சற்று முன்

மகளிர் தினத்தில் வெளியான ‘பேட்ரியாட்’ நயன்தாரா கேரக்டர் போஸ்டர்!   |    ‘காளிதாஸ் 2’ ஏப்ரல் 3 வெளியீடு… பரத் நடிக்கும் திரில்லர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு   |    விஜய்குமார் – கயல் ஆனந்தி இணையும் ‘அறிவு’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்   |    150+ திரைகளில் ‘முஸ்தபா முஸ்தபா’ இன்று ரிலீஸ் – சிறப்பு திரையிடலுக்கு அமோக வரவேற்பு!   |    பிரியங்கா மோகன் நடிக்கும் ‘மேட் இன் கொரியா’ – மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில் ப்ரீமியர்!   |    ரசிகர்களை கவர்ந்த ஆக்‌ஷன் காட்சிகளோடு லெஜெண்ட் சரவணன் ‘லீடர்’ டீசர் வெளியீடு!   |    நட்பு, கனவு, நகைச்சுவை கலந்த ‘லோக்கல் டைம்ஸ்’ – மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில்!   |    பண மிஷின் ரகசியம்… ‘கான் சிட்டி’ டைட்டில் டீசர் வெளியீடு!   |    ஸ்ருதிஹாசன் குரலில் ‘பவழ மல்லி’ – சாய் அபயங்கர் இசையில் புதிய பாடல்!   |    'ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடும், அந்த நிறைவை ‘தடயம்’ கொடுத்தது' – சமுத்திரகனி பெருமிதம்   |    மார்ச் 13 முதல் ZEE5-ல் ‘பூக்கி’ காதலும் நகைச்சுவையும் கலந்த ரொமான்டிக் காமெடி ஸ்ட்ரீமிங்!   |    நடிகை பிரியங்கா மோகனின் ’மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில்!   |    ‘VOWELS – An Atlas of Love’ இசை வெளியீட்டு விழா   |    ‘முஸ்தபா முஸ்தபா’ நண்பர்களுடன் ஜாலியாக பார்க்க வேண்டிய படம்! – சதீஷ் உற்சாகப் பேச்சு   |    மத்திய கிழக்கு பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ வெளியீடு தள்ளிவைப்பு!   |    தென்னிந்திய சாதனைகளை தகர்த்த ‘பெத்தி’ இரண்டாவது சிங்கிள்!   |    ஜியோஹாட்ஸ்டாரில் அடுத்த அதிரடி வெப் சீரிஸ் மார்ச் 13 முதல்!   |    'விஸ்வநாத் & சன்ஸ்' சூர்யாவின் 46வது படம் ஜூலையில் உலகமெங்கும் வெளியீடு!   |    'அன்பே டயானா' டைட்டில் டீசர் வைரல், கோடைக்கு ரெடி ஆன காதல் என்டர்டெய்னர்   |    'காந்தி டாக்ஸ்' மார்ச் 6 முதல் ZEE5-ல் – மௌனக் கதையின் உலக டிஜிட்டல் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

வனிதாவால் பிக் பாஸ் வீட்டுக்கு வந்த சோதனை
Updated on : 03 July 2019

நடிகர் விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார்..! இவருக்கு தற்போது வரை 3 கணவன்கள்...! இவரது முதல் கணவர் நடிகர் ஆகாஷுக்கு ஒரு மகன் உள்ளார். வனிதாவின் இரண்டாவது கணவர் தொழில் அதிபர் ஆனந்தராஜூக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். அவரை பிரிந்து 3வதாக நடன இயக்குனர் ராபர்ட் உடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.



 



 



தற்போது அவரையும் பிரிந்து போதிய படவாய்ப்பு இல்லாமல் தவித்த வனிதா, நடிகர் நடிகைகளுக்கான 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் போல நடத்தப்படும் தனியார் தொலைக்காட்சியின் பிக் பாஸ் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிலையில், 



 





இரண்டாவது கணவரின் மகளை கடத்தி வந்ததாக நடிகை வனிதா விஜயகுமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ள தெலுங்கானா மாநில காவல் துறையினர், அவரை கைதுசெய்ய பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும் வீட்டுக்கு வெளியே காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



 



 



இரண்டாவது கணவரை வனிதா பிரிந்த சூழ்நிலையில் அவர்களது மகள் தந்தையுடன் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு தனது மகளைப் பார்க்க ஐதராபாத் சென்ற வனிதா, கணவர் ஆனந்தராஜுக்குத் தெரியாமல் மகளை சென்னைக்கு அழைத்து வந்துவிட்டதாக கூறப்படுகிறது.



 



 



இது குறித்து தொழில் அதிபர் ஆனந்தராஜ் அளித்த புகாரின் பேரில், தெலுங்கானா காவல்துறையினர் கடத்தல் வழக்குப் பதிவு செய்து வனிதாவை தேடி சென்னைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். வனிதா தலைமறைவாக இருப்பதாகக் கூறி வழக்கை விசாரிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தனர்.



 



 



இந்த நிலையில், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, உள்ளேயும் சக போட்டியாளர்களுடன் தகராறு செய்து வருவதை அறிந்த 2வது கணவர் ஆனந்தராஜ், மீண்டும் தெலங்கானா காவல்துறைக்கு தகவல் அளித்தார். இதையடுத்து கடத்தல் வழக்கில் தொடர்புடைய வனிதா விஜயகுமாரை கைது செய்வதற்காக தெலுங்கானா காவல்துறையினர் சென்னை வந்தனர். பூந்தமல்லியில் பிக்பாஸ் அரங்கம் அமைக்கப்பட்டுள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டிக்கு சென்று விசாரணை நடத்தினர்.



 



 



வனிதாவை கைது செய்ய ஒத்துழைக்குமாறு, சம்பந்தப்பட்ட டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளரிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முடிவு எட்டப்படாததால், நசரத்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று தமிழக காவல்துறையினரிடம் உதவி கோரினர்.



 



 



போலீசார் டிவி நிகழ்ச்சித் தயாரிப்பாளரை அழைத்து வனிதாவையும், கடத்தப்பட்ட சிறுமியையும் போலீசிடம் ஒப்படைக்க அறிவுறுத்தி உள்ளனர். கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகை வனிதாவை ஒப்படைக்க மறுக்கும் பட்சத்தில், பிக் பாஸ் அரங்கத்திற்குள் புகுந்து வனிதாவை கைது செய்து அழைத்துச் சென்று குழந்தையை மீட்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.



 



 



கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள் பதுங்கும் இடமாகவும் அவர்களை பாதுகாக்கும் இடமாகவும் பிக் பாஸ் வீடு மாறி உள்ளதாக தெலுங்கானா காவல்துறையினர் குற்றம் சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா