சற்று முன்

தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |    'அகண்டன்' தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.   |    நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'விருஷபா'   |    விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் இணைந்துள்ளார்!   |    நயன்தாராவுடன் கவின் இணைந்து நடிக்கும் 'ஹாய்' (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!   |    இணையத்தில் வைரலாக பரவி வரும் 'வா வாத்தியார்' பட போஸ்டர்!   |    ஐசரி  K கணேஷ், பிறந்தநாளில் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ள வேல்ஸ் நிறுவனம்!   |    ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் 'ரஜினி கேங்' ஃபர்ஸ்ட் லுக்!   |    விஷ்ணு விஷாலுக்கு அமீர்கான் வில்லனா!   |    100 குறும்பட இயக்குநர்களுக்கு விருதுகள் கொடுத்து சாதனை   |    TVAGA உடன் இணைந்து பொழுதுபோக்குத் துறையின் வளர்ச்சிக்கு புரொடியூசர் பஜார் வித்திடுகிறது   |    எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கலந்துகொண்ட 'டஸ்வா' பிராண்ட் ஆடை திருவிழா!   |    தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகும் 'ராம்போ'!   |    மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' பட வெளியீட்டை அறிவித்தனர் படக்குழு!   |    'மூக்குத்தி அம்மன் 2', படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !   |    மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள 'ஆர்யன்' பட டீசர் வெளியானது!   |    'தமிழ் பெண்களின் வீரத்தை போற்றும் வகையில் உருவாகியுள்ள 'வீர தமிழச்சி'!   |   

சினிமா செய்திகள்

தோழா படத்திற்கு எதிராக வழக்கு
Updated on : 23 March 2016

கார்த்தி, நாகார்ஜூனா, தமன்னா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள திரைப்படம் தோழா. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கியுள்ளார்.



 



கார்த்தியுடன் முன்னணி தெலுங்கு சினிமா நடிகர் நாகார்ஜூனாவும் நடித்திருப்பதால், இந்த திரைப்படம் இரண்டு மொழிகளிலும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.



 



இந்நிலையில், இந்த திரைப்படத்தை வெளியிட தடை கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் படத்தின் பெயர்தான்.

ஏற்கனவே தோழா என்ற பெயரில் நித்தின் சத்தியா, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட  சென்னை - 600028 பட நாயகர்கள் சில பேர் நடித்த படம் 2008-ல் வெளியானது.



 



ஆனால் தன்னிடம் எந்த அனுமதியும் பெறாமல் தோழா என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறி, அந்த படத்தின் தயாரிப்பாளர் சுந்தரேஸ்வரன் தற்போது வழக்கு தொடுத்துள்ளார்.



 



நடிகர்கள் கார்த்தி மற்றும் நாகார்ஜுனா, பிவிபி சினிமா, இயக்குமர் வம்சி ஆகியோர் மீது தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கு நாளை(24.03.2016) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா