சரண் அவர்கள் இப்படத்திற்குப் பாடல் எழுதியிருப்பது பெரும் மகிழ்ச்சி. அவருக்கு நான் ரசிகன், அவர் போன்ற ஆளுமை புதுமுகங்கள் பட்டதிற்குப் பாடல் எழுதுவது மகிழ்ச்சி. நல்ல கதைகள் கொண்ட சின்ன பட்ஜெட் படங்கள் தான் ஜெயிக்கிறது, அந்த வகையில் இந்தப்படம் ஜெயிக்க வாழ்த்துக்கள்.
மேனேஜர் யூனியன் பிரஸிடெண்ட் ராஜேந்திரன் பேசியதாவது..,
இந்த படத்தில் ஆதவ் கிருஷ்ணாவை பார்க்கும் போது, இது ஒரு புதுமுகம் போலவே இல்லை. நன்றாக நடித்துள்ளார். ஏற்கனவே பத்து படங்கள் செய்து அனுபவம் பெற்ற ஒரு இயக்குநர் எடுத்த படத்தின் தரத்தில் இந்த டீசர் இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளாகட்டும், பாடல் காட்சிகளாகட்டும் அனைத்தும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாகவே இந்த படம் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே பாராட்ட வேண்டிய முயற்சி. குறிப்பாக, லவ்வர்ஸ் டேயை முன்னிட்டு சரியான நேரத்தில் ஒரு அழகான காதல் பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். அதோடு டீசரும் வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு ஒரு கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறது. டீசரை பார்த்தவுடன் படம் மீது நல்ல எதிர்பார்ப்பு உருவாகிறது. இந்த முயற்சிக்குப் படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
நடிகர் இளவரசு பேசியதாவது..,
இந்த விழாவில் கலந்துகொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. மரியாதைக்குரிய இயக்குநர் மகாலட்சுமி முருகன் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். “மகாலட்சுமி” என்ற பெயர் எனக்குத் தனிப்பட்ட முறையில் நெருக்கமானது. அந்த பெயருடன் நீங்கள் ஒரு இயக்குநராக உயர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை அனைத்தும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. நாயகி சிம்ரன் அத்வானி அவர்களுக்கு என் வாழ்த்துகள். அவரின் நடிப்பு இயல்பாகவும் அழகாகவும் உள்ளது.
நடிகர்களுக்கும், இயக்குநர்களுக்கும் மார்க்கெட் இருக்கும். ஆனால் மேனேஜர் என்ற பொறுப்பு மிகப் பெரியது. ஒரு படத்தில் பணம் இருக்கிறதோ இல்லையோ, ஒட்டுமொத்த பொறுப்பையும் சுமந்து, பிரச்சினைகளை கையாள்ந்து, தயாரிப்பாளருக்கும் படக்குழுவிற்கும் துணை நிற்பது சாதாரண விஷயம் அல்ல. அந்த பணியை மிக நேர்மையாகவும், பாசிட்டிவாகவும் செய்து வருபவர் பாலகோபி. அவருடைய மகன் இன்று இந்த திரைப்படத்தில் அறிமுகமாகிறார். நீ நல்ல பையன். நல்ல வளர்ப்பு. ஆனால் உன் அப்பா யார் என்பதைக் காட்டிலும், பாலகோபி என்ற மனிதர் யார் என்பதை நீ புரிந்து கொண்டு, அந்த பண்புகளை உன் வாழ்க்கையில் எடுத்துச் செல்ல வேண்டும். உன் அப்பாவின் உழைப்பும், நற்பெயரும் இந்த திரைப்படத்தின் மூலம் உனக்கு நல்ல அடையாளத்தைத் தர வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். நன்றி.
நடிகர் பக்ஸ் என்கிற பகவதி பெருமாள் பேசியதாவது..,
இந்த படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் பேசுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. எனக்கும் இந்த படத்திற்கும் ஒரு நெருக்கமான தொடர்பு இருப்பதால் கூடுதல் சந்தோஷம். தம்பி ஆதவ் கிருஷ்ணா இந்த படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படம் அவருடைய உழைப்பை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான முயற்சி. அந்த உழைப்புக்கு உரிய வெற்றி இந்த படத்திற்குக் கிடைக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் குழு, இயக்குநர், நடிகர்கள் என அனைவரின் உழைப்பும் நல்ல பலனைத் தர வேண்டும். ரசிகர்கள் இந்த படத்தைப் பார்த்து ஆதரித்து, வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
இந்த விழா இசை வெளியீட்டு நிகழ்வாக இருந்தாலும், இதில் பங்கெடுத்த அனைத்து கலைஞர்களுக்கும் முதலில் என் மனமார்ந்த வணக்கங்கள். இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்–நடிகைகள், நடன இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் இந்த படத்திற்கு மிக முக்கிய பங்காற்றியுள்ளனர். இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடக நண்பர்களுக்கும் என் முதல் நன்றி.
S M ராஜ்குமார் பேசியதாவது..,
பாலகோபி சார் எப்போதுமே எங்களுக்கு ஒரு தலைவரைப் போலத்தான். நாயகன் ஆதவ் கிருஷ்ணா – இவர் நடிப்பைப் பார்க்கும்போது, இது முதல் படம் போலவே தெரியவில்லை. காதல் காட்சிகள், நடனம், ஆக்ஷன் என அனைத்திலும் அவர் நல்ல திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். சினிமாவை உண்மையாக நேசிக்கும் ஒருவராக, எதிர்காலத்தில் நீண்ட பயணம் இவருக்காக காத்திருக்கிறது. இது அவருடைய முதல் படம். இதிலிருந்து தொடங்கி அவர் பல வெற்றிகளைப் பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். அதற்காக ஊடகங்களும், ரசிகர்களும் நல்ல ஆதரவு தர வேண்டும். அனைவரும் திரையரங்கில் சென்று இந்த படத்தைப் பாருங்கள்.
நாயகி சிம்ரன் அத்வானி பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம். முதலில் இங்கு வந்திருக்கும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியம். என் தயாரிப்பாளர்கள் பாலகோபி சார், ரகு சார், என் இயக்குநர் முருகன் சார், என்னுடன் பணியாற்றிய சக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் இங்கு வந்திருக்கும் அனைத்து மூத்த கலைஞர்களுக்கும் என் நன்றி. படம் நன்றாக இருக்கிறது என்று அனைவரும் சொல்கிறார்கள். அதைக் கேட்கும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. என்ன சொல்வது என்று தெரியவில்லை. அனைவரும் திரையரங்குகளில் இந்த படத்தைப் பார்த்து ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
நடிகர் ஆதவ் கிருஷ்ணா பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம்.இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள தயாரிப்பாளர்கள், மேலாளர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த படத்தில் என்னை நடிக்க வைத்த அப்பாவிற்கும் மற்றும் ரகு சார் ஆகியோருக்கு என் முதல் நன்றி. என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்ததால்தான் இன்று நான் இங்கு நிற்க முடிகிறது.
என் இயக்குநர் முருகன் சார் ஒரு மிகப்பெரிய உழைப்பாளி . கதை விவாதம் முதல் பாடல்கள் வரை ஒவ்வொரு விஷயத்திலும் அவர் எனக்கு மிகச் சிறந்த வழிகாட்டுதலை அளித்தார். அந்த ஆதரவு எனக்குப் பெரிய பலம். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, நடன இயக்குநர், ஸ்டண்ட் மாஸ்டர், எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் மிக அருமையாக பணியாற்றியுள்ளனர். குறிப்பாக பாடல்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் படத்திற்குப் பெரிய பலமாக அமைந்துள்ளன. இது என் முதல் படம் என்றாலும், அனைவரின் உழைப்பும் ஆதரவும் காரணமாக ஒரு நல்ல முயற்சியாக உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ஊடகங்களின் ஆதரவும், ரசிகர்களின் அன்பும் மிக அவசியம். அனைவரும் திரையரங்குகளில் இந்த படத்தைப் பார்த்து ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி.
இயக்குநர் முருகன் மாகாலட்சுமி பேசியதாவது..,
இந்த மேடையில் நிற்கும் போது, என்னுடைய சினிமா பயணத்திற்குத் துணையாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். குறிப்பாக கேப்டன் விஜயகாந்த், பிரேமலதா மேடம் இருவரும் தான் இந்த நிலைக்கு நான் வர காரணமாக இருந்தவர்கள். அவர்கள் இல்லையெனில் இன்று நான் இங்கு நிற்பது சாத்தியமில்லை.
சின்ன வயதில் ஊரில் டெய்லர் வேலை பார்த்துக்கொண்டே நாடகங்கள், கதைகள் எழுதத் தொடங்கினேன். அந்த கனவுக்குத் தைரியம் கொடுத்து என்னைச் சென்னைக்கு அனுப்பிய என் தந்தைக்கு நான் என்றும் கடமைப்பட்டவன். கேப்டன் ஆபிஸிலிருந்து தான் என் திரைப் பயணம் தொடங்கியது. வழிகாட்டி, ஊக்கம் கொடுத்த பல மூத்த கலைஞர்களுக்கும் என் நன்றி.
இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் குழு, நண்பர்கள், குறிப்பாக நாயகன் ஆதவ் கிருஷ்ணா உள்ளிட்ட அனைவரும் முழு மனதுடன் உழைத்திருக்கிறார்கள். ஒரு நண்பராகவும், ஒரு குழுவாகவும் இணைந்து வேலை செய்ததே இந்த படத்தின் பெரிய பலம். லவ்வர்ஸ் டே-யை முன்னிட்டு இந்த படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி. புதிய இயக்குநர்களுக்கும், புதிய முயற்சிகளுக்கும் ஊடகங்கள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும். நல்ல கதைகள் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பதே எங்கள் ஆசை. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவும், ஆசீர்வாதமும் வேண்டும். மிக்க நன்றி.
இப்படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களிலும் யூடியூப் தளங்களிலும் வெளியாகி, குறுகிய நேரத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. டிரெய்லரில் இடம்பெறும் காட்சிகள், கதாபாத்திரங்களின் வித்தியாசமான அறிமுகங்கள், பரபரப்பான எடிட்டிங் மற்றும் இசை ஆகியவை இணைந்து, கல்லூரி பின்னணியில் நகரும் ஒரு அழகான காதல் கலந்த கமர்ஷியல் திரைப்படமாக இது உருவாகியிருப்பதை உணர்த்துகின்றன.
ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன், படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனஞ்செயன், முத்து புவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்” திரைப்படம், வரும் பிப்ரவரி 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை கவரத் தயாராக உள்ளது.
10 ஆண்டுகளாக சமூகத்தின் குரலாக ஒலிக்கும் ‘விசாரணை’
தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் காலத்தை கடந்தும் பேசிக்கொண்டே இருக்கும். அந்த வகையில், 2016ஆம் ஆண்டு வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘விசாரணை’ திரைப்படம், இன்று தனது 10ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது. ஒரு திரைப்படமாக மட்டுமல்லாமல், ஒரு காலகட்டத்தின் சமூக சாட்சியாக மாறிய இந்த படைப்பு, இன்னும் பலரின் நினைவில் ஆழமாக பதிந்திருக்கிறது.
இந்த முக்கிய தருணத்தை நினைவுகூறும் வகையில், ‘விசாரணை’ படக்குழு பாலுமகேந்திரா ஸ்டூடியோவில் ஒன்று கூடி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன், எழுத்தாளர் எம். சந்திரகுமார், நடிகர் வே.இரா. தினேஷ், இயக்குநர் & நடிகர் சமுத்திரக்கனி, கருணாஸ், இயக்குநர் சரவண சுப்பையா, மூணார் ரமேஷ், திலீப் சுப்பராயன், இயக்குநர் தமிழ், ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படத்தின் நினைவுகளை மீட்டனர்.
Wunderbar Films மற்றும் Grass Root Film Company நிறுவனங்கள் தயாரிப்பில், எழுத்தாளர் எம். சந்திரகுமார் எழுதிய “லாக்கப்” நூலை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘விசாரணை’, போலீஸ் விசாரணை என்ற பெயரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை நேர்மையாகவும், தைரியமாகவும் வெளிப்படுத்தியது. அதிகாரத்தின் கொடூர முகமும், அடித்தட்டு மக்களின் வலியும் எந்த வணிக சமரசமும் இல்லாமல் திரையில் பதிவு செய்யப்பட்டதால், படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றது.
வெற்றிமாறனின் இயக்கம், இயல்பான நடிப்புகள், ஆவணப்படத் தன்மையிலான காட்சியமைப்பு மற்றும் மனதை உலுக்கும் கதை சொல்லல் ஆகியவை ‘விசாரணை’யை சாதாரண சினிமாவைத் தாண்டி ஒரு சமூக ஆவணமாக உயர்த்தின. தேசிய மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களில் பெற்ற அங்கீகாரங்கள், தமிழ் சினிமாவின் தரத்தை உலக அரங்கில் உயர்த்திய முக்கிய தருணங்களாக அமைந்தன.
10 ஆண்டுகள் கடந்தும் ‘விசாரணை’ இன்னும் பேசப்படுகிறது என்பதே அதன் தாக்கத்தின் அளவை உணர்த்துகிறது. சமூக பொறுப்புணர்வுடன் உருவான இப்படம், எதிர்காலத்திலும் துணிச்சலான சினிமாக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
ராஜூமுருகன் – சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’க்கு 2டி என்டர்டெயின்மென்ட் ஆதரவு!
ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “மை லார்ட்”. நடிகர் சசிகுமார் மற்றும் சைத்ரா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரெய்லர் வெளியானதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
வருகிற 13ஆம் தேதி வெளியாக உள்ள “மை லார்ட்” திரைப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. நல்ல உள்ளடக்கமுள்ள படைப்புகளை ஆதரிப்பதில் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வரும் 2டி நிறுவனம், இந்தப் படத்தை வழங்குவதில் பெருமை கொள்கிறது என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்பும் நம்பிக்கையும் அடிப்படையாக கொண்ட நல்ல படைப்புகளுக்கு எப்போதும் 2டி நிறுவனத்தில் தனி இடம் உண்டு. சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கோ, வியாபாரமோ அல்ல; அது பார்வையாளர்களின் மனதில் நல்ல எண்ணங்களை விதைக்கும் சக்தி வாய்ந்த கலை. அப்படியான சினிமாக்களுக்கு துணை நிற்பது எங்கள் கடமை,” என கூறப்பட்டுள்ளது.
மேலும், “ராஜூமுருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘மை லார்ட்’ திரைப்படம் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை பேசும் ஒரு சமூக பிரதிபலிப்பு. இந்தப் படம் அதிகமான மக்களை சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் ஆவலும் நம்பிக்கையும். இதனை வழங்குவதில் 2டி என்டர்டெயின்மென்ட் பெருமை கொள்கிறது,” எனவும் தெரிவித்துள்ளனர்.
சமூக அக்கறையுடனும் மனிதநேய உணர்வுடனும் உருவாகியுள்ள “மை லார்ட்”, ரசிகர்களிடம் எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது திரையரங்குகளில் வெளியாகும் நாளில் தெரியவர உள்ளது.
என்கவுண்டர் போலீஸின் உள்ளக போராட்டம் – இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’!
ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் சார்பில் ஹாரூன் மற்றும் மஹேந்தர் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரில்லர் திரைப்படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஹாரூன், இந்தப் படத்திற்கு கதை எழுதி இயக்கியுள்ளார்.
‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் பரவலாக பாராட்டைப் பெற்ற நடிகர், இப்படத்தில் ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியாக கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஹைதராபாத்தை சேர்ந்த அக்ஷிதா மற்றும் சாந்தினி தமிழரசன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவண சுப்பையா, ‘லப்பர் பந்து’ ஜென்சன் திவாகர், கோடாங்கி வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரி தனது கடமையில் சந்திக்கும் உயிர்–மரண சவால்கள், அதனால் அவரது குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் உளவியல் தாக்கங்கள் மற்றும் அந்த சிக்கல்களில் இருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதையே மையமாகக் கொண்டு இப்படம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ளது. ஆக்ஷன், உணர்ச்சி மற்றும் திகில் கலந்த கதைமாந்திரம் இப்படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இசையமைப்பாளர் ஜான் ராபின்ஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பல ஆல்பம் பாடல்களால் கவனம் பெற்ற அவர், இந்தத் திரில்லருக்கு வித்தியாசமான இசை அமைப்பை வழங்கியுள்ளதாக தகவல். ஒளிப்பதிவை கே.வி. கிரண் மேற்கொள்கிறார். டான்பாஸ்கோ படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்கத்தை ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய அனுபவமுள்ள வேலு செய்துள்ளார். ரிச்சி ரிச்சர்ட்சன் நடன வடிவமைப்பை செய்துள்ளார்.
போலீஸை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு முக்கியமான பாடலை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பாடியிருப்பது இப்படத்தின் சிறப்பு அம்சமாகும்.
கேப்டன் MP ஆனந்த் மற்றும் KSK செல்வகுமார் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாக தயாரிப்பு பணிகளை ஒருங்கிணைத்துள்ளனர். சென்னை, கோவை, ஏற்காடு, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
உண்மை சம்பவங்களை நினைவூட்டும் வண்ணம் உருவாகி வரும் ‘பரீட்’, போலீஸ் வாழ்க்கையின் மறுபக்கத்தை வெளிச்சமிட்டு காட்டும் வித்தியாசமான திரில்லராக திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
985ஆம் ஆண்டு பின்னணியில் பிரம்மாண்டமாக உருவான ‘சுயம்பு’!
தரமான கதைகளைத் தேர்ந்தெடுத்து தனித்துவமான பயணத்தை அமைத்து வரும் நடிகர் நிகில் சித்தார்தா, தற்போது தனது கேரியரில் மிகப்பெரிய முயற்சியாக கருதப்படும் ‘சுயம்பு’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகிறார். இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம், பீரியட் ஆக்ஷன் வகையில் இந்திய சினிமாவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்சல் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் புவன் மற்றும் ஸ்ரீகர் தயாரிக்க, தாகூர் மது வழங்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் பன்மொழிகளில் வெளியாகி குறுகிய காலத்திலேயே 10 மில்லியனுக்கும் அதிக பார்வைகளை பெற்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது. டீசரில் வெளிப்பட்ட காட்சிகளின் பிரம்மாண்டம், போர்க்கள அமைப்புகள் மற்றும் நிகிலின் மாறுபட்ட தோற்றம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
985ஆம் ஆண்டு பின்னணியில் இந்திய வரலாறு மற்றும் புராணத் தாக்கங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கதை, ஒரு வீரனின் எழுச்சியை மையமாகக் கொண்டதாக கூறப்படுகிறது. நீண்ட தலைமுடி, சுருள் மீசை, அடர்த்தியான தாடி, வலிமையான உடல் அமைப்புடன் போர்வீரனாக நிகில் காட்சியளிக்கும் தோற்றம் பெரும் கவனம் பெற்றுள்ளது. அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் விசுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் படத்தின் அளவை வெளிப்படுத்துகின்றன.
சம்யுக்தா மற்றும் நபா நடேஷ் இருவரும் வழக்கமான கதாநாயகி வரம்புகளை தாண்டி கதையின் மையத்தில் நிற்கும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுப்பராஜு, சுனில் உள்ளிட்ட அனுபவமிக்க நடிகர்களும் கதைக்கு வலுவூட்டுகின்றனர்.
தொழில்நுட்ப ரீதியாகவும் ‘சுயம்பு’ உயர்தர முயற்சியாக திகழ்கிறது. தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் எம். பிரபாகரன் மற்றும் ரவீந்தர் உருவாக்கிய வரலாற்று செட் அமைப்புகள் படத்திற்கு உண்மைத்தன்மையை அளிக்கின்றன. ஒளிப்பதிவாளர் கே.கே. செந்தில் குமார் காட்சிகளுக்கு கண்கவர் தோற்றத்தை அளித்துள்ளார். ரவி பஸ்ரூரின் பின்னணி இசை போர்க்களக் காட்சிகளுக்கு தீவிரத்தை கூட்ட, முன்னணி இந்திய VFX நிறுவனங்கள் உலகத் தரத்தில் காட்சிகளை வடிவமைத்துள்ளன. விஜய் காமிசெட்டியின் வசனங்கள், கிங் சாலமன் மற்றும் ஸ்டண்ட் சிவா அமைத்த சண்டைக் காட்சிகள், தம்மிராஜுவின் படத்தொகுப்பு ஆகியவை படத்திற்கு மேலும் வலிமை சேர்க்கின்றன.
பிரம்மாண்ட தயாரிப்பு, வரலாற்று பின்னணி மற்றும் வலுவான நடிப்பு—all இணைந்து ‘சுயம்பு’ திரைப்படம் பீரியட் ஆக்ஷன் படங்களுக்கு புதிய அளவுகோல் அமைக்கும் என திரையுலகில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பல மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படம், நிகிலின் திரைப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும் என கூறப்படுகிறது.
16 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அர்த்தம் புரிந்தது! – மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் உருவான திரைப்படம் “வித் லவ் (With Love)”. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், அனஸ்வரா ராஜன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம், 2026 பிப்ரவரி 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
இன்றைய இளைஞர்களின் உணர்வுகள், உறவுகள் மற்றும் காதலை மையமாகக் கொண்டு உருவான இப்படம், வெளியீட்டிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விமர்சகர்களும் படத்தின் நவீன கதை சொல்லல் மற்றும் நடிப்பை பாராட்டியுள்ளனர்.
தற்போது அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், படக்குழு பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து, தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்கும் வரவேற்பிற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது.
பாடலாசிரியர் மோகன்ராஜன் பேசியதாவது..,
மகேஷ் ஐயாவோட பல படங்களாக இந்தப் பயணமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு படத்துக்கும், இது நல்ல படம் - ன்னு நீங்கள் நம்பினால், அதை முழு மனதோடு தூக்கிக்கொண்டு போய் ஒரு வெற்றிப் படமாக மாற்றுவதற்கு உங்களுக்குப் பெரிய பெரிய நன்றிகள். இப்படத்தில் தயாரிப்பாளராக சௌந்தர்யா மேம் எங்களுக்கு கிடைத்தது, ஒரு பெரிய வரம்னு தான் நினைக்கிறோம். உண்மையிலேயே, நான் நீண்ட நாளா மனசுக்குள்ள வைத்திருந்த ஆசை – ரஜினி சாரை நேரில் சந்திக்கணும்ன்னு. அதை மகேஷ் ஐயாவிடம் அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பேன். சௌந்தர்யா மேடமிடம் சொன்னேன். அது இப்படத்தில் நடந்தது மகிழ்ச்சி.
ரஜினி சாரை பார்க்கும் போது வைரமுத்து சார் போல எப்படியாவது ஒரு கவிதை சொல்லி, சாரை இம்ப்ரெஸ் பண்ணணும்னு நினைச்சேன். உண்மையிலேயே அந்த கவிதை அவருக்கு ரொம்ப பிடிச்சது. என்னோட வாழ்நாள் கனவு நிறைவேறிச்சு.
இந்த படத்தில் ஒர்க் பண்ணிய ஒவ்வொருத்தருக்கும் நான் மனசார நன்றி சொல்லணும். மதன் – அடுத்த படம் இன்னும் கவனமா பண்ணணும். அபி – இது உன்னோட முதல் படம். அது ஜெயிக்கணும்னு நானும் ஷான் ஐயாவும் அடிக்கடி பேசிக்கிட்டே இருப்போம். அது இப்போ நடந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி. அனஸ்வராவுக்கு வாழ்த்துக்கள் , கடைசியாக, இந்த படத்துக்காக உழைத்த எல்லாருக்கும் பெரிய நன்றி.
நடிகர் சரவணன் பேசியதாவது..,
இந்த படத்தில் நான் நடிக்கக் காரணமாக இருந்தது முதலில் இயக்குநர் மதன். அதே மாதிரி மகேஷ் சார், மேலும் இந்த படத்தின் முழு குழுவுக்கும் நான் மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறேன்.இந்த படத்தில் என்னோட கேரக்டர் உண்மையிலேயே ஒரு சின்ன கேரக்டர்தான். ஆனாலும் அந்த சின்ன கேரக்டரையும் அழகாக எழுதி, அதைப் பாராட்டி, நிறைய ஊடகங்களும் பத்திரிக்கையாளர்களும் மனசார எழுதியிருந்தார்கள். என்னைப் பாராட்டிய எல்லாருக்கும் நான் ரொம்ப ரொம்ப நன்றி சொல்லக் கடன்பட்டிருக்கிறேன். இந்த படம் இன்னும் நல்ல படியாக, இன்னும் அதிக மக்களைச் சேரும் வகையில் பயணிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் தயாரிப்பாளருக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.
நடிகை ஆனந்தி பேசியதாவது..
நான் இந்த படத்தைப் பற்றி பேசும்போது, ஒரு நடிகராக இல்லாமல், ஒரு ஆடியன்ஸாக பேசணும்னு ஆசைப்படுறேன். நேத்து நைட்டுதான் இந்த படம் பார்த்தேன். ஒரு நல்ல படத்தில் நானும் ஒருத்தராக இருப்பது மகிழ்ச்சி.
இன்றைய தலைமுறை பற்றி ஒரு தவறான எண்ணம் நம்மிடம் இருக்கிறது அதை மாற்றி வேறு பார்வையில் இப்படம் நம்மிடம் காட்டுகிறது.
இந்த படம் அந்த Human Nature-ஐ ரொம்ப அழகாக, ரொம்ப மென்மையாக சொல்லுகிறது. “There are no bad people.But we all do bad things sometimes.”
அது நம்ம எல்லாருக்கும் நடந்திருக்கலாம்.ஆனா அதே சமயம், நம்மளுக்குள்ள வளர வாய்ப்பு இருக்கிறது அப்படிங்கிற கருத்து இந்த படத்துல ரொம்ப அழகா ஒரு காதல் கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு படத்தில் ஒரு பங்காக இருந்தது மிகுந்த மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.
நடிகை காவ்யா பேசியதாவது..,
ஒரு புதுமுகமாக என்னை என் பெயர் சொல்லி பாராட்டிய அனைவருக்கும் நன்றி. என் கதாப்பாத்திரத்தை கொண்டாடிய ரசிகர்களுக்கு நன்றி. இப்படத்தில் பங்கு கொண்டது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் படக்குழுவுக்கு என் நன்றி.
நடிகர் சச்சின் பேசியதாவது..,,
இப்படத்தில் பங்கு கொண்டது மிக மகிழ்ச்சி. இந்த மொத்தக்குழுவுக்கும் என் நன்றி. அபி மற்றும் அனஸ்வராவுக்கு நன்றி. இந்தப்படத்தை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சென்ற பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.
நடிகை அனஸ்வரா பேசியதாவது..,
இந்த படம் ரொம்ப ரொம்ப அன்போட உருவக்கிய படம். அந்த அன்பை ஆடியன்ஸ் அப்படியே ஏற்றுக்கிட்டது தான் எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய சந்தோஷம்.
“இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்காக மதனுக்கு மனப்பூர்வமான நன்றி. அபியுடன் பணியாற்றிய அனுபவம் மிகச் சிறப்பாக இருந்தது என தெரிவித்தார். அபியுடன் உள்ள கெமிஸ்ட்ரியை மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை மக்கள் ரசித்தது ரொம்ப மகிழ்ச்சி. சௌந்தர்யா மேடம், மகேஷ் அண்ணா, காவ்யா மற்றும் முழு நடிகர்–தொழில்நுட்ப குழுவினருக்கும் நன்றி.
இரண்டு நாட்களுக்கு முன் ரஜினி சாரை சந்தித்த தருணம் வாழ்வில் மறக்க முடியாதது. அவர் படம் பார்த்து சொன்ன ரெஸ்பான்ஸ் எங்களுக்கெல்லாம் ரொம்ப அர்த்தமுள்ளதா இருந்தது. எங்கள் படத்தை இவ்வளவு அன்போட ஏற்றுக்கொண்ட எல்லாருக்கும் நன்றி.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,
இந்தப்படத்துக்கு பத்திரிக்கையாளர்கள் தந்த ஆதரவு மிகப்பெரியது. அபியை முதல் படம் செய்ய கஷ்டபட்ட காலத்திலிருந்து பார்க்கிறேன். அவனுடைய உழைப்பு 200 சதவீதம் இருந்தாலும் நீங்கள் அவனுக்கு முழு ஆதரவு தந்திருக்கிறீர்கள் நன்றி. அபி மிக அழகான மனது கொண்டவர் அவர் மாற மாட்டார் என நம்புகிறேன். எனது கூட்டாளி மோகன்ராஜனுடன் தொடர்ந்து படங்கள் செய்கிறேன் அவருக்கு என் நன்றி.
இயக்குநர் மதன் இந்தக்கதை சொன்ன போதே இது வெற்றிப்படம் என்பது தெரியும், கதை சொல்லும் போது தடுமாறினாலும் படத்தில் மிக அழகாக அதை நிறைவு செய்துவிட்டார். அனஸ்வரா கேரக்டரை எழுதிய விதமும், அதை எடுத்த விதமும் அத்தனை அழகாக இருந்தது. அனஸ்வராவுக்கு படத்தில் நான் கை தட்டினேன் அவர் அத்தனை அற்புதமாக நடித்திருந்தார்.
தயாரிப்பாளர் மகேஷ் அவர் தொட்டதெல்லாம் பொன்னாகிறது. அவரைப் பார்த்தால் என் பையன் தான் ஞாபகம் வரும். குழந்தை மனது கொண்டவர். கண்டிப்பாக இன்னும் 3 படங்கள் ஹிட் தந்துவிடுவார். எங்களுக்கு முழு ஆதரவு தந்ததற்காக நன்றி. சௌந்தர்யா மேம், அவர் மிகத்தெளிவான சிந்தனை கொண்டவர். அவரிடம் நிறைய திட்டமிடல் இருக்கும். அவர் இன்னும் நிறைய சாதிப்பார் அதைக் காண ஆவலாக இருக்கிறேன்.
படத்தில் உழைத்த அத்தனை நடிகர்கள் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. ந்தப்படத்தை ஏற்றுக்கொண்டு கொண்டாடிய மக்களுக்கு நன்றி.
இயக்குநர் மதன் பேசியதாவது..,
எல்லாருமே“இந்த படம் கண்டிப்பா ஒரு வெற்றி படம்” என சொன்னார்கள். அதே போல படம் வெற்றியடைந்தது உண்மையிலேயே எங்களுக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி.மகேஷ் சார், சௌந்தர்யா மேடம், இருவருக்கும் பெரிய நன்றி. அதே மாதிரி சரவணன் சார் டீம் உட்பட, இந்த படத்துக்காக உழைத்த எல்லாருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள். தூக்கமில்லாமல் இப்படத்திற்காக உழைத்த என் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தை கொண்டாடிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் மகேஷ் பேசியதாவது..,
“நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை.”நீங்கள் எல்லாரும் இல்லாம இந்த டீமும் இல்லை. அதனால ரொம்ப சந்தோஷம். பிரஸ் ஷோ முடிந்த பிறகு,நீங்கள் தந்த பாராட்டுக்களில் இருந்து தான் இந்த படம் உண்மையிலேயே take off ஆனது. இப்படத்தை மக்கள் மனதளவில் நெருக்கமாக கொண்டாடுகிறார்கள்.
மதன் எனக்கு ரொம்ப நாளா தெரிஞ்ச பையன். லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி படங்களில் அவன் வேலை பற்றி எனக்கு தெரியும். இந்தக் கதை சொல்லும்போதே, “இந்த படம் ஹிட்” எனத் தோன்றியது. அவன் கண்டிப்பாக அனஸ்வரா வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தான். அனஸ்வரா நடிப்பை பார்த்த பிறகு அவர் எவ்வளவு பெரிய பலம் என்று புரிந்தது. அபி எனக்கு சொந்த தம்பி. அபியை நீங்கள் எல்லாரும் உங்கள் வீட்டுப் பையன் மாதிரி பார்த்துக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். ஷான் தான் என் மூன்று படத்திற்கும் இசையமைப்பாளர். இதில் அனீஷா கேரக்டருக்கு அவரின் இசை அற்புதமாக இருந்தது. எங்கள் சின்ன டீமை பாராட்டி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சூப்பர்ஸ்டாருக்கு நன்றி.
சௌந்தர்யா அக்காவுடனான உறவு 10 வருடங்களுக்கு மேலாக இருக்கிறது. அவர் எனக்கு எப்போதும் அக்கா தான். எங்களால் முடியாத பல விஷயங்களை ஒரு போன் கால்லஅவங்க முடிச்சு கொடுத்து விடுவார்கள்.அக்கா – ஒரு பெரிய சப்போர்ட். எங்கள் டீமின்தூண். அவருடன் இன்னும் நிறைய படம் செய்வேன். இந்தப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. படத்தை கொண்டாடிய உங்கள் அனைவருக்கும் பெரிய நன்றி.
தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியதாவது..,
“ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மகிழ்ச்சி என்ற வார்த்தை கூட இந்த உணர்வுக்கு சரியாக இருக்காது”ப்ரீமியர் ஷோவில் அப்பா படம் பார்த்து தான் படத்தை அடுத்த கட்டதிற்கு எடுத்துச் சென்று விட்டார்.
“படம் முடிந்ததும், வீட்டிற்கு சென்றபோது அப்பா–அம்மா இருவரும் என்னை கட்டிப்பிடித்து சிரித்தார்கள். அப்போது தான் ‘இதுதான் சக்ஸஸ்’ என்று உணர்ந்தேன். அந்த அப்பாவின் சிரிப்பை நான் வாழ்க்கை முழுக்க மறக்க மாட்டேன். 16–18 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் இருந்தாலும், இந்த படத்தின் மூலமாக தான் ‘வெற்றி’ என்பதன் உண்மையான அர்த்தம் புரிந்தது இது தான் முதல் சக்சஸ் மீட்.
“அபி எனக்கு ஒரு பேபி பிரதர். அந்த மனதிலிருந்து வரும் சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இங்கே நீண்ட காலம் நிலைத்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று நம்பிக்கையுடன் கூறினார். அனஸ்வராவை எங்கே இருந்தீர்கள் இவ்வளவு நாள் என்று கேட்கத் தோன்றியது. இந்த படத்தில் அவர் மிக அழகாக நடித்துள்ளார். குறிப்பாக இறுதிக் காட்சியில் வரும் அமைதியும், மழையை பார்த்து அவர் சிரிக்கும் காட்சி எனக்கு மிகவும் பிடித்த தருணம்”
இயக்குநர் மதன் கதை சொன்னபோதே இது வெற்றி படம் என்ற நம்பிக்கை வந்தது. இரண்டாம் பாதியில் வரும் காட்சிகளும், இறுதியில் நான்கு கதாபாத்திரங்களும் ஒரே ஷாட்டில் சந்திக்கும் காட்சியும் முழுமையான டைர்கடர்ஸ் டச். அவரது அடுத்த படத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் அனீஷா பாத்திரத்திற்கு போட்டது பத்து நிமிடத்தில் உருவான இசை என்பது நம்ப முடியாத மாயை. அந்த மேஜிக் அவரால் மட்டுமே முடியும். பாடலாசிரியர் மோகன், எடிட்டர் சுரேஷ், பிரஷாந்த் உள்ளிட்ட தொழில்நுட்ப குழுவினருக்கு மனப்பூர்வமான நன்றி. இந்த படம் வெறும் ‘நல்ல படம்’ என்ற ஸ்டேட்டஸை தாண்டி, மக்கள் தங்கள் படமாக கொண்டாடுவது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” அனைவருக்கும் நன்றி.
நடிகர் அபிஷன் ஜீவிந்த் பேசியதாவது..,
“ரஜினி சார் சொன்ன அந்த ஒரு வார்த்தை தான் என்னை ஹீரோவாக இந்த முடிவை எடுக்கவும், அதில் நம்பிக்கை வைக்கவும் காரணமாயிருந்தது. இப்போ அவரை மீட் பண்ணும்போது, ‘ஹீரோ ஆகிட்டீங்க’ன்னு அவர் திரும்ப சொன்னது… அந்த சர்கிள் கம்ப்ளீட் ஆன மாதிரி சந்தோஷமாக இருந்தது,”
நீங்கள் படத்தை அழகாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தீர்கள். நல்ல ரிவ்யூஸ், நல்ல வார்த்தைகள் – அதுதான் இந்த வெற்றிக்கு காரணம். அதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி.
“என்னை ஹீரோவாக நம்பி இந்த இடத்துல நிற்க வைத்ததுக்கு மதனுக்கு ரொம்ப பெரிய நன்றி. உன்னை இந்த மேடையில் பார்க்க பெருமையாக இருக்கிறது. இந்த பயணம் இன்னும் பெரியதாக இருக்கும் வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் குறித்து,“எப்போதும் எனக்கு கூடுதலாக வேலை செய்வார். ‘அபிக்காக இதை இன்னும் நல்லா பண்ணலாம்’ன்னு சொல்ற அந்த மனசு ரொம்ப ஸ்பெஷல். புகழை கூட அழகாக, ஈகோ இல்லாமல் கொடுக்கத் தெரிந்தவர், அவருக்கு நன்றி. பாடலாசிரியர் மோகன், எடிட்டர் சுரேஷ், ஸ்ரேயாஸ், தொழில்நுட்ப குழுவினர் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி. அனஸ்வரா எங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி ரொம்ப அழகாக ஒர்க் ஆனது. ஆடியன்ஸ் அதை ரொம்ப ரசிக்கிறார்கள். இந்த கூட்டணி அடுத்தும் தொடரும். காவியா, சச்சின், தேனி முருகன், சரவணன், ஆனந்தி உள்ளிட்ட நடிகர்கள் அனைவருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் மகேஷ் அண்ணா படம் ஹிட் ஆன பிறகும், ‘நான் எதாவது தவறு பண்ணினேனா ? ன்னு கேட்கும் அந்த மனசு எல்லாருக்கும் கிடைக்காது. அவர்கிட்ட பேச எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. அது தான் இந்த உறவின் அழகு,” அவருக்கு என் நன்றிகள்.
சௌந்தர்யா மேம் படம் வெளியான பிறகு“‘சக்ஸஸ் இப்படித்தான் இருக்குமா என்று அவர் சொன்ன அந்த வார்த்தை எனக்கு ரொம்ப சந்தோஷம் கொடுத்தது. மகேஷ் அண்ணா சௌந்தர்யா மேம் நான் மூன்று பேரும் இணைந்து அடுத்து ஒரு பெரிய படம் செய்கிறோம். இந்த படம் இன்றைக்கு மக்கள் மனசுக்குள்ள ஒரு இடத்தை பிடித்திருக்கிறது. அதுவே எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இந்த பயணத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் என் மனப்பூர்வமான நன்றி
டீசர் வரும்முன்னே ₹225 கோடி ஒப்பந்தம் – உலக வெளியீட்டுக்கு தயாராகும் யாஷின் ‘டாக்ஸிக்’!
ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே இந்திய சினிமா வரலாற்றில் புதிய அளவுகோல்களை அமைத்து வருகிறது. டீசர் கூட வெளியாகாத நிலையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் மொத்தமாக ₹225 கோடி மதிப்பிலான விநியோக ஒப்பந்தங்களை கைப்பற்றியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு அல்லாத ஒரு திரைப்படமாக, ஆந்திரா–தெலங்கானா சந்தையில் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் (SVC) நிறுவனத்துடன் ₹120 கோடி மதிப்பிலான வரலாற்றுச் சாதனை ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் ‘டாக்ஸிக்’ தெலுங்கு மார்க்கெட்டில் புதிய விதிகளை எழுதத் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, சர்வதேச விநியோக உரிமைகளை முன்னணி நிறுவனமான Phars Films ₹105 கோடி முன்பணம் கமிஷன் அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. இந்திய திரைப்பட வரலாற்றில் மிக உயர்ந்த வெளிநாட்டு ஒப்பந்தங்களில் ஒன்றாக பார்க்கப்படும் இந்த ஒப்பந்தம், ‘டாக்ஸிக்’ மீது உலக சந்தையில் இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த ஒப்பந்தம் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய இந்திய மொழி பதிப்புகளுக்கே பொருந்தும்; ஆங்கில பதிப்பு இதில் சேர்க்கப்படவில்லை.
Phars Films நிறுவனத்தின் CEO & Founder திரு. அஹமத் கொல்சின் கூறியதாவது..,
"டாக்ஸிக்" மூலம் எல்லைகளைத் தாண்டி அனைவரையும் கவரும் ஒரு கதையை சொல்ல வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இந்த படத்தை சர்வதேச ரசிகர்களிடம் கொண்டு செல்லுவதில் பெருமை கொள்கிறோம். பல்வேறு கலாச்சாரங்களில் இந்தக்கதை கொண்டாடப்படுவதைக் காண ஆவலாக உள்ளோம். இந்த வெளிநாட்டு வெளியீடு Phars Film-க்கு முக்கிய மைல்கல்லாகும். உலகம் முழுவதும் பார்வையாளர்கள் "டாக்ஸிக்" படத்தின் தீவிரத்தையும் உணர்ச்சி ஆழத்தையும் அனுபவிப்பார்கள் என்பதில் நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம்.”
கே வி என் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட K நாராயணா கூறியதாவது..,
"டாக்ஸிக்" ஒரு உலகளாவிய சினிமா மொழியில் பேசும் படமாக கற்பனை செய்யப்பட்டது. இப்படிப்பட்ட அளவிலான கனவுக்கு, உலகளாவிய வலிமை மற்றும் நம்பகத்தன்மை கொண்ட கூட்டணி தேவைப்பட்டது. சர்வதேச சந்தைகளில் இந்திய சினிமாவை வலிமையாக நிலைநிறுத்துவதில் Phars Films தொடர்ந்து அபார திறனை நிரூபித்துள்ளது. இந்த வரலாற்றுச் சாதனை மிக்க வெளிநாட்டு விநியோக ஒப்பந்தத்தில் அவர்களுடன் கைகோர்ப்பதில் பெருமை கொள்கிறோம். அவர்களின் பரந்த மற்றும் நுணுக்கமான அணுகுமுறையில், "டாக்ஸிக்" உலகம் முழுவதும் அதற்குரிய அளவிலும் தாக்கத்திலும் வேகத்திலும் கொண்டாடப்படும் என்பதில் நம்பிக்கை உள்ளது. இது இந்திய சினிமாவின் உலகளாவிய வெளியீட்டில் புதிய அளவுகோல்களை உருவாக்கும்.”
உள்நாட்டு (தெலுங்கு) சந்தையில் சாதனை புரிந்த ஒப்பந்தம், ₹105 கோடி வெளிநாட்டு ஒப்பந்தம், மேலும் KGF 2-ன் உலக பாரம்பரியம் — இவற்றின் பின்னணியில் "டாக்ஸிக்" வெளியீட்டுக்கு முன்பே உலகளாவிய பெரும் நிகழ்வாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. மிகப்பெரிய சர்வதேச அளவிலான தயாரிப்பில் உருவாகியுள்ள "டாக்ஸிக்" , உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் குழு, வலுவான VFX, வலுவான கதை உலகம், மற்றும் பெரும் நட்சத்திரக் கூட்டணி ஆகியவற்றால் நிரம்பியுள்ளது; இது எதிர்காலத்தில் ₹1000 கோடி மெகா பிளாக்பஸ்டராக மாறும் முன்னோட்டத்தை அளிக்கிறது.
யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கியிருக்கும் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இது படத்தின் உலகளாவிய லட்சியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி- இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்- படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்ணி - தயாரிப்பு வடிவமைப்பாளர் T.P.அபித்- ஆகியோர் அடங்கிய ஒரு வலிமையான தொழில்நுட்பக் குழுவையும் இந்தப் படம் கொண்டுள்ளது. ஹாலிவுட் அதிரடி இயக்குநர் ஜே ஜே பெரி ( ஜான் விக்) (John Wick) - தேசிய விருது பெற்ற அதிரடி சண்டை இயக்குநர்களான அன்பறிவ்- கெச்சா காம்பக்டி (Kecha Khamphakdee) ஆகியோரின் வடிவமைப்பில் அதிரடியான சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமான அளவில் படமாக்கப்பட்டுள்ளன.
கீது மோகன் தாஸ் இயக்கத்தில், யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் இணைந்து எழுதியுள்ள ‘டாக்ஸிக்’, KVN புரொடக்ஷன்ஸ் மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் தயாரிப்பாக, ஈத் – உகாதி – குடி பட்வா பண்டிகைகளை முன்னிட்டு மார்ச் 19, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
உலகையே ஆட்டம் போட வைத்த ‘Yethu’ – பிரபுதேவா & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!
‘மூன்வாக்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “Yethu” வீடியோ பாடல் சமூக ஊடகங்களை முழுவதும் கைப்பற்றியுள்ளது. வெளியான சில நாட்களிலேயே இந்தப் பாடல் ஒரு உலகளாவிய நடன ட்ரெண்டாக மாறி, இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
ஆப்பிரிக்கா, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் “Yethu” பாடலுக்கு நடன ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மட்டுமின்றி, சிறார்கள், தொழில்முறை நடனக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் வாத்தியக்கலைஞர்களும் இந்த ட்ரெண்டில் இணைந்து பாடலின் ஆற்றலை உலகம் முழுவதும் பரப்பி வருகின்றனர்.
யூடியூபில் வெளியான இரண்டு வாரங்களிலேயே 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ள “Yethu”, சர்வதேச விமர்சகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜனவரி 27ஆம் தேதி தொடங்கிய இந்த ட்ரெண்ட், நாளுக்கு நாள் மேலும் வேகமெடுத்து வருகிறது.
இந்த வைரல் அலைக்கு சிறப்பு சேர்த்தது ஆப்பிரிக்காவின் பிரபலமான “Hypers Kids Africa” குழந்தைகள் இசைக்குழு. அவர்கள் வெளியிட்ட “Yethu” நடன ரீமேக் வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்கு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தாமே “Thank you for the love. You guys are terrific” என்று கருத்து தெரிவித்தது, இந்த ட்ரெண்டை இன்னும் உயரத்திற்கு கொண்டு சென்றது. குழந்தைகள் குழுவும் “Happy to see your comment. We love you too” என்று பதிலளித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
நடனப்புயல் பிரபுதேவாவின் அதிரடி அசைவுகள், ஏ.ஆர்.ரஹ்மானின் துள்ளலான இசை, மற்றும் கவர்ச்சியான ஒளிப்பதிவு—all சேர்ந்து “Yethu” பாடலை ஒரு உலகளாவிய கொண்டாட்டமாக மாற்றியுள்ளன. கடினமான நடன அசைவுகளை எளிமையாக வெளிப்படுத்தியுள்ள பிரபுதேவாவிற்கு பாராட்டுகள் குவிகின்றன.
தாளம், ஒற்றுமை மற்றும் எல்லைகளை தாண்டிய படைப்பாற்றலை கொண்டாடும் ஒரு உலக நடன விழாவாக மாறியுள்ளது “Yethu”. தற்போதைய சூழலில், இது ஒரு சாதாரண பாடல் அல்ல — கலாச்சாரங்களை இணைக்கும் ஒரு உலக நடன கீதமாக உருவெடுத்துள்ளது.
- உலக செய்திகள்
- |
- சினிமா













